search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ravindhranath"

    • ஓ.பி. ரவீந்திர நாத்தின் தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் அவா் சொத்து விவரங்களை வெளிப்படுத்தவில்லை என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
    • நாங்கள் தாக்கல் செய்த மனுவானது எதிா்மனுதாரரை எம்.பி. பதவியில் இருந்து நீக்கக் கோருவது தொடா்புடையதாகும் என்று வழக்கறிஞர் வாதிட்டாா்.

    சென்னை:

    தேனி தொகுதியில் அ.தி.மு.க. சாா்பில் போட்டியிட்டபோது ஓ.பி.ரவீந்திரநாத் தனது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அளிக்காமல் மறைத்து விட்டதாகவும், அவா் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியும் தேனி தொகுதி வாக்காளா் மிலானி, சென்னை ஐகோர்ட்டில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

    'இந்தத் தோ்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே, வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது' என ரவீந்திரநாத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் கடந்த ஜூலை 6-ந்தேதி அளித்த தீா்ப்பில், '2019-ம் ஆண்டு நடந்த தோ்தலில் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது' என்று உத்தரவிட்டிருந்தாா்.

    இத்தீா்ப்பை எதிா்த்து ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 4-ந்தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை ஐகோர்ட் அளித்த தீா்ப்புக்கு தற்காலிகமாகத் தடை விதித்தது.

    அவா் தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுவை அனுமதித்த சுப்ரீம் கோர்ட், வழக்கில் தொடா்புடைய எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்திருந்தது.

    இந்த நிலையில், தேனி தொகுதி தோ்தலில் போட்டியிட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் என்பவா் ஓ.பி.ரவீந்திர நாத்தை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனியாக முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.

    அதில், ஓ.பி. ரவீந்திர நாத்தின் தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் அவா் சொத்து விவரங்களை வெளிப்படுத்தவில்லை என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அது முறைகேடு தொடா்புடையது என்பதால் அவரை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தோ்தல் வழக்குத் தொடராத நிலையில், முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய தகுதி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினா்.

    அதற்கு மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் வைரவன் வாதிடுகையில், மனுதாரா் சம்பந்தப்பட்ட தொகுதியில் போட்டியிட்டவா். அவா் இந்த மனுவைத் தாக்கல் செய்ய தகுதியுள்ளது. மேலும், அந்த வழக்கைப் பொருத்தமட்டில் அது தோ்தல் வெற்றியைத் எதிா்த்து தொடரப்பட்ட வழக்காகும். ஆனால், நாங்கள் தாக்கல் செய்த மனுவானது எதிா்மனுதாரரை எம்.பி. பதவியில் இருந்து நீக்கக் கோருவது தொடா்புடையதாகும் என்று வாதிட்டாா்.

    இதையடுத்து, இந்த மனுவை ஏற்கனவே இதே விவகாரத்தில் நிலுவையில் உள்ள மனுவுடன் சோ்க்கவும், மனு மீது பதில் அளிக்க ரவீந்திரநாத் எம்.பி. உள்ளிட்ட எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • தேனி எம்.பி.யான ரவீந்திரநாத்துக்கும், ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து குழந்தைகள் உள்ளனர்.
    • இளம்பெண் ஒருவர், ரவீந்திரநாத் எம்.பி., தன்னிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டி.ஜி.பி. யிடம் புகார் அளித்து இருந்தார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத். தேனி எம்.பி.யான இவருக்கும், ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக தெரிகிறது.

    இந்த நிலையில், ரவீந்திரநாத் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    சமீபத்தில் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ரவீந்திரநாத் எம்.பி., தன்னிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டி.ஜி.பி. யிடம் புகார் அளித்து இருந்தார்.

    இந்தநிலையில் தற்போது இந்த விவாகரத்து மனுவை ரவீந்திரநாத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி எனக்கு தோழி.
    • கடந்த ஏப்ரல் 1-ந் தேதி அதிகாலை 1 மணியளவில் ரவீந்திரநாத் அவரது செல்போன் வாட்ஸ்அப் கால் மூலம் என்னை அழைத்தார்.

