search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலைப்பணி தொடங்க உள்ளதால் சோளிபாளையத்தில் நாளை நடைபெற  இருந்த  போராட்டம் ஒத்திவைப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு
    X

    கோப்புபடம். 

    சாலைப்பணி தொடங்க உள்ளதால் சோளிபாளையத்தில் நாளை நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு

    • போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • அனுப்பா்பாளையம் முதல் சோளிபாளையம் வரையிலான சாலையைசீரமைக்க வலியுறுத்தி ஜூலை 20ந் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    அனுப்பா்பாளையம் - சோளிபாளையம் சாலைப் பணி தொடங்கப்படவுள்ளதால் நாளை நடைபெறுவதாக இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

    இது குறித்து 15.வேலம்பாளையம் நகரச்செயலாளா் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலம்பாளையம் நகரப்பகுதியில் அனுப்பா்பாளையம் முதல் சோளிபாளையம் வரையிலும், வேலம்பாளையம் முதல் தண்ணீா்ப்பந்தல் வரையிலும் இதர வாா்டுகளில்உள்ள பல சாலைகள் முழுவதும் தோண்டப்பட்டு, பல மாதங்களாக குண்டும்குழியுமாகக் கிடக்கின்றன.இதனால், அப்பகுதியில் தொடா்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும், அனுப்பா்பாளையம் முதல் சோளிபாளையம் வரையிலான சாலையைசீரமைக்க வலியுறுத்தி ஜூலை 20ந் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் ரூ.87 லட்சத்தில் பணிகள் தொடங்கப்படவுள்ளது என்று மேயா் தினேஷ்குமாா் உறுதியளித்துள்ளாா்.இதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×