என் மலர்
நீங்கள் தேடியது "போராட்டம்"
- மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
- 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த விவகாரம் மக்களவயில் இன்று பெரும் புயலை கிளப்பியது. எதிர்க்கட்சி தலைவர் இந்த விவகாரம் குறித்து பேச முற்பட்டது, அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சியினருக்கு மக்களவையில் பேச அனுமதி வழங்கப்படாததை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவையில் இருந்து எதிர்க்கட்சியை சேர்ந்த 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தொடர் முடியும் வரை பங்கேற்க முடியாது.
இதையடுத்து, மக்களவையில் இருந்து 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கும் எதிரா்ப்பு தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற பாாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் மகர வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில் ஹிபி ஈடன், அமரிந்தர் சிங் ராஜா வாரிங், மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங் அஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோலே, எஸ். வெங்கடேசன் மற்றும் டீன் குரியகோஸ் ஆகியோர் அடங்குவர்.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டிருந்தார்
- கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம்
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினரின் தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினரின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சமஊதிய போராட்டம் சார்ந்து இன்று (31-01-2026) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.
அதில் மூன்று நபர்கள் ஊதிய குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் என்றதின் அடிப்படையிலும் தமது அரசு மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து நல்லதொரு முடிவு ஏற்படும் என்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலன், நெடு நாட்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம் என்று உறுதி அளிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவைத்தொகை, ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை.
- இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 36வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது போல, அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டிற்கான ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என சென்னையின் பல்வேறு கல்லூரிகளை சேரந்த ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையின் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கல்லூரி வளாகங்களுக்கு உள்ளேயே இன்றுடன் ஏழாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும் இன்று கண்ப
தமிழ்நாட்டில் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்டது. ஆனால் இன்னும் ஊதியம், நிலுவைத்தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு இந்த ஆணையின்படி ஊதியம் மற்றும் நிலுவைத்தொகை வழங்கப்பட்ட நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவைத்தொகை, ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம் சங்க பொறுப்பாளர்களிடம் உயர் கல்வித்துறை அமைச்சர், ஜனவரி மாத ஊதியத்தில் சேர்க்கப்படும் என உறுதி அளித்த நிலையில் ஜனவரி மாதம் 20-ம் தேதியைக் கடந்த பின்பும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறாத நிலையில், தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றுடன் 36வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மறுபுறம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக தரப்படாத சம்பளத்தை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு தரவேண்டும் என்பது உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.
- அரசு ஊழியங்களின் போராட்டங்களில் தற்காலிக ஊழியர்கள் பணி என்பது வருடத்திற்கு 11 மாதம் என்பது மட்டுமே.
- இதுபோன்ற தூண்டுதல்களை மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
சென்னை:
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தற்காலிக ஊழியர் கள் போராட்டம் தொடர்வது பற்றி நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:-
அரசு ஊழியங்களின் போராட்டங்களில் தற்காலிக ஊழியர்கள் பணி என்பது வருடத்திற்கு 11 மாதம் என்பது மட்டுமே. அது மீண்டும் தொடரும்போது இடையில் ஒரு நாள் விடுமுறை வழங்கி விட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பணிபுரிவார்கள்.
இதுபோன்று பணியில் இருப்பவர்களை எந்த அரசும் பணி நிரந்தரம் செய்ய முடியாது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநில அரசும் பணிநிரந்தரம் செய்ய முடியாது. அண்ணாமலையிடம் வேறு மாநிலத்தில் பணி நிரந்தரம் செய்திருக்கிறார்களா என்று பத்திரிகையாளர்களாகிய நீங்களே கேட்டு சொல்லவும்.
பணி நிரந்தரம் செய்தால் நீதிமன்றம் தலையிடும். 'கம்யூனல் ரொட்டேசன்' இல்லாமல் எந்த பணியாளரையும் பணிநிரந்தரம் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் கூறும். இந்த நிலையில் இதனை தெரிந்து கொண்டே போராட்டம் செய்வது என்பது ஒரு சிலர் தூண்டிவிட்டு நடத்துவது. அரசு ஊழியர் போராட்டம் அல்ல, இன்னொன்று ஊழியர் சங்கங்கள் அல்ல, தனிநபரின் தூண்டுதல் இருக்கிறது என்று ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். பெங்களூருவை சேர்ந்த ஒருவர் இங்கு போராட்டத்தை தூண்டி விட்டார், நாங்கள் அவர் மீது புகார் கொடுத்து இருக்கிறோம்.
இதுபோன்ற தூண்டுதல்களை மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும். தேர்தல் நடக்கும் சூழ்நிலையில் அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் நிலையில் இதுபோன்று தூண்டிவிடப்படும் போராட்டங்கள் குறைக்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் சொல்லியிருந்தேனே தவிர போராட்டங்களை கொச்சைப்படுத்துவது என்பது தி.மு.க. அரசாங்கத்தின் நோக்கம் அல்ல.
