search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இமானுவேல் சேகரன்"

    • தியாகி இமானுவேல் சேகரனாரின் 100-வது பிறந்த நாளையொட்டி 100 இளைஞர்கள் குருதி கொடை வழங்கினர்.
    • முன்னாள் மாவட்ட பதிவாளர் டாக்டர். சுப.பாலு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு 100 இளைஞர்கள் குருதி கொடை வழங்கும் விழா நிகழ்ச்சி சத்திரக்குடியில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாயக்கூ டத்தில் போகலூர் வட்டார மருத்துவ அலுவலர் பிரதீப் தலைமையில் நடந்தது.

    தேவேந்திரர் பண்பாட்டு கழகத் தலைவர் பரம்பை பாலா அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட பதிவாளர் டாக்டர். சுப.பாலு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரர் மற்றும் சேம னூர் ராஜகோபால் ஆகி யோர் சிறப்பாக செய்திருந்த னர்.

    • இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் தமிழக அரசுக்கு எஸ்.ஆர்.பாண்டியன் நன்றி தெரிவித்தார்.
    • 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்களுடன் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது குருபூஜை விழா நேற்று அனுசரிக்கப்பட்டது.

    தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவையின் சார்பில் அதன் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியனுடன் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். ஷெரீப் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்களுடன் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது எஸ்.ஆர். பாண்டியன் மாலைமலர் நிருபரிடம் கூறுகையில்:-

    தேவேந்திரகுல வேளா ளர் மக்களின் நீண்ட கோரிக் கையான தியாகி இமானு வேல் சேகரனார் அவர் களுக்கு தமிழக அரசு சார் பில் 3 கோடி செலவில் முழுஉருவசிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக் கப்படும் என அறிவித்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேவேந்திரகுல வேளாளர் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி தலை வர் அருண்குமார், மாநில பொருளாளர் முருகேச பாண்டியன் தெற்கு மண்டல செயலாளர் மங்கள ராஜ், மாநில இளைஞரணி செய லாளர் வழிவிட்டதுரை பழனி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மருத குமார், சிவகங்கை மாவட்ட செயலாளர் பழனிவேல் பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வாழ மணி பாண்டியன், தென் காசி மாவட்ட செயலாளர் யோகராஜ் பாண்டியன் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பிரவின் ராஜ், நெல்லை மாவட்ட செயலா ளர் ராஜேஸ் பாண்டியன், விருதுநகர் மாவட்ட செயலா ளர் கருப்பசாமி பாண்டியன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி னர்.

    • இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • எம்.எல்.ஏ. வெங்கடேசன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி அவரது படத்திற்கு தி.மு.க. சார்பில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், நகர செயலாளர்-வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பொதுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் துணைச் செய லாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், செல்வராணி ஜெயராமச் சந்திரன், வார்டு கவுன்சி லர்கள் குருசாமி, நிஷா கவுதம ராஜா, முத்து செல்வி சதீஷ், ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா சரவணன்,

    முள்ளிபள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, ரிஷபம் ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி, திருவாலவாய நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சகுபர் சாதிக் திருவேடகம் ஊராட்சி மன்ற தலைவர் பழனி யம்மாள், மாவட்ட பிரதி நிதிகள் பேட்டை பெரிய சாமி, சுரேஷ், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அண்ணாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் சோழ வந்தான் அருகே கண்ணு டையாள்பு ரத்தில் தியாகி இமானுவேல் சேகரின்

    66-ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவி யருக்கு நோட்டு புத்தகம் வழங்குவிழா நடந் தது. தொடர்ந்து அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்ட து. டாக்டர். பாலமுருகன், தமிழர் தேசிய கழக தலைவர் வழக்கறிஞர் வையவன் தலைமை தாங்கி னார். இதில் நிர்வாகிகள் குமார், முத்துப்பா ண்டி, சரவணன், மணிகண்டன், கார்த்திக், பாலமுருகன், அஜித் மற்றும் தமிழர் தேசிய கழக மதுரை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சோழவந்தான் தொகுதி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    • பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட் டக் கழகச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி செய்தி ருந்தார்.

