search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவீந்திரநாத்"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னீர் செல்வம் வெற்றி பெறுவார்.
    • யார் நலத்திட்டங்களை மக்களுக்கு செய்தாலும் நல்ல விஷயம்தான் என்று கூறினார்.

    ரவீந்திரநாத் எம்.பி. ரவீந்திரநாத் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த போது கூறியிருப்பதாவது:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னீர் செல்வம் வெற்றி பெறுவார் என்றும், தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்றும் கூறினார்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பற்றி கேள்விக்கு பதிலளித்த ரவீந்திரநாத் ஜனநாயக நாட்டியில் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். அன்பு சகோதர் விஜய் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார். யார் நலத்திட்டங்களை மக்களுக்கு செய்தாலும் நல்ல விஷயம்தான் என்று கூறினார். விஜய் கட்சி தொடங்கியது அவரது அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல ஒரு பாதையை அவர் வகுத்து தந்தால் அவருடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

    போடி தொகுதி இடைத்தேர்தல் வந்தால் நிற்க வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக நிற்பேன் என்று உறுதி கூறினார்.

    • ஓ.பி. ரவீந்திர நாத்தின் தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் அவா் சொத்து விவரங்களை வெளிப்படுத்தவில்லை என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
    • நாங்கள் தாக்கல் செய்த மனுவானது எதிா்மனுதாரரை எம்.பி. பதவியில் இருந்து நீக்கக் கோருவது தொடா்புடையதாகும் என்று வழக்கறிஞர் வாதிட்டாா்.

    சென்னை:

    தேனி தொகுதியில் அ.தி.மு.க. சாா்பில் போட்டியிட்டபோது ஓ.பி.ரவீந்திரநாத் தனது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அளிக்காமல் மறைத்து விட்டதாகவும், அவா் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியும் தேனி தொகுதி வாக்காளா் மிலானி, சென்னை ஐகோர்ட்டில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

    'இந்தத் தோ்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே, வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது' என ரவீந்திரநாத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் கடந்த ஜூலை 6-ந்தேதி அளித்த தீா்ப்பில், '2019-ம் ஆண்டு நடந்த தோ்தலில் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது' என்று உத்தரவிட்டிருந்தாா்.

    இத்தீா்ப்பை எதிா்த்து ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 4-ந்தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை ஐகோர்ட் அளித்த தீா்ப்புக்கு தற்காலிகமாகத் தடை விதித்தது.

    அவா் தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுவை அனுமதித்த சுப்ரீம் கோர்ட், வழக்கில் தொடா்புடைய எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்திருந்தது.

    இந்த நிலையில், தேனி தொகுதி தோ்தலில் போட்டியிட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் என்பவா் ஓ.பி.ரவீந்திர நாத்தை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனியாக முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.

    அதில், ஓ.பி. ரவீந்திர நாத்தின் தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் அவா் சொத்து விவரங்களை வெளிப்படுத்தவில்லை என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அது முறைகேடு தொடா்புடையது என்பதால் அவரை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தோ்தல் வழக்குத் தொடராத நிலையில், முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய தகுதி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினா்.

    அதற்கு மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் வைரவன் வாதிடுகையில், மனுதாரா் சம்பந்தப்பட்ட தொகுதியில் போட்டியிட்டவா். அவா் இந்த மனுவைத் தாக்கல் செய்ய தகுதியுள்ளது. மேலும், அந்த வழக்கைப் பொருத்தமட்டில் அது தோ்தல் வெற்றியைத் எதிா்த்து தொடரப்பட்ட வழக்காகும். ஆனால், நாங்கள் தாக்கல் செய்த மனுவானது எதிா்மனுதாரரை எம்.பி. பதவியில் இருந்து நீக்கக் கோருவது தொடா்புடையதாகும் என்று வாதிட்டாா்.

    இதையடுத்து, இந்த மனுவை ஏற்கனவே இதே விவகாரத்தில் நிலுவையில் உள்ள மனுவுடன் சோ்க்கவும், மனு மீது பதில் அளிக்க ரவீந்திரநாத் எம்.பி. உள்ளிட்ட எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • தேனி எம்.பி.யான ரவீந்திரநாத்துக்கும், ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து குழந்தைகள் உள்ளனர்.
    • இளம்பெண் ஒருவர், ரவீந்திரநாத் எம்.பி., தன்னிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டி.ஜி.பி. யிடம் புகார் அளித்து இருந்தார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத். தேனி எம்.பி.யான இவருக்கும், ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக தெரிகிறது.

