மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் தீ விபத்து

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் தீ விபத்து
Published on

மதுரை

தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஏராள மான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தி லேயே இரு பாலருக்கும் தனித்தனியே தங்கும் விடுதிகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் போது பல்கலைக்கழக பெண்கள் விடுதி அருகே இருந்த மின் கம்பத்தில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் செய்வதறியாது திணறிய மாணவிகள் விடுதியில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து மாணவிகள் பல்கலைகழக நிர்வாகத்தி னருக்கு தகவல் தெரிவித்தனர். சில விடுதி மாணவி களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே தீயணைப்பு துறையினருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து பெரியார் மற்றும் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் விரைந்து வந்தனர்.

மின்சார வாரியத்திற்கும் உடனடியாக தகவல் தெரி விப்பட்டது. மின்வாரி யத்தினர் உடனடியாக மின்சாரத்தை துண்டி த்ததால் பெரும் அசம்பா விதம் நடப்பது தவிர்க்கப் பட்டது. இதனால் மின் கம்பத்தில் இருந்து புகை வந்ததால் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி வளாகம் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.

இதில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவர்களை அருகில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் முதலு தவி சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.

மழையினால் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி அருகே இருந்த மின் கம்பத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவி விடுதி வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை இன்ஸ் பெக்டர் சிவகுமார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com