    ராமநாதபுரம்

    இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், வெள் ளையனே வெளியேறு" இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவரும், தமிழ் நாட்டின் தென் மாவட்டங்க ளில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கா கப் போராடி, ஓர் அரசியல் சக்தியாக, அவர்கள் அணி திரள்வதற்கு முக்கிய கார ணமாக இருந்தவருமான அரசியல் தலைவர், சுதந்தி ரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும், அ.தி. மு.க. பொதுச்செயலாள ரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட் டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அ.தி.மு.க. சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தப் பட்டது.

    முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ., கழக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த் திகா முனியசாமி, கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, தலை மைச் செயற்குழு உறுப்பினர் ராஜலெட்சுமி, முன்னாள் அமைச்சர்கள் அ.அன்வர் ராஜா, கழக மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் எம்.மணிகண்டன்

    முன்னாள் கழக அமைப் புச் செயலாளர் நிறைகுளத் தான், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சதன் பிரபாகர், டாக்டர் எஸ்.முத்தையா, முதுகுளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. துணைச் செயலா ளரும், வெங்கலக்கு றிச்சி ஊராட்சி மன்றத் தலைவ ருமான எஸ்.டி.செந்தில்கு மார் மற்றும் அ.தி.மு.க. சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் உள் ளிட்டோர் அவரது நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ராமநாதபுரம் மாவட் டக் கழகச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி செய்தி ருந்தார்.

    • இமானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர், எஸ்.பி ஆய்வு செய்தார்.
    • தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா உள்ளிட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

    இந்த நிலையில் இமானு வேல் சேகரன் நினைவி டத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, முருகேசன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு காமிராக்கள், வி.ஐ.பி.க்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், புற காவல் நிலையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா உள்ளிட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.

    • திருச்சுழியில் கட்சி நிர்வாகிகள், முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
    • கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது குரு பூஜை விழா வருகிற 11-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வா கிகள், முக்கிய பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று மாலையணி வித்து நினைவஞ்சலி செலுத்த உள்ளனர்.

    இந்த நிலையில் விருதுந கர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தியாகி இமா னுவேல் சேகரன் நினைவி–டத்திற்கு அஞ்சலி செலுத்த வருவோர் கடைபிடிக்க வேண்டிய வழிமு றைகள் மற்றும் அனுமதிக் கப்பட்ட வழித்தடங்களில் வருவது குறித்த ஆலோசனைக் கூட் டம் திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல் வேறு கிராமங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண் டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் டி.எஸ்.பி. ஜெகநாதன் பேசும்போது, வருகிற செப் டம்பர் 11-ந்தேதி தியாகி இமானுவேல் சேகரானாரின் குருபூஜை விழா நடைபெறு கிறது. இதனையொட்டி திருச் சுழி மற்றும் நரிக்குடி வழி யாக மாவட்ட எல்லையான மானாசாலை சோதனைச்சா வடியை கடந்து சென்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற வுள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை விழாவிற்கு அஞ்சலி செலுத்த வாகனங்களில் வருவோர் முறையான அனு மதி பெற்று அரசு வகுத் துள்ள வழித்தடங்களில் வருவது உள்ளிட்ட அனைத்து வழிகாட்டு நெறி முறை களையும் தவறாது கடை பிடித்து அமைதியான முறையில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பி வர அனைவரும் தங்களது ஒத்து ழைப்பை வழங்க வேண்டு மெனவும் திருச்சுழி கேட்டுக் கொண்டார்.

