என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தவிர்க்க வேண்டியவை"
- நீண்ட ஆயுள் வாழ்வதற்கும் உடற் பயிற்சி அவசியமானது.
- உடற்பயிற்சியின்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள்.
உடல் நலனை பேணுவதற்கும், நோய் நொடியின்றி நீண்ட ஆயுள் வாழ்வதற்கும் உடற் பயிற்சி அவசியமானது என்பதை இளைய தலைமுறையினர் உணர தொடங்கி இருக்கிறார்கள். சமூக ஊடகங்கள், இணையங்களில் பகிரப்படும் வீடியோக்களை பார்த்து உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகிறார்கள். உடற்பயிற்சி நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று உடலுக்கு தகுந்த பயிற்சிகளை செய்வதே சரியானது. உடற்பயிற்சியின்போது ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்ளாவிட்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். உடற்பயிற்சியின்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
* உடற்பயிற்சியின்போது வியர்வை வெளியேறும். அதிலும் கடுமையான உடற்பயிற்சிகளை செய்யும்போது வியர்வையின் அளவு அதிகரிக்கக்கூடும். அந்த சமயங்களில் கைகளால் வியர்வையை அடிக்கடி துடைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் வியர்வையை துடைக்கும்போது கைவிரல்களின் அழுத்தம் சருமத்தில் உள்ள துவாரங்களை அடைத்துவிடும். அதனால் வியர்வை துளிகள் படிந்து அதன் வழியாக கிருமிகள் ஊடுருவி சரும பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
* வியர்வையை துடைப்பதற்கு மென்மையான டவலையே பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் பயன்படுத்திய டவலை உபயோகிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
* உடற்பயிற்சி செய்யும் பெண்கள் இறுக்கமாகவோ, தளர்வாகவோ கூந்தல் அலங்காரம் செய்யக்கூடாது. ஏனெனில் உடற்பயிற்சியின்போது வெளியேறும் வியர்வை கூந்தலில் படிந்து, முடி உதிர்வுக்கோ, முடி உடைவதற்கோ காரணமாகி விடும். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு தலைக்கு எண்ணெய் தேய்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
* மேக்கப்புடன் உடற்பயிற்சியில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவை சரும துளைகளில் அடைப்பை ஏற்படுத்தி வியர்வை வெளியேறுவதை தடுத்துவிடும். முகப்பருக்கள், தோல் ஒவ்வாமை ஏற்படவும் காரணமாகிவிடும்.
* உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு வாசனை திரவியங்களை (சென்ட்) உடலில் பூசுவதையும் தவிர்க்க வேண்டும். அவை வியர்வையில் கலந்து சரும பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். வேண்டுமானால் மென்மையான மாய்ஸ்சரைசரும், ஆயில் ஜெல்லும் பயன்படுத்தலாம்.
* உடற்பயிற்சி செய்து முடித்ததும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஏற்கனவே தலையில் வியர்வை படிந்திருக்கும் என்பதால் அதை போக்க ஷாம்பு போட்டு குளிக்கலாம். உடற்பயிற்சியை முடித்ததும் சில நிமிடங்கள் கழித்து அதிக தண்ணீர் பருக வேண்டும். உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும், சரும நலனை பராமரிக்கவும் அது உதவும்.
- திருமண உறவானது துணைக்கு ஊன்றுகோலாக தான் இருக்க வேண்டும்.
- எல்லோரது வாழ்விலும் காதல் என்கிற ஒரு தருணம் கண்டிப்பாக வரும்.
மனிதராக பிறந்த ஒவ்வொருக்குள்ளும் காதல் உணர்வு என்பது கண்டிப்பாக இருக்கும், ஆண் - பெண் என யாராக இருந்தாலும் சரி காதலிக்காமல் இருக்க முடியாது. ஏதேனும் ஒரு கட்டத்தில் எல்லோரது வாழ்விலும் காதல் என்கிற ஒரு தருணம் கண்டிப்பாக வரும். ஆரோக்கியமான காதலில் அன்பு, பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் ஆறுதல் போன்றவற்றை ஒவ்வொருவரும் வழங்க வேண்டும்.
நம்முடைய திருமண உறவானது நமது துணைக்கு ஊன்றுகோலாக தான் இருக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் தொந்தரவாக இருக்கக்கூடாது. சிலர் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் சில விஷயங்கள் அவர்களது துணைக்கு பெரும் தொல்லையாகவோ அல்லது அவர்களது வளர்ச்சியை தடுக்கக்கூடியதாகவோ இருந்துவிடக்கூடும்.
* கணவன்-மனைவி இருவருக்கும் சண்டை வருவது என்பது சகஜமான ஒன்றுதான், அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் ஏற்றப்படுவது சகஜம். அதற்காக ஒருவர் தனது துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது தவறான ஒன்றாகும். இதுபோன்று துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது பாதுகாப்பு, மற்றும் நம்பிக்கையின் உணர்வைப் பாதிக்கக்கூடும். மன மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமும் இதனால் ஏற்படும், மேலும் இதனால் இருவரது சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படும்.
* கணவன்-மனைவி உறவில் வெறுப்பு இருக்கக்கூடாது, அப்படி வெறுப்பு இருந்தால் அது வலி, கோபம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். வெறுப்புணர்வை வைத்திருப்பது உங்கள் கணவன்-மனைவியின் ஆழ்மனதில் தவறான சிந்தனையை ஏற்படுத்திவிடும். வெறுப்புகளை வைத்திருப்பது உறவு முறிவு, மனச்சோர்வு, பதட்டம் மற்றும் கோபம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். புண்படுத்தும் நிகழ்வுகள் அல்லது நடத்தை குறித்து கசப்பாக மாறாமல் இருக்க, உங்கள் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளைப் உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேசுங்கள்.
* உங்கள் கணவனை-மனைவியை ஒருபோதும் உங்கள் முந்தைய உறவோடோ அல்லது வேறொருவரின் உறவோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். அப்படி நீங்கள் அவர்களை வேறொருவருடன் ஒப்பிட்டு பேசினால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார். அப்படி நீங்கள் உங்கள் துணையை மற்றவருடன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என்றால் அவர்கள் செய்யும் தவறுகளை மட்டுமே தான் நீங்கள் உற்றுநோக்குகிறீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. இதனால் உங்கள் கணவன்-மனைவி உறவில் பெரியளவில் சிக்கல் ஏற்படும்.
* உங்கள் கணவன்-மனைவியின் தொலைபேசி அல்லது பிற சமூக வலைதள பக்கங்களை அவர்களுக்குத் தெரியாமல் பார்ப்பது மிகவும் தவறான செயலாகும், இது உங்கள் துணையின் தனி உரிமையை மீறக்கூடிய மோசமான செயலாகும், இது அவர்கள் மீதான நம்பிக்கையின்மையை காட்டுகிறது. இவ்வாறு செய்வது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் துணைக்கும் ஒரு வித மனசோர்வை ஏற்படுத்திவிடும். இதுபோன்று சந்தேக கண்ணோட்டத்துடன் உங்கள் துணையின் செயலை உற்றுநோக்குவது தவறான புரிதலை ஏற்படுத்தி உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும்.
* உங்கள் துணையின் சில பழக்கவழக்கங்கள், ஆடைத் தேர்வுகள் மற்றும் உங்கள் துணை யாருடனாவது பேசினால் அவர்களை கட்டுப்படுத்துவது போன்ற செயல்களை நீங்கள் செய்யக்கூடாது. இப்படி அவர்களது விருப்பம் எல்லாவற்றிலும் நீங்கள் மூக்கை நுழைத்தால் அது அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்