search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி"

    • நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • திருப்பதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள் அச்சமடைந்தனர்.

    இதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. திருப்பதில் இருந்து 58 கிலோமீட்டர் தொலையில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு இரவு 8.43 மணி அளவில் உணரப்பட்டுள்ளது.

    • திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் யானைகள் உலா வருகின்றன.
    • ஸ்ரீவாரி படால பாதை மற்றும் தர்மகிரி வேதப்பள்ளி பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள பாபவிநாசம், ஸ்ரீகந்தம் வனத்தில் திடீரென 10 யானைகள் வனப்பகுதியில் இருந்து வந்தன.

    வனத்தை பாதுகாக்க அமைக்கப்பட்ட தடுப்பு வேலியையும், சந்தன மரங்களையும் பிடுங்கி எரிந்து யானைகள் நாசம் செய்தன.

    ஸ்ரீகண்டம் வனப்பகுதியில் ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பதி தேவஸ்தான பாதுகாவலர்கள் மற்றும் வனத்துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஏராளமான வனத்துறையினர் வந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். அப்போது அங்குள்ள குளத்தில் யானைகள் தண்ணீர் குடித்தன.

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் யானைகள் உலா வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் யானைகள் தண்ணீருக்காக அருகில் உள்ள ஸ்ரீகண்டம்வனம் மற்றும் பார்வேட் மண்டப பகுதிகளுக்குள் புகுந்தன. ஸ்ரீவாரி படால பாதை மற்றும் தர்மகிரி வேதப்பள்ளி பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது. கடந்த ஆண்டு முதல் யானைகள் ஒன்றாக சாலையை கடந்து பக்தர்களை பயமுறுத்தியது.

    சமீபத்தில், கோடை காலம் தொடங்கும் முன், திருப்பதி மலை வனப்பகுதியில் யானைகள் கூட்டம், ஸ்ரீகண்டம் வனத்துக்குள் புகுந்து வேலியை நாசம் செய்ததால், வனத்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.

    மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • ரோஜாவை ஜெய் அமராவதி என கோஷமிட வலியுறுத்தினர்.
    • ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி , மாநிலத்தில் 3 தலை நகரங்கள் அமைக்கப்படும் என்றார்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோவிலில் இருந்து வெளியில் வந்தார்.

    அப்போது, தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை அமைப்பின் கீழ் சேவை செய்யும் பெண் தன்னார்வலர்கள் அவரை முற்றுகையிட்டனர்.


    அமராவதியை ஆந்திர தலைநகராக மேம்படுத்த வலியுறுத்தி, 'ஜெய் அமராவதி' என கோஷமிட்டனர். மேலும் ரோஜாவை ஜெய் அமராவதி' என கோஷமிட வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திராவிற்கு தலைநகராக அமராவதியை அப்போதைய முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.


     இதையடுத்து அமராவதியை மேம்படுத்துவதில் ஈடுபட்டார். இதனால், அப்போதிருந்து 'ஜெய் அமராவதி' என தெலுங்கு தேசம் கட்சியினர் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

    ஆனால் அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி , மாநிலத்தில் 3 தலை நகரங்கள் அமைக்கப்படும் என்றார்.

    இருப்பினும் தலை நகரங்கள் அமைக்கப்பட வில்லை. இதனால் மந்திரி ரோஜாவை தன்னார்வலர்கள் சூழ்ந்து, ஜெய் அமராவதி என கோஷம் எழுப்பினர்.

    சிரித்துக்கொண்டே ரோஜா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • நடிகர் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் நேற்று நடந்தது. இதனால் திருப்பதி மலைக்கு சென்ற பஸ்கள், பக்தர்களின் வாகனங்களை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக போலீசார் திருப்பி விட்டனர். இந்த சாலை குறுகலானதாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.


    அதன் பின் படக்குழுவினர் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் முன் படப்பிடிப்பை நடத்த முற்பட்டனர். இதனால் அங்கு தரிசனத்துக்கு வந்த பக்தர்களை படக்குழுவினருடன் வந்திருந்த பவுன்சர்கள் அவசர அவசரமாக வெளியேற்றினர். தகவலறிந்த ஆந்திர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி திருப்பதி போலீசில் புகார் கொடுத்தனர்.