    மேலும் தியாகி இமானு வேல் சேகரனாரின் குரு பூஜையை முன்னிட்டு நடை பெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சுழி சரக இன்ஸ்பெக்டர் மணிகண் டன், நரிக்குடி சரக இன்ஸ் பெக்டர் ஜெகநாதன் ஆகி யோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் திருச் சுழி மற்றும் அதனை சுற்றி யுள்ள பல்வேறு கிராமங்க ளில் இருந்து சமுதாய தலை வர்கள், கட்சியின் நிர்வாகி கள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் திருச்சுழி மற்றும் நரிக்குடி சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக் டர்கள், அனைத்து பிரிவுக ளின் காவலர்கள் உட்பட ஏராளமானோர் இந்த கூட் டத்தில் கலந்து கொண்டனர்.

    • இமானுவேல் சேகரனார் குறித்து அவதூறு பேசிய பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மாநகராட்சியில் போலீஸ் கமிஷனர் ஆகி–யோரை நேரில் சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் புகார் மனு கொடுத்து வரு–கின்றனர்.

    கீழக்கரை

    தேவேந்திரகுல இன மக்கள் தெய்வமாக வணங் கும் தியாகி இமானுவேல் சேகரனாரை தரக்குறைவாக இழிவுபடுத்தி பேசிய பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவேந் திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் தமிழகத் தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைப்பின் சார்பில் அந் தந்த மாவட்ட நிர்வாகி–கள் புகார் கொடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை நிறு–வனர் மற்றும் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் தனது கட்சி ஆதரவாளர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு தங்க–துரையை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.பின்னர் அவர் நிருபர்க–ளிடம் கூறியதாவது:-

    கடந்த இரண்டு நாட்க–ளாக சமூக வலைத்தளங்க–ளில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன்ஜி என்ப–வர் உசிலம்பட்டியில் நடை–பெற்ற ஒரு கூட்டத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகியும், தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் தெய்வமாக வணங்கி வரும் தியாகி இமானுவேல் சேகர–னாரை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார்.

    இவர் பேசிய பேச்சால் தென் மாவட்டங்களில் இணக்கமாக இருந்து வரும் சமூகங்களுக்கு மத்தியில் கலவரங்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே முருகன்ஜி மீது வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மக்கள் மத்தி–யில் அமைதி சூழ்நிலை ஏற்படுத்த காவல்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாத–புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளேன்.

    இங்கு மட்டுமின்றி எங் கள் அமைப்பைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண் டர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களி–லும் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாநகராட்சியில் போலீஸ் கமிஷனர் ஆகி–யோரை நேரில் சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் புகார் மனு கொடுத்து வரு–கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி–னார்.

    ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மருதகுமார், மேற்கு மாவட்டத் தலைவர் செல்லத்துரை, கிழக்கு மாவட்ட தலைவர் சபா, மாவட்ட இளைஞரணி தலைவர் சுதாகரன் உட்பட பலர் உடன் இருந்தனர். 

    • பரமக்குடி ஓட்டப்பாலம் ரவுண்டாணாவில் இமானுவேல் சேகரனுக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும்.
    • தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கீழக்கரை

    தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் பரம்பை பாலா ராமநாதபுரத்தில் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    ஏழை, எளிய மக்களின் மீதான தீய ஆதிக்க சக்திகளின் நீதிக்கு புறம்பான வன்முறைகளையும் தீமைகளையும் எதிர்த்து தடுத்து நிறுத்தி அனைத்து தரப்பு மக்களின் நல்லிணக்கத்திற்காகவும் நல் வாழ்விற்காகவும் போராடிய இமானுவேல் சேகரனுக்கு வெண்கல முழு உருவ சிலையை பரமக்குடி ஓட்ட பாலம் புதிய ரவுண்டானா பகுதியில் நிறுவ வேண்டும். இமானுவேல் சேகரன் சிலையை அங்கு அமையச் செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    மேலும் இமானுவேல் சேகரன் குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர்களை எஸ.சி.பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரன் பெயர் வைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவாக ராமநாதபுரம் கலெக்டரிடம் கொடுத்துள்ளோம்.

