search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒத்திவைப்பு"

    • பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி வெளியிட்டது.
    • பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி வெளியிட்டது.

    முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

    இதற்கிடையே, நடப்பாண்டின் யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு மே 26-ம் தேதி நாடு முழுதும் நடத்திட திட்டமிடப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதன்மை தேர்வுகளை ஜூன் 16-ம் தேதி நடத்திட திட்டமிட்டுள்ளதாக யு.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

    • ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.
    • வழக்கை விசாரித்த நீதிபதி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்ரல் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்ரல் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த விசாரணையின் போது கொடநாட்டில் நடந்த புலன் விசாரணை தொடர்பான அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

    • மருத்துவமனையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அங்கு பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
    • மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் தெரிவித்தார்.

    திருப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ந்தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். மேலும் திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். 2024ம் ஆண்டு பிறந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருகை தந்த முதல் நிகழ்ச்சியாக அவரது திருச்சி சுற்றுப்பயணம் அமைந்தது.

    இதையடுத்து மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதமே தமிழகத்துக்கு 2-வது முறையாக வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

    இதையடுத்து கேலோ இந்தியா போட்டியை சென்னையில் தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடி அன்றைய தினம் திருப்பூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    திருப்பூரில் புதிதாக இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அங்கு பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட பா.ஜ.க.வினர் அறிவித்துள்ளனர்.

    திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ., மருத்துவ மனையை திறந்து வைக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளதால், பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதியில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு மசோதாக்கள் நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
    • இரு அவைகளிலும் இந்தியா கூட்டணியின் 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.

    மக்களவையில் கலர் புகை குண்டு வீசப்பட்ட சம்பவம் நடப்பு கூட்டத்தொடரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை வரை நடைபெறுவதாக இருந்த நிலையில் இன்றுடன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மக்களவையில் 3 குற்றவியல் மசோதா, தொலைத்தொடர்பு திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    எதிர்க்கட்சிகள் இல்லாத நேரத்தில் அனைத்து முக்கிய மசோதாக்களையும் நிறைவேற்றி பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கு எதிராக மோடி அரசு செயல்படுவதாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், இரு அவைகளிலும் இந்தியா கூட்டணியின் 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விதம் துரதிருஷ்டவசமானது என அவர் கூறியுள்ளார்.

    • பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்படாததால் சிமெண்டு ஆலை சுரங்கம் அமைக்கும் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது
    • அரியலூர் கலெக்டர் உத்தரவு

    அரியலூர்,

    அரியலூர்அடுத்த கயர்லாபாத் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சிமென்ட்ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு தேவையான சுண்ணாம்புக் கல் எடுக்க வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, காட்டுப்பிரிங்கியம், அஸ்தினாபுரம், கல்லங்குறிச்சி, சீனிவா சபுரம், தாமரை க்குளம், நாயக்கர்பாளையம் ஆகிய கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளிடம் குறை வான விலைக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

    அப்போது நிலம் அளித்த விவசாய குடும்பத்தின் ஒரு வருக்கு வேலை வழங்கப்ப டும் என்று தெரிவித்த அரசு சிமென்ட் ஆலை நிர்வாகம், இதுவரை யாருக்கும் வேலை வழங்கவில்லை என கூறப்ப டுகிறது.இது தொடர்பாக சம்பந் தப்பட்ட கிராமமக்கள் கோர்ட்டில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சுரங்கம் அமைப்பதற்காக கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டது.அப்போது ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று (செவ்வாய் கிழமை) கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட இருந்த நிலையில், நிலம் கொடுத்த கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர்.

    இதனை அறிந்த கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இதில் நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் உரிய இழப்பீட்டு தொகையை வழங்கிவிட்டு கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கருத்துக் கேட்பு கூட்டத்தை ஒத்திவைத்து கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பேச்சுவார்த்தையின் போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர், அரசு சிமென்ட் ஆலை நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினர் உடனிருந்தனர்.

    • தஞ்சையில் பொதுக்கூட்டத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
    • பொதுக்கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி கடந்த மாதம் 4-ந்தேதி நடைபெற இருந்த கூட்டம் மழை காரணமாக நாளைமறுதினம் 16-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடர் கன மழை பெய்யும் எனவும், தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி வருகின்ற 16-ந்தேதி புயல் சின்னமாக மாறும் என அறிவித்துள்ளது.