    இந்த நிலையில், ரவீந்திரநாத் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    சமீபத்தில் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ரவீந்திரநாத் எம்.பி., தன்னிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டி.ஜி.பி. யிடம் புகார் அளித்து இருந்தார்.

    இந்தநிலையில் தற்போது இந்த விவாகரத்து மனுவை ரவீந்திரநாத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • நண்பர்கள் மூலம் தொடர்ந்து தனக்கு மிரட்டல் அளித்து வருவதாகவும் கூறினார்.
    • புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் முதல்வரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும் எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் மீது பெண் அளித்த பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காயத்ரி தேவி என்ற பெண், பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் மீது தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

    உடன்பிறவா சகோதரனாக நினைத்து பழகி வந்த ஓ.பி.ரவீந்திரநாத், தன்னை தவறான நோக்கத்துடன் அணுகியதாக அவர் தெரிவித்தார். அதற்கு மறுப்பு கூறியதால், செல்போனில் ஆபாச வார்த்தைகளில் பேசி வருவதாகவும், அவரது நண்பர்கள் மூலம் தொடர்ந்து தனக்கு மிரட்டல் அளித்து வருவதாகவும் கூறினார்.

    தனக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என டிஜிபி உறுதி அளித்திருப்பதாக கூறினார். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் முதல்வரை சந்திப்பேன் என்றார்.

    • ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி எனக்கு தோழி.
    • கடந்த ஏப்ரல் 1-ந் தேதி அதிகாலை 1 மணியளவில் ரவீந்திரநாத் அவரது செல்போன் வாட்ஸ்அப் கால் மூலம் என்னை அழைத்தார்.

    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்டம், ஏகாட்டூரைச் சேர்ந்தவர் காயத்ரி தேவி. இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்க வந்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்கள் குடும்பத்தினரும், ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினரும் நண்பர்களாக பழகி வந்தோம். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி எனக்கு தோழி. என் குடும்ப பிரச்சினை காரணமாக எனது கணவரை கடந்த ஆண்டு விவாகரத்து செய்து விட்டேன். ரவீந்திரநாத்தை அண்ணனாக பாவித்து வருகிறேன்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி அதிகாலை 1 மணியளவில் ரவீந்திரநாத் அவரது செல்போன் வாட்ஸ்அப் கால் மூலம் என்னை அழைத்தார். நானும் அண்ணன் என்ற முறையில் பேசினேன். ஒரு கட்டத்துக்கு பிறகு தவறான கண்ணோட்டத்தில் பேசத்தொடங்கினார். என்னை ஆபாசமாக வர்ணித்த அவர், ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார். நான் மறுத்ததால் மிரட்டினார்.

    இதையடுத்து நான் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டேன். இருப்பினும் தொடர்ந்து செல்போனில் அழைத்துக்கொண்டே இருந்தார்.

    ரவீந்திரநாத் பாலியல் ரீதியாக தனது ஆசைக்கு இணங்கும்படி துன்புறுத்தியும் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தும் வந்தார். இது தொடர்பாக புகார் கொடுக்க வந்தேன். ஆனால், நாளைக்கு (இன்று) வரும்படி கூறி உள்ளனர். மீண்டும் வந்து புகார் கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வட்டி தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கிடைத்த வருமானத்தையும் அவர் மறைத்துள்ளார்.
    • மிலானி தாக்கல் செய்த இந்த தேர்தல் வழக்கை ஏற்றுக் கொண்டு, ஒ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது.

    சென்னை:

    தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத், வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி அந்த தொகுதியைச் சேர்ந்த மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அதில் வேட்பு மனுவில் உண்மையான விவரங்களை ரவீந்திரநாத் மறைத்து உள்ளார். வருமானத்தை மறைத்து தெரிவித்த நிலையிலும் அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டது சட்ட விரோதம். அதனால் அவரது வெற்றியை ரத்துசெய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கடந்த 6-ந் தேதி பரபரப்பான உத்தரவை பிறப்பித்தது.

    ரவீந்திரநாத், வாணி பின்னலாடை நிறுவனத்தில் இயக்குனராக இருந்தபோது வாங்கிய சம்பளத்தையும், வாணி பேப்ரிக்ஸ் நிறுவனத்தில் 15 ஆயிரம் பங்குகள் வைத்திருப்பதையும் வேட்பு மனுவில் மறைத்துள்ளார்.