    இந்நிலையில் பக்தர்கள் அவதி, போக்குவரத்து இடையூறு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு அளித்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர ரெட்டி அறிவித்தார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

    • அயோத்தி ராமர் கோவிலுக்கு யார் வேண்டுமானாலும் போகலாம்.
    • வருகிற பாராளுமன்ற தேர்தல் குறித்து அ.தி.மு.க.வில் கூட்டணி குறித்து பேச தலைமை கழகம் 4 குழுக்களை அமைத்துள்ளது.

    திருப்பதி:

    அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருப்பதி வந்தார். இரவு வராஹ சாமி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசித்தார்.

    பிறகு மாட வீதியில் உள்ள கோவிலில் தரிசனம் செய்து விட்டு அங்கேயே அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தார். நேற்று இரவு தேவஸ்தான விடுதியில் தங்கியிருந்தார்.

    இன்று காலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்று அஷ்டதல பாத பத்மாராதனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார்.

    சாமி தரிசனம் செய்த பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அஷ்டதல பாத பத்மாராதனை சேவை என்பது செவ்வாய்கிழமை மட்டுமே இந்த தரிசன நடைபெறும்.

    அரை மணி நேரம் நிதானமாக ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். இதற்கு ஒரு நபருக்கு 1250 ரூபாய் கட்டணமாகும்.


    இத்தகைய சிறப்பு வாய்ந்த பூஜையை செய்து ஏழுமலையானை வழிபட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அயோத்தி ராமர் கோவிலுக்கு யார் வேண்டுமானாலும் போகலாம். அனைவரும் தரிசனம் செய்யலாம். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை தான் கடைபிடிக்கப்படுகிறது.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் குறித்து அ.தி.மு.க.வில் கூட்டணி குறித்து பேச தலைமை கழகம் 4 குழுக்களை அமைத்துள்ளது. அவர்கள் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, தேவஸ்தான அதிகாரிகள், கலந்து கொண்டனர்.
    • பிப்ரவரி மாதம் 3, 4, 5-ந் தேதிகளில் திருப்பதி மலையில் ஆன்மிக மாநாடு நடக்க இருக்கிறது.

    திருப்பதி:

    திருப்பதி மலையில் அறங்காவலர் குழுத்தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இது குறித்து கருணாகர ரெட்டி கூறியதாவது:-

    தேவஸ்தானத்தின் 2024-25-ம் நிதியாண்டுக்கான வரவு செலவு பட்ஜெட் திட்டத்தை அறங்காவலர் குழு கூட்டத்தில் கொண்டு வந்தனர். ரூ.5 ஆயிரத்து 141 கோடியே 74 லட்சம் மதிப்பிலான வரவு செலவு திட்டத்துக்கு அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

    நடப்பு நிதியாண்டில் இதுவரை ஏழுமலையானுக்கு ரூ.ஆயிரத்து 611 கோடி காணிக்கையை பக்தர்கள் செலுத்தி உள்ளனர் அடுத்த நிதியாண்டிலும் அதே அளவுக்கு காணிக்கை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்கிகளில் தேவஸ்தானம் செய்துள்ள நிரந்தர டெபாசிட்டுகள் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.ஆயிரத்து 68 கோடியே 51 லட்சம் வட்டி வருவாய் கிடைத்தது. அடுத்த நிதியாண்டில் வட்டி வருவாய் ரூ.ஆயிரத்து 167 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது.


    நடப்பு நிதியாண்டில் பிரசாத விற்பனை மூலம் ரூ. 550 கோடி கிடைத்த நிலையில், அடுத்த நிதியாண்டில் ரூ.600 கோடி ரூபாய் கிடைக்கும்.

    தரிசன டிக்கெட் விற்பனை மூலம் ரூ.328 கோடி கிடைத்த நிலையில், அடுத்த ஆண்டும். அதே நிலை தொடரும், கட்டண சேவை டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ.140 கோடி கிடைத்த நிலையில், அடுத்த நிதியாண்டில் ரூ.150 கோடி வரை கிடைக்கும்.

    ஊழியர்களின் சம்பளத்துக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.ஆயிரத்து 664 கோடி செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த நிதியாண்டில் சம்பளத்துக்கு ஆயிரத்து ரூ. 733 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.

