என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தண்டராம்பட்டு வழியாக செல்லும் திருவண்ணாமலை- அரூர் 4 வழி சாலை பணிகள் தீவிரம்
- மரங்கள் வெட்டி அகற்றம்
- 1 கி.மீட்டருக்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை செலவிடப்படுகிறது
திருவண்ணாமலை:
தண்டராம்பட்டு வழியாக திருவண்ணா மலையிலிருந்து அரூர் வரை செல்லும் நான்கு வழி சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
திருவண்ணாமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
பவுர்ணமி நாட்களிலும் திருவிழா காலங்களிலும் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கார் வேன் பஸ்களில் திருவண்ணா மலைக்கு வருகின்றனர்.
அதுபோன்ற நாட்களில் போக்குவரத்து அதிகம் இருக்கும். தண்டராம்பட்டு, தானிப்பாடி போன்ற பெரிய கிராமங்கள் வழியாக ஊருக்குள் வருகிற போது போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
இதனை தவிர்க்க இந்த சாலையை பைபாஸ் சாலைகளுடன் கூடிய நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவண்ணா மலையில் இருந்து தண்ட ராம்பட்டு வழியாக அரூர் வரை நான்குவழிச்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டு வரை செல்லும் சாலையில் இருபுறமும் இருந்த புளிய மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு தரைப்பாலங்கள் அமைத்து நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆங்காங்கே ரோட்டின் குறுக்கே சாத்தனூர் அணையில் இருந்து வரும் குடிநீர் குழாய் இணைப்பு குழாய்கள் பழுது பார்க்கப்பட்டு தரைப்பாலங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளுக்காக ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது. இந்த சாலை விரிவாக்க பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்