search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் பிரச்சனை: மக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பு அளிக்கும்- அமைச்சர் சீனிவாசன்
    X

    ஸ்டெர்லைட் பிரச்சனை: மக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பு அளிக்கும்- அமைச்சர் சீனிவாசன்

    ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் அ.தி.மு.க. அரசு எப்போதும் மக்களின் உணர்வுகளை மதித்து உரிய முடிவு எடுக்கும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. இதில் அ.தி.மு.க. அரசு எப்போதும் மக்களின் உணர்வுகளை மதித்து உரிய முடிவு எடுக்கும். மக்களுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு தி.மு.க. மட்டுமே எதிர்கட்சி. மற்ற எந்த கட்சியையும் நாங்கள் போட்டியாக நினைக்கவில்லை. அரசியல் களத்தில் அவர்களை எதிர்த்தே எங்கள் பிரசாரம் இருக்கும்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு போதிய நிவாரணம் அளிக்கவில்லை. அதற்காகத்தான் நாங்கள் மீண்டும் கடிதம் எழுதி வருகிறோம்.

    உரிய நிவாரணத்தை பெற்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அ.தி.மு.க. அரசு உறுதியாக செய்து தரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×