search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SC"

    • மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

    அதன்பின், டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறை கடந்த மார்ச் 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. கைதுசெய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவரை சி.பி.ஐ. அமலாக்கத் துறை தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றன.

    இதற்கிடையே, பணமோசடி வழக்கு விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத் துறை டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

    மேலும், மறு ஆய்வு மனுக்களையும், அதற்கான ஆதாரங்களையும் கவனமாக ஆய்வு செய்துள்ளோம். எங்கள் கருத்துப்படி அக்டோபர் 30-ம் தேதியிட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கான எந்த வழக்கும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்ததாக அரசு புகார் கூறியது.
    • கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நிலுவையில் வைத்திருந்த 8 மசோதாக்களில், ஒன்றுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளும் இடது சாரி ஆட்சிக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்ததாக அரசு புகார் கூறியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பஞ்சாப் கவர்னருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், எந்த நடவடிக்கையும் இல்லாமல் அரசு அனுப்பி உள்ள மசோதாக்களை காலவரையின்றி நிலுவையில் வைத்திருக்க ஆளுநர்களுக்கு சுதந்திரம் அளிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. கேரள அரசின் கூடுதல் தலைமை செயலாளரிடம் இதனை குறிப்பிடும்படியும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்த சூழலில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நிலுவையில் வைத்திருந்த 8 மசோதாக்களில், ஒன்றுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளார். சர்ச்சைக்குரிய பல்கலைக்கழக திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்களை, ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளதாக கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.
    • 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் சர்வே ஆஃப் இந்தியாவுக்கு உத்தரவிட்டார்.

    புதுடெல்லி:

    முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது.

    இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

    கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நில அளவை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்படும் மேற்பார்வை குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும். இதுகுறித்து இரு மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் வழக்கின் விசாரணையை நவ.28ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் பார்க்கிங் விவகார வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, முல்லைப்பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்த மையம் அமைக்கும் விவகாரத்திற்கு தீர்வு காண கூட்டு சர்வே நடத்த உத்தரவிட்டார்.

    3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் சர்வே ஆஃப் இந்தியாவுக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்த மைய விவகாரத்துக்கு தீர்வு காண கூட்டு சர்வே நடத்த தமிழ்நாடு-கேரள மாநில அரசுகள் இசைவு அளித்துள்ளது.

    • மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்க கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது.
    • ஆட்சேபம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தள்ளி வைக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட நீக்க தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்து சென்னை ஐகோர்ட்டு கடந்த மார்ச் 28-ந்தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பில், பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளதால், 2,460 பொதுக்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே என நீதிபதி தெளிவுபடுத்தி இருந்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனடியாக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, தடை விதிக்க மறுத்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் வக்கீல் கவுதம்சிவசங்கர் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் 5-ந்தேதி மேல்முறையீடு செய்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இந்த மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்க கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது.

    இதற்கு ஆட்சேபம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துவிட்டு, சிவில் கோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்கு வசதியாக விசாரணையை தள்ளிவைக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்கக்கூடாது' என்று கூறப்பட்டிருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டனர். பிறகு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை ஏற்றனர்.

    அதன்படி அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

    • தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.
    • சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கைக்கு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் பதில் அளித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது.

    நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது. இந்த தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அலோபதி மருந்துகளைக் குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. நீதிபதிகள் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு பதஞ்சலி நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.

    பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் இதுபோன்ற தவறான விளம்பரங்கள் நிறுத்தப்பட வேண்டும். அத்தகைய மீறலை சுப்ரீம் கோர்ட் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும். தவறான விளம்பரங்கள் நீடித்தால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் ஒவ்வொரு தயாரிப்புக்கும் பொருந்தும் என எச்சரிக்கை விடுத்தது சுப்ரீம் கோர்ட். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பதஞ்சலி நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சதி பிரசாரம் செய்யப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் எங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க உள்ளோம். நாங்கள் தவறான செய்திகளை பரப்பினால் என்ன தண்டனை வேண்டுமானாலும் அளியுங்கள். மரண தண்டனை என்றாலும் ஏற்றுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

    ஆயுர்வேத மருந்துகளுக்கு எதிரான பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும் என பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணா தெரிவித்தார்.

    • பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
    • தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது.

    இதற்கிடையே, பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்நிலையில், அலோபதி மருந்துகளை குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    நீதிபதிகள் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, பதஞ்சலி நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் இதுபோன்ற தவறான விளம்பரங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அத்தகைய மீறலை சுப்ரீம் கோர்ட் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும்.

    தவறான விளம்பரங்கள் நீடித்தால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் ஒவ்வொரு தயாரிப்புக்கும் பொருந்தும் என எச்சரிக்கை விடுத்துள்ள சுப்ரீம் கோர்ட், எதிர்காலத்தில் பத்திரிகைகளில் அறிக்கைகள் வெளியிடுவதை பதஞ்சலி நிறுவனம் உறுதிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

    • சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
    • மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நவம்பர் 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.

    புதுடெல்லி:

    சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

    இந்த மனுவை ஐகோர்ட்டு கடந்த மாதம் 19-ந் தேதி தள்ளுபடி செய்தது.

    ஜாமின் வழங்க ஐகோர்ட்டு மறுத்த உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதை நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் 30-ந் தேதி விசாரித்தது. செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை சார்பில் விசாரணையை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதையடுத்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நவம்பர் 20-ந் தேதிக்கு (இன்றைக்கு) தள்ளிவைத்தது.

    இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு அமர்வு இன்று விசாரிக்கிறது.

    • இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் கேட்க வேண்டியது அரசாங்கத்திடம்தான் நீதிமன்றத்திடம் அல்ல.
    • உங்களின் பிரசாரத்தை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று எப்படி நீங்கள் முடிவு செய்யலாம்?

    புதுடெல்லி:

    இந்துத்துவா தொடர்பான விவகாரங்களை பள்ளி பாடத்திட்டங்களில் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் பாதுகாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் கேட்க வேண்டியது அரசாங்கத்திடம்தான் நீதிமன்றத்திடம் அல்ல எனக்கூறி இந்த மனுவை ஏற்க முடியாது என தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    மேலும் உங்களின் பிரசாரத்தை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று எப்படி நீங்கள் முடிவு செய்யலாம்? என்று கேள்வி எழுப்பினர்.

    • கவர்னரின் செயலற்ற தன்மை, மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
    • பேரறிவாளன் விவகாரத்தில் கவர்னர் முடிவெடுக்காமல் மெத்தனமாக இருந்ததை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கண்டித்தது.

    சென்னை:

    கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு 198 பக்கங்கள் கொண்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அதில் உள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:-

    தமிழக அரசு பல முக்கியமான சட்ட மசோதாக்களை மாநில கவர்னருக்கு அனுப்பி வைக்கிறது. அது மட்டுமின்றி பல்வேறு கொள்கை முடிவுகளையும் அனுப்பி வைக்கிறது.

    இப்படிப்பட்ட முக்கியமான விவகாரங்களில் கவர்னர் உடனுக்குடன் முடிவு எடுப்பதில்லை. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தனது அதிகாரத்தையும் பொறுப்பையும் கவர்னர் ஆர்.என்.ரவி துஷ்பிரயோகம் செய்கிறார்.

    அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32-ன் கீழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் என்பது கவர்னரின் செயல்பாட்டால் மறுக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை கவர்னர் ஆர்.என்.ரவி பறிக்கிறார்.

    கவர்னரின் செயலற்ற தன்மை, மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. அது மட்டுமின்றி தமிழ்நாடு கவர்னர் பல்வேறு விசயங்களில் செயலற்றவராக இருக்கிறார். இதன் மூலம் மக்களின் உரிமைகளை கவர்னர் பறித்து வருகிறார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றி அனுப்பி வைக்கும் தீர்மானங்களுக்கும், சட்ட மசோதாக்களுக்கும் அவர் ஒப்புதல் அளிக்காமல் நிராகரிப்பது என்பது மக்களின் உரிமைகளை அவர் பறிப்பதாகவே அர்த்தம்.