    விவசாயத்தில் மட்டுமே வருமானம் கிடைத்தாக கூறிய நிலையில், வட்டி தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கிடைத்த வருமானத்தையும் அவர் மறைத்துள்ளார்.

    ரூ.4 கோடியே 16 லட்ச ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருக்கக்கூடிய நிலையில், ஒரு கோடியே 35 லட்ச ரூபாய்க்கு மட்டுமே சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் காட்டியுள்ளார்.

    இந்த சொத்து விவரங்கள் குறித்து தேர்தல் அதிகாரி முறையான விசாரணை செய்யவில்லை என்று கூறினார்.

    பணப்பட்டுவாடா மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் சாட்சியையும் மனுதாரர் மிலானி தரப்பில் கொண்டு வரவில்லை. சமூக வலை தளங்களில் பரவிய வீடியோ காட்சிகள் மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. அதனால் பணப்பட்டுவாடா செய்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பணப்பட்டுவாடா தொடர்பான குற்ற வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    அதே வேளையில் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றுள்ளதால், அவர் தகவலை மறைத்தார் என்ற காரணத்தை கூறி அவரது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என்கிற ரவீந்திரநாத் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது.

    சொத்து, கடன், பொறுப்பு, வருமானம் ஆகியவற்றை மறைத்தது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவே ஒ.பி.ரவீந்திரநாத்தின் வேட்புமனுவை ஏற்றது முறையற்றது.

    அதனால் மிலானி தாக்கல் செய்த இந்த தேர்தல் வழக்கை ஏற்றுக் கொண்டு, ஒ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது.

    அந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரவீந்திரநாத்தை அ.தி.மு.க. உறுப்பினராக கருதக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற அவைக்கு தகவல் தெரிவித்தார்.
    • நேற்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறவில்லை.

    திண்டுக்கல்:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கூட்டத்தை சுமூகமாக நடத்தவும், ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்துரைக்கவும் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை சார்பில் இதுகுறித்து அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கவும், விவாதங்களில் பங்கேற்குமாறும் அமைச்சர் பிரகலாத்ஜோஷி, தேனி எம்.பி. ரவீந்திரநாத்துக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து தான் அந்த கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக ரவீந்திரநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் உள்ள ஒரே எம்.பி. தேனி பாராளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத். இவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, ரவீந்திரநாத் தனது வேட்புமனுவில் பொய்யான தகவல்களை அளித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பளித்தார்.

    ஏற்கனவே ரவீந்திரநாத்தை அ.தி.மு.க. உறுப்பினராக கருதக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற அவைக்கு தகவல் தெரிவித்தார். இருந்தபோதும் ரவீந்திரநாத் அ.தி.மு.க. உறுப்பினராகவே தொடர்ந்து செயல்பட்டார். தேர்தலில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர். ரவீந்திரநாத்துக்கு மேல்முறையீடு செய்யும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஒரு மாதம் நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார். அதற்கான முயற்சியில் ரவீந்திரநாத் இறங்கி உள்ள நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நேற்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

    தற்போது அ.தி.மு.க. பிரதிநிதியாக ரவீந்திரநாத் அழைக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 6-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு, ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு அளித்தது.
    • சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதால் அதுவரை இத்தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    சென்னை:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வேட்பு மனுவில் சொத்துக்கள், வங்கி கடன் போன்ற விவரங்களை ரவீந்திரநாத் மறைத்துள்ளார் என்றும் பணப்பட்டுவாடா செய்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கில் கடந்த 6-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு, ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதால் அதுவரை இத்தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதைஏற்று தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்ற ஐகோர்ட்டு உத்தரவு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க.வை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    அதில், ரவீந்திரநாத் மேல் முறையீடு வழக்கில், தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று அம்மனுவில் தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்து உள்ளார்.

    • அ.தி.மு.க. தலைமையை கைப்பற்றும் போட்டியில் இ.பி.எஸ். வெற்றி பெற்று கட்சியின் பொதுச்செயலாளராகி விட்டார்.
    • ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் எம்.பி.யாக இருந்ததால் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தலைவர்களை எளிதில் அணுக முடிந்தது.

