என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி"

    • திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிப்பதை ஸ்ரேயா குறைத்து கொண்டார்
    • ஸ்ரேயாவிக்ரு தற்போது பெண் குழந்தை உள்ளது.

    நடிகை ஸ்ரேயா தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

    திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிப்பதை ஸ்ரேயா குறைத்து கொண்டார். இந்நிலையில், அண்மையில் வெளியான ரெட்ரோ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி மீண்டும் தமிழ் திரையுலகில் அவர் அடியெடுத்து வைத்தார். தற்போது நான் வயலன்ஸ் படத்தில் கனகா பாடலுக்கு ஸ்ரேயா நடனமாடியிருந்தார்.

    இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    • அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோவிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்ததாக தகவல் வெளியானது
    • அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அண்மையில், அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோவிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்ததாக கூறப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கே.என்.நேரு, "நான் பணம் கொடுக்க கூடாதா? நான் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு ரூ.44 லட்சம் காணிக்கை வழங்கியது குறித்து விமர்சனம் செய்யட்டும்... எல்லோரும் என்னை நல்லவன் என்று சொல்வார்களா?" என்று கோவமாக பதில் அளித்தார்.

    இந்நிலையில், இன்று அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து மீண்டும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "திருப்பதி கோவிலுக்கு நான் நன்கொடை கொடுக்கவில்லை. என்னிடம் அவ்வளவு பணமில்லை. என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என் பெயரில் நன்கொடை கொடுத்துள்ளார். எனக்கு இது முன்னரே தெரிந்திருந்தால் வேண்டாம் என்று கூறியிருப்பேன்" என்று தெரிவித்தார்.

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
    • போலீசார் இருவரின் குடும்பத்தினரையும் வரவழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பாப்பட்லா மாவட்டம், கொலக்கலூவை சேர்ந்தவர் நாக கணேஷ். இவர் குண்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஷிப்ட் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் தூரத்து உறவினரான தெனாலி அடுத்த எடவூருவை சேர்ந்த கீர்த்தி அஞ்சனாதேவி என்பவரை பெண் கேட்டு சென்றனர். நாக கணேஷ் தங்களது மகளை விட உயரம் குறைவாக இருப்பதால் பெண் தர அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர்.

    நாக கணேஷ், கீர்த்தி அஞ்சனாதேவி இருவரும் சந்தித்த முதல் பார்வையிலேயே காதல் வயப்பட்டனர். இருவரும் தங்களது பெற்றோர்களுக்கு தெரியாமலேயே செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். நீண்ட நேரம் செல்போனில் பேசி அரட்டை அடித்து காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி இருவரும் வீட்டிலிருந்து வெளியேறினர். அமராவதியில் உள்ள கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். தங்களது உயிருக்கு கீர்த்தியின் பெற்றோர் மூலம் அச்சுறுத்தல் இருப்பதால் நல்லபாடு போலீசில் பாதுகாப்பு கேட்டு சரணடைந்தனர்.

    போலீசார் இருவரின் குடும்பத்தினரையும் வரவழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். தங்களது திருமணம் கோவிலில் எளிமையான முறையில் நடந்ததால் உறவினர்கள், நண்பர்களை அழைத்து பிரம்மாண்ட முறையில் திருமண வரவேற்பு விழா நடத்த புதுமணத் தம்பதியினர் முடிவு செய்தனர்.

    நாக கணேஷ் நேற்று காலை வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு நண்பர் ஒருவருடன் வங்கிக்கு சென்றார். நகைகளை அடகு வைத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பைக்கில் வீடு திரும்பி வந்து கொண்டு இருந்தார். நாக கணேஷ் வங்கிக்கு சென்றதை அறிந்த கீர்த்தியின் தந்தை, மகன் துர்காவிடம் எத்தனை பேர் இருந்தாலும் வெட்டி சாய்த்து விட்டு வா நான் பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    இதையடுத்து கீர்த்தியின் சகோதரர் தனது 2 நண்பர்களுடன் பைக்கில் வந்து நாக கணேசின் பைக்கை வழிமறித்தார்.

