search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Conferences"

    • கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • அனைவரையும் மாநாட்டுக்கு அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அவிநாசி:

    திருமுருகன்பூண்டியில் இந்து முன்னணி சார்பில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன், நகர தலைவர் வடிவேல், பொருளாளர் மதியழகன் முன்னிலை வகித்தனர். வருகிற 30-ந் தேதி அவிநாசியில் பெரிய கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து மக்களை அழைப்பது, 16ந் தேதி திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் 27 இடங்களில் மாநாடு குறித்து தெருமுனை கூட்டங்கள் நடத்துவது, பக்தி அமைப்புகள், சிவனடியார்கள், சமுதாய தலைவர்கள், ஆன்மிக பெரியோர்கள் உள்ளிட்ட அனைவரையும் மாநாட்டுக்கு அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    • கலசலிங்கம் பல்கலை கழகத்தில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் தொடங்கியது.
    • பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களிடம் கலந்துரையாடி வாழ்த்தினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை கழகத்தில் ஸ்மாட் இந்தியா ஹேக்கத்தான்-2022, மத்திய அரசின் கல்வி அமைச்சகம், மத்திய அரசு புதிய கண்டுபிடிப்புகள் குழுவும், ஏ.ஐ.சி.டி. ஆகியவற்றுடன் இணைந்து 5 நாள் நிகழ்ச்சியின் தொடக்க விழா பல்கலைக்கழக துணைத்தலைவர் சசிஆனந்த் தலைமையில் நடந்தது.

    சிறப்பு விருந்தினராக மல்ட்டிகோர்வேர் நிறுவனத்தின் துணைத்தலைவர் சுப்ரமணியம் பங்கேற்று பேசினார்.

    பதிவாளர் வாசுதேவன், ஆலோசகர் ஞானசேகரன் கலசலிங்க பல்கலைகழக புதிய கண்டுபிடிப்பு குழு தலைவர் டெனி கலசலிங்கம் ஆகியோர் பேசினர். பல்கலை சர்வதேச உறவு இயக்குநர் சரசு,கல்வித்துறை இயக்குநர் கோடீஸ்வரராவ் மற்றும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களிடம் கலந்துரையாடி வாழ்த்தினார்.

    ×