என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sterlite plant"
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக கூறி, அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற தொடர் போராட்டத்தின் 100-வது நாளில் வன்முறை வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு மாநில பசுமை தீர்ப்பாயம் ஆலைக்கான அனுமதியை ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டது.
மேலும் சுப்ரீம் கோர்ட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் அதில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளும் சேர்ந்து வருகிற 24-ந்தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்றும், அன்றைய தினம் வீடுகள், வணிக நிறுவனங்களில் கருப்பு துணி கட்டவும், மக்கள் கருப்பு நிற ஆடை அணிந்தும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், கருப்புக்கொடி போன்றவை தேவையில்லாதது. இவ்வாறான செயல்கள் பொதுமக்களை போராட்டத்திற்கு தூண்டுவதாக அமையும். எனவே ஆலைக்கு எதிரான போராட்டங்கள் வேண்டாம்.
இவ்வாறு கலெக்டர் கூறினார். #Sterlite #ThoothukudiCollector #SandeepNanduri
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்துவிட்டது என்று செய்தி பரவியது. ஆலையை திறக்க மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் மனு கொடுக்க வேண்டும். அவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும் என்று நீதிபதிகள் கூறினர். மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்து உள்ள நிபந்தனைகளை சரி செய்ய முடியாது. ஆகையால் ஆலையை திறக்க முடியாது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தக்காரர்கள் சென்னைக்கு செல்கிறார்கள். ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். அதில் எனக்கு உடன்பாடு. ஆனால் மக்கள் ஆலையை திறக்க சொல்வது போன்று ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்பாடு செய்து உள்ளது.
ஒப்பந்தக்காரர்களை பற்றியோ, அவர்கள் அழைத்து செல்பவர்களை பற்றியோ நான் விமர்சிக்க விரும்பவில்லை. அது அவர்கள் ஜனநாயக உரிமை. ஆனால் அது ஒரு சதவீதம். 10 லட்சம் மக்கள் இங்கே எதிர்ப்பாக இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் எதிர்ப்பாக இருக்கிறார்கள். ஆகையால் ஸ்டெர்லைட் ஆலை தற்போது திறக்க வாய்ப்பு இல்லை. இனி திறக்க விடக்கூடாது.
முதல்அமைச்சருக்கு என்னுடைய ஒரே கேள்வி. முதல்அமைச்சர் ஏன் அமைச்சரவையை கூட்டி முடிவு எடுக்க மறுக்கிறீர்கள். அமைச்சரவையை கூட்டி முடிவு எடுத்து இருந்தால் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கே இந்த வழக்கு சென்று இருக்காது. இது விசுவரூபம் எடுத்து இருக்கும் கேள்வி. நீங்கள் அமைச்சரவையை கூட்டி முடிவு எடுக்க தடுப்பது எது?. அமைச்சரவை கூட்டத்தை கூட்டி கொள்கை முடிவு எடுக்கவில்லை என்றால், சந்தேகத்தின் கூரிய முள், உங்கள் மீதும் உங்கள் அமைச்சரவை மீதும் பாய்கிறது.
தினத்தந்தியில் நல்ல தலையங்கம் வந்து உள்ளது. சமூக நீதியின் கருவறை தமிழ்நாடுதான். பொருளாதார அடிப்படையில் 10 சதவீதம் இடஒதுக்கீடு பிரச்சனையில், போகிற போக்கில் சமூகநீதிக்கு வேட்டு வைத்து விட்டு செல்லும் வேலையை மோடி செய்து உள்ளார். இதன் விளைவுகளை அவர் சந்திப்பார். இதனை எதிர்க்க வேண்டியது நம் அனைவரின் கடமை. இதற்கு ஆதரவளிக்கும் கட்சிகள் சமூக நீதியை காக்க வேண்டும் என்ற நிலையை கடைபிடித்து மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். பல கட்சிகள் பா.ஜனதா வலையில் விழுந்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கழுகுமலை, வானரமுட்டி அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். இதில் கழுகுமலை பள்ளியில் 255 பேருக்கும், வானரமுட்டி பள்ளியில் 115 பேருக்கும் சைக்கிள் வழங்கப்பட்டன.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் முதன் முதலாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் ரூ.100 வழங்கினார். அதுபோல் தற்போது முதல்வர் அந்த திட்டத்தை விரிவாக்கம் செய்து, காலத்துக்கு தகுந்தாற்போல் பொங்கல் பரிசுடன் ரூ. 1000 வழங்கி நடைமுறைப்படுத்தி உள்ளார். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.