    தன்னிடமிருந்த கத்தியை எடுத்து நாக கணேஷை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த நாக கணேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    துர்கா ராவ், நாக கணேஷை வெட்டி கொலை செய்வதை அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    இந்த வீடியோவை பார்த்தவர்கள் தாலியில் உள்ள ஈரம் காய்வதற்கு முன்பாகவே தங்கையின் கணவரை கொலை செய்து பூவையும் பொட்டையும் பறித்த கல் நெஞ்சம் படைத்த துர்கா ராவிற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பதிவு செய்து வருகின்றனர்.

    கொலை குறித்து நல்லபாடு போலீசார் வழக்கு பதிவு செய்து துர்கா ராவ் அவரது 2 நண்பர்கள், கீர்த்தியின் தந்தை ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 

    • ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு Fastag கட்டாயம்.
    • ICICI வங்கியுடன் இணைந்து அலிபிரி மலைப்பாதையில் Fastag வழங்கும் மையம் .

    ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு Fastag கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ICICI வங்கியுடன் இணைந்து அலிபிரி மலைப்பாதையில் Fastag வழங்கும் மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    திருப்பதி அலிபிரி மாலைப்பாதையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 2022ஆம் ஆண்டு Fasttag முறையை அறிமுகம் செய்தது.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), பாதுகாப்பை மேம்படுத்தவும், கூட்ட நெரிசலைக் குறைக்கவும், வெளிப்படையான கட்டண வசூலை உறுதி செய்யவும் Fastag-ஐ கட்டாயமாக்கியுள்ளது.

    • விடுமுறை நாட்களில் வரலாறு காணாத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர்.
    • ரூ.300 சிறப்பு தரிசனத்தில் வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக வார இறுதி விடுமுறை நாட்களில் வரலாறு காணாத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதேபோல் நேற்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு வந்தனர். தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 23 வைகுந்தம் தங்கும் அறைகளில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    ரூ.300 சிறப்பு தரிசனத்தில் வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேரடி இலவச தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று 85,740 பேர் தரிசனம் செய்தனர். 35,555 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • உள்நாட்டு மாடுகளின் பாலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
    • இதுபோன்ற முக்கியமற்ற பிரச்சினைகளை விட சமூகத்தில் மிகவும் முக்கியமான பல பிரச்சினைகள் உள்ளன.

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பெருமாள் வழிபாட்டிற்கு உள்நாட்டு மாடுகளின் பாலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

    யுக துளசி என்ற அறக்கட்டளை தாக்கல் செய்த மனுவை நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அந்த மனுவில், ஆகம சாஸ்திரங்களின் படி வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்றும், உள்நாட்டு மாடுகளின் பாலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற ஏற்கனவே உள்ள தீர்மானத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது.

    இதை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் என். கோடிஸ்வர சிங், "இதுபோன்ற முக்கியமற்ற பிரச்சினைகளை விட சமூகத்தில் மிகவும் முக்கியமான பல பிரச்சினைகள் உள்ளன.

    கடவுள் மீதான உண்மையான அன்பு சக உயிரினங்களுக்கு சேவை செய்வதில் உள்ளது, இத்தகைய விஷயங்களில் அல்ல," என்று தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

    • திருப்பதியில் நேற்று 90,011 பேர் தரிசனம் செய்தனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் திருப்பதி மலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    பக்தர்கள் அதிக அளவில் வாகனங்களில் தரிசனத்திற்கு வந்ததால் அலிபிரி சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மலை மீது செல்ல நீண்ட நேரம் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.

    இதனால் நாராயணகிரி தோட்டம் வரை தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். திருப்பதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிரில் நடுங்கியபடி தரிசனத்திற்கு சென்றனர்.

    பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர், டீ, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தேவஸ்தான அதிகாரிகள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கி வருகின்றனர். பக்தர்கள் தங்கும் வாடகை அறைகள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் . பக்தர்கள் வார இறுதி விடுமுறை நாட்களில் தரிசனத்திற்கு வருவதை தவிர்த்து மற்ற நாட்களில் தரிசனத்திற்கு வருமாறு தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 90,011 பேர் தரிசனம் செய்தனர். 33,378 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.23 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • திருப்பதி மலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.
    • பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பும் அனைத்து அறைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை நாள் என்பதால் நேற்று முன்தினம் காலை முதலே ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.

    இதனால் பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பும் அனைத்து அறைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருப்பதி மலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.

