என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pongal bonus"
- பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கொண்டாபுரத்தில் இயங்கிவரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உறுப்பினர்க ளுக்கு பொங்கல்போன ஸ்மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் குமார் வரவேற்றார்.பேரூராட்சி வார்டு மன்ற உறுப்பினர் நரசிம்மன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பா ளர்களாக பேரூராட்சி தலைவர் லதாநரசிம்மன், துணை தலைவர் தீபிகாமுருகன் கலந்து கொண்டு மேற்படி சங்கத்திலுள்ள பால் உற்பத்தியாளர்ளுக்கு ஊக்கத்தொகையினை போனசாக வழங்கினர்.
போனஸ்தொகை யானது பால் உற்பத்தியில் லிட்டருக்கு ரூ. 1 என கணக்கிடப்பட்டு ரூ, 7-லட்சத்து 94-ஆயிரத்து 370-ரூபாய் 429 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் ஆய்வாளர் கீதா, நிர்வாக குழு உறுப்பினர்கள், முன்னாள் செயலாளர் குமார் மற்றும் ஈராளச்சேரி, பெருகரும்பூர், துறைபெரும்பாக்கம், ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
- தமிழக அரசுப்பணியில் உள்ள சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசுத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான பொங்கல் போனஸ் தொகை தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி,
* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
* தமிழக அரசுப்பணியில் சி மற்றும் டி பிரிவில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 மிகை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* முழு மற்றும் பகுதிநேர பணியாளர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
* சி, டி பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், தனி என அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ.500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை, போனசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, காலமுறை சம்பளம் பெறும் சி, டி பிரிவு அரசு பணியாளர்கள், உள்ளாட்சி மன்றம், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக நிதி துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. #TNGovernment #PongalBonus
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்