என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
- மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி மரக்கன்றுகளை பராமரிப்பது குறித்து பேசினார்.
- பள்ளி வளாகத்தில் மாணவர்களுடைய பெயரில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் காரப்பிடாகை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில் 100 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் இன்டராக்ட் கிளப் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க பள்ளி) கார்த்திகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாகை வனச்சரகர் ஆதி லிங்கம் மாணவர்களுக்கு 100 மரக்கன்றுகளை வழங்கி மரக்கன்றுகளை பராமரிப்பது குறித்து பேசினார்.
தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் "சுற்றுச்சூழல் காப்பதில் மாணவர்களின் பங்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார். வேளாங்கண்ணி ரோட்டரி கிளப் சார்பில் ஐந்து இரும்பு கூண்டுகள் வழங்கப்பட்டன.
இன்டராக்ட் சங்க தொடக்க விழாவில் ரோட்டரி கிளப்பை சேர்ந்தவர் சாமிநாதன், பிரகாஷ், அனுஷா நீலகண்டன், ஆராமுதன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவிகள் சுதர்ஷினி மற்றும் ஹரிணி இன்ட்ராக்ட் சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நடராஜன் வரவேற்புரை ஆற்றினார். தேசிய பசுமைப்படை பள்ளி பொறுப்பாசிரியர் கயிலை ராஜன் நன்றி கூறினார்.
பின்னர் பள்ளி வளாகத்தில் 100 மாணவர்களுக்கு நூறு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு மாணவர்களுடைய பெயரில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்