search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Security"

    • கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள களமசேரியில் நேற்று கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது.
    • இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருச்சி

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள களமசேரியில் நேற்று கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருச்சி விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார்.

    விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்கள் சோதனை முதல் விமான பயணிகளின் உடைமைகள் வரை அனைத்தும் பரிசோதனைக்கு பின்னரே விமான நிலையப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் பெட்டிகளும் சோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

    மேலும் விமான நிலையத்தின் கார் நிறுத்தும் இடங்களில் தேவையற்ற வாகனங்கள் ஏதேனும் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தவிர பயணிகள் எவரேனும் சந்தேகப்படும் வகையில் விமான நிலைய பகுதிக்குள் நுழைந்திருந்தால் அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளின் உடைமைகள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது .

    • 5 துறைகளும் ஒன்றாக இணைந்து வெடி மருந்து குடோன் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே புதுப்பேட்டை கொக்குபாளையம் மற்றும் நல்லூர் பாளையம், காடாம்புலியூர் பகுதியில் உள்ள மேலிருப்பு பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்து குடோ ன்களில் வருவாய்த்துறை, தீயணைப்பு துறை,காவல் துறை, தொழிலாளர் நலத்துறை, தொழிற்சாலை மேம்பாட்டு வாரியம் மேற்கண்ட 5 துறைகளும் ஒன்றாக இணைந்து வெடி மருந்து குடோன் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வில் தொழிற்சாலைகளின் துணை இயக்குநர் மகேஷ்வரன், பண்ருட்டி சிறப்பு திட்ட தனி தாசில்தார் பிரகாஷ்,புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தீயணைப்பு அலுவலர் வேல்முருகன் தொழிலாளர் அலுவலர் ஆகியோர்உடனிருந்தனர்.ஆய்வின்போது விதிமீ றல்கள் ஏதாவது உள்ளதா? எனவும்,பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.

    • குடிநீர், வாறுகால் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு அதனை சுற்றி இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர்.
    • விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்காசி:

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் பஸ் நிலையத்தின் அருகே சாலையோரங்களில் குடிநீர் பைப் மற்றும் வாறுகால் பணிகள் மேற்கொள்வதற்காக மிகப்பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு அதனை சுற்றி இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர்.

    அதிலும் குறிப்பாக பாவூர்சத்திரம் நான்கு முக்கு சாலையில் பணிகள் நடைபெற்று வருவதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அவ்வழியே செல்லும் போது நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று பெரும் வாகன நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் கனிம வளங்களை கேரளாவிற்கு ஏற்றி செல்லும் கனரக லாரிகள் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரிகள் அந்தச் சாலை வழியாக செல்வதால் வாகனங்கள் அருகில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழும் அபாய நிலையும் உள்ளது.

    எனவே விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க பாவூர்சத்திரம் நான்குமுக்கு சாலையில் வாகன நெருக்கடி ஏற்படாத வண்ணம் போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருமண உறவானது துணைக்கு ஊன்றுகோலாக தான் இருக்க வேண்டும்.
    • எல்லோரது வாழ்விலும் காதல் என்கிற ஒரு தருணம் கண்டிப்பாக வரும்.

    மனிதராக பிறந்த ஒவ்வொருக்குள்ளும் காதல் உணர்வு என்பது கண்டிப்பாக இருக்கும், ஆண் - பெண் என யாராக இருந்தாலும் சரி காதலிக்காமல் இருக்க முடியாது. ஏதேனும் ஒரு கட்டத்தில் எல்லோரது வாழ்விலும் காதல் என்கிற ஒரு தருணம் கண்டிப்பாக வரும். ஆரோக்கியமான காதலில் அன்பு, பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் ஆறுதல் போன்றவற்றை ஒவ்வொருவரும் வழங்க வேண்டும்.