    பேரறிவாளன் விவகாரத்தில் கவர்னர் முடிவெடுக்காமல் மெத்தனமாக இருந்ததை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கண்டித்தது. அதைபோல் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்திற்கு ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை அரசு பரிந்துரைத்த நிலையில் அதையும் கவர்னர் நிராகரித்திருக்கிறார்.

    இப்படி மிகவும் அத்தியாவசியமான விவகாரங்களில் கவர்னர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். அதுமட்டுமின்றி சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான கோப்புகள் உள்பட 25 மசோதாக்கள் கவர்னர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளன.

    இதன் மூலம் தனது அதிகாரத்தையும், பொறுப்பையும் கவர்னர் துஷ்பிரயோகம் செய்கிறார்.

    முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை அடுத்த கட்ட விசாரணைக்கு எடுத்துச்செல்ல கவர்னர் உத்தரவிட மறுக்கிறார்.

    கவர்னர் ஆர்.என்.ரவியின் செயலற்ற தன்மை மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

    கவர்னரின் இத்தகைய போக்கால் தமிழக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. மக்களின் உரிமைகளை கவர்னர் பறிக்கிறார் என்பதால் அவருக்கு தகுந்த உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளோம்.

    இவ்வாறு அதில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருகிறார்.
    • மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பு ஏற்றார்.

    அவர் பதவி ஏற்றது முதல் தமிழக அரசுக்கும், அவருக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்படவில்லை. இதனால் மோதல் போக்கு நடந்து வருகிறது.

    இந்நிலையில் தமிழக அரசு அனுப்பும் கோப்புகளில் உடனுக்குடன் கவர்னர் கையெழுத்து போடுவதில்லை. ஒவ்வொரு கோப்பு மீதும் பல்வேறு விளக்கங்களைப் பெற்று அதில் திருப்தி அடைந்தால்தான் கவர்னர் கையெழுத்து போடுகிறார். மற்ற கோப்புகளை நிலுவையில் வைத்து அதை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விடுகிறார்.

    அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், நான் ஒரு மசோதாவை நிறுத்தி வைத்து இருக்கிறேன் என்று சொன்னால் அது நிராகரிக்கப்பட்டதாகத் தான் அர்த்தம் என்று சொல்லி இருந்தார்.

    தற்போது 25 சட்ட மசோதாக்களுக்கு அவர் கையெழுத்திடாமல் உள்ளார்.

    ஏற்கனவே நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது அதற்கு கவர்னர் முதலில் ஒப்புதல் அளிக்காமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டார். அதன்பிறகு 2-வது முறையாக சட்டசபையில் அந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்பிய பிறகுதான் வேறுவழியின்றி அந்த மசோதாவில் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

    இதேபோல், மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா, மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் நகர வளர்ச்சி குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் கவர்னரின் கை யெழுத்துக்காக நிலுவையில் உள்ளது.

    இதுமட்டுமின்றி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, தமிழக சட்டசபையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்தி வைப்பதற்கான மசோதா, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதை தடுக்கும் சட்டத்தை திருத்துதல், தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சட்டம் ஆகியவையும் நிலுவையில் உள்ளது.

    இந்த சட்ட மசோதா உள்பட 25 சட்ட மசோதாக்களுக்கு அதிகமான கோப்புகள் மீது கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் வைத்துள்ளார்.

    இதுகுறித்து தமிழக அரசு போதிய விளக்கம் அளித்தும், நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் அதன்மீது முடிவெடுத்து கையெழுத்திடாமல் கவர்னர் உள்ளதால் தமிழக அரசு அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளது.

    இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாட் டிற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    அதில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

    சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியலமைப்பின் 200-வது பிரிவின்கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை கவர்னர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். கவர்னர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும் என்று உத்தரவிடுமாறு தமிழக அரசு இந்த மனுவில் வலியுறுத்தி உள்ளது.

