search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை பணி"

    • குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
    • உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் தாராபுரம் சாலையிலிருந்து காங்கேயம் சாலை செல்லக்கூடிய மாநகராட்சிக்கு உட்பட்ட 44 வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளும் முன்பாகவே சாலை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும்போது மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    ஆனால் இதனை பொருட்படுத்தாமல் நேற்று இரவு பணிகள் மேற்கொண்ட போது சுமார் 2000 வீடுகளுக்கு செல்லக்கூடிய 8 மெயின் குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களும் உடைக்கப்பட்டது. அந்த உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் 44 வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் கிடைத்ததும் அங்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலர் கண்ணப்பன் கூறும்போது, நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக தொடர்ந்து அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் உடைக்கப்படுவதாகவும் இதனால் கடந்த ஒரு மாத காலமாக முறையாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியும் கூட நெடுஞ்சாலை துறையினர் கண்டும் காணாமல் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதே நிலை தொடருமானால் நெடுஞ்சாலை துறை மற்றும் ஒப்பந்ததாரரை கண்டித்து மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

    • பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது
    • இந்த மாத இறுதிக்குள் முழுமை பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தேரோடும் மாடவீதிகளில் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    இதில் முதல் கட்டமாக திருவூடல் தெரு சந்திப்பு முதல் காந்திசிலை வரை உள்ள ஆயிரம் மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்த சாலை பணிகளை கலெக்டர் முருகேஷ் பார்பவையிட்டு பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த பணிகள் இந்த மாத இறுதிக்குள் முழுமை பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட ப்பொறியாளர் ரகுராமன், நகராட்சி ஆணையாளர் ந.தட்சணா மூர்த்தி, பொறியாளர் நீலேஸ்வர், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பழனி ராஜூ, உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவி மின் பொறியாளர் சங்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    அடுத்த மாதம் நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சிமெண்ட் சாலையில் நடைபெறும்.

    தேரோட்டத்திற்கு வசதியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மாடவீதிகளில் மின் கம்பங்களில் சென்று கொண்டிருந்த மின் வயர்கள் அனைத்தும் புதைவழி மின் தடமாக மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    • கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு
    • கர்ப்பிணிகளை டோலிகட்டி தூக்கி செல்லும் அவலம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்திற்கு சாலை வசதிகள் இல்லை.

    சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே இந்த மலை கிராம மக்கள் 8 கிலோமீட்டர் தூரம் மலை காடுகள் வழியாக நடந்து செல்கின்றனர்.

    மலையில் உள்ள கர்ப்பிணிகள் மற்றும் யாராவது நோய்வாய்ப்ப ட்டால் அவர்களை டோலிக்கட்டி தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது.

    மேலும் மலையில் 5-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி உள்ளது. படிப்புக்காக மாணவ மாணவிகள் தினமும் சென்றுவர 16 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    மலை கிராமத்திற்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அடிவாரத்தில் இருந்து கிராமத்திற்கு 8 கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்ப ட்டுள்ளது. திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இன்று காலை மலை கிராமத்திற்கு நடந்து சென்றார்.

    சாலை அமைக்கும் பணிக்காக கலெக்டர் வந்திருப்பதை அறிந்த கிராம மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

    உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவி த்தனர். கலெக்டருடன் மாவட்ட வன அலுவலர் கலாநிதி, உதவி கலெக்டர் பிரேமலதா, திட்ட இயக்குனர் செல்வகுரு ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    மலைக்கு சென்று வர என 16 கிலோ மீட்டர் தூரம் கலெக்டர் நடந்து சென்று ஆய்வு செய்தார்.

    • கீழக்குயில்குடியில் சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
    • ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தை அடுத்த கீழக்குயில்குடியில் ரூ.32 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டமிடப் பட்ட பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை விரைந்து செயல்படுத்த திருப்பரங்குன்றம் சட்டப்பே ரவை உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்குயில்குடி ஊராட்சியில் அப்பகுதி பொதுமக்கள் சமணர் படுக்கை பகுதியில் சாலை அமைத்து தர கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்ப டையில் கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ.32 லட்சத்து 56 ஆயிரத்திற்கு பேவர்பிளாக் சாலை அமைக்க ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டது.