நான் இப்போது அரசியல்வாதியாக இருக்கலாம், இதற்கு முன்பு ஒரு யூனியன் தலைவராக இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறேன். 1980களிலே நான் ஏற்கெனவே சட்டமன்றத்தில் பதிவு செய்திருந்தேன். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது அவரது அரசை எதிர்த்து தலைமைச் செயலகத்திலேயே போராட்டம் நடத்தி எம்.ஜி.ஆரையே கீழே வரவழைத்து 500 பெண் தொழிலாளர்கள் முன் பேச வைத்து அவருக்கு நேராக விவாதம் செய்தவன் நான். அதனால் தொழிற்சங்கத்தைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டாக்டர்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டுமென 4 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறோம்.
- தற்போது நடைபெறுகின்ற இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
சென்னை:
அரசு டாக்டர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் 48 மணி நேரம் உண்ணாவிரத போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.
அதன் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்து வந்த டாக்டர்களிடம் அரசு உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் சுமுக உடன்பாடு ஏற்படாததால் இன்று முதல் மீண்டும் போராட்டத்தை தீவிரபடுத்தியுள்ளனர்.
ஒத்துழையாத போராட்டம் என்ற அடிப்படையில் அரசு டாக்டர்கள் பல்வேறு பணிகளைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து உள்ளனர்.
அரசு ஆஸ்பத்திரியில் பயோமெட்ரிக் வருகை பதிவை புறக்கணிப்பது வாட்ஸ் அப் குழு, ஆன்லைன் மற்றும் நேரடியாக நடைபெறும் அலுவல் சார்ந்த கூட்டங்களை புறக்கணித்தல், மருத்துவ மாணவர்களின் வகுப்புகள் புறக்கணிப்பு என அரசுக்கு ஒத்துழைக்காமல் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
டாக்டர்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டுமென 4 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறோம். சம்பள உயர்வு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ரூ.3000 படி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினோம்.
அதனை நிறைவேற்றவில்லை. பொதுமக்கள் நலன் பாதிக்கக்கூடாது என்பதற்காக நாங்கள் போராட்டத்தை மேற்கொள்ளாமல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் நிறைவேற்ற முன்வரவில்லை.
இன்று முதல் எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளோம். 4 பணிகளை புறக்கணித்து உள்ளோம். பிப்ரவரி 4-ந் தேதி வரை ஒத்துழையாமை போராட்டம் நடைபெறும். அதன் பின்னர் மாநில செயற்குழு கூடி அடுத்தகட்ட போராட்டத்தை முடிவு செய்வோம்.
தற்போது நடைபெறுகின்ற இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மருத்துவர்கள் சேவையில் எந்த குறைவும் இருக்காது. அடுத்த வாரம் புதன்கிழமை மீண்டும் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யாத உள்துறை மந்திரி அனிதாவை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.
- துணை முதல்வர் பவன் கல்யாண் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
ஆந்திராவில் ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ. அரவ ஸ்ரீதர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் மந்திரி நடிகை ரோஜா தலைமையில் நகரியில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஜனசேனை என்றால் காமக்கொடூரன்களின் சேனை. கேரக்டர் இல்லாதவர்கள் அரசியல் செய்கிறார்கள். இது போன்ற தலைவர்களின் ஆட்சியில் மக்களுக்கு மரியாதை கிடைக்காது.
பெண்களுக்கு அநியாயம் நடந்தால் நீதி கிடைக்காது. ரெயில்வே கோடூரில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுவரை அந்த எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யாத உள்துறை மந்திரி அனிதாவை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.
துணை முதல்வர் பவன் கல்யாண் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்தப் பெண் அனைத்து ஆதாரங்களையும் வீடியோ, ஆடியோ உடன் காட்டிய பிறகும் கூட விசாரணைக்காக 3 பேருடன் கூடிய ஒரு கமிட்டியை நியமிப்பதாக ஜனசேனா கட்சி அறிவித்துள்ளது வெட்கக்கேடு.
தேர்தலுக்கு முன் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் 30 ஆயிரம் பெண்கள் நாடு கடத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களை மீட்டு கொண்டு வருவோம் என்று சொன்ன பவன் கல்யாண் ஒரு பெண்ணையாவது இதுவரை கொண்டு வந்தாரா. அவரது கட்சி எம்எல்ஏக்கள் தான் பெண்கள் மீது வன்கொடுமை போன்ற அராஜகம் செய்து வருகிறார்கள். அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு 2021ம் ஆண்டு ஆணையின்படி ஊதியம் மற்றும் நிலுவைத்தொகை வழங்கப்பட்டுவிட்டது.
- கடந்த டிசம்பர் மாதம் சங்க பொறுப்பாளர்களிடம் உயர் கல்வித்துறை அமைச்சர், ஜனவரி மாத ஊதியத்தில் நிலுவைத்தொகை சேர்க்கப்படும் என உறுதி அளித்தார்.