    பிப்ரவரி மாதம் 3, 4, 5-ந் தேதிகளில் திருப்பதி மலையில் ஆன்மிக மாநாடு நடக்க இருக்கிறது. இதில் பங்கேற்க 57 பீடாதிபதிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பதிக்கு செல்லும் வழியில் உள்ள காளஹஸ்தி சிவன் கோவிலில் பாதாள விநாயகர் இருக்கிறார்.
    • கணபதியை வணங்க அனைத்துக் கடவுளரையும் போற்றியதாக பொருள்படும்.

    திருப்பதிக்கு செல்லும் வழியில் உள்ள காளஹஸ்தி சிவன் கோவிலில் பாதாள விநாயகர் இருக்கிறார்.

    இவர் தனது துதிக்கையை உயர்த்தி வாழ்த்துச் சொல்வதுபோல் அமைக்கப்பட்டுள்ளார்.

    விநாயகர்-கல்விக்கடவுளாக

    மராட்டிய மாநிலத்தில் விநாயக சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடுவர்.

    அங்கே ஒவ்வொரு பகுதியிலும் பந்தல் அமைத்து அதில் பெரிய பெரிய விநாயகர் நிலை அமைத்து பூஜை செய்து பின்னர் அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பது வழக்கம்.

    கல்விக்கடவுளாக கருதி வணங்குகின்றனர்.

    வாரத்தில் செவ்வாய்க்கிழமையே அவருக்கு உகந்த நாள்.

    கணபதியை வணங்க அனைத்துக் கடவுளரையும் போற்றியதாக பொருள்படும்.

    அவரது அம்சத்தில் முகம் விஷ்ணுரூபம்.

    இடபாகத்தில் சக்தி, வலது பாகத்தில் சூரியன், முக்கண்களில் சிவாபெருமான் உள்ளனர்.

    • திருப்பதியை வைணவத்தலமாக நிலை நிறுத்தியவரே ராமானுசர் தான்.
    • ராமானுசர் ஏழுமலையானுக்குச் சங்கு, சக்கரம் சாத்தி, பெருமாள் என்று நிலை நாட்டினார்.

    திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது.

    தாயார் சன்னதி கூடக் கீழே திருச்சானூரில் தான் இருக்கிறது.

    திருமலையின் ஆதிமூர்த்தியான வராகசாமி தெப்பக் குளக்கரையில்தான் இருக்கிறார்.

    ஆழ்வார்களுக்கும் இடம் கிடையாது. இதற்கு ஒரே ஒரு விதி விலக்கு, ராமானுஜர் மட்டுமே.

    திருவேங்கடத்தான் கோவிலுக்குள் இவருக்கு தனி சன்னதி இருக்கிறது.

    ராமானுஜர் 1017&ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார்.

    1137&ம் ஆண்டு வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த இவர் வியக்கும் அளவுக்கு திருப்பதிக்குத் திருப்பணிகள் செய்திருக்கிறார்.

    திருப்பதியை வைணவத்தலமாக நிலை நிறுத்தியவரே ராமானுசர் தான்.

    அவர் காலத்தில் வேங்கடமலை மீது இருப்பது சைவக் கோவிலா? வைணவக் கோவிலா? சிவன் சிலையா? பெருமாள் சிலையா? என்ற சர்ச்சை ஏற்பட்டது.

    ராமானுசர் ஏழுமலையானுக்குச் சங்கு, சக்கரம் சாத்தி, பெருமாள் என்று நிலை நாட்டினார்.

    ஏழுமலையான் கோவிலில் திருவாய்மொழி பாடவும் ராமானுசர் ஏற்பாடு செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலின் நடைமுறைகளை இங்கும் கொண்டு வந்தார். காடு திருத்தி, வீதி அமைத்து, பெருமாள் வீதிவலம் வரவும், விழாக்கள் நடத்தவும் ஏற்பாடு செய்தார்.

    அதிலிருந்துதான் திருமலை நகரம் தோன்றியது. இன்றும் அங்கு "ராமானுசர் வீதி" இருக்கிறது.