    அவர் எங்கள் மனுவை ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதிய ளித்துள்ளார். மாநில, மத்திய அரசு அலுவல கங்களில் இமானுவேல் சேகரன் படம் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். எங்கள் கோரிக்கையை மாநில, மத்திய அரசுகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு நிறைவேற்றித் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தப் பேட்டியின் போது தேவேந்திரர் பண்பாட்டுக் கழக செயலாளர் வழக்கறிஞர் புண்ணியமூர்த்தி, நடுவர் மன்ற அமைப்பாளர் தங்கராஜ் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர். முன்னதாக 35 வாகனங்களில் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரத்திற்கு ஊர்வலமாக வந்து தலைவர் பரம்பை பாலா தலைமையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்து நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    • இமானுவேல் சேகரன் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    சிவகாசி

    இமானுவேல் சேகரனின் 65-வது குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகாசி அருகே உள்ள பெரியபொட்டல்பட்டியில் அவரது சிலைக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்.

    முன்னதாக சிவகாமிபுரம், மாரனேரியில் வைக்கப்ப ட்டிருந்த இமானுவேல் சேகரனின் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பெரியபொட்டல்பட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார்- ரோஷினி தம்பதியினரின் பெண்குழந்தைக்கு ஜெயலட்சுமி என பெயர் சூட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளராக வேண்டுராயபுரம் சுப்பிரமணி, சிவகாசி மண்டல செயலாளர்கள் சரவணகுமார், கருப்ப சாமிபாண்டியன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், கருப்பசாமி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜயஆனந்த், மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், சிவகாசி கிழக்கு ஒன்றிய பொருளாளர் கருப்பசாமிபாண்டியன், பள்ளபட்டி ரமேஷ், பிரியா, சசி மலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகாமிபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி கிழக்கு ஒன்றிய பொருளாளர் கருப்பசாமிபாண்டியன் செய்திருந்தார். பெரியபொட்டல்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் கவிதாசுந்தரராஜமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் சசிமலர், பள்ளபட்டி ரமேஷ். ஊர் நாட்டாமை ராஜீவ்காந்தி, உதவி நாட்டாமை மான்ராஜ் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் மம்சாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் தங்கமுனியான்டி, கிளை செயலாளர் சிவக்குமார், சுந்தரராஜமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாரனேரியில் வீரன் சுந்தரலிங்கம் ஆட்டோ சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் துலுக்கப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி, அம்மாபட்டி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைசெயலாளர் சுப்புகாளை, பொன்னுசாமி, மூவேந்தர், முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
    • திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

    திருச்சி:

    தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் முதன்மை செயலாளர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் துரைராஜ், ஒன்றியச்செயலாளர் கதிர்வேல், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், இளங்கோ, கண்ணன், இளைஞரணி பி.ஆர்.சிங்காரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகர செயலாளர் மதிவாணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜன், செந்தில், பகுதி செயலாளர்கள் தர்மராஜ், நீலமேகம், ராஜ் முஹம்மது, மணிவேல், மோகன், விஜயகுமார், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • அனுமதி பெற்று சிலையை வைக்குமாறு வற்புறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம், அமைச்சியாபுரம் காலனியில் நேற்று இரவு திடீரென்று இமானுவேல் சேகரன் சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை போலீஸ் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனை அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதி பெற்று சிலையை வைக்குமாறு வற்புறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி நாளை மதுக்கடைகள் அடைக்கப்படும்.
    • உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள், மதுபான கூடங்களின் உரிமதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் வகயைில் இமானுவேல் சேகரன் நினைவு தினமான நாளை (11-ந் தேதி) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த செல்லும் வாகனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட வழித்தடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், பார் கூடங்கள் ஆகியவற்றில் உள்ள மதுக்கூடங்கள் மதுபான விற்பனை செய்யக்கூடாது.

    தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி நாளை ஒரு நாள் மதுக்கடைகளை தற்காலிகமாக மூடுவதற்கு கலெக்டரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப்பணியாளர்கள், மதுபான கூடங்களின் உரிமதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×