search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணீஷ் சிசோடியா"

    • துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவை பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • மணீஷ் சிசோடியா திகார் சிறையிலிருந்து தனது தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல் மந்திரியாக இருந்தவர் மணீஷ் சிசோடியா.

    மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக இவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

    இந்நிலையில், திகார் சிறையிலிருந்து மணீஷ் சிசோடியா தனது சட்டசபைத் தொகுதியான பட்பர்கஞ்ச் மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    விரைவில் வெளியில் சந்திக்கிறேன். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மக்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பினர்.

    பல ஆண்டுகள் சிறையிலிருந்த மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோர் எனக்கு உத்வேகம் அளித்துள்ளனர்.

    சுதந்திரத்துக்காக மக்கள் போராடியது போன்று நல்ல கல்வி மற்றும் பள்ளிகளுக்கான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். சிறையில் இருக்கும்போது எனது தொகுதி மக்கள் மீதான அன்பு அதிகரித்துள்ளது. அவர்கள் தான் எனது பலம்.

    வளர்ந்த நாட்டுக்கு நல்ல கல்வி அவசியம். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கல்வி புரட்சி நடந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அனைவரும் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் என எழுதியுள்ளார்.

    சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான வழக்கு நாளை டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ளது.
    • இந்த ஒரு வருடத்தில் அரசால் ஒரு ஆதாரத்தை கூட கோர்ட்டில் சமர்ப்பிக்க முடியவில்லை.

    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மத்திய அரசு மணீஷ் சிசோடியாவை பொய் வழக்கில் கைது செய்தது. அவர் கைது செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ளது. இந்த ஒரு வருடத்தில் அரசால் ஒரு ஆதாரத்தை கூட கோர்ட்டில் சமர்ப்பிக்க முடியவில்லை. இது பொய் வழக்கு.

    75 ஆண்டுக்குப் பிறகு மணீஷ் சிசோடியா ஏழைகளின் குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் பிரகாசமான எதிர்காலம் பற்றிய நம்பிக்கையைக் கொண்டு வந்தார். ஏழைகளின் குழந்தைகளுக்கு கனவு காணும் உரிமையை அவர் வழங்கினார். அப்படிப்பட்ட மனிதரை பொய் வழக்கில் சிறையில் அடைத்துள்ளனர்.

    அவர் எங்களுக்கு முன் மாதிரியாக உள்ளார். பா.ஜ.க.வில் இணைந்திருந்தால் அவர் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டிருக்கும். ஆனால் அவர் சத்தியத்தின் பாதையை விடவில்லை என தெரிவித்தார்.

    • மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

    அதன்பின், டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறை கடந்த மார்ச் 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. கைதுசெய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவரை சி.பி.ஐ. அமலாக்கத் துறை தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றன.

    இதற்கிடையே, பணமோசடி வழக்கு விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத் துறை டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

    மேலும், மறு ஆய்வு மனுக்களையும், அதற்கான ஆதாரங்களையும் கவனமாக ஆய்வு செய்துள்ளோம். எங்கள் கருத்துப்படி அக்டோபர் 30-ம் தேதியிட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கான எந்த வழக்கும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.

    • மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் கெஜ்ரிவாலுக்கு சம்மன்
    • சிபிஐ கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை நடத்தியிருந்தது

    மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த திங்கட்கிழமை சம்மன் அனுப்பியிருந்தது. அதில், இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு விசாரணைக்காக வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை, 11 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகம் சென்று அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு எங்கள் கட்சியை அழிக்க நினைக்கிறது என ஆம் அத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ஒருவேளை கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.

    டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த வழக்கும் கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ, கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது முதன்முறையாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இருக்கிறது.

    • மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது
    • அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. அதேவேளையில், டெல்லி மாநில முதல்வராக இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி, ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுப்போம் என்பதை வலியுறுத்தி ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி. இந்த கட்சியின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா ஜாமின் பெற முடியாத நிலையில், ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    துணை முதல்வர் இருந்தவர் ஜெயிலில் உள்ளார். ஒருவேளை முதல்வரான கெஜ்ரிவாலும் ஜெயிலுக்கு சென்றால்? அரசை வழி நடத்துவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி மாற்றுத்திட்டம் வைத்திருக்கும்.

    இதுதொடர்பாக டெல்லி மாநில மந்திரி சவுரப் பர்த்வாஜ்யிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறுகையில் "மணீஷ் சிசோடியாவுக்கு தொடர்ந்து ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது அரசியல் ரீதியாக ஆம் ஆத்மி கட்சியை தண்டிப்பதற்கான சதிச் செயலாகும்.

    ஒருவேளை அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் தற்போதைய நிலையில், மாற்று திட்டம் குறித்து எனக்கு ஏதும் தெரியாது. அதுபோன்று ஒரு ஆலோசனை நடைபெற்றதாக நான் நினைக்கவில்லை. கெஜ்ரிவால் எங்களுடைய தலைவர். அவருடைய உத்தரப்படி செயல்படுவோம்'' என்றார்.

    • மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான 80 லட்சம் மதிப்புடைய சொத்துக்கள்தான் முடக்கப்பட்டுள்ளது.
    • சிசோடியாவுக்கு எதிரான ஆதாரம் கிடைக்காததால் அமலாக்கத்துறை அவதூறு பரப்புகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மணீஷ் சிசோடியாவின் ரூ.52 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை நேற்று தெரிவித்தது.

    இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பொய் சொல்வதாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான 80 லட்சம் மதிப்புடைய சொத்துக்கள்தான் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.52 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பொய் சொல்கிறது. சிசோடியாவுக்கு எதிரான ஆதாரம் கிடைக்காததால் அமலாக்கத்துறை அவதூறு பரப்புகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
    • இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் மதுபான கொள்கை செயல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    இதில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கடந்த பிப்ரவரி 26-ம் தேதி கைது செய்தது. அமலாக்கத் துறையும் அவரை கைது செய்துள்ளது.

    இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், மணீஷ் சிசோடியாவின் ரூ.52 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை இன்று முடக்கியது. மேலும் அமான்தீப் சிங் தால், ராஜேஷ் ஜோஷி, கவுதம் மல்ஹோத்ரா ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    • தனக்கு ஜாமீன் வழங்க கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தார்.
    • கடந்த மார்ச் 31-ந்தேதி மணீஷ் சிசோடியா, ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

    டெல்லியில் மதுபான கொள்கை செயல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கடந்த பிப்ரவரி 26-ந்தேதி கைது செய்தது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே தனக்கு ஜாமீன் வழங்க கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது.

    இதில் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. நீதிபதி தினேஷ்குமார் வர்மா கூறும்போது, மணீஷ் சிசோடியா ஒரு செல்வாக்கு மிக்க மனிதர். அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் சாட்சிகள் பாதிக்கப்படும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

    கடந்த மார்ச் 31-ந்தேதி மணீஷ் சிசோடியா, ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். தற்போது டெல்லி ஐகோர்ட்டிலும் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    • இனி சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மணீஷ் சிசோடியா தரப்பில் வாதிடப்பட்டது.
    • காவலில் வைத்திருந்த ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தியதாக வாதம்

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    விசாரணைக் காவல் முடிந்ததையடுத்து இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மணீஷ் சிசோடியாவிடம் இன்னும் தகவல்களை பெற வேண்டியிருப்பதால் மேலும் ஒரு வாரம் விசாரணைக் காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    காவலில் வைத்திருந்த ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தியதாகவும், எனவே இனி சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மணீஷ் சிசோடியா தரப்பில் வாதிடப்பட்டது.

    'அமலாக்கத்துறை இதுவரை என்ன செய்தது? 7 மாதங்களாக வழக்கை விசாரித்து, மேலும் கஸ்டடி கேட்டால், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் என்ன கிடைத்தது என்பதை அவர்கள் காட்ட வேண்டும். சிபிஐ நடத்த வேண்டிய விசாரணையை அமலாக்கத்துறை மேற்கொண்டு வருவதால் காவலை நீட்டிப்பதை நான் எதிர்க்கிறேன். அமலாக்கத்துறையானது குற்றச்செயல்கள் தொடர்பான வருமானத்தை மட்டுமே விசாரிக்க முடியும், குற்றத்தை அல்ல' என்று சிசோடியாவின் வழக்கறிஞர் வாதாடினார்.

    அதற்கு பதிலளித்த அமலாக்க இயக்குனரகம், 'சிபிஐ விசாரித்தபோது மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக சிசோடியா புகார் அளித்தார். எனவே, அவரிடம் அதிக நேரம் விசாரிக்கவில்லை' என்று தெரிவித்தது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், சிசோடியாவின் கஸ்டடியை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. மேலும், சிசோடியா தனது வீட்டு செலவினங்களுக்காக காசோலையில் கையெழுத்திடவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    • மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
    • ஜாமீன் மனு மீதான விசாரணை 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இதேபோன்று சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீது இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுவதாக இருந்த நிலையில், நேற்றே அவரை அமலாக்கத்துறை கைது செய்தது.

    இந்நிலையில், மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அப்போது அவரிடம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக விசாரிக்க வேண்டியிருப்பதால் 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது.

    மணீஷ் சிசோடியா  விசாரணைக் காவலுக்கு அனுப்பப்பட்டதால், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

    • ஜாமீன் மனு மீது நாளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
    • மணீஷ் சிசோடியாவை உள்ளே வைத்திருப்பதுதான் அவர்களின் நோக்கம் என கெஜ்ரிவால் காட்டம்

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இதேபோன்று சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு மீது நாளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதால் உடனடியாக வெளியே வர முடியாத நிலை உள்ளது.

    இது தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    மணீஷ் சிசோடியாவை முதலில் சிபிஐ கைது செய்தது. சிபிஐ சோதனையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. பணமும் சிக்கவில்லை. ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது. விசாரணை முடிந்து மணீஷ் நாளை விடுவிக்கப்பட்டிருப்பார். இந்நிலையில் இன்று அமலாக்கத்தறை அவரை கைது செய்தது. ஒவ்வொரு நாளும் புதிய போலி வழக்குகளை உருவாக்குவதன் மூலம் மணீஷ் சிசோடியாவை உள்ளே வைத்திருப்பதுதான் அவர்களின் நோக்கமாக உள்ளது. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பதில் சொல்வார்கள்.

    இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சி எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், மதுபான கொள்கையை திரும்பப் பெற்றிருக்காது என்று பாஜக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மணீஷ் சிசோடியாவை சிறையின் விபாசனா அறையில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
    • மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார்.

    முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூத்த குடிமகன் என்ற முறையில் ஒரு தனி நபருக்கான சிறை எண்-1க்குள் மணீஷ் சிசோடியா அடைக்கப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சிறைக்கு பகவத் கீதை, கண்ணாடி மற்றும் மருந்துகளை கொண்டு செல்ல மணீஷ் சிசோடியாவிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், விபாசனா தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறும் திகார் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில் மணீஷ் சிசோடியா திகார் சிறையில் மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு 'விபாசனா' சிறை மறுக்கப்படுவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து பரத்வாஜ் மேலும் கூறுகையில்," மணீஷ் சிசோடியாவை சிறையின் விபாசனா அறையில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது. நீதிமன்றத்தின் அனுமதி இருந்தபோதிலும், சிறை எண் 1ல் குற்றவாளிகளுடன் சிசோடியா வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்" என்றார்.

    ×