    நம்முடைய திருமண உறவானது நமது துணைக்கு ஊன்றுகோலாக தான் இருக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் தொந்தரவாக இருக்கக்கூடாது. சிலர் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் சில விஷயங்கள் அவர்களது துணைக்கு பெரும் தொல்லையாகவோ அல்லது அவர்களது வளர்ச்சியை தடுக்கக்கூடியதாகவோ இருந்துவிடக்கூடும்.

    * கணவன்-மனைவி இருவருக்கும் சண்டை வருவது என்பது சகஜமான ஒன்றுதான், அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் ஏற்றப்படுவது சகஜம். அதற்காக ஒருவர் தனது துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது தவறான ஒன்றாகும். இதுபோன்று துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது பாதுகாப்பு, மற்றும் நம்பிக்கையின் உணர்வைப் பாதிக்கக்கூடும். மன மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமும் இதனால் ஏற்படும், மேலும் இதனால் இருவரது சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படும்.

    * கணவன்-மனைவி உறவில் வெறுப்பு இருக்கக்கூடாது, அப்படி வெறுப்பு இருந்தால் அது வலி, கோபம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். வெறுப்புணர்வை வைத்திருப்பது உங்கள் கணவன்-மனைவியின் ஆழ்மனதில் தவறான சிந்தனையை ஏற்படுத்திவிடும். வெறுப்புகளை வைத்திருப்பது உறவு முறிவு, மனச்சோர்வு, பதட்டம் மற்றும் கோபம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். புண்படுத்தும் நிகழ்வுகள் அல்லது நடத்தை குறித்து கசப்பாக மாறாமல் இருக்க, உங்கள் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளைப் உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேசுங்கள்.

    * உங்கள் கணவனை-மனைவியை ஒருபோதும் உங்கள் முந்தைய உறவோடோ அல்லது வேறொருவரின் உறவோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். அப்படி நீங்கள் அவர்களை வேறொருவருடன் ஒப்பிட்டு பேசினால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார். அப்படி நீங்கள் உங்கள் துணையை மற்றவருடன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என்றால் அவர்கள் செய்யும் தவறுகளை மட்டுமே தான் நீங்கள் உற்றுநோக்குகிறீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. இதனால் உங்கள் கணவன்-மனைவி உறவில் பெரியளவில் சிக்கல் ஏற்படும்.

    * உங்கள் கணவன்-மனைவியின் தொலைபேசி அல்லது பிற சமூக வலைதள பக்கங்களை அவர்களுக்குத் தெரியாமல் பார்ப்பது மிகவும் தவறான செயலாகும், இது உங்கள் துணையின் தனி உரிமையை மீறக்கூடிய மோசமான செயலாகும், இது அவர்கள் மீதான நம்பிக்கையின்மையை காட்டுகிறது. இவ்வாறு செய்வது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் துணைக்கும் ஒரு வித மனசோர்வை ஏற்படுத்திவிடும். இதுபோன்று சந்தேக கண்ணோட்டத்துடன் உங்கள் துணையின் செயலை உற்றுநோக்குவது தவறான புரிதலை ஏற்படுத்தி உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

    * உங்கள் துணையின் சில பழக்கவழக்கங்கள், ஆடைத் தேர்வுகள் மற்றும் உங்கள் துணை யாருடனாவது பேசினால் அவர்களை கட்டுப்படுத்துவது போன்ற செயல்களை நீங்கள் செய்யக்கூடாது. இப்படி அவர்களது விருப்பம் எல்லாவற்றிலும் நீங்கள் மூக்கை நுழைத்தால் அது அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காது.

    • பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.
    • முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 31-ம்ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது.

    இதற்கு பா.ஜனதா மாநில விவசாய அணி துணைத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்குகிறார்.

    இந்து முன்னணி ஒன்றிய தலைவர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.

    அனைத்து கிராம கமிட்டி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவபிரகாஷம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி உறுப்பினர் பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகாணந்தம், இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார், பா.ஜனதா மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது.