    மேலும் அந்தப் பணிகள் நான்கு மாதங்களில் முடிக் கப்படும் என தெரிவிக்கப் பட்டது. ஆனால் தற்போது வரை அங்கு பேவர் பிளாக் சாலைப்பணிகள் எதுவும் தொடங்கவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து உடன டியாக பேவர் பிளார் சாலை அமைக்கும் பணி யினை செய்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கின்றேன். மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கும் கடிதம் அனுப்பி உள்ளேன்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • முதுகுளத்தூர் அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
    • அரசு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புஷ்பவனம் கிராமம் உள்ளது. இங்கிருந்து வளநாடு, செங்கப்படை வழியாக முதுகுளத்தூர் மற்றும் சத்திரக்குடி செல்வதற்கு 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க முடிவு செய்யப்ட்டது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப் பட்டது.

    இதை தொடர்ந்து மண் சாலை ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டப்பட்டு சாலையின் இரு புறங்க ளிலும் ஜல்லிக்கற்கள் குவிக்கப்பட் டுள்ளன. ஆனால் பணிகள் தொடங்கப்படாமல் கி டப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூ ரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், அன்றாட வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அவதியடைந் துள்ளனர்.

    சாலையில் ஜல்லிக் கற்கள் குவியலாக கிடப்ப தால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. வளநாட்டில் இருந்து செங்கப்படை வழியாக புஷ்பவனம் கிராமத்திற்கு செல்லும் அரசு பஸ் கடந்த 3 மாதங்களாக இயக்கப்பட வில்லை. இதனால் அந்த பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி மாணவர்கள், இரு சக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறுகின்ற னர். அவசர தேவைகளுக்கு கூட ஆம்புலன்ஸ், ஆட்டோக்கள் வர மறுப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மழை பெய்தால் சாலை சேறு, சகதியாகி நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது என்றும் அவர்கள் வேதனை தெரி விக்கின்றனர்.

    இதுகுறித்து அதிகாரி களிடம் பலமுறை புகார் அளித்தும் நடவ டிக்கை எடுக்கப்படாமல் உள்ளதாகவும், இந்த சாலை பணியை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    மேலும் சாலையில் ஜல்லிக்கற்கள் சிதறி கிடப்பதால் புஷ்பவனம் கிரா மத்திற்கு செல்லும் அரசு பஸ் செங்கப்படை கிராமத்தோடு திரும்பி விடுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக சாலையை சீரமைத்து புஷ்பவனம் கிராமம் வரை அரசு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நகர மன்ற தலைவர் பார்வையிட்டு ஆய்வு
    • ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் நடைபெறுகிறது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. வார்டு பகுதிக்குட்பட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நகராட்சிக்குட்பட்ட போலீஸ் நிலைய ரோடு சாலையானது நகராட்சியின் பல்வேறு அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய பிரதான சாலையாக இருந்து வருகிறது.

    நகராட்சி நிர்வாகத்தின் மூலம் ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலைகளின் இருபுறமும் கால்வாய் மற்றும் குடிநீர் இணைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி நடைபெற்று, அதன் பிறகு சாலை முழுவதும் பெயர்த்து எடுக்கப்பட்டு ஜல்லி கற்கள் பரப்பும் பணி நடைபெற்று வந்தது.

    மேலும் அந்தப் பணியும் நிறைவுற்று நேற்று போலீஸ் நிலைய ரோடு சாலைக்கு தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதனை நகர மன்ற தலைவர் எம். காவியா விக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து சாலையின் தரம் குறித்தும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் ஜி. பழனி, பொறியாளர் பி. சங்கர், நகர செயலாளர் அன்பழகன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி. எஸ். பெரியார் தாசன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • அமைச்சர் எ.வ. வேலு உத்தரவு
    • இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்

    திருவண்ணாமலை:

    பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் செப்டம்பர் மாதத்திற்குள் சிமெண்டு சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் கான்கிரீட் சிமெண்டு சாலை பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணிகளால் பே கோபுர தெரு, பெரிய தெரு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    தேரோடும் மாடவீதிகளில் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் சிமெண்டு சாலை பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சாலை பணிக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

    மேலும் சாலை பணிக்காக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதை மீறி சில வாகனங்கள் சென்று வருவதால் அதனை தடை செய்ய அறிவுறுத்தினார்.

