search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Security"

    • கோவையில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது.
    • பஸ், ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு தொடங்கியது.

    கோவை,

    சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    கோவையில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது. விழாவில் கலெக்டர் கிராந்திகுமார் பங்கேற்று தேசிய கொடியினை ஏற்றி வைக்க உள்ளார்.

    தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்வதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது.

    சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் மாநகர் பகுதிகளில் 1,700 போலீசாரும், புறநகரில் 800 போலீசார் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    குறிப்பாக பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வரும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அங்கு போலீசார் 24 மணி நேரமும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மார்க்கெ ட்டுகள், பஸ் நிலையங்களில் அடிக்கடி ரோந்து சென்று வருகின்றனர்.

    அங்கு யாராவது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். அவர்களின் முகவரியை பெற்ற பின்னரே அவர்களை விடுவிக்கின்றனர். மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பஸ் நிலையங்கள் முழுவதும் சோதனை செய்யப்படுகிறது.

    கோவையில் கடந்த சில தினங்களாகவே போலீஸ் கண்காணிப்பும், ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றன்.

    இதுதவிர மாவட்டத்தில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள், மேன்சன்கள் ஆகியவற்றிலும் அடிக்கடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி இருந்தால் பிடித்தும் விசாரித்தும் வருகின்றனர்.

    கோவையில் உள்ள கோவை சந்திப்பு ரெயில் நிலையம், போத்தனூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அங்கு ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலைய வளாகம், ரெயில் பெட்டிகள் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் அடிக்கடி ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் ரெயில் நிலையத்திற்கு வருபவர்களின் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. சோதனைக்கு பின்னரே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதுதவிர சுதந்திர தினத்தையொட்டி வன்முறையை தூண்டும் வகையிலும், மத மற்றும் சாதி மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை பதிவு செய்யப்படுவதை தடுக்க சைபர் குற்றப்பிரிவு மற்றும் உளவுத்துறையினரும் சமூக வலைதளங்களை கண்காணித்து வருகின்றனர்.

    சுதந்திர தினத்தையொட்டி கோவை விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் பலகட்ட சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படு கின்றனர்.

    • 12 ஆண்டுகளாக நெல்லை- செங்கோட்டை ரெயிலில் டீ விற்று வருவதாக குருநாதன் மனுவில் கூறியுள்ளார்.
    • அம்பை ரெயில் நிலையத்தில் கேன்டீன் நடத்தி வரும் ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை டவுன் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவர் இன்று தனது மனைவி, மகள் மற்றும் கைக்குழந்தையுடன் வந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 12 ஆண்டுகளாக நெல்லை- செங்கோட்டை செல்லும் ரெயிலில் கேன் மூலம் குறைந்த விலையில் டீ விற்று வருகிறேன். இதனை நம்பியே எனது குடுத்பத்தின் வாழ்வாதாரம் உள்ளது. இந்நிலையில் அம்பை ரெயில் நிலையத்தில் கேன்டீன் நடத்தி வரும் ஒருவர் என்னை குறைந்த விலையில் டீ விற்க கூடாது எனவும், இதனால் அவருக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனது வாழ்வாதரம் கருதி இதுகுறித்து நடவடிக்கை எடுத்து எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • அனைவரையும் மாநாட்டுக்கு அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அவிநாசி:

    திருமுருகன்பூண்டியில் இந்து முன்னணி சார்பில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன், நகர தலைவர் வடிவேல், பொருளாளர் மதியழகன் முன்னிலை வகித்தனர். வருகிற 30-ந் தேதி அவிநாசியில் பெரிய கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து மக்களை அழைப்பது, 16ந் தேதி திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் 27 இடங்களில் மாநாடு குறித்து தெருமுனை கூட்டங்கள் நடத்துவது, பக்தி அமைப்புகள், சிவனடியார்கள், சமுதாய தலைவர்கள், ஆன்மிக பெரியோர்கள் உள்ளிட்ட அனைவரையும் மாநாட்டுக்கு அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    • பஸ்சில் இருந்த மந்திரமூர்த்தியின் பாக்கெட்டில் இருந்த பர்சை 4 பெண்கள் திருடினர்.
    • ஆறுமுகம் என்பவரிடம் 3 பெண்கள் ரூ.7 ஆயிரத்தை பிக்பாக்கெட் அடித்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    பிக்பாக்கெட்