    ஊர்வலமானது மதியம் 2 மணிக்கு தொடங்கி ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு முத்துப்பேட்டையின் முக்கிய பகுதி மற்றும் ஊர்வல பாதை முழுவதும் 165 இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    5ஆளில்லா குட்டி விமானங்கள், ஊர்வலம் செல்லும் பாதையில் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    100-க்கும் மேற்பட்ட இடத்தில் போலீசார் நிறுத்தி பைனாக்குலர் பயன்படுத்த உள்ளது.

    மேலும் பதற்றமான பகுதிகளில் சாலை இருபுறங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள், ஆஸ்பட்டாஸ் சீட் கொண்ட தடுப்பு வேலிகள் அமைத்து மற்றும் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான பேரிக்காடுகள் போடப்பட்டுள்ளது.

    ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை டிஐஜி ஜெயசந்திரன், திருச்சி டிஐஜி பலவன், விழுப்புரம் டிஐஜி ஜியாவுல் ஹக், திருவாரூர் எஸ்.பி.சுரேஷ்குமார், மயிலாடுதுறை எஸ்பி மீனா, தஞ்சை எஸ்.பி ஆஸிஷ் ராவத், எஸ்ஐயூ எஸ்பி பாண்டியராஜன், திருச்சி டிராபிக் எஸ்பி செல்வகுமார், சேலம் எஸ்பி மதிவாணன், கரூர் எஸ்பி சுந்தரவதனம், கடலோர காவல் படை எஸ்பி அதிவீரப்பாண்டியன், திருச்சி ரயில்வே எஸ்பி செந்தில்குமார், அரியலூர் எஸ்பி பரோஸ்கான் அப்துல்லா உட்பட 10 ஏடிஎஸ்பி, 37 டிஎஸ்பிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார், ஆயுதப்படை போலீசார், ஊர்காவலர் படை போலீசார் உள்பட திருச்சி மண்டலத்தில் உள்ள தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரும், கமோண்டோ போலீசாரும் வந்துள்ளனர்.

    மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். முத்துப்பேட்டை நகரை போலீசார் தீவிர கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    இதனை முன்னிட்டு முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • பதற்றமான பகுதிகளில் வேலிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    முத்துப்பேட்டை:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, அரமங்காடு, கோவிலூர், மருதங்காவெளி உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்கா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக ஆசாத்நகர் சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள நியூபஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது. ஊர்வலத்தை முன்னிட்டு போலீஸ் துறை சார்பில் கடந்த ஒரு வார காலமாக பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட வருவாய் துறை சார்பிலும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது. ஊர்வலம் செல்லும் பாதையில் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள். பதற்றமான பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த ஊர்வலத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    • நாளை முதல் நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க ஏற்பாடு
    • ஆற்றுப்பகுதியில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை போலீசார் செய்து வருகின்றனர்

    கோவை,

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி கோவை மாநகரில் 676 சிலைகள், புறநகரில் 1,611 சிலைகள் என மாவட்டத்தில் மொத்தமாக 2,287 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை யொட்டி மாநகரில் 2,500 போலீசார், புறநகரில் 2 ஆயிரம் போலீசார் என மொத்தம் 4,500 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் விடிய, விடிய ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிலைகள் முன்பு தலா ஒரு போலீசார் நிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    கோவை நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நாளை (புதன்கிழமை) மற்றும் 22-ந் தேதி ஆகிய நாட்களில் நடந்கிறது. கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் சிங்காநல்லூர், குறிச்சி, குனியமுத்தூர், வெள்ளக்கி ணறு, வடவள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள குளங்க ளிaல் கரைக்கப்படுகிறது. 22-ந் தேதி முத்தணங்குளத்தில் சிலைகள் கரைக்கப்படுகிறது. இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி நாளை (புதன்கிழமை) மாந கரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள் ளது. இது குறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் இயக்கக்கூடாது. பொள்ளாச்சியிலிருந்து உக்கடம் வரும் கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் ஈச்சனாரி சர்வீஸ்ரோடு வழியாக சென்று ஈச்சனாரியில் யுடர்ன் செய்து செட்டிப்பாளையம் ரோடு வழியாக ஜி.டி டேங்க், ரெயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, போத்தனூர் கடைவீதி, குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் சென்றடையலாம்.

    பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் நோக்கி செல்லும் இலகுரக வாக னங்கள் ஈச்சனாரி, தக்காளி மார்க்கெட்டில் வலது புறமாக திரும்பி சாரதா மில் ரோடு ரெயில் கல்யாண மண்டம் சந்திப்பு, போத்தனூர் கடைவீதி, குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் செல்லலாம்.

    உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பஸ்கள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவில் இடது புறமாக திரும்பி போத்த னூர் சாலை, போத்தனூர் கடைவீதி, ரெயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, செட்டி பாளையம் ரோடு, ஈச்சனாரி சென்று பொள்ளாச்சி ரோட்டை வந்தடைந்து செல்ல வேண்டும்.

    உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் இலகுரக வாகனங்கள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவு, போத்தனூர் சாலை, போத்தனூர் கடைவீதி, ரெயில் கல்யாண மண்டபம் சந்திப்பில் வலது புறமாக திரும்பி சாரதாமில் ரோடு வழியாக பொள்ளாச்சி ரோட்டை வந்தடைந்து செல்ல வேண்டும்.

    உக்கடத்தில் இருந்து குனியமுத்தூர் வழியாக பாலக்காடு நோக்கி செல்லும் கனரக வாக னங்கள் மற்றும் பஸ்கள் அனைத்தும் உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை வழியாக அசோக் நகர் ரவுண்டானா, பள்ளியின் இடது புறமாக திரும்பி சிவாலயா சந்திப்பு பேரூர், சுண்டக்காமுத்தூர், கோவைப்புதூர் வழியாக பாலக்காடு நோக்கி செல்ல லாம். உக்கடத்திலிருந்து குனிய முத்தூர் வழியாக பாலக் காடு நோக்கி செல்லும் இலகுரக வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் சாலைவழியாக அசோக் நகர் ரவுண்டானாவில் இடது புறம் திரும்பி புட்டு விக்கி ரோடு வழியாக பாலக்காடு நோக்கி செல்லலாம்.

    பாலக்காடு சாலையிலி ருந்து உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனம் மற்றும் பஸ்கள் பாலக்காடு ரோடு, கோவைப்புதூர் பிரிவில் இடது புறமாக திரும்பி கோவைப்புதூர் ஆசரமம் பள்ளி, பேரூர், செல்வபுரம் சிவாலயா சந்திப்பு வழியாக செல்வபு ரம் மேல்நிலைப் பள்ளியின் வலது புறமாக திரும்பி அசோக் நகர் ரவுண்டானா வழியாக உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

    இலகுரக வாகனங்கள் கோவைப்புதூர் பிரிவு, குனியமுத்தூர், கண்ணாம்பு காளவாயில் இடது புறமாக திரும்பி, புட்டுவிக்கி சாலை, அசோக் நகர் ரவுண்டானா வழியாக உக்கடம் வந்தடைந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • உலக தலைவர்களுக்கு பாதுகாப்பும், உபசரிப்பும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
    • டெல்லியில் ஒரு குஜராத் மாடல் எனும் செய்தியுடன் இவ்வீடியோ பரவியது

    இந்திய தலைநகர் புது டெல்லியில் 19 உலக நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உலக தலைவர்கள் இந்தியா வரவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும், நகரை தூய்மைப்படுத்தும் பணிகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது.

    அதில், ஒரு சேரி முழுவதும் பச்சை நிற துணி படுகைகளாலும், ஜி20 எனும் விளம்பரங்களை கொண்ட தாள்களுடனும் போர்த்தப்பட்டு இருப்பது தெரிந்தது. ஜி20 தலைவர்களின் வருகைக்காக சேரிகளை (புது டெல்லியில்) அரசு மறைக்கிறது என குறிப்பிட்டு "டெல்லியில் குஜராத் மாடல்" எனும் செய்திப் பதிவும் இதனுடன் வெளியானது. ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