    இந்த வழக்கு அனேகமாக சுப்ரீம் கோர்ட்டில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஓ.பி. ரவீந்திர நாத்தின் தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் அவா் சொத்து விவரங்களை வெளிப்படுத்தவில்லை என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
    • நாங்கள் தாக்கல் செய்த மனுவானது எதிா்மனுதாரரை எம்.பி. பதவியில் இருந்து நீக்கக் கோருவது தொடா்புடையதாகும் என்று வழக்கறிஞர் வாதிட்டாா்.

    சென்னை:

    தேனி தொகுதியில் அ.தி.மு.க. சாா்பில் போட்டியிட்டபோது ஓ.பி.ரவீந்திரநாத் தனது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அளிக்காமல் மறைத்து விட்டதாகவும், அவா் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியும் தேனி தொகுதி வாக்காளா் மிலானி, சென்னை ஐகோர்ட்டில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

    'இந்தத் தோ்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே, வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது' என ரவீந்திரநாத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் கடந்த ஜூலை 6-ந்தேதி அளித்த தீா்ப்பில், '2019-ம் ஆண்டு நடந்த தோ்தலில் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது' என்று உத்தரவிட்டிருந்தாா்.

    இத்தீா்ப்பை எதிா்த்து ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 4-ந்தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை ஐகோர்ட் அளித்த தீா்ப்புக்கு தற்காலிகமாகத் தடை விதித்தது.

    அவா் தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுவை அனுமதித்த சுப்ரீம் கோர்ட், வழக்கில் தொடா்புடைய எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்திருந்தது.

    இந்த நிலையில், தேனி தொகுதி தோ்தலில் போட்டியிட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் என்பவா் ஓ.பி.ரவீந்திர நாத்தை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனியாக முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.

    அதில், ஓ.பி. ரவீந்திர நாத்தின் தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் அவா் சொத்து விவரங்களை வெளிப்படுத்தவில்லை என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அது முறைகேடு தொடா்புடையது என்பதால் அவரை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தோ்தல் வழக்குத் தொடராத நிலையில், முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய தகுதி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினா்.

    அதற்கு மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் வைரவன் வாதிடுகையில், மனுதாரா் சம்பந்தப்பட்ட தொகுதியில் போட்டியிட்டவா். அவா் இந்த மனுவைத் தாக்கல் செய்ய தகுதியுள்ளது. மேலும், அந்த வழக்கைப் பொருத்தமட்டில் அது தோ்தல் வெற்றியைத் எதிா்த்து தொடரப்பட்ட வழக்காகும். ஆனால், நாங்கள் தாக்கல் செய்த மனுவானது எதிா்மனுதாரரை எம்.பி. பதவியில் இருந்து நீக்கக் கோருவது தொடா்புடையதாகும் என்று வாதிட்டாா்.

    இதையடுத்து, இந்த மனுவை ஏற்கனவே இதே விவகாரத்தில் நிலுவையில் உள்ள மனுவுடன் சோ்க்கவும், மனு மீது பதில் அளிக்க ரவீந்திரநாத் எம்.பி. உள்ளிட்ட எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • நவம்பர் 20-க்குள் தமிழ்நாடு, கேரளா அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
    • பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    முல்லை பெரியாறு அணை பகுதியில் கார் பார்க்கிங் அமைக்க அனுமதி கோரி கேரள அரசு தனியாக மனு தாக்கல் செய்துள்ளது. கேரளா நடவடிக்கைக்கு எதிராக தமிழகமும் மனு தாக்கல் செய்தது. கார் பார்க்கிங் விவகாரத்தில் கூட்டு கணக்கெடுப்பு பணிகளை நடத்துவதே சரியான தீர்வாக இருக்கும் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு வழக்கை நவம்பர் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

    நவம்பர் 20-க்குள் தமிழ்நாடு, கேரளா அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்படும் மேற்பார்வை குழு தலைமையில் நில ஆய்வை மேற்கொள்ள கோர்ட்டு முடிவு செய்துள்ளது.

    ×