    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்டம், ஏகாட்டூரைச் சேர்ந்தவர் காயத்ரி தேவி. இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்க வந்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்கள் குடும்பத்தினரும், ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினரும் நண்பர்களாக பழகி வந்தோம். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி எனக்கு தோழி. என் குடும்ப பிரச்சினை காரணமாக எனது கணவரை கடந்த ஆண்டு விவாகரத்து செய்து விட்டேன். ரவீந்திரநாத்தை அண்ணனாக பாவித்து வருகிறேன்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி அதிகாலை 1 மணியளவில் ரவீந்திரநாத் அவரது செல்போன் வாட்ஸ்அப் கால் மூலம் என்னை அழைத்தார். நானும் அண்ணன் என்ற முறையில் பேசினேன். ஒரு கட்டத்துக்கு பிறகு தவறான கண்ணோட்டத்தில் பேசத்தொடங்கினார். என்னை ஆபாசமாக வர்ணித்த அவர், ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார். நான் மறுத்ததால் மிரட்டினார்.

    இதையடுத்து நான் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டேன். இருப்பினும் தொடர்ந்து செல்போனில் அழைத்துக்கொண்டே இருந்தார்.

    ரவீந்திரநாத் பாலியல் ரீதியாக தனது ஆசைக்கு இணங்கும்படி துன்புறுத்தியும் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தும் வந்தார். இது தொடர்பாக புகார் கொடுக்க வந்தேன். ஆனால், நாளைக்கு (இன்று) வரும்படி கூறி உள்ளனர். மீண்டும் வந்து புகார் கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரவீந்திரநாத்தை அ.தி.மு.க. உறுப்பினராக கருதக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற அவைக்கு தகவல் தெரிவித்தார்.
    • நேற்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறவில்லை.

    திண்டுக்கல்:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கூட்டத்தை சுமூகமாக நடத்தவும், ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்துரைக்கவும் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை சார்பில் இதுகுறித்து அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கவும், விவாதங்களில் பங்கேற்குமாறும் அமைச்சர் பிரகலாத்ஜோஷி, தேனி எம்.பி. ரவீந்திரநாத்துக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து தான் அந்த கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக ரவீந்திரநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் உள்ள ஒரே எம்.பி. தேனி பாராளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத். இவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, ரவீந்திரநாத் தனது வேட்புமனுவில் பொய்யான தகவல்களை அளித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பளித்தார்.

    ஏற்கனவே ரவீந்திரநாத்தை அ.தி.மு.க. உறுப்பினராக கருதக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற அவைக்கு தகவல் தெரிவித்தார். இருந்தபோதும் ரவீந்திரநாத் அ.தி.மு.க. உறுப்பினராகவே தொடர்ந்து செயல்பட்டார். தேர்தலில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர். ரவீந்திரநாத்துக்கு மேல்முறையீடு செய்யும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஒரு மாதம் நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார். அதற்கான முயற்சியில் ரவீந்திரநாத் இறங்கி உள்ள நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நேற்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

    தற்போது அ.தி.மு.க. பிரதிநிதியாக ரவீந்திரநாத் அழைக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் வெற்றி பெற்றுள்ளார் என்று மனுதாரர் தனது மனுவில் கூறியிருந்தார்.
    • வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்றும் ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

    சென்னை:

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவர் தனது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். எனவே, தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

    ஆனால் இந்த தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்றும் ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக, 30 நாட்களுக்கு தீர்ப்பை நிறுத்தி வைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வில் உள்ள உண்மையான தொண்டன் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வண்ணம் கோர்ட்டு தீர்ப்பு அமையும்.
    • கட்சியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை தாண்டி தற்போது வரை அ.தி.மு.க. எம்.பி.யாக நான் மக்களவையில் பணியாற்றி வருகிறேன்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க முடியாது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை எளிய தொண்டன்தான் தலைமை பொறுப்புக்கு வர முடியும். தலைமை கழகம் யாருக்கு சொந்தம் என்று தற்போது தெளிவுபடுத்த முடியாத நிலை உள்ளது.

    கோர்ட்டு உத்தரவுப்படி தலைமைக்கழக அலுவலகத்தில் சாவி கொடுக்கப்பட்டது. இதுகுறித்து மேல் முறையீடு செய்தபோது 2 வாரங்களில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் உள்ள உண்மையான தொண்டன் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வண்ணம் கோர்ட்டு தீர்ப்பு அமையும்.

    தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. என்னுடைய பங்களிப்பு குறித்து ஒருங்கிணைப்பாளர்தான் முடிவு எடுப்பார்.

    டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நடைபெறுமா? என்பது தொண்டர்களின் மனதை பொறுத்து அமையும்.

    கட்சியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை தாண்டி தற்போது வரை அ.தி.மு.க. எம்.பி.யாக நான் மக்களவையில் பணியாற்றி வருகிறேன். அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×