search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் சாலை பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    குமரி மாவட்டத்தில் சாலை பணிகளை கலெக்டர் ஆய்வு

    • வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட குளச்சல், –திருவட்டார் சாலையில் ரூ.1.22 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி
    • விராலிகாட்டுவிளை, –வீட்டுக்குழியில் சாலை அமைக்கும் பணியும் ஆய்வு செய்யப்பட்டது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் இன்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பழு தடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் பணி, தார் சாலைகள் அமைக்கும் பணி, புதிய சாலைகள் அமைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட குளச்சல்,–திருவட்டார் சாலையில் ரூ.1.22 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியும், விராலிகாட்டுவிளை, – வீட்டுக்குழியில் சாலை அமைக்கும் பணியும் ஆய்வு செய்யப்பட்டது. இப்பணி யினை தரமானதாகவும், விரைவாகவும் முடித்து பொது மக்களின் பயன்பா ட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவல ர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பொன்மனை-ஈஞ்சங்கோடு செல்லும் சாலையில் சாலைகள் பராமரிக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநி திகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அந்த பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து திட்ட அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மற்றும் பொன்மனை பேரூராட்சி செயல் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன், உதவி கோட்ட பொறியாளர் தனேஷ் சேகர், உதவி இயக்குனர் விஜயா, பொன்மனை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி, ரெமோன், அரசு வழக்கறிஞர் ஜான்சன், பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×