search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துப்பேட்டையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கந்தூரி விழா ஊர்வலம்
    X

    முத்துப்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கந்தூரி விழா ஊர்வலம் நடந்தது.

    முத்துப்பேட்டையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கந்தூரி விழா ஊர்வலம்

    • பூ பல்லாக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.
    • மின் தட்டிகள் மற்றும் மேல தாளங்கள், நாட்டிய குதிரைகள் ஊர்வ லத்தில் இடம்பெற்றன.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை தெற்குதெரு அரபுசாஹிப் ஆண்டவர் பள்ளிவாசலில் 535-ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று தொடங்கியது.

    முன்னதாக விழா கமிட்டியினர் முன்னிலையில் கந்தூரி விழா ஊர்வலத்தை முத்துப்பேட்டை ஜாம்புவா னோடை தர்கா முதன்மை அறங்காவலரும், தமிழக தர்காக்கள் முன்னேற்ற பேரவை நிறுவன தலைவருமான எஸ்.எஸ்.பாக்கர்அலி சாஹீப் தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து, அரபு சாஹிப் ஆண்டவர் பள்ளிவா சலில் இருந்து கந்தூரி பூ பல்லாக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.

    இதில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 2 பூப்பல்லாக்கு, கண்ணாடி களால் அலங்கரிக்கப்பட்ட 2 ரதங்கள், மின் விளக்கு களால் உருவாக்கப்பட்ட ஏராளமான மின் தட்டிகள் மற்றும் மேல தாளங்கள், நாட்டிய குதிரைகள் ஊர்வ லத்தில் இடம்பெற்றன.

    ஊர்வலம் பேட்டை ரோடு, முகைதீன் பள்ளி திடல், பட்டுக்கோட்டை சாலை, பங்களா வாசல், நியூ பஜார், பழைய பஸ் ஸ்டான்ட், திருத்துறைப்பூண்டி சாலை வழியாக புதிய பஸ் நிலையம் சென்றது.

    பின்னர், அங்கிருந்து பெரிய கடைத்தெரு, மரைக்காயர் தெரு, எஸ்.கே.எம் தெரு வழியாக மீண்டும் பள்ளிவா சலை வந்தடைந்தது.

    பின்னர் இரவு 9 மணிக்கு மௌலுத் ஷரீப் மற்றும் துஆ ஓதப்பட்டு புனித கொடி ஏற்றப்பட்டது.

    இதில் நூற்றுக்க ணக்கானோர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தையொட்டி திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×