search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மனைவியுடன் கருத்து வேறுபாடு: ரவீந்திரநாத் எம்.பி. விவாகரத்து கேட்டு மனு
    X

    மனைவியுடன் கருத்து வேறுபாடு: ரவீந்திரநாத் எம்.பி. விவாகரத்து கேட்டு மனு

    • தேனி எம்.பி.யான ரவீந்திரநாத்துக்கும், ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து குழந்தைகள் உள்ளனர்.
    • இளம்பெண் ஒருவர், ரவீந்திரநாத் எம்.பி., தன்னிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டி.ஜி.பி. யிடம் புகார் அளித்து இருந்தார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத். தேனி எம்.பி.யான இவருக்கும், ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக தெரிகிறது.

    இந்த நிலையில், ரவீந்திரநாத் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    சமீபத்தில் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ரவீந்திரநாத் எம்.பி., தன்னிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டி.ஜி.பி. யிடம் புகார் அளித்து இருந்தார்.

    இந்தநிலையில் தற்போது இந்த விவாகரத்து மனுவை ரவீந்திரநாத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×