    ஜி20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாகவே கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பல மாநிலங்களில், ஜி20 உறுப்பு நாடுகளின் பல்வேறு பிரதிநிதிகளுடன் பல்வேறு துறையை சேர்ந்த இந்திய அமைச்சர்கள் சந்தித்து கலந்துரையாடினர். இதில் பல சந்திப்புகள் மும்பை நகரில் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வீடியோவில் காணப்படும் இடம் மகாராஷ்டிராவில் உள்ள வடமேற்கு மும்பையின் மேற்கு விரைவு நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள ஜோகேஷ்வரி சேரிப்பகுதியாகும். போரிவலி பகுதியில் உள்ள பூங்காவை காண அந்த விரைவுச்சாலை வழியாக ஜி20 பிரமுகர்கள் டிசம்பர் 2022ல் சென்ற போது சாலையோர சேரிகள் மறைக்கப்பட்டது.

    அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது மும்பைக்கு பதிலாக டெல்லி என குறிப்பிடப்பட்டு வைரலாகியது.

    "ஏப்ரல் 1 முதல் ஜூலை 27 வரை 49 குடியிருப்புகள் பல்வேறு காரணங்களுக்காக அகற்றப்பட்டதாகவும் ஆனால் ஜி20 உச்சி மாநாட்டிற்காக டெல்லி நகரை அழகுபடுத்த எந்த குடியிருப்பு பகுதியிலும் அகற்றல் நடவடிக்கையோ, மறைத்தலோ நடக்கவில்லை" என வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • இமானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர், எஸ்.பி ஆய்வு செய்தார்.
    • தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா உள்ளிட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

    இந்த நிலையில் இமானு வேல் சேகரன் நினைவி டத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, முருகேசன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு காமிராக்கள், வி.ஐ.பி.க்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், புற காவல் நிலையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா உள்ளிட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.

    • கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • தண்டவாளங்களில் ரெயில்வே போலீசார் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனை செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    நாடு முழுவதும் 76-வது சுதந்திர தினவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட ங்களில் மாவட்ட நிர்வாக ங்கள் சார்பில் சுதந்திர தினவிழா கொண் டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    அணிவகுப்பு ஒத்திகை

    இதற்காக 3 மாவட்டங்களிலும் சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் நாளை மறுநாள் தேசிய கொடியை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து தியாகிகள் கவுரவிக்கப் படு கின்றனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    இதனையொட்டி கடந்த 3 நாட்களாக வ.உ.சி. மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தீயணைப்பு துறை யினர், காவல் துறையினர், ஊர்காவல் படையினர் இணைந்து அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள்

    சுதந்திர தின விழாவிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மேற்பார்வையில் தென் மாவட்டங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் 1,500 போலீசாரும், மாநகரில் துணை போலீஸ் கமிஷனர் அனிதா மேற்பார்வையில் 1,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம், பணகுடி இஸ்ரோ மையம் உள்ளிட்ட இடங்கள், வழிபாட்டு தலங்கள், பள்ளி, கல்லூரிகள், பாதுகாப்பு தொடர்பான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் தண்டவாளங்கள், வாகன காப்பகங்களில் ரெயில்வே போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனை செய்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி கலெக்டர் ரவிச்சந்திரன் தேசிய கொடியேற்றுகிறார். மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்பேரில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துறைமுகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், கடலோர காவல்படையினர், மரைன் போலீசார் ஆகியோரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    • மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தங்கும் விடுதிகள், லாட்ஜ், ஓட்டல், சர்வீஸ் அபார்ட்மெண்ட்டுகளிலும் போலீசார் சோதனை நடத்த தொடங்கி உள்ளனர்.

    கோவை,

    வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனைமுன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் கார் குண்டு வெடிப்பு, சமூக விரோத கும்பல் நடமாட்டம், பல்வேறு குற்றவாளிகள் பிடிபட்ட சம்பவங்களை தொடர்ந்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    நாளை முதல் நகரில் உச்சகட்ட பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விமான நிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. ரெயில் நிலையங்களில் பயணிகள் உடமைகள், பார்சல்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.

