search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்துத்துவா"

    • இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் கேட்க வேண்டியது அரசாங்கத்திடம்தான் நீதிமன்றத்திடம் அல்ல.
    • உங்களின் பிரசாரத்தை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று எப்படி நீங்கள் முடிவு செய்யலாம்?

    புதுடெல்லி:

    இந்துத்துவா தொடர்பான விவகாரங்களை பள்ளி பாடத்திட்டங்களில் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் பாதுகாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் கேட்க வேண்டியது அரசாங்கத்திடம்தான் நீதிமன்றத்திடம் அல்ல எனக்கூறி இந்த மனுவை ஏற்க முடியாது என தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    மேலும் உங்களின் பிரசாரத்தை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று எப்படி நீங்கள் முடிவு செய்யலாம்? என்று கேள்வி எழுப்பினர்.

    ×