    சென்னை:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திர நாத் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

    ரவீந்திரநாத் எம்.பி.யாக பதவி ஏற்ற சமயத்தில் அவருக்கு மத்திய மந்திரி பதவி வாங்கிக் கொடுக்க உள்துறை மந்திரி அமித்ஷா மூலம் ஓ.பன்னீர்செல்வம் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதற்கு முட்டுக்கட்டை போட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    நீங்கள் துணை முதலமைச்சராக இருக்கும் போது உங்கள் மகன் மத்திய மந்திரியாக அ.தி.மு.க.வில் யாரும் சம்மதிக்கமாட்டார்கள். வேண்டுமானால் வைத்திலிங்கத்துக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்கலாம். இல்லையென்றால் நீங்கள் துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உங்கள் மகனை மத்திய மந்திரியாக்குங்கள் என்றார்.

    இதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டதால் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனால் மத்திய மந்திரியாக முடியவில்லை. ஆனாலும் பாராளுமன்றம் நடைபெறும் சமயங்களில் அ.தி.மு.க.வில் இவர் ஒருவர் மட்டுமே எம்.பி.யாக இருந்ததால் தினமும் இவர் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் தினசரி தனது கருத்துக்களை பேசி வந்தார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என பிரிவு ஏற்பட்ட போது ரவீந்திரநாத் எம்.பி.யை அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார். ஆனாலும் அவரது எம்.பி.பதவி பறி போகவில்லை.

    ரவீந்திரநாத் எம்.பி. மட்டுமே அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்றத்தில் இருந்ததால் அவர் மீது நடவடிக்கை பாயவில்லை.

    இந்த நிலையில் தான் இப்போது ஐகோர்ட்டு ரவீந்திரநாத் எம்.பி. வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்துள்ளது. இது ரவீந்திரநாத் அரசியல் வாழ்க்கையிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

    ஏனென்றால் அ.தி.மு.க. தலைமையை கைப்பற்றும் போட்டியில் இ.பி.எஸ். வெற்றி பெற்று கட்சியின் பொதுச்செயலாளராகி விட்டார். தலைமைக் கழகம், இரட்டை இலை சின்னம் ஆகியவையும் இ.பி.எஸ். வசம் உள்ளது.

    ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளர் என்று இன்னும் சொல்லிக் கொண்டாலும் தலைமைக் கழகம் பக்கம் அவரால் செல்ல முடியவில்லை. அவரது சட்டப் போராட்டம் இதுவரை தோல்வியில் தான் முடிந்துள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் எம்.பி.யாக இருந்ததால் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தலைவர்களை எளிதில் அணுக முடிந்தது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரையும் ரவீந்திரநாத் எம்.பி. எளிதில் சென்று பார்த்து பேச முடிந்தது.

    ஆனால் இப்போது எம்.பி. பதவி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்து வரும் தேர்தலிலும் நின்று அவர் வெற்றி பெற முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது.

    ஏனென்றால் அவரது வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளதால் சட்ட சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

    இது அவரது ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்ற தீர்ப்பு அவருக்கு மட்டுமல்ல அவரது தந்தையான ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவாகும் என்று முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கருத்து தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் வெற்றி பெற்றுள்ளார் என்று மனுதாரர் தனது மனுவில் கூறியிருந்தார்.
    • வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்றும் ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

    சென்னை:

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவர் தனது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். எனவே, தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

    ஆனால் இந்த தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்றும் ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக, 30 நாட்களுக்கு தீர்ப்பை நிறுத்தி வைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ரவீந்திரநாத்தை அ.தி.மு.க எம்பி.யாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
    • எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என ரவீந்திரநாத் கடிதம்

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி. இருந்து நீக்கப்பட்டார். அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தகவலை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் மூலம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதால் ரவீந்திரநாத்தை அ.தி.மு.க எம்பி.யாக ஏற்றுக்கொள்ள கூடாது என கூறி உள்ளார்.

    இந்த கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டால் ரவீந்திரநாத் எம்.பி. எந்த கட்சியையும் சாராத உறுப்பினராக செயல்படுவார்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை நிராகரிக்கக்கோரி, ரவீந்திரநாத் எம்.பி., மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்றும், ஈபிஎஸ் கூட்டிய பொதுக்குழுவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதாகவும் ரவீந்திரநாத் குறிப்பிட்டுள்ளார்.

    ×