    சோதனைக்கு பின்னரே பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதுதவிர வழிபாட்டு தலங்கள், சினிமா தியேட்டர், மால்கள், மார்க்கெட், வணிக வளாகம் என மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகள், கடைவீதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர 10க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    அங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜ், ஓட்டல், சர்வீஸ் அபார்ட்மெண்ட்டுகளிலும் போலீசார் சோதனை நடத்த தொடங்கி உள்ளனர்.

    அங்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த நபர்கள் தங்கி இருந்தால் அவர்களின் முழு விபரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் யாராவது சந்தேகத்திற்கிடமாக தெரிந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    சுதந்திர தின விழா நடக்க உள்ள கோவை வ.உ.சி பூங்கா போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அங்கு சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். மேலும் டிரோன் காமிரா மூலம் கண்காணிக்க திட்டமிட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

    விழா நடக்கும் இடங்களிலும், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் மோப்பநாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • தேசிய பாதுகாப்பை கருதியே இந்த உத்தரவுக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது
    • சீனாவுடனான வர்த்தக உறவை அமெரிக்கா துண்டித்து கொள்ள விரும்பவில்லை

    உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் ஒரு புவிசார் அரசியல் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.

    இதன் ஒரு தொடர்ச்சியாக தங்கள் நாட்டின் பாதுகாப்பை காரணம் காட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

    இதன்படி, சில முக்கியமான தொழில்நுட்பங்களில் அமெரிக்காவிலிருந்து சீனாவில் செய்யப்படும் முதலீடுகளை அமெரிக்கா தடைசெய்துள்ளது. மேலும் பிற தொழில்நுட்ப துறைகளில் முதலீடு செய்யவும், இனி அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதி தேவைப்படும்.

    அமெரிக்க பாராளுமன்றத்திற்கு பைடன் எழுதியுள்ள கடிதத்தில், "ராணுவம், உளவுத்துறை, கண்காணிப்பு, மற்றும் இணையம் சார்ந்த துறைகளில் உள்ள முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புக்களில் சீனா போன்ற நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்க தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்கிறேன்" என கூறியுள்ளார்.

    இந்த புதிய நிர்வாக உத்தரவின்படி செமிகண்டக்டர்கள் மற்றும் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் துறை, குவாண்டம் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் சில செயற்கை நுண்ணறிவு அமைப்பு துறை ஆகிய மூன்று துறைகளிலும் சீனாவில் உள்ள நிறுவனங்களில் சில அமெரிக்க முதலீடுகளை தடை செய்யவும் அல்லது கட்டுப்படுத்தவும் அமெரிக்க கருவூல செயலாளருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

    பொருளாதார நலன்களை காட்டிலும் தேசிய பாதுகாப்பை கருதியே இந்த நிர்வாக உத்தரவுக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதன்மூலம் இன்றியமையாத இரு நாடுகளின் பரந்த அளவிலான பொருளாதார வர்த்தகம் பாதுகாக்கப்படும் என்றும் அதே வேளையில், சீனா தன் ராணுவத்தை மேம்படுத்துவதற்காக அதன் தொழில்நுட்ப நிறுவனங்களில் அமெரிக்காவின் முதலீடுகளை பயன்படுத்துவதை இந்த உத்தரவு தடை செய்ய உதவும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    பைடன் அரசாங்கம் சீனாவுடனான வர்த்தக உறவில் இருந்து துண்டித்து கொள்ள விரும்பவில்லையென்றாலும் சீனாவிற்கெதிராக சில நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த மேம்பட்ட கம்ப்யூட்டர் சிப் அளவை குறைத்தது, சீனாவில் செய்யப்படும் அமெரிக்க முதலீடுகளை குறைத்தது மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகரித்த வரி விகிதங்களை அப்படியே வைத்திருப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

    இந்த நிர்வாக உத்தரவிற்கு எதிர்வினையாக சீனா என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என பொருளாதார நிபுணர்கள் கவனித்து வருகின்றனர்.

    ×