search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முல்லை பெரியாறு வழக்கு நவம்பர் 28-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
    X

    முல்லை பெரியாறு வழக்கு நவம்பர் 28-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

    • நவம்பர் 20-க்குள் தமிழ்நாடு, கேரளா அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
    • பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    முல்லை பெரியாறு அணை பகுதியில் கார் பார்க்கிங் அமைக்க அனுமதி கோரி கேரள அரசு தனியாக மனு தாக்கல் செய்துள்ளது. கேரளா நடவடிக்கைக்கு எதிராக தமிழகமும் மனு தாக்கல் செய்தது. கார் பார்க்கிங் விவகாரத்தில் கூட்டு கணக்கெடுப்பு பணிகளை நடத்துவதே சரியான தீர்வாக இருக்கும் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு வழக்கை நவம்பர் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

    நவம்பர் 20-க்குள் தமிழ்நாடு, கேரளா அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்படும் மேற்பார்வை குழு தலைமையில் நில ஆய்வை மேற்கொள்ள கோர்ட்டு முடிவு செய்துள்ளது.

    Next Story
    ×