    கோவில் நந்தவனம் அமைத்து அழகுபடுத்தினார். அது "ராமானுசர் நந்தவனம்" என்ற பெயரில் இன்றும் இருக்கிறது.

    ஏழுமலை ஏறித் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு அளிக்கவும் ராமானுசர் ஏற்பாடு செய்தார்.

    அதுவே "ராமானுசக் கூடம் ஆனது". இன்றும் அங்கு பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.

    இதன் வாயிலாக அன்றே "சமபந்தி" சாப்பாட்டை ராமானுசர் தொடங்கி வைத்து விட்டார்.

    ஏழுமலையான் மார்பில் திருமகள் திருமேனியைத் தொங்க விட்டவரும், ராமானுசரே!

    ஏழுமலையானுக்குப் பச்சைக் கற்பூர நாமம் சாத்தவும் ராமானுசரே ஏற்பாடு செய்தார்.

    சைவர்கள் மீண்டும் உரிமை கொண்டாடக்கூடாது என்பதற்காகப் பளிச்சென்று பெரிய நாமமாக சாத்தினார்.

    இன்றும் மற்ற பெருமாள்களை விட ஏழுமலையானுக்குப் பெரிய பட்டை நாமம் சாத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும்.

    வெள்ளி தோறும் திருமஞ்சனக் காப்பு நடத்தவும், அலங்காரம் செய்யும் முறையையும், நித்திய பூசையையும் ராமானுசர் வகுத்துக் கொடுத்தார்.

    மலை அடிவாரத்தில் கீழ்த் திருப்பதி ஊரையும் உருவாக்கினார்.

    இப்படி ஏழுமலையான கோவிலை வைணவர்களுக்கே உரியதாக ஆக்கியதால் தான் ஏழுமலையான் கோவிலுக்குள் ராமானுசர் சந்நிதியும் இடம் பெற்றுள்ளது.

    ராமானுசர் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் திருப்பதியில் விழா கொண்டாடுகிறார்கள்.

    • திருப்பதி என்றாலே ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் தான் நினைவுக்கு வரும்.
    • இப்பகுதி பாடல்களைப் பாடுவதன் மூலம் பகவானிடம் சரணடைந்து பேறு பெறலாம்.

    திருப்பதி என்றாலே ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் தான் நினைவுக்கு வரும்.

    பிறவிக் குருடனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும், திருவேங்கட மலைக்குப் போய் சேவித்து நின்று பார்வையையும், செல்வத்தையும் சேர்த்து பெறலாம் என்கிறது ரிக் வேதம்.

    வேதங்கள் போற்றும் மகிமைகள் கொண்ட திருவேங்கடத்தின் சிறப்பையும் திருமாலின் புகழையும் ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதம் பாடுவதாகவே அமைகிறது.

    இறைவனின் பாத மலர்களின் புகழைப்பாடிக் கொண்டிருந்தாலே போதும்! உய்வடையலாம் என்ற மையக் கருத்துடன் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாத பாடல்கள் முழுவதும் அமைந்துள்ளன.

    அதிகாலைப் பொழுதில் பள்ளி எழுந்தருள்வாயே என்று இறைவனை துயிலெழுப்பும் நிகழ்ச்சியே திருப்பள்ளி எழுச்சி தத்துவம் ஆகும்.

    எங்கள் உள்ளங்களில் ஆன்மீக விழிப்புணர்வை தந்தருள்க என்று இறைவனை வேண்டுவதாகவே சுப்ரபாதம் அமைகிறது.

    இப்படி இறைவனுக்கு திருப்பள்ளி எழுச்சிபாடுவது நாம் அஞ்ஞானத்திலிருந்து விழித்துக் கொள்வதற்கு உதவும் பள்ளி கொண்ட பரந்தாமனை முதன் முதலில் எழுப்பியது மகரிஷி விசுவாமித்திரர்தான்.

    எல்லோராலும் தற்போது உச்சரிக்கப்படும், "கௌசல்யா ஸூப்ரஜா, ராமா...!" என்று தொடங்கும் சுலோகம் மகரிஷி வால்மீகியின் வாக்கை வைத்தே புகழ் பெற்ற சுப்ரபாதம் பிறந்தது எனலாம்.

