என் மலர்
நீங்கள் தேடியது "OP Rabindranath"
- பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் மாலை அணிவித்தார்.
- தேவர் நினைவாலயம் பொறுப்பாளர் காந்தி மீனாளை சந்தித்து நலம் விசாரித்தார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்து ராமலிங்கத்தேவர் சிலைக்கு ஓ.பி.ரவீந்திரநாத் தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து தரிசனம் செய்தார்.
பின்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வாழ்ந்த இல்லத்திற்கு சென்ற ஓ.பி.ரவீந்திரநாத்தை பழனி, தங்கவேலு ஆகி யோர் வரவேற்றனர்.
தேவர் நினைவாலயம் பொ றுப்பாளர் காந்தி மீனாளை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மதுரை ராஜ்மோகன், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் மூக்கையா, ஓ.பி.எஸ்., ஆதரவு ஒன்றிய செய லாளர்கள் கருப்புச்சட்டை முருகேசன், முத்துராம லிங்கம், கோவிலாங்குளம் சரவணன், வாசுதேவன், மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் மருத்துவர் பரிதி, இளை ஞரணி மாவட்ட செயலாளர் சிண்ணான்டு தேவன், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதர வாளர்கள் கலந்து கொண்டனர்.
- எடப்பாடியாருக்கு மக்கள் மீண்டும் அவருக்கு மகுடம் சூட்ட காத்து இருக்கிறார்கள்.
- ஜெயலலிதாவின் மறுவடிவமாக மீண்டும் அவரது ஆட்சியை மலரச் செய்ய ஒரு தியாக வேள்வியை எடப்பாடியார் நடத்திக் கொண்டு வருகிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், "ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை மீட்டெடுத்து, இந்த இயக்கத்தை காப்பாற்றி, இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ள எடப்பாடியார் சந்தித்த சோதனைகளை எல்லாம் தவிடு, பொடியாக்கி அனைவரும் தாயை போல அரவணைத்து இன்றைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிவமாக உள்ளார். அதனால் தான் மக்கள் மீண்டும் அவருக்கு மகுடம் சூட்ட காத்து இருக்கிறார்கள்.
இன்றைக்கு தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாய் மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் எடப்பாடியார் திகழ்ந்து உரிமை குரல் எழுப்பி, எட்டு கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். இன்றைக்கு இந்த இயக்கதிற்கு கிடைத்த இறையருள் தான் எடப்பாடியார்.
ஜெயலலிதாவின் மறுவடிவமாக மீண்டும் அவரது ஆட்சியை மலரச் செய்ய ஒரு தியாக வேள்வியை எடப்பாடியார் நடத்திக் கொண்டு வருகிறார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆர்.பி.உதயகுமாரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஓ.பி.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயக்குமார் அவர்களே...
நேற்று - மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள்...
இன்று - மாண்புமிகு எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் புரட்சித்தமிழர் திரு.எடப்பாடி பழனிச்சாமி...
நாளை யாரோ...? என்ன விளையாட்டு இது...?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






