என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவிலில் மழை- குளிரால் பக்தர்கள் அவதி
    X

    திருப்பதி கோவிலில் மழை- குளிரால் பக்தர்கள் அவதி

    • திருப்பதியில் நேற்று 90,011 பேர் தரிசனம் செய்தனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் திருப்பதி மலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    பக்தர்கள் அதிக அளவில் வாகனங்களில் தரிசனத்திற்கு வந்ததால் அலிபிரி சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மலை மீது செல்ல நீண்ட நேரம் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.

    இதனால் நாராயணகிரி தோட்டம் வரை தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். திருப்பதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிரில் நடுங்கியபடி தரிசனத்திற்கு சென்றனர்.

    பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர், டீ, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தேவஸ்தான அதிகாரிகள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கி வருகின்றனர். பக்தர்கள் தங்கும் வாடகை அறைகள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் . பக்தர்கள் வார இறுதி விடுமுறை நாட்களில் தரிசனத்திற்கு வருவதை தவிர்த்து மற்ற நாட்களில் தரிசனத்திற்கு வருமாறு தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 90,011 பேர் தரிசனம் செய்தனர். 33,378 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.23 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×