    சுமார் 675 ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்தவர் அண்ணாமாச்சார்யா சுவாமிகள், வைணவ ஆச்சாரியார்களில் மேன்மை பெற்ற வேதாந்த தேசிக சுவாமிகளின் மைந்தர் வரதாச்சாரியார் சுவாமி சீடரே அண்ணன் சுவாமிகள்.

    தஞ்சாவூர் மாவட்டம் சீர்காழி அருகில் உள்ள திருநாங்கூரில் பிறந்து பகவானுக்கு தொண்டு செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திய அண்ணன் சுவாமிகள் மகிமைமிக்க இந்த ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதத்தை நான்கு பகுதிகளாக முதன் முதலில் பாடினார்.

    சுப்ரபாதத்தின் முதல் பகுதியான திருப்பதி ஏழுமலையானை துயிலெழுப்புவதாக உள்ள இந்த துயிலெழுப்பும் பாடல்கள் நம் மனதிலும் ஆன்மீக விழிப்புணர்வை எழுப்பும். "கமலாகுச" எனத் தொடங்கும் முதல் பகுதி வெங்கடேசனைப் புகழ்ந்து பாடும்.

    இரண்டாவது பகுதி ஸ்தோத்திரம் எனப்படுகிறது. மூன்றாவது பகுதியாக சரணாகதி பாடப்படுகிறது.

    இப்பகுதி பாடல்களைப் பாடுவதன் மூலம் பகவானிடம் சரணடைந்து பேறு பெறலாம்.

    அதிகாலையில் நம் இல்லங்களில் ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் ஒலித்தால் வீட்டில் மங்களம் நிறையும். புரட்டாசி மாதம் முழுவதும் வீடுகளில் அதிகாலையில் சுப்ரபாதம் ஒலித்தால் திருமகள் கடாட்சமும் பெருகும்.

    திருவெங்கட முடையோனின் சன்னதியில் தினந்தோறும் காலை வேலைகளில் நடைபெறுகின்ற வைபவங்களை அழகுறக் கண்முன் நிறுத்துகின்ற ஆனந்த வலிமையும் சுப்ரபாதத்திற்கு உண்டு.

    கலியுக தெய்வமாகிய ஸ்ரீ வேங்கடநாதனை துதிப்போர் திருமகள் அருள்பெற்று வளமான வாழ்வுதனைப் பெறலாம் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.

    ஓம் நமமோ நாராயணாயா...!

    • ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை என்பதால் காலையில் பக்தர்கள் குறைந்த அளவு வந்திருந்தனர்.
    • பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் குவிந்தனர்.

    நேற்று ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை என்பதால் காலையில் பக்தர்கள் குறைந்த அளவு வந்திருந்தனர். மதியத்திற்கு மேல் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.


    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி மலை புனிதமாக கருதப்படுவதால் மலைக்கு பீடி சிகரெட் மது மாமிசம் மற்றும் டிரோன் கேமராக்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அரியானாவை சேர்ந்த தினேஷ் என்ற ராணுவ வீரர் தனது மனைவியுடன் நேற்று திருப்பதி மலைக்கு வந்தார். அவர் கொண்டு வந்த டிரோன் கேமரா மூலம் மலைப் பகுதியை படம் பிடித்தார்.


     விஜிலென்ஸ் அதிகாரிகள் வந்து ராணுவ வீரரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் மலைப்பகுதியை படம் பிடிக்க தடை உள்ளது தெரியாமல் டிரோன் கேமரா மூலம் படம் பிடித்ததாக தெரிவித்தார்.


     அவரை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    • 20 பக்க பகவத் கீதை புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறது.
    • தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானம் இளைஞர்களுக்காக 20 பக்க பகவத் கீதை புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த பகவத் கீதை தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படுகிறது.

    பகவத்கீதையின் காலத்தால் அழியாத போதனைகள் 20 பக்கங்கள் கொண்ட அச்சிடப்பட்ட பதிப்பின் மூலம் எளிய மொழியில் மாணவர்களுக்குச் சென்றடையும்.

    ஒரு லட்சம் புத்தகங்கள் அச்சிட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்களிடையே அவர்களின் தார்மீக மற்றும் ஆன்மீக கல்விக்கு பங்களிக்கும் வகையில் விநியோகிக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×