search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road work"

    • பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, கல்வெட்டையும் திறந்து வைத்தார்

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலாஜி நகரில் சாலைப் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பாண்டவர்மங்கலம் ஊராட்சி பாலாஜி நகரில் ரூ.5.50 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.எஸ்.வேலுச்சாமி இல்லத் தெருவில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், நகராட்சி உதவி பொறியாளர் சரவணன், அ.தி.மு.க. நகர செயலர் விஜயபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளர் அம்பிகா வேலுமணி, ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பழனிசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் செல்லும் முக்கியமான சாலையில் தூசி அதிக அளவில் கிளம்பி விடுவதால் அருகிலுள்ள சிறுகுழந்தைகள் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • உடைக்கப்பட்ட சாலையை இன்னும் ஒருவார காலத்தில் சரிசெய்யாவிட்டால் தே.மு.தி.க கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் தே.மு.தி.க மாவட்ட செயலாளர் விஜிவேலாயுதம் கூறினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையை விரிவுபடுத்தப்போவதாக கடந்த 10 தினங்களுக்கு முன்னர் இரவோடு இரவாக சாலையை ராட்சத எந்திரம் மூலம் ேதாண்டினர்.

    அதனைத் தொடர்ந்து சாலைப்பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தார் சாலை தோண்டப்பட்டதை அடுத்து சாலையில் தூசி கிளம்பி வாகனங்கள் செல்வது தெரியாத அளவுக்கு காணப்படுகிறது.

    மேலும் வயதானவர்கள் இந்த சாலையை கடந்து செல்வதால் நுரையீரல் பிரச்சினை, சுவாச கோளாறு ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.

    திருச்செந்தூர் செல்லும் முக்கியமான சாலையில் தூசி அதிக அளவில் கிளம்பி விடுவதால் அருகிலுள்ள சிறுகுழந்தைகள் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் தூசிபடிவதால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

    இது தொடர்பாக தே.மு.தி.க மாவட்ட செயலாளர் விஜிவேலாயுதம் கூறியதாவது:-

    நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்தவிதமான முன்ஏற்பாடுகளும் செய்யாமல் அவசர அவசரமாக திருச்செந்தூர் சாலையை விரிவாக்கம் என்ற பெயரில் உடைத்துள்ளனர். ஆனால் இதுவரையில் சாலை அமைக்கும் பணி ஏதும் தொடங்கப்படவில்லை. சாலையை தோண்டி உடைத்துள்ளதால் வாகனங்கள் செல்லும் போது தூசி கிளம்பி சுகாதாரக்கேட்டை உருவாக்குகிறது.

    இந்த சாலையையொட்டி உள்ள வியாபாரிகள், பாதசாரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக பதில் தெரிவித்து வருகின்றனர். உடைக்கப்பட்ட சாலையை இன்னும் ஒருவார காலத்தில் சரிசெய்யாவிட்டால் தே.மு.தி.க கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த2 மாதங்களுக்கு மேலாக அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளனர்.
    • சாலையோரம் பாதுகா ப்புக்கு உபகரணங்கள் வைக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே பெருமுலை கிராமத்து செல்லும் சாலையோரம் சாலை விரிவாக்க பணிக்காக சுமார் 1 கிலோமீட்டர் தூரம் தோண்டப்பட்ட பள்ளம் கடந்த2 மாதங்களுக்கு மேலாக அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளனர். பள்ளத்தில் ஏதும் ஜல்லி கொட்டி மூடாமல் பள்ளம் தோன்றிய நிலையில் அப்படியே உள்ளதால் அவ்வழியாக சிறுமுலை, பெருமுலை, புலிவலம், கீரனூர், வேப்பூர் வரை செல்லும் அனைத்து பஸ்களும் அவ்வழியே செல்கிறது.