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது போல, அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டிற்கான ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என சென்னையின் பல்வேறு கல்லூரிகளை சேரந்த ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் புதுகல்லூரி, மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள் கல்லூரி வளாகங்களுக்கு உள்ளேயே போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்டது. ஆனால் இன்னும் ஊதியம், நிலுவைத்தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு இந்த ஆணையின்படி ஊதியம் மற்றும் நிலுவைத்தொகை வழங்கப்பட்ட நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவைத்தொகை, ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் சங்க பொறுப்பாளர்களிடம் உயர் கல்வித்துறை அமைச்சர், ஜனவரி மாத ஊதியத்தில் சேர்க்கப்படும் என உறுதி அளித்த நிலையில் ஜனவரி மாதம் 20-ம் தேதியைக் கடந்த பின்பும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறாத நிலையில், தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டும் வருகின்றனர்.
மறுபுறம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக தரப்படாத சம்பளத்தை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு தரவேண்டும் என்பது உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.
- மக்கள் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
- நாணய மதிப்பு வீழ்ச்சியால் ஈரானின் மத்திய வங்கி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டெஹ்ரான்:
ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.
பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவையை அரசாங்கம் துண்டித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம். இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வங்கிகளுக்கு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
- வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.
இன்று (ஜனவரி 27) நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
வங்கிகளில் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை முறையை உடனடியாக அமல்படுத்தக் கோரி இந்த வேலை நிறுத்தம் நடத்தப்பட உள்ளது.
தற்போது வங்கிகளுக்கு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும், அதற்கு பதிலாக வார நாட்களில் தினமும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணியாற்றவோம் என வங்கி சங்கங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் ஜனவரி 23 அன்று மத்திய தொழிலாளர் ஆணையருடன் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாததால், வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான 'யுனைடெட் போரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ்' இன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்டேட் பேங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இதனால் பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.
அதெல்லாம், HDFC, ICICI, Axis போன்ற தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே தனியார் வங்கிச் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்.
- சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு ஊழியர்களும் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழ்பவர்கள்.
- சத்துணவுப் பணியாளர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சத்துணவுப் பணியாளர்களின் போராட்டம் மாணவர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரத்து 38 சத்துணவு மையங்களில் இப்போதைய நிலையில் 71 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 43 ஆயிரம் சத்துணவு மையங்களும் முடங்கி விடும்; அதனால், அந்த மையங்களை நம்பியுள்ள 40.82 லட்சம் மாணவர்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்படும்.
சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு ஊழியர்களும் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழ்பவர்கள்; அவர்கள் தான் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்குபவர்கள். எனவே, இனியும் தாமதிக்காமல் சத்துணவுப் பணியாளர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பிற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மக்கள் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
- நாணய மதிப்பு வீழ்ச்சியால் ஈரானின் மத்திய வங்கி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டெஹ்ரான்:
ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.
பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவையை அரசாங்கம் துண்டித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதில் பாதுகாப்பு படைவீரர்கள் 500 பேர் அடங்குவர்.
இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 3,30,000 முதல் 3,60,000 பேர் காயமடைந்துள்ளனர்
- மருத்துவ ஊழியர்களே நோயாளிகளைக் காப்பாற்ற தங்கள் சொந்த இரத்தத்தை கொடுத்துள்ளனர்.
ஈரானில் இதுவரை போராட்டத்தில் சிக்கி 16,500 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 3,30,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் புது அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
தி சண்டே டைம்ஸ் இதழ் (பிரிட்டிஷ் பத்திரிக்கை) பெற்றுள்ள, அங்குள்ள மருத்துவர்களின் புதிய அறிக்கையின்படி, ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களில் குறைந்தது 16,500 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3,30,000 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. ஈரானில் உள்ள எட்டு முக்கிய கண் மருத்துவமனைகள் மற்றும் 16 அவசர சிகிச்சை பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் கொடுத்த தகவல்களின்படி, குறைந்தது 16,500 முதல் 18,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 3,30,000 முதல் 3,60,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் அடங்குவர்.
குறைந்தது 700 முதல் 1,000 பேர் வரை கண்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. தெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையான நூர் கிளினிக்கில் 7,000 கண் காயங்கள் பதிவாகியுள்ளன. இரத்தப் பற்றாக்குறையால் பலர் இறந்துள்ளனர். பல மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ ஊழியர்களே நோயாளிகளைக் காப்பாற்ற தங்கள் சொந்த இரத்தத்தை கொடுத்துள்ளனர்.
ஈரான் அரசு விதித்துள்ள இணைய முடக்கத்தை தாண்டி, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணையத்தைப் பயன்படுத்தி மருத்துவர்கள் செய்தித்தாளிற்குப் பேட்டியளித்துள்ளனர். ஆனால் இதுவரை 2,885 போராட்டக்காரர்கள் உட்பட மொத்தம் 3,090 மரணங்கள், மேலும், 22,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதே அதிகாரப்பூர்வ தகவலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.






