என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Immanuel Sekaran"

    • அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
    • உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன்.

    தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

    சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை.

    தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது.
    • அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய ஒடுக்குதல் போன்ற சமூகச் சழக்குகளுக்கு எதிராக வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்!

    அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே... ஆனால் அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது.

    அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தியாகி இம்மானுவேல் சேகரனார் குடும்பத்தாரின் நீண்ட நாள் கோரிக்கையான பரமக்குடியில் மணிமண்டபம் சிலையுடன் அமைக்க வேண்டும் என்பதுதான்.
    • சமூக நீதி போராளி தியாகி இம்மானுவேல் சேகரனார் சமூக நீதி காப்பதற்காக போராடினார்.

    ராமநாதபுரம்:

    தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இம்மானுவேல் சேகரன் 66-வது நினைவு நாளையொட்டி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட மாடல் அரசு சார்பாக அமைச்சர்களுடன் நினைவகத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தியாகி இம்மானுவேல் சேகரனார் குடும்பத்தாரின் நீண்ட நாள் கோரிக்கையான பரமக்குடியில் மணிமண்டபம் சிலையுடன் அமைக்க வேண்டும் என்பதுதான். இதனை ஏற்று இன்று தமிழக முதலமைச்சர் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனாருக்கு திரு உருவசிலையுடன் மணிமண்டபம் கட்டித் தரப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இதற்காக இம்மானுவேல் சேகரனாரின் குடும்பத்தினர் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சமூக நீதி போராளி தியாகி இம்மானுவேல் சேகரனார் சமூக நீதி காப்பதற்காக போராடினார். அந்த வகையில் நாம் அனைவரும் சமூக நீதியை காக்க போராடுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. சார்பில் பரமக்குடி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • அ.தி.மு.க. தலைமையிலான அரசு வந்த பின்னரே அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.

    ராமநாதபுரம்:

    தியாகி இமானுவேல் சேகரனார் 66-வது நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்படி இந்தாண்டு அ.தி.மு.க. சார்பில் பரமக்குடி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் இந்திய ராணுவத்தில் இணைத்துக்கொண்டு சுதந்திரத்திற்காக போராடிய சுதந்திரப் போராட்ட தியாகி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்பியவர்.

    இமானுவேல் சேகரனார் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது தி.மு.க. அரசு அரசு விழாவாக அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தி.மு.க.வால் சொல்ல மட்டுமே முடியும். அ.தி.மு.க. தலைமையிலான அரசு வந்த பின்னரே அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு வரும் 11-ந்தேதி 4 வட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 11-ந்தேதி விடுமுறைக்கு மாற்றாக 21-ந்தேதி கல்வி நிலையங்கள் செயல்படும்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

    தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு வரும் 11-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 வட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு 11-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை உள்ளிட்ட 4 வட்டங்களில் 11-ந்தேதி விடுமுறைக்கு மாற்றாக 21-ந்தேதி கல்வி நிலையங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தீண்டாமையை ஒழிக்கவும் சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் இன்று.
    • நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தீண்டாமையை ஒழிக்கவும் சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் இன்று.

    நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம். சமத்துவமும் சமூக நல்லிணக்கமும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×