    மேலும் அன்றாட தேவைக்காக அருகிலுள்ள திட்டக்குடி நகரத்திற்கு சிறுகுறு விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் வருகை தருகின்றனர். இதில் சாலை ஓரம் பள்ளம் தோண்ட ப்பட்ட நிலையில் எந்த பாதுகாப்பும் வைக்காமல் தோண்டப்பட்ட நிலையில் கிடப்பதால் விபத்துக்கள் அன்றாடம் பள்ளத்தில் சக்கர வாகனங்கள் எதிர்பாராத விதமாக விழுந்து சிக்கிக்கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகள் சாலைபணியை விரைந்து முடிக்கவும் சாலையோரம் பாதுகா ப்புக்கு உபகரணங்கள் வைக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • போக்குவரத்து மாற்றம் அறியாமல் பஸ்சுக்காக மாணவிகள் காத்திருந்தனர்.
    • போக்குவரத்து மாற்றத்தால் மாநகரப்பகுதி முழுவதிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்ட பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இதனால் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    டவுன் ஆர்ச்சில் தொடங்கி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் வரையிலும் சாலை விரிவாக்க பணிகள், கழிவு நீரோடை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

    பொருட்காட்சி திடல் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு செல்லும் பஸ்கள் சந்திப்புடன் நிறுத்தப்பட்டு உள்ளது. அதே நேரம் சந்திப்பில் இருந்து டவுனுக்கு செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் மட்டும் ஸ்ரீபுரம் வழியாக செல்கிறது.

    தென்காசி, பேட்டை, முக்கூடல் வழித்தட பஸ்கள் தச்சநல்லூர், கண்டியபேரி வழியாகவும், டவுனில் இருந்து சந்திப்பு செல்லும் கார், மோட்டார் சைக்கிள்கள், லாரிகள் உள்ளிட்டவை நயினார்குளம் ரோடு, தச்சநல்லூர் வழியாக வருகின்றன.

    இதனால் டவுன் பகுதியில் உள்ள பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் தென்காசி செல்ல வேண்டுமானால் பழையபேட்டை கண்டியபேரி வரை நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த மாற்றத்தை அறியாததால் இன்று காலை ராணி அண்ணா கல்லூரிக்கு செல்ல வேண்டிய மாணவிகள் பொருட்காட்சி திடல் பகுதியில் மணி கணக்கில் காத்து நின்றனர்.

    அதன்பின்னரே விபரம் தெரியவந்ததால் அவர்கள் வழுக்கோடை வரை டவுன் பஸ்களில் சென்று அங்கிருந்து தென்காசி பஸ்களில் ஏறி சென்றனர்.

    பெரும்பாலானோர் வண்ணார்பேட்டை பகுதிக்கு வந்து அங்கிருந்து தென்காசி வழித்தட பஸ்களில் ஏறி சென்றனர்.

    இதேபோல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு சென்றவர்களும் பெரிதும் பாதிக்கப்ப ட்டனர். முறையான அறிவிப்பு இல்லாததால் பொதுமக்கள் அங்கும் இங்குமாக பரிதவித்தனர்.

    போக்குவரத்து மாற்றத்தால் மாநகரப்பகுதி முழுவதிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது. குறிப்பாக எஸ்.என். ஹைரோடு, தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவில், டவுன் தொண்டர் சன்னதி, வழுக்கோடை உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்கிறது.

    இதனால் அந்த பகுதிகளில் கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமித்து வாகன நெருக்கடியை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது.
    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.

    கடையம்:

    கடையம், அழகப்புரம், சம்பன்குளம் ஆகிய பகுதிகளில் ரூ.49.52 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது.

    கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.

    விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ் செல்வி சந்திரபோஸ் , மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி கோதர் மைதீன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜகாங்கீர், ரம்யா, சங்கர், மாரிக்குமார், தர்மபுரம் மடம் பஞ்சாயத்து தலைவர் ஜன்னத் சதாம், கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன் ஷீலா பரமசிவன் மற்றும் அவைத்தலைவர் பக்கீர் மைதீன், துணை செயலாளர் வின்சென்ட், ஜெயராணி அண்ணாத்துரை, சதாம் உசேன், சுரேஷ், மேசியாசிங், வினிங்ஸ்டன் , ஆதம்சுபர், மாவட்ட பிரதிநிதி முகமது யாகூப், அகமது ஈசாக், மாரியப்பன், சுப்பையா, முருகன், பகவதி, பஸ்ராஜ், பி.முருகன், சசிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.5.45 கோடியில் சாலை பணிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தாமதமின்றி விரைவில் பணியை முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதியில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தளவாய்புரம் முதல் இனாம்கோவில்பட்டி சாலையில் ரூ.5.45 கோடி மதிப்பீட்டில் 2 பாலங்களுடன் சேர்த்து 4 கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது.