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக நேற்று பேட்டை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த மந்திரமூர்த்தி (வயது 56) என்பவர் பஸ்சில் டவுனுக்கு சென்றார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த பர்சை 4 பெண்கள் திருடினர். உடனே சுதாரித்துக்கொண்ட அவர் கத்தி கூச்சலிடவே பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அவர்கள் 4 பேரையும் பிடித்து சந்திப்பு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த ஆஷா(37), திவ்யா(40), சுசீலா(47), லட்சுமி (20) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து பர்சை மீட்டு மந்திர மூர்த்தியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    மேலும் 3 பேர் கைது

    இதேபோல் சந்திப்பு உடையார்பட்டியில் இருந்து டவுனுக்கு கோவிலுக்கு சென்ற ஆறுமுகம் என்பவரிடம் பஸ்சில் பயணம் செய்த திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த முத்துமாரி, ஜெயந்தி, விஜயலட்சுமி ஆகிய 3 பெண்கள் ரூ.7 ஆயிரத்தை பிக்பாக்கெட் அடித்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    நேற்று ஒரே நாளில் தேரோட்ட திருவிழாவில் பங்கேற்பதற்காக வந்த 2 முதியவர்களிடம் பிட்பாக்கெட் அடித்த 7 பெண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தேரின் முன்பாக போலீஸ் வேனில் சுழலும் காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    • ஜாதி ரீதியிலான பனியன்கள், ரிப்பன்கள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    தேரோட்டத்தின் போது பக்தர்களிடம் இருந்து செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக சி.சி.டி.வி காமிராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து நெல்லையப்பர் தேரின் முன்பாக போலீஸ் வேனில் சுழலும் காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த ஆண்டு ஜாதி ரீதியிலான பனியன்கள், ரிப்பன்கள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் சில தனியார் நிறுவனங்கள் ஒரே மாதிரியான பனியன்களை வழங்கினர். அதனை அணிந்து தேருக்கு தடி போடுபவர்கள் தடி போட்டனர். மேலும் தேருக்கு முன்பாக நாதஸ்வரம், செண்டை மேளம் முழங்கப்பட்டது. மேலும் சிவனடியார்களும் சங்கொலி எழுப்பினர். தேரோட்டத்தை ஒட்டி 4 ரதவீதிகளிலும் மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மின் வயர்களை அகற்றி தேரோட்டத்திற்கு வழிவகை செய்தனர்

    • ஒப்பிலியப்பன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • சி.சி.டி.வி கேமராக்களை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளோம்.

    திருநாகேஸ்வரம்:

    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் வெங்கடாசலபதி சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் புகழ்பெற்றதும் நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் பொய்கையாழ்வார் பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான தலமாகும்.

