என் மலர்
நீங்கள் தேடியது "Tamil Nadu cabinet"
- தி.மு.க. அரசின் செயல் திட்டம் குறித்தும், அரசு நிறைவேற்ற இருக்கும் புதிய திட்டங்கள் குறித்தும் ஆளுநர் உரையில் வெளியிடப்படும்.
- கூட்டத்தொடரில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர், பொங்கலுக்கு முன்பே ஜனவரி முதல் வாரத்தில் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். அதில் அரசுத் திட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் பற்றி ஆளுநர் குறிப்பிடுவார். தி.மு.க. அரசின் செயல் திட்டம் குறித்தும், அரசு நிறைவேற்ற இருக்கும் புதிய திட்டங்கள் குறித்தும் ஆளுநர் உரையில் வெளியிடப்படும்.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை ஜனவரி 4ம் தேதி 11 மணிக்கு கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் குறித்தும், கூட்டத்தொடரில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, அ.தி.மு.க. பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப உள்ளது. சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை, நெய் விலை, வெண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் பற்றி உறுப்பினர்கள் காரசாரமாக விவாதிக்க வாய்ப்பு உள்ளது.
- ஒவ்வொரு அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் பயத்துடன் தேர்தல் பணியாற்றினார்கள்.
- தி.மு.க. வேட்பாளா வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவர்களும் தேர்தல பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எந்த தொகுதியிலாவது வெற்றி வாய்ப்பு இழந்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று தி.மு.க. தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கட்சிக் கூட்டங்களில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனால் ஒவ்வொரு அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் பயத்துடன் தேர்தல் பணியாற்றினார்கள். ஓட்டுப்பதிவு முடிந்த பிறகும் அவர்கள் மனதில் கவலை நீங்கவில்லை. சில அமைச்சர்கள் கோவில் கோவிலாக சென்றும் வழிபட்டனர். தேர்தலில் தோல்வி ஏற்பட்டு விடக் கூடாது. தி.மு.க. வேட்பாளா வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.

கடந்த 2 மாதமாக ஒரு வித அச்சத்தில்தான் சில அமைச்சர்கள் காணப்பட்டனர். இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோகமாக வெற்றி பெற்ற பிறகே ஒவ்வொருவர் மனதிலும் வழக்கமான உற்சாகம் காணப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அளவில்லா மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். இந்திய அரசியல் அரங்கில் அவர் கம்பீரமாக சென்று வரும் வகையில் 40-க்கு 40 வெற்றி கிடைத்துள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பெருமைப்பட்டனர்.
இதனால் தமிழக அமைச்சர்கள் மாற்றம் இப்போதைக்கு கிடையாது என்று அறிவாலய வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருப்பதால் இப்போதைக்கு அமைச்சர்கள் யாரையும் மாற்ற வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தனர்.
- செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்த ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றம்.
- உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தமிழக அமைச்சரவையில் கடந்த செப்டம்பர் மாதம் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டில் தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து 15 மாதங்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிறகு, செந்தில் பாலாஜி ஜாமினில் விடுதலையாகி வெளியே வந்தார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம்
செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்த ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றப்பட்டது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவியான மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையே வழங்கப்பட்டது.
செந்தில் பாலாஜி உள்பட 4 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறையும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டன.

வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதிதிராவிடர் நலத்துறைக்கும், இதே துறையைக் கையாண்டு வந்த கயல்விழி செல்வராஜுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறையும் ஒதுக்கப்பட்டன.
நிதி அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனுக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டது.
அடுத்து, அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், இளித்துறை ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி.செழியனும் சுற்றுலா துறை அமைச்சராக பனமரத்துப்பட்டி ராஜேந்திரனும் புதிதாக இணைந்தனர்.
செஞ்சி மஸ்தான் வசம் இருந்த சிறுபான்மை நலத்துறை, ஆவடி நாசருக்கு ஒதுக்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக அரசு அமைந்த பிறகு, 5-வது முறையாக அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
துணை முதல்வராானார் உதயநிதி ஸ்டாலின்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, கடந்த 2022 டிசம்பர் 14-ம் தேதியில், தமிழக அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி அறிவிக்கப்பட்டார்.

அதன்பிறகு நடப்பு ஆண்டில் சில மாதங்களாக உதயநிதியைத் துணை முதல்வராக்க வேண்டும் என மூத்த அமைச்சர்கள் தொடங்கி பலரும் கோரிக்கை வைத்தனர். முதல்வரும் அந்தக் கோரிக்கை வலுத்திருக்கிறது. பழுக்கவில்லை என பதிலளித்திருந்தார். இந்தநிலையில், தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்ததாக துணை முதல்வராகப் பதவியேற்கும் மூன்றாவது நபராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.

இந்த கூட்டத்தில், வானூர்தி மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் 11 புதிய தொழிற்சாலைகளை தொடங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கட்டடம் மற்றும் மனைப்பிரிவுகள் அமைப்பதை நெறிமுறைப்படுத்துவதற்கு, கட்டட விதிகளை ஒருங்கிணைத்து ஒரே தொகுப்பாக வரைவு விதி உருவாக்கப்பட்டுள்ளதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #TNCabinet #AerospaceDefencePolicy
தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு, வானூர்தி பூங்கா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு சென்னையில் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #GIM2019 #TNCabinet #TNGovt
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். தடையை மீறி ஊர்வலம் சென்ற பொது மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழக அரசு கடந்த மே மாதம் 24-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.
இந்தநிலையில், கடந்த 21-ந்தேதி டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனால் தூத்துக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தமிழக அமைச்சரவையின் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது.
இந்த கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறை சார்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் பிரச்சினையில் அடுத்தக் கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
மேலும் மேகதாது பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை காக்க எத்தகைய வழிமுறைகளை கடைப்பிடிப்பது என்பது குறித்தும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேகதாது குறித்த தீர்மானம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 தமிழர்கள் விடுதலை, சேலம்-சென்னை 8 வழிச்சாலை, விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைப்பது தொடர்பான பிரச்சினை குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தொடங்க உள்ள சட்டசபை கூட்டம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டம் குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ஆண்டின் தொடக்கமான ஜனவரி மாதத்தில் சட்டசபை கூட்டம் தொடங்கும். அது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் பேசி முடிவு எடுப்பது வழக்கம். சட்டசபை நிகழ்வை தொடங்கி வைக்க கவர்னருக்கு அமைச்சரவை மூலம் அழைப்பு அனுப்பப்படும். அதற்கான கூட்டம் தான் இது’ என்றார்.
அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து, ஜனவரி 3-வது வாரத்தில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. தமிழகத்தில் பல்வேறு மக்கள் சார்ந்த பிரச்சினைகள் உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. #TNGovernment #Sterlite #MekedatuDam