    இந்த பணிக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் பேசிய எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தாமதமின்றி விரைவில் பணியை முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் கூறினார்.

    இதில் பொறியாளர் முத்துமுனிகுமாரி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சியில் சாலைகள் மற்றும் தெருக்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது.
    • சாலை அமைக்கும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாநக ராட்சியில் பெரும்பாலான இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை மற்றும் கேபிள்கள் பதிக்கும் பணிக்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு சாலைகள் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. இதனிடையே பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாத காரணத்தி னால் சாலைகள் அமைப்பது தாமதமாகி வந்தது.

    இந்நிலையில் மாநகர பகுதி சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நீண்ட காலமாக மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் சாலை பணிகள் எதுவும் நடைபெறாததால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    தற்போது ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் நிரப்பப்பட்டு சாலைகள் அமைப்பதற்காக சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் 2019-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்ட சாலை பணிகளை மீண்டும் தொடங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

    அதனைத் தொடர்ந்து மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள சொக்கநாதர் கோவில் தெரு, அரசு மருத்துவமனை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் டெண்டர் எடுத்தவர்களை சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியை நேற்று ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த மண்டல சேர்மன் சில காரணங்களை கூறி சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஒப்பந்ததாரர் பணியை நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இதனால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தங்களது பகுதியில் சாலை அமைய உள்ளது என்று மகிழ்ச்சியில் இருந்த அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

    நெல்லை மாநகரில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் சமீப காலமாக கடும் முயற்சி எடுத்து நிறைவேற்றி வருகிறது.

    இந்நிலையில் மேலப்பாளையம் மண்டலத்தில் தார் சாலை அமைக்கும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    மாநகராட்சி கமிஷனர் மற்றும் மேயர் ஆகியோர் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீண்டும் சாலை பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    • யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன். முத்தையா பாண்டியன் தொடங்கி வைத்தார்.
    • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை டி.என்.ஆர்.ஆர். ஐ.எஸ்.திட்டம் 2021 - 22 மூலமாக ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    சிவகிரி:

    சிவகிரி குமாரபுரம், தேவிபட்டணம் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, தேவிபட்டணத்தில் இருந்து குமாரபுரம் வழியாக சிவகிரி செல்லும் தார்சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை டி.என்.ஆர்.ஆர். ஐ.எஸ்.திட்டம் 2021 - 22 மூலமாக ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை தேவிபட்டணம் பேருந்து நிறுத்தம் தென்புறம் உள்ள பிள்ளையார் கோவில் அருகே யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன். முத்தையா பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தேவிபட்ட ணம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், தென்மலை முனியராஜ், கிளை செயலாளர் முருகன், பஞ்சாயத்து துணைத் தலைவர் மாடக் கண்ணு, அனைத்து வார்டு கவுன்சிலர்கள், ஜெய பிரகாஷ், துரைராஜ், காளி ராஜ், மணிகண்டன், விக்கி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் காங்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
    • 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை பணி முழுமையாக முடியாமல் பாதியிலேயே பணிகள் நிற்கின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையம் ,பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காங்கிரீட் சாலை போடப்பட்டு உள்ளது.

    ஆனால் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை பணி முழுமையாக முடியாமல் பாதியிலேயே பணிகள் நிற்கின்றன. எப்போதும் போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில் சாலை பணி முழுமையாக முடியாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

    அதேபோல் இந்த சாலையில் தனியார் பள்ளிகள் ,பல்வேறு பனியன் நிறுவனங்களும் உள்ளதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.காங்கிரீட் சாலையின் இரு புறங்களிலும் குழிகள் மூடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கி வருகின்றனர். அதேபோல் கான்கிரீட் போட்ட ஒரு சில இடங்களில் ரோடுகள் பெயர்ந்து பல்லாங்குழியாக கிடப்பதால் தரமற்ற முறையில் ரோடு போடப்பட்டுள்ளதா? என சந்தேகமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