    இந்த கோவிலில் விமானங்கள், கோபுரங்கள், பிரகாரங்கள், சிறு சிறு சன்னதிகள் முதலியன சுமார் ரூ.3.50 கோடி மதிப்பில் புனரமைத்து திருப்பணி வேலைகள் அனைத்தும் பூர்த்தி அடைந்துள்ளன. இதையடுத்து வரும் 29-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் வெங்கடாசலபதி சுவாமி கோவில், வடக்கு வீதியில் எழுந்தருளி இருக்கும் ஜெயவீரஆஞ்சநேயர் கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று மாலை ஆலய வளாகத்தில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    ஒப்பிலியப்பன் கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் 29ஆம் தேதி சுமார் 20000 பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு வி.ஏ.ஓ நகர், அங்காளம்மன் கோவில், நாகநாதசுவாமி கோவில், பிரத்தியங்கிராதேவி கோவில் என நான்கு புறமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவில் கூட்டங்களை பயன்படுத்தி நகை திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதத்தில் சுமார் 25 இடங்களில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் தொடர்ந்து கவனிக்கும் வகையில் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளோம். நான்கு இடங்களில் சுகாதாரத்துறை மூலமாக முகாம் அமைக்கப்படுகிறது. 200-க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    29 ஆம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெறும் நேரம் வரை கோவிலுக்குள் 1000 பேர் மட்டுமே இருக்க முடியும் என்பதால் பொதுமக்களும் பக்தர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். மதியம் 12 மணிக்கு மேல் அனைவரும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 29ஆம் தேதி நாள் முழுவதும் தரிசனம் செய்யலாம். நிலமாலை, வஸ்திரம் சாத்துதல், அர்ச்சனை ஆகியவை கிடையாது. சுவாமி தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. உப்பிலியப்பன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருநாகேஸ்வரத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடைகள் இரண்டையும் 28 மற்றும் 29ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் மூடுவதற்கு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு இன்று முதல் 29ஆம் தேதி முடிய ஐந்து நாட்களுக்கு பூமி தேவி திருமண மண்டபத்தில் அன்னதானம் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கோவில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு சாந்தா, கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கிராமசபை கூட்டத்தில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி ஊராட்சி தலைவர் வள்ளியம்மாள் கதிர்வேல் அதனை புறக்கணித்தார்.
    • ஏரி, குளங்களில் மரம் நட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவலார்குளம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி தலைவர் வள்ளியம்மாள் கதிர்வேல், கிராமசபை கூட்டத்தில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதனால் கிராமசபை கூட்டத்திற்கு துணை தலைவர் கோவில்பாண்டி தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசாரதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் பழனி தீர்மானங்களை வாசித்தார்.

    கிராமத்தில் பசுமை வளங்களை அதிகரிக்க ஏரி, குளங்களில் மரம் நட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராமசபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் குமுதா, முருகேஷ்வரி, வேலம்மாள், மேகனா செல்வி மற்றும் கிராமமக்கள் பங்கேற்றனர்.

    • பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
    • எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஸ்ரீநகர்:

    உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.

    இதையொட்டி பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 கூட்டம் இன்று தொடங்கியது. சுற்றுலா தொடர்பான ஜி20 பணிக் குழுவின் 3-வது கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சர்வதேச கூட்டமாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.

    ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை, கடற்படை, கமாண்டோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஜபர்வன் மலைப்பகுதி முதல் எழில்மிக்கதால் ஏரி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தால் ஏரியில் கடற்படை காமாண்டோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் பரவலாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆசியாவின் சுவிட்சர்லாந்து என அறியப்படும் குல்மார்க் மற்றும் இதர சுற்றுலா தலங்களுக்கு சர்வதேச பிரதிநிதிகள் வருகை புரிவதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜராத்தின் கட்ச் பகுதியிலும், 2-வது கூட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியிலும் நடைபெற்றது.

    • 2023-24-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.
    • மொத்தம் 4,602 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

    கடலூர்:

    மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற படிப்புகளில் சேரு வதற்கு 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப் படையிலேயே இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.நீட் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதில் கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுத 4,602 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர்.

    மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டத்தில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கடலூரில் 4 தேர்வு மையங்களிலும் விருத்தாசலம், பண்ருட்டி ஸ்ரீமுஷ்னம் என 4 மையங்களில் மொத்தம் 4,602 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.இந்த தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

    இதற்காக விண்ணப்பித்த மாணவ -மாணவிகள் காலை 11 மணி முதல் தேர்வு மையத்தில் அனுமதிக்கப் பட்டனர். தேர்வு நுழைவுச் சீட்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ, அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை, மாற்று திறனாளிகளாக இருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றை சரி பார்தது உள்ளே அனு மதித்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தடை யில்லா மின்சாரம் வழங்கு வதற்கும், தடை யில்லா இணைய வசதி மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    • மதுரை மாநகரில் சித்திரை திருவிழாவையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
    • பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்குதல் ஆகி யவை முக்கிய நிகழ்ச்சி களாகும்.