    பெரிய தெரு முதல் காந்தி சிலை வரை நடைபெறும் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். ஆய்வின் போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன், கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்டப்பொறியாளர் ராஜ்குமார், நகராட்சி ஆணையாளர் என்.தட்சணாமூர்த்தி, தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் கார்த்தி வேல்மாறன், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட குளச்சல், –திருவட்டார் சாலையில் ரூ.1.22 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி
    • விராலிகாட்டுவிளை, –வீட்டுக்குழியில் சாலை அமைக்கும் பணியும் ஆய்வு செய்யப்பட்டது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் இன்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பழு தடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் பணி, தார் சாலைகள் அமைக்கும் பணி, புதிய சாலைகள் அமைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட குளச்சல்,–திருவட்டார் சாலையில் ரூ.1.22 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியும், விராலிகாட்டுவிளை, – வீட்டுக்குழியில் சாலை அமைக்கும் பணியும் ஆய்வு செய்யப்பட்டது. இப்பணி யினை தரமானதாகவும், விரைவாகவும் முடித்து பொது மக்களின் பயன்பா ட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவல ர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பொன்மனை-ஈஞ்சங்கோடு செல்லும் சாலையில் சாலைகள் பராமரிக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநி திகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அந்த பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து திட்ட அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மற்றும் பொன்மனை பேரூராட்சி செயல் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன், உதவி கோட்ட பொறியாளர் தனேஷ் சேகர், உதவி இயக்குனர் விஜயா, பொன்மனை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி, ரெமோன், அரசு வழக்கறிஞர் ஜான்சன், பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திட்ட பணிகளுக்கான பூமி பூஜை பேரூராட்சி தலைவர் கே.எஸ். மணி தலைமையில் நடைபெற்றது.
    • ரூ.50 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ.70 லட்சத்தில் திட்ட பணிகளுக்கான பூமி பூஜை பேரூராட்சி தலைவர் கே.எஸ். மணி தலைமையில் நடைபெற்றது.

    5-வது வார்டில் ரூ.20 லட்சம் மதிப்பில் மூன்று வீதிகளில் தார் சாலை மற்றும் 6-வது வார்டில் ரூ.50 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

    இந்த நிகழ்சியில் துணைத்தலைவர் வினோத் (எ) தீர்த்தகிரி, சிவன், மாறன் உள்பட ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பொங்கலூர் ஒன்றிய பகுதியில் 10 இடங்களில் சாலை பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • க.செல்வராஜ் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

    பல்லடம்:

    பல்லடம் ஒன்றிய பகுதியில் முதலமைச்சரின் கிராமச் சாலைகள் விரிவாக்கத்திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி மதிப்பில் நடைபெறவுள்ள சாலை பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக .,செயலாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

    இதன்படி பல்லடம் ஒன்றியம் வேலம்பாளையம் ஊராட்சியில், வேலம்பாளையம் முதல் வலையபாளையம் வரை சாலை விரிவாக்க பணி, கரைப்புதூர் ஆதிதிராவிடர் காலனி முதல் அறிவொளி நகர் வரை சாலை பலப்படுத்துதல், மாணிக்காபுரம் முதல் அம்மாபாளையம் பிரிவு வரை சாலை விரிவாக்கம் செய்தல், செட்டிபாளையம் ரோடு மின் நகர் பகுதியில் சாலை பலப்படுத்தும் பணி, வடுகபாளையம் புதூர் பால் கூட்டுறவு சங்கத்திலிருந்து பொள்ளாச்சி ரோடு வரை சாலை பலப்படுத்தும் பணி, நாசுவம்பாளையம் முதல் பணிக்கம்பட்டி வரை சாலை பலப்படுத்தும் பணி, காமநாயக்கன்பாளையம் முதல் கிருஷ்ணாபுரம் வரை சாலை விரிவாக்கம் செய்தல் பணி, உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    இதே போல பொங்கலூர் ஒன்றிய பகுதியில் 10 இடங்களில் சாலை பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிகளில் திமுக., ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் குமார், துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், மாவட்டகவுன்சிலர் கரைபுதூர் ராஜேந்திரன், முன்னாள் நகராட்சி தலைவர் பி. ஏ.சேகர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் நடராஜ், நந்தினி சண்முகசுந்தரம், புனிதா சரவணன்,ரோஜாமணி, ஒன்றிய கவுன்சிலர்கள் லோகு பிரசாந்த், ஆர்.ஆர்.ரவி, பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக .,நிர்வாகிகள் சாமிநாதன், குமார் ,அன்பரசன், துரைமுருகன், ஆட்டோ குமார், ராஜேஸ்வரன், பாலகுமார், பல்லடம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் தங்கவேல், முத்துக்குமார், துரைசாமி, சின்னப்பன், ரமேஷ், கோவிந்தராஜ், பொங்கலூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் பொன்னுசாமி, கனகராஜ், சிவாச்சலம், மலைப்பாளையம் சண்முகம், கோபி என்ற கார்த்திகேயன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், திமுக., நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • படூர் வரை 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
    • தினமும் வாகன ஓட்டிகள் கேளம்பாக்கம் நகருக்குள் வந்து கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது.