இந்த தீர்ப்பின் சாராம்சம் வந்த உடன், சட்ட வல்லுநர்களுடன் ஆராய்ந்து மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்து அதன் மூலமாக ஆலையை நிறுத்துவதற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என சட்டமன்றத்தில் முதல்வர் கூறியுள்ளார். அந்த நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார். #PongalGift #MinisterKadamburRaju
திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. இதில் அ.தி.மு.க. அரசு எப்போதும் மக்களின் உணர்வுகளை மதித்து உரிய முடிவு எடுக்கும். மக்களுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு தி.மு.க. மட்டுமே எதிர்கட்சி. மற்ற எந்த கட்சியையும் நாங்கள் போட்டியாக நினைக்கவில்லை. அரசியல் களத்தில் அவர்களை எதிர்த்தே எங்கள் பிரசாரம் இருக்கும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு போதிய நிவாரணம் அளிக்கவில்லை. அதற்காகத்தான் நாங்கள் மீண்டும் கடிதம் எழுதி வருகிறோம்.
உரிய நிவாரணத்தை பெற்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அ.தி.மு.க. அரசு உறுதியாக செய்து தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று உச்சநீதி மன்றம் அளித்துள்ள உத்தரவு மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. பலவீனமான நடைமுறை கொண்டு ஸ்டெர்லைட்டை மூடியதாலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பழனிசாமி அரசு உரிய ஆதாரங்களை முன்வைக்க தவறிய காரணத்தினாலும், உணர்வு பூர்வமாக செயல்படாமலும், சட்ட ரீதியாக வலுவாக வாதிடாத காரணத்தினாலும் தான் ஸ்டெர்லைட் நிர்வாகம் சொன்னபடி தனது ஆலையை திறந்துவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளில் தொடர் தோல்விகளைத்தான் நாம் சந்தித்து வருகிறோம். முல்லைப் பெரியாறு, மேகதாது, நீட் என்று தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினைகளில் பழனிசாமி அரசு பெரும் தோல்வியையே தமிழகத்திற்கு பெற்றுத்தந்து வருகிறது.
ஸ்டெர்லைட் விஷயத்தில் துவக்கத்திலிருந்தே இந்த ஆலையை மூடவேண்டும் என்ற எண்ணம் பழனிசாமி அரசுக்கு இருந்ததே இல்லை.
அதனால் தான் “தாமிர உருக்காலைகளே தமிழகத்திற்கு வேண்டாம்“ என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப் பட்டதை செவிமடுக்க மறுத்தது. இனிமேலாவது தாமதிக்காமல் ஒரு கொள்கை முடிவை எடுத்து, அவசியப்பட்டால் அவசரச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SterlitePlant
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நேற்று நான் பேசும் போது, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை பற்றி குறிப்பிட்டேன். ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு மத்திய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதி செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
தமிழக அரசு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பதை அறிய விரும்புகிறேன். உடனடியாக அமைச்சரவையை கூட்டி அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த வேண்டும். இது தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன் பின்னர், சிறிது நேரம் நடைபெற்ற சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. #DMK #MKStalin #SterlitePlant #TNAssembly
ஈரோட்டில் இன்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருவாரூர் தொகுதி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.வுக்கும் தி.மு.கவுக்கும் பயம் ஏற்பட்டு இருப்பது தெளிவாகி உள்ளது.
கலைஞருக்கு பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தேசிய துக்கம் அனுசரிக்கப்பட்டது. ஆனால் இதற்கு மு.க.ஸ்டாலின் நன்றி கூட தெரிவிக்கவில்லை. தி.மு.க. தற்போது சுய சிந்தனையோடு செயல்படவில்லை. உடல்நலம் குன்றி இருந்த கலைஞரை சோனியா காந்தி சந்திக்க வரவில்லை. ஆனால் பிரதமர் மோடி கோபாலபுரம் வந்து கலைஞர் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்தார்.
சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பாரபட்சமாக நடந்து வருகிறார். கேரளாவில் தேவாலயம் தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அவர் இதுவரை செயல்படுத்தவில்லை. ஊடகங்களில் விவாதம் செய்பவர்கள் அறிவின்மையமாக பேசுகின்றனர்.
தற்போது ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக அறநிலையத்துறையில் ஊழல் மலிந்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அந்த துறையால் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. இது வரவேற்கத்தக்கது. மக்களை பாதிக்கும் திட்டங்கள் எப்போதும் தமிழகத்துக்கு வராது.
மீத்தேன் எடுக்க அனுமதி அளித்தது தி.மு.க.-காங்கிரஸ். தமிழகத்தை பாதிக்கும் திட்டத்தை கொண்டு வந்தது தி.மு.க.வும் காங்கிரசும் தான். ஆனால் தமிழகத்தை பாதுகாப்பது மத்திய அரசுதான். மக்களுக்கு இது தெரியும்.
மின்சாரத்தை பூமிக்கடியில் கொண்டு செல்வது சாத்தியம் இல்லை. விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு எச்.ராஜா கூறினார். #BJP #HRaja #SC #SterlitePlant
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் ரோகிங்டன் நரிமன், நீதியரசர் நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நான் (வைகோ), இந்த வழக்கில் நேற்று மேல் முறையீடு செய்து இருக்கின்றேன். வழக்கு எண் 913/2019. அதையும் சேர்த்து இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
‘உங்களுக்காக யார் வாதாடுகிறார்?’ என்று நீதிபதி சின்கா கேட்டார். ‘நானேதான் வாதாடுகிறேன்” என்று கூறினேன்.