    இந்த நிலையில் தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் நேற்று மதுரை வந்தார். மாநகர போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திரு விழாவில் போதிய பாது காப்பு கொடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    அப்போது சித்திரை திருவிழா பாதுகாப்பு தொடர்பாக அதிகாரி சங்கர் பல்வேறு ஆலோ சனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர், தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    பின்னர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் மீனாட்சி அம்மன் கோவில் உள்பட பல்வேறு பகுதி களுக்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்தார். திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், அழகர் கோவிலில் சுவாமி புறப்படும் இடம் ஆகிய வற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் இறங்கும் வைபவத்துக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    கடந்தாண்டு சித்திரை திருவிழாவின்போது வைகை ஆற்றுக்குள் 2 பக்தர்கள் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். நடப்பாண்டு திருவிழாவில் அசம்பாவிதம் நடக்காத வகையில் போலீசார் பாது காப்பு பணிகளை மேற்கொள்வது என்று முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக மதுரை மாநகரில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பூ பல்லாக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.
    • மின் தட்டிகள் மற்றும் மேல தாளங்கள், நாட்டிய குதிரைகள் ஊர்வ லத்தில் இடம்பெற்றன.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை தெற்குதெரு அரபுசாஹிப் ஆண்டவர் பள்ளிவாசலில் 535-ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று தொடங்கியது.

    முன்னதாக விழா கமிட்டியினர் முன்னிலையில் கந்தூரி விழா ஊர்வலத்தை முத்துப்பேட்டை ஜாம்புவா னோடை தர்கா முதன்மை அறங்காவலரும், தமிழக தர்காக்கள் முன்னேற்ற பேரவை நிறுவன தலைவருமான எஸ்.எஸ்.பாக்கர்அலி சாஹீப் தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து, அரபு சாஹிப் ஆண்டவர் பள்ளிவா சலில் இருந்து கந்தூரி பூ பல்லாக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.

    இதில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 2 பூப்பல்லாக்கு, கண்ணாடி களால் அலங்கரிக்கப்பட்ட 2 ரதங்கள், மின் விளக்கு களால் உருவாக்கப்பட்ட ஏராளமான மின் தட்டிகள் மற்றும் மேல தாளங்கள், நாட்டிய குதிரைகள் ஊர்வ லத்தில் இடம்பெற்றன.

    ஊர்வலம் பேட்டை ரோடு, முகைதீன் பள்ளி திடல், பட்டுக்கோட்டை சாலை, பங்களா வாசல், நியூ பஜார், பழைய பஸ் ஸ்டான்ட், திருத்துறைப்பூண்டி சாலை வழியாக புதிய பஸ் நிலையம் சென்றது.

    பின்னர், அங்கிருந்து பெரிய கடைத்தெரு, மரைக்காயர் தெரு, எஸ்.கே.எம் தெரு வழியாக மீண்டும் பள்ளிவா சலை வந்தடைந்தது.

    பின்னர் இரவு 9 மணிக்கு மௌலுத் ஷரீப் மற்றும் துஆ ஓதப்பட்டு புனித கொடி ஏற்றப்பட்டது.

    இதில் நூற்றுக்க ணக்கானோர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தையொட்டி திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    சென்னை:

    பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி, நாளை சென்னை வருகிறார். சென்னையில் அவர் காரில் செல்லும் வழிநெடுகிலும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுக்க உள்ளனர். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி 26.05.2022 அன்று மாலை, சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகளின் அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைக்க நாளை (26.05.2022) சென்னை வருகை புரிகிறார். இந்நிகழ்ச்சி முடிந்ததும், சென்னை விமான நிலையத்திற்கு சென்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார். 

    அதன்பேரில், பிரதமர் சென்னை வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் தகுந்த அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

    சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகர காவல், 5 கூடுதல் ஆணையாளர்கள், 8 சென்னை பெருநகர காவல் இணை ஆணையாளர்கள் மற்றும் காவல்துறை துணை தலைவர்கள் (JCs and DIGs), 29 காவல் துணை ஆணையாளர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் (DCs and SPs), சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் உள்பட 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன்  5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    நேரு ஸ்டேடியத்திற்கு வரும் வாகனத்தை சோதனையிடும் அதிகாரி

    பிரதமர் வருகை தரும் சென்னை விமான நிலையம், சென்னையில் செல்லும் வழித் தடங்கள், நிகழ்ச்சி நடைபெறும் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டும், சென்னையில் உள்ள லாட்ஜுகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணித்து வருகின்றனர். இது தவிர, சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

    மேலும் பிரதமர் வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
    ×