search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் மீது நடவடிக்கை
    X

    ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தேவேந் திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவன தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் புகார் அளிக்க வந்தபோது எடுத்தபடம்.

    பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் மீது நடவடிக்கை

    • இமானுவேல் சேகரனார் குறித்து அவதூறு பேசிய பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மாநகராட்சியில் போலீஸ் கமிஷனர் ஆகி–யோரை நேரில் சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் புகார் மனு கொடுத்து வரு–கின்றனர்.

    கீழக்கரை

    தேவேந்திரகுல இன மக்கள் தெய்வமாக வணங் கும் தியாகி இமானுவேல் சேகரனாரை தரக்குறைவாக இழிவுபடுத்தி பேசிய பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவேந் திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் தமிழகத் தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைப்பின் சார்பில் அந் தந்த மாவட்ட நிர்வாகி–கள் புகார் கொடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை நிறு–வனர் மற்றும் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் தனது கட்சி ஆதரவாளர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு தங்க–துரையை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.பின்னர் அவர் நிருபர்க–ளிடம் கூறியதாவது:-

    கடந்த இரண்டு நாட்க–ளாக சமூக வலைத்தளங்க–ளில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன்ஜி என்ப–வர் உசிலம்பட்டியில் நடை–பெற்ற ஒரு கூட்டத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகியும், தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் தெய்வமாக வணங்கி வரும் தியாகி இமானுவேல் சேகர–னாரை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார்.

    இவர் பேசிய பேச்சால் தென் மாவட்டங்களில் இணக்கமாக இருந்து வரும் சமூகங்களுக்கு மத்தியில் கலவரங்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே முருகன்ஜி மீது வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மக்கள் மத்தி–யில் அமைதி சூழ்நிலை ஏற்படுத்த காவல்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாத–புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளேன்.

    இங்கு மட்டுமின்றி எங் கள் அமைப்பைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண் டர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களி–லும் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாநகராட்சியில் போலீஸ் கமிஷனர் ஆகி–யோரை நேரில் சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் புகார் மனு கொடுத்து வரு–கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி–னார்.

    ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மருதகுமார், மேற்கு மாவட்டத் தலைவர் செல்லத்துரை, கிழக்கு மாவட்ட தலைவர் சபா, மாவட்ட இளைஞரணி தலைவர் சுதாகரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×