    தெருக்களில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் முறையாக பாதாள சாக்கடைக்கு சென்று சேரும் வகையில் வழிகள் இல்லாமல் அவசர கதியில் ஏனோ தானோ என்று ரோடு போடப்பட்டுள்ளதால் சாக்கடை நீர் சரிவர செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. எனவே மாநகராட்சி மேயர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இந்த சாலையை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து ரோடு பணியை முழுமையாக முடித்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • அனுப்பா்பாளையம் முதல் சோளிபாளையம் வரையிலான சாலையைசீரமைக்க வலியுறுத்தி ஜூலை 20ந் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    அனுப்பா்பாளையம் - சோளிபாளையம் சாலைப் பணி தொடங்கப்படவுள்ளதால் நாளை நடைபெறுவதாக இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

    இது குறித்து 15.வேலம்பாளையம் நகரச்செயலாளா் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலம்பாளையம் நகரப்பகுதியில் அனுப்பா்பாளையம் முதல் சோளிபாளையம் வரையிலும், வேலம்பாளையம் முதல் தண்ணீா்ப்பந்தல் வரையிலும் இதர வாா்டுகளில்உள்ள பல சாலைகள் முழுவதும் தோண்டப்பட்டு, பல மாதங்களாக குண்டும்குழியுமாகக் கிடக்கின்றன.இதனால், அப்பகுதியில் தொடா்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும், அனுப்பா்பாளையம் முதல் சோளிபாளையம் வரையிலான சாலையைசீரமைக்க வலியுறுத்தி ஜூலை 20ந் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் ரூ.87 லட்சத்தில் பணிகள் தொடங்கப்படவுள்ளது என்று மேயா் தினேஷ்குமாா் உறுதியளித்துள்ளாா்.இதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடலூர் அருகே ஆமை வேக சாலை பணியால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
    • குண்டு குழியுமாக இருப்பதால் நடந்து செல்பவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழும் அபாயமும் உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிய சாலைகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது கடலூர் மற்றும் கடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் புதியதாக வாய்க்கால் மற்றும் தார் சாலை போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களாக இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் குறிப்பாக வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். இதனால் இந்த பாதிப்பு என்றால் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்காக ஏற்கனவே உள்ள சாலைகளை மறுசீரமைப்பின் போது ஏற்படும் விளைவுகளால் சாலைகளில் ஆங்காங்கே குண்டு குழியுமாகவும் மற்றும் குறிப்பாக அதிக நோய்களை பரப்பக்கூடிய வகையில் சாலைகளில் மேகமூட்டம் போல் வரக்கூடிய மாசடைந்த புகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது.

    ஆங்காங்கே குண்டு குழியுமாக இருப்பதால் நடந்து செல்பவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழும் அபாயமும் உள்ளது. மேலும் இதனால் பெரும் பாதிப்பு என்றால் இந்த சாலையில் இருந்து வரும் மிகப்பெரிய மாசடைந்த புகையினால் மோட்டார் சைக்கிள் மற்றும் நடந்து செல்பவர்களின் கண்களிலும் அந்தப் புகையை சுவாசிப்பதனால் உடல்நலம் பெரும் பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ளது. இந்த தூசியினால் விரைவாக உடல் நலப் பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தோஷ நிவர்த்தி பூஜைக்காக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
    • திருவெண்காடு ஊராட்சியில் தேரோடும் வீதி, மடவிளாக வீதி, உள்ளிட்ட பகுதியில் ரூ.3 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறுவதை, அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற நவக்கிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமான சுவேதாரண்யேஸ்வர ஸ்வாமி கோயில் உள்ளது. இப்பகுதிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தோஷ நிவர்த்தி பூஜைக்காக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி கோயிலில் நான்கு வீதிகளில் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசு தேரோடும் நான்கு வீதிகளில் பேவர் பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் திருவெண்காடு ஊராட்சியில் தேரோடும் வீதி, மடவிளாக வீதி, உள்ளிட்ட பகுதியில் ரூ.3 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறுவதை, அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

    சாலையின் தரத்தினை சோதித்து ஆய்வு செய்தார்.பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரியிடம் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்ஷினி, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, ராமலிங்கம் எம்.பி, எம்.எல்.ஏக்கள் நிவேதா.முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, திருவெண்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், செல்ல சேது ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில், ஒப்பந்ததாரர்கள் பழனி, அகோரம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×