search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதற்றம்"

    • பல பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள்.
    • பெண்கள் தங்களுடைய உடல்நலனில் கவனம் செலுத்துவது இல்லை.

    குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் பெண்கள் பலரும், தங்களுடைய உடல்நலனில் கவனம் செலுத்துவது இல்லை. இதனால் குறிப்பிட்ட வயதிற்கு பின்பு பல பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். இவற்றை தடுக்க பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.

    மனநலம்:

    உளவியல் ரீதியாக ஆண்களை விட பெண்கள், மனச்சோர்வு மற்றும் பதற்றத்தால் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனச்சோர்வு, பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினையாக மாறி வருகிறது. கர்ப்ப காலத்திலும், அதற்கு பிறகும் இந்த விஷயத்தில் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆனால், பலரும் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர்.

    அடிக்கடி மனச்சோர்வு, பதற்றம் ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலேயே உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை அலட்சியப்படுத்தினால் நாளடைவில் குடும்ப வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே 2 வாரங்களுக்கு மேல் மனச்சோர்வு சார்ந்த பிரச்சினைகள் இருப்பதை உணர்ந்தால், அதை புறக்கணிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

    இதய நோய்கள்:

    சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில், வாழ்க்கை முறை மாற்றத்தால் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. சிறு சிறு அறிகுறிகளை கவனிக்காமல் பெண்கள் அலட்சியம் காட்டுவதுதான் இதற்கு முக்கிய காரணமாகும். மாரடைப்பு ஏற்படும்போது ஆண்களைப்போல இல்லாமல், பெண்களுக்கு வேறுவிதமான அறிகுறிகள் தென்படும்.

    நெஞ்சுவலி. மூச்சுத் திணறல், குமட்டல், வாந்தி, முதுகு, கழுத்து அல்லது தாடை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமானது.

    தூக்கமின்மை:

    உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது தூக்கமின்மை. இதயநோய், உடல் பருமன் மற்றும் மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன. பெரியவர்களுக்கு இரவில் 7 முதல் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியமானது. தியானம், யோகா, மிதமான உடற்பயிற்சிகள் செய்வது. வெந்நீரில் குளிப்பது, நடைப்பயிற்சி மேற்கொள்வது போன்றவை தூக்கத்தை மேம்படுத்துவதற்கான எளிய வழிகளாகும்.

    மருத்துவ பரிசோதனைகள்:

    பெண்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும். வயதை பொறுத்தும் சில பரிசோதனைகளை பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

    கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயை கண்டறிவதற்கான பேப் ஸ்மியர் சோதனைகள், மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும் மேமோகிராம் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனைகள், எலும்பு தேய்மானத்தை கண்டறிய உதவும் பரிசோதனைகள், கால்சியம் குறைபாடு, பாலியல் சார்ந்த தொற்றுகளை கண்டறிய உதவும் எஸ்.டி.டி. ஸ்கிரீனிங், குடல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளை கண்டறிய உதவும் கொலோனோஸ் கோபி போன்ற பரிசோதனைகளை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மேற்கொள்வது நல்லது.

    • பதற்றமான பகுதிகளில் வேலிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    முத்துப்பேட்டை:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, அரமங்காடு, கோவிலூர், மருதங்காவெளி உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்கா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக ஆசாத்நகர் சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள நியூபஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது. ஊர்வலத்தை முன்னிட்டு போலீஸ் துறை சார்பில் கடந்த ஒரு வார காலமாக பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட வருவாய் துறை சார்பிலும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது. ஊர்வலம் செல்லும் பாதையில் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள். பதற்றமான பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த ஊர்வலத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    • தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.
    • சீனா தைவான் நாட்டு எல்லைக்கு போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி மிரட்டலும் விடுத்து வருகிறது,

    சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. 2-ம் உலக போரின் போது சீனாவில் இருந்து தைவான் தனியாக பிரிந்து ஆட்சி அமைத்தது. ஆனால் தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.

    மற்ற நாடுகளுடன் தைவான் வைத்திருக்கும் நட்புறவையும் சீனா கண்டித்து வருகிறது.

    மேலும் தைவானை சுற்றி தனது ராணுவத்தினரை குவித்து சீனா போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால் தைவான் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அவ்வப்போது சீனா தைவான் நாட்டு எல்லைக்கு போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி மிரட்டலும் விடுத்து வருகிறது,

    இந்நிலையில் நேற்று சீனாவின் ஜே-10, ஜே-11, ஜே-16 உள்ளிட்ட ரக விமானங்கள் மற்றும் குண்டு வீசும் விமானங்கள் உள்பட 24 போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் அத்து மீறி பறந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. சீன விமானங்களை தைவான் தனது போர் கப்பல்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகள் மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    • நேற்று மாலை 5 மணி அளவில் குழாய் சீரமைக்ககப்பட்டது.
    • மீண்டும் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரை அடுத்த நரிமணத்தில், பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சுத்திகரிப்பு நிலையம் (சி.பி.சி.எல்.) உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் இங்கு சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    கப்பல்களுக்கு கச்சா எண்ணெய்யை கொண்டு செல்ல நரிமணத்தில் உள்ள சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து சாமந்தான்பேட்டை வழியாக நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் வரை கடற்கரையில் எண்ணெய் குழாய் புதைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி நள்ளிரவு பட்டினச்சேரி கடற்கரையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது. இதனால் கடல் நீர் முற்றிலுமாக கருப்பு நிறமாக மாறியது. இதனால் பொது மக்களும், கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சி.பி.சி.எல். மற்றும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து குழாய் உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நேற்று மாலை 5 மணி அளவில் குழாய் சீரமைக்ககப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாய் நேற்று அடைக்கப்பட்டதாக கூறிய அதே இடத்தில் மீண்டும் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மீண்டும் அதே இடத்தில் பழுது நீக்க பணியில் இயந்திரங்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு பணி நடைபெற்று வருகிறது.குழாயில் கசிவு ஏற்படுமா என சோதனை செய்ய சிபிசிஎல் நிர்வாகம் கச்சா எண்ணெயை குழாயில் அழுத்தத்துடன் செலுத்திய போது கசிவு ஏற்பட்டது.

    அதனால் உயர் அழுத்தத்தில் குழாயில் ஆயில் செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும்

    தொழில்நுட்ப குழுவினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • இந்த கோவிலில் கூடுதலாக கட்டிடம் கட்ட வழிபாடு நடத்தும் பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கினர்.
    • கல்லூரி நிர்வாகம் சார்பில், கோவில் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது கல்லூரியில் கலந்தாய்வு, சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இந்த கல்லூரி வளாகத்தில் பூக்கார தெருவில் உள்ள பொதுமக்கள் வழிபாடு நடத்தும் செங்கமலை நாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் இந்த கோவிலில் கூடுதலாக கட்டிடம் கட்ட வழிபாடு நடத்தும் பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கினர். ஆனால் இதற்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இன்று பணியை தொடங்குவதற்காக மக்கள் சிலர் வந்தனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. தகவல் அறிந்த நகர துணை போலீஸ் ராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில், கோவில் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் தற்போது கல்லூரியில் கலந்தாய்வு நடந்து வருகிறது. இதனால் தற்போது கோவில் கட்டுமான பணியை நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு பூக்கார வழிபாடு நடத்தும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் இரு தரப்பினிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    முடிவில் கலந்தாய்வு முடியும் வரை கோவில் கட்டுமான பணியை தொடங்கக்கூடாது என பேசி முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை பார்க்கலாம் என கூறினர். இதனால் கட்டுமான பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    ×