    திருப்போரூர்:

    பழைய மாமல்லபுரம் சாலை திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், கிழக்கு கடற்கரை சாலைக்கு விரைவாக செல்லவும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கடந்த 2017 -ம் ஆண்டு சுமார் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆலத்தூர் ஊராட்சி வெங்கலேரி கிராமத்தில் இருந்து காலவாக்கம் தனியார் கல்லூரி வரை சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் மற்றும் தையூர் ஊராட்சி செங்கன் மால் பகுதியில் இருந்து படூர் வரை சுமார் 2½ கிலோ மீட்டர் தூரம் என மொத்தம் 7½ கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

    இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2020-ம் ஆண்டு இச்சாலை பணிகள் முடிக்கப்பட வேண்டும். இடையில் கொரோனா காலகட்டம், ஆட்சி மாற்றம் ஆகியவற்றால் இந்தப் புறவழிச் சாலை பணிகள் மந்தகதியில் நடைபெற்று வந்தன. வெங்கலேரி முதல் காலவாக்கம் தனியார் கல்லூரி வரை 90 சதவீத பணிகள் நிறை வடைந்துள்ளன. இப்பணிகள் நிறைவு பெறும் முன்னே இச்சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்போரூர் நகரத்துக்குள் வராமல் இந்த புறவழிச் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயண நேரம் குறைவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தையூர் செங்கண்மால் பகுதியில் இருந்து படூர் வரை இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைய உள்ள சாலையில் ஒரு மேம்பாலம் அமைகிறது.

    இதில் படூர் வரை 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. மீதமுள்ள பாதி பணிகள் நடைபெறவில்லை. இதனால் தினமும் வாகன ஓட்டிகள் கேளம்பாக்கம் நகருக்குள் வந்து கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்தால் இப்பகுதியில் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பணிக்கு குறித்த நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைவர்.

    மந்தகதியில் நடைபெறும் திருப்போரூர், கேளம்பாக்கம் புறவழிச்சாலை பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வினோத் சாலையில் ரெபிலெக்டர் பெயிண்ட் அடிக்கும் வேலைச் செய்து வருகிறார்.
    • 3 பேரையும் ஆபசமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் சிவபுராணி மேலத்தெருவைச்சேர்ந்தவர் வினோத்(வயது26). இவர், காரைக்கால் மானம்பாடியைச்சேர்ந்த ராஜேஷ்கண்ணா என்பவரிடம், சாலையில், ரெபிலெக்டர் பெயிண்ட் அடிக்கும் வேலைச் செய்து வருகிறார். காரைக்காலை அடுத்த நெடுங்காடு சாலையில், நண்பர்கள் தஞ்சவூரைச்சேர்ந்த எட்வின்ராஜ்(18), சஞ்சய்(18) ஆகிய 2 பேருடன் சேர்ந்து சாலையின் நடுவே பெயிண்டு அடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது, காரைக்கால் திருநள்ளாறைச்சேர்ந்த கார்த்தி((27), ராஜேஷ்(24) ஆகிய 2 பேர் மோட்டார் சைக்களில் சென்று, 3 பேரையும் ஆபசமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, வினோத், நெடுங்காடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் தேடிவருகின்றனர்.

    ×