“அப்படி ஒரு உத்தரவை நாங்கள் பிறப்பிக்க முடியாது. மதுரை உயர்நீதிமன்றம், ஆலையைத் திறக்கக்கூடாது என்ற தீர்ப்புக்குத் தடை விதிக்கின்றோம். பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தீர்ப்பு குறித்த வழக்கில் விசாரணை நடக்கும். ஸ்டெர்லைட் தரப்பு தங்கள் வாதங்களை முன்வைக்கலாம். அரசுத் தரப்பும், மற்றத் தரப்பினரும் முன்வைக்கலாம் என்று கூறி, இந்த வழக்கு தொடர்பான அனைத்துத் தரப்பினருக்கும் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர்.
ஆலையைத் திறக்க வேண்டும் என உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இன்றைய விசாரணையில், உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சிவபால முருகன், கழக வழக்கறிஞர்கள் ஆசைத்தம்பி, ஆனந்தசெல்வம், சுப்பாராஜ் ஆகியோர் வைகோவுடன் இருந்தனர். #MDMK #Vaiko #SC #SterlitePlant
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
முன்னேறிய சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு பாராளுமன்ற கூட்டத்திலேயே இந்த சட்டத்தை நிறைவேற்ற இருப்பதாக தெரிய வருகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது சமூகநீதி கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. இதை நிறைவேற்றினால் பின்தங்கிய மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்கு எதிராக அது அமையும்.
தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் வலியுறுத்தி பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கலைஞர் பெற்றார். வேலைவாய்ப்பு மட்டுமின்றி கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு பெறப்பட்டது.
மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி அமைந்த இந்த இடஒதுக்கீட்டின் மூலம் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் பயன் பெற்றார்கள்.
பின்னர் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணையை 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ரத்து செய்தது. அந்த நீதிபதிகளில் ஒருவரான ரத்தினவேல் பாண்டியன் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் 69 சதவிகித இடஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள். தமிழ்நாடு இதை அமல்படுத்துவதில் வெற்றி கண்ட மாநிலமாக இருக்கிறது.
பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் கட்டி காத்த சமூகநீதிக்கு எந்தவித பாதிப்பும் வந்து விடக்கூடாது. மத்திய அரசு பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறது.
தமிழக அரசு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை அறிய விரும்புகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-
ஸ்டெர்லைட் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவின் முழு விவரம் கிடைக்கப் பெறவில்லை. எந்த சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தேவைப்பட்டால் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #DMK #MKStalin #SterlitePlant #Thangamani
தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘ஸ்டெர்லைட் ஆலை’யால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக கூறி ஆலைக்கு எதிராக பொது மக்கள் நீண்ட நாளாக போராட்டம் நடத்தினர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மிகப்பெரிய அளவில் நடந்த 100-வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர்.
அப்போது போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தீ வைப்பு- கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டு கலவரத்தை அடக்கியதால் கலெக்டர் அலுவலகம் தப்பியது.
வன்முறையைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடரப்பட்ட வழக்கில் ஆலையை திறக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா குழுமம் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மாநில பசுமைத் தீர்ப்பாயமும் ஆலைக்கான அனுமதியை ரத்து செய்தது. இதை எதிர்த்தும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதானந்தா குழுமம் மேல்முறையீடு செய்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இதை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நிபுணர் குழுவை நியமித்தது. நிபுணர் குழுவினர் தூத்துக்குடி வந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்தனர்.
நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசு பற்றியும் ஆய்வு நடத்தினர். பின்னர் தூத்துக்குடியிலும், சென்னையிலும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்கள். இதில் ஆலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருவேறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. நிபுணர் குழு தனது அறிக்கையை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.
இன்று இந்த மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் நாரிமன், நவின் சின்கா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர். நீதிபதிகள் தீர்ப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த நிபந்தனைகளை 3 வாரத்தில் ஆலை நிர்வாகம் நிறைவேற்ற முன்வர வேண்டும். நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்ட பின்பு ஆலையை திறக்க விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்பு ஆலையை திறக்க மாநில பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளிக்க வேண்டும்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பின் மூலம் ஸ்டெர்லைட் ஆலை 3 வாரத்தில் திறக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி எதுவும் வழங்கவில்லை, தீர்ப்பாயத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றி அனுமதி பெற வேண்டும் என்று மட்டுமே உத்தரவிட்டு இருப்பதாக இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் வக்கீல் ராகேஷ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், இந்த வழக்கில் தனது மனுவை தமிழக அரசு மனுவுடன் சேர்த்து விசாரிக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி எதுவும் வழங்கவில்லை என்று தெரிவித்தார். #SC #SterlitePlant
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை திறக்க அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு வருகிற 8ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #Sterlite #TNGovernment #SC
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்