    நேற்று முன்தினம் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் ஆக்டோபஸ் வரை வரிசையில் காத்திருந்தனர். இதனால் தரிசனத்திற்கு 16 மணி நேரம் ஆனது.

    நேற்றும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் அதிகரித்ததால் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பாபவிநாசம் சாலையில் உள்ள சீலா தோரணம் வகை சுமார் 5 கிலோ மீட்டர் வரை வரிசையில் காத்திருந்தனர்.

    இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பூதேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம், மற்றும் ஸ்ரீனிவாசன் மையங்களில் பக்தர்கள் தரிசன டிக்கெட் பெற அலைமோதினர்.

    இன்று காலையில் ஓரளவு கூட்டம் குறைந்தது. பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காததால், மறுநாள் அறைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அறை வழங்கும் மையங்கள் அருகில் உணவு சாப்பிட்டு அங்கேயே தூங்கினர்.

    அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 80,193 பேர் தரிசனம் செய்தனர். 33, 298 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.43 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரத்துக்குமேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • யானைகள் கூட்டம் சாலையில் இருப்பதை கண்ட பக்தர்கள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர்.
    • மலை பாதையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதி மலைப்பாதையில்  வனப்பகுதியில் இருந்து குட்டி யானைகள் உட்பட 7 யானைகள் வந்தன.

    யானைகள் கூட்டம் சாலையில் இருப்பதை கண்ட பக்தர்கள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர்.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    யானைகள் கூட்டம் சாலையில் இருந்து விலகி செல்லாமல் அட்டகாசம் செய்தன. மலைப்பாதையில் ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

    வனத்துறையினர் யானைகள் கூட்டத்தை விரட்ட தீப்பந்தங்களை ஏற்றி, அதிக ஒலி எழுப்பும் மேளம் அடித்து சைரன் ஒலித்தனர்.

    அப்போது யானைகள் வனத்துறை ஊழியர்களை தாக்க முயன்றன. வனத்துறை ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் ஒரு வழியாக யானைகள் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

    இதனால் மலை பாதையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    இந்த சம்பவம் நேற்று இரவு மலைப்பாதையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பதி:

    கர்நாடக மாநிலம் பாகே பள்ளியை சேர்ந்த 13 பேர் திருப்பதி கோவிலுக்கு வந்தனர். நேற்று மாலை தரிசனம் முடித்து பின்னர் வேனில் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

    அவர்கள் வந்த வேன் இன்று அதிகாலை அன்னமைய்யா மாவட்டம், குரு பல கோட்டா, சென்ன மாரி மிட்டா தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த லாரி வேன் மீது நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் வேன் இரண்டாக பிளந்தது. வேனில் இருந்த மேகர்ஸ் (வயது 17), சரண் (17), ஸ்ரவாணி(28) ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்தில் சிக்கிய வேனை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.

    • பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.
    • கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.

    இன்று பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.

    பக்தர்கள் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது. இதனால் கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

    திருப்பதியில் நேற்று 90,087 பேர் தரிசனம் செய்தனர். 41891 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.30 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 25 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • கோவில் பிரசாதங்கள் தயாரிப்பதற்கான பொருட்களை பரிசோதனை செய்ய ஆய்வகம் உருவாக்க திட்டம்.
    • பெங்களூருவின் முக்கியப் பகுதியில் ஸ்ரீவாரி கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தான போர்டு திட்டம்.

    ஆந்திரா மாநிலம் திருப்பதியில் ரேணிகுண்டா விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தின் பெயரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வதேச விமான நிலையம் (Sri Venkateswara International Airport) எனப் பெயர் மாற்ற என திருப்பதி தேவஸ்தானம் போர்டு இந்திய விமான போக்குவரத்துத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவலை தேவஸ்தானம் போர்டு தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.

    மேலும், கர்நாடக அரசின் நில ஒதுக்கீடு நிலுவையில் உள்ள நிலையில், பெங்களூருவின் முக்கியப் பகுதியில் ஸ்ரீவாரி கோவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    மத்திய அமைச்சர் குமார சுவாமி, திருப்பதி தேவஸ்தான போர்டுக்கு 100 மின்சார பேருந்துகள் வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். திருப்பதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கோவில் பிரசாதங்களுக்கு பயன்படுத்தப்படும் நெய், தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை பரிசோதனை செய்ய ஆய்வகம் உருவாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    ×