    எனவே பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் பெற்று 16-ந்தேதி நடைபெற இருந்த 52-ம்ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தஞ்சையில் நடந்த பூத்கமிட்டி கூட்டத்தில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.

    • பெரம்பலூரில் சாலையோர வியாபாரிகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது
    • சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒத்தி வைப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் அருகில் சாலையோர வியாபாரிகள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்க மாவட்ட தலைவர் வரதராஜ் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட தலைவர் ரங்கநாதன், மாவட்ட பொருளாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அகஸ்டின் பேசுகையில், சாலையோர வியாபாரி களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். சாலையோர வியாபாரி களின் வாழ்வாதார பாது காப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும், வெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும்.நகராட்சி ஆணையரின் தள்ளு வண்டிகளை அப்பு றப்படுத்தப்படும், பறிமுதல் செய்யப்படும் என்ற அறி விப்பை திரும்ப பெறவேண் டும், சாலையோர வியாபாரி களின் கோரிக்கைகள் மீது தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என வலி யுறுத்தினார்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டிஎஸ்பி பழனிசாமி மற்றும் நகராட்சி அலுவலர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த் தையில், தீபாவளி பண்டிகை வரை தள்ளுவண்டி பறி முதல் செய்யப்படாது, தீபா வளி பண்டிகைக்கு பிறகு தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

    • மக்கள் குறைதீர் முகாம் மேயர் மகேஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருவதால் ரத்து.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாந கராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தீர்க்க ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும், மக்கள் குறைதீர் முகாம் மேயர் மகேஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது.

    வருகிற 28-ந்தேதி விளை யாட்டு துறை மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்துகொள்ள வருவதால், நாளை (26-ந்தேதி) நடைபெற இருந்த, பொதுமக்கள் குறைதீர் முகாம் அடுத்த வாரம் வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிர்வாக காரணங்களால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31-ந்தேதி அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகள் கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு ஆகஸ்ட்- 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25-ந்தேதி ( வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களால் 31-ந்தேதி அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஆகவே அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து விவசாயிகளும் 31-ந்தேதி அன்று காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் வளாக அறை எண் 240ல் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • 26-ந்தேதி விருத்தா சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
    • வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது, 

    கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் வருகிற 19-ந்தேதி நடைபெ றவிருந்த மாற்றுத்திறனா ளிக்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் வங்கி கடன் மேளா நிர்வாக காரணங்களினால் வருகிற 26-ந்தேதி விருத்தா சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட முகாமில் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் கலந்து க்கொண்டு தங்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் கட்டுபாட்டில் பணிபுரியும் திரிபுரகுமார், மாவட்ட திட்ட அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கடலூர் தொடர்பு கொள்ள வேண்டும். 

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-2024-ம் ஆண்டில் கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் வருகின்ற 19-ந்தேதி (சனிக்கிழமை) விருத்தாசலம், அரசினர் ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில், நடைபெற இருந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் இவ்வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந்ேததி (சனிக்கிழமை) விருத்தா சலம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் . இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது .

    • கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தொழிற் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கடலூர்:

    நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோ சர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணிநிரந்தரம் செய்யும் வரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் 20 நாட்களாக நடைபெற்று வருகின்றது. இப்போராட்டத்தில் சங்கத்தலைவர் அந்தோணி செல்வராஜ், சிறப்பு தலைவர் சேகர், பொதுச்செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

    வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டம் அறிவித்து தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். இந்த நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தொழிற் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வரும்வரை போராட்டம் ஒத்தி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

    • 17நாட்களாக பல்வேறு கட்டதொடர் போராட்ட ங்களை நடத்தி வருகின்றனர்.
    • சாதக பாதகங்களை கருத்தில் கொண்டு ெரயில் மறியல் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

    கடலூர்:

    நெய்வேலி என்.எல்.சியில் பணியாற்றும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17நாட்களாக பல்வேறு கட்டதொடர் போராட்ட ங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று(வெள்ளிக்கிழமை) காலை வடலூரில் ெரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் ஒப்பந்த தொழி லாளர்கள் பிரச்சனை குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது .இதன் சாதக பாதகங்களை கருத்தில் கொண்டு ெரயில் மறியல் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதற்கு மாற்றாக நெய்வேலி அண்ணா திடலில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர். தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட போரா ட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் அமையும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அந்தோணி தெரிவித்தார். 

    ×