என் மலர்
நீங்கள் தேடியது "slums"
- 27 தீயணைப்பு வாகனங்கள் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
- சேரியில் சீரற்ற மின் கம்பிகள் மற்றும் பல எல்பிஜி சிலிண்டர்கள் காணப்பட்டன
டெல்லியின் ரோகிணி செக்டார் -17 இல் அமைந்துள்ள குடிசைப் பகுதியில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், இரண்டு சிறு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
டெல்லி தீயணைப்பு சேவை (DFS) அதிகாரிகளின் கூற்றுப்படி, தீ மிக வேகமாகப் பரவியதால் 800க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு காலை 11:55 மணிக்கு தகவல் கிடைத்தது. 27 தீயணைப்பு வாகனங்கள் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. தீயை முழுமையாக அணைக்கும் பணி இன்னும் நடந்து வருகிறது.
இரண்டரை வயது மற்றும் மூன்று வயதுடைய இரண்டு குழந்தைகளின் உடல்கள் தீயில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி அமித் கோயல் தெரிவித்தார்.
குடிசைப் பகுதியின் முன்புறத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் உயரமான சுவர்கள் இருந்ததால், தீயணைப்பு வாகனங்கள் உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்பட்டதால், தீயை அணைப்பது கடினமாக இருந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையின்படி, சேரியில் சீரற்ற மின் கம்பிகள் மற்றும் பல எல்பிஜி சிலிண்டர்கள் காணப்பட்டன, இதன் காரணமாக தீ வேகமாக பரவியிருக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உலக தலைவர்களுக்கு பாதுகாப்பும், உபசரிப்பும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
- டெல்லியில் ஒரு குஜராத் மாடல் எனும் செய்தியுடன் இவ்வீடியோ பரவியது
இந்திய தலைநகர் புது டெல்லியில் 19 உலக நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உலக தலைவர்கள் இந்தியா வரவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும், நகரை தூய்மைப்படுத்தும் பணிகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது.
அதில், ஒரு சேரி முழுவதும் பச்சை நிற துணி படுகைகளாலும், ஜி20 எனும் விளம்பரங்களை கொண்ட தாள்களுடனும் போர்த்தப்பட்டு இருப்பது தெரிந்தது. ஜி20 தலைவர்களின் வருகைக்காக சேரிகளை (புது டெல்லியில்) அரசு மறைக்கிறது என குறிப்பிட்டு "டெல்லியில் குஜராத் மாடல்" எனும் செய்திப் பதிவும் இதனுடன் வெளியானது. ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.
ஜி20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாகவே கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பல மாநிலங்களில், ஜி20 உறுப்பு நாடுகளின் பல்வேறு பிரதிநிதிகளுடன் பல்வேறு துறையை சேர்ந்த இந்திய அமைச்சர்கள் சந்தித்து கலந்துரையாடினர். இதில் பல சந்திப்புகள் மும்பை நகரில் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவில் காணப்படும் இடம் மகாராஷ்டிராவில் உள்ள வடமேற்கு மும்பையின் மேற்கு விரைவு நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள ஜோகேஷ்வரி சேரிப்பகுதியாகும். போரிவலி பகுதியில் உள்ள பூங்காவை காண அந்த விரைவுச்சாலை வழியாக ஜி20 பிரமுகர்கள் டிசம்பர் 2022ல் சென்ற போது சாலையோர சேரிகள் மறைக்கப்பட்டது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது மும்பைக்கு பதிலாக டெல்லி என குறிப்பிடப்பட்டு வைரலாகியது.
"ஏப்ரல் 1 முதல் ஜூலை 27 வரை 49 குடியிருப்புகள் பல்வேறு காரணங்களுக்காக அகற்றப்பட்டதாகவும் ஆனால் ஜி20 உச்சி மாநாட்டிற்காக டெல்லி நகரை அழகுபடுத்த எந்த குடியிருப்பு பகுதியிலும் அகற்றல் நடவடிக்கையோ, மறைத்தலோ நடக்கவில்லை" என வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.
இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.






