search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜகீழ்பாக்கம் ஜங்சனில் இருந்து மாடம்பாக்கம் சாலை 14 மீட்டர் அகலப்படுத்தப்படுகிறது- ரூ.13 கோடியில் பணிகள் விரைவில் தொடக்கம்
    X

    ராஜகீழ்பாக்கம் ஜங்சனில் இருந்து மாடம்பாக்கம் சாலை 14 மீட்டர் அகலப்படுத்தப்படுகிறது- ரூ.13 கோடியில் பணிகள் விரைவில் தொடக்கம்

    • அதிகரித்து வரும் வாகனங்கள் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • மாடம்பாக்கம் செல்லும் சாலையை ரூ.13.5 கோடி மதிப்பில் விரிவுப்படுத்த நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு உள்ளது.

    தாம்பரம்:

    வேளச்சேரி-தாம்பரம் சாலையில் ராஜகீழ்பாக்கம் சந்திப்பில் இருந்து மாடம்பாக்கம் செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அதிகரித்து வரும் வாகனங்கள் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் ராஜகீழ்பாக்கம் சந்திப்பில் இருந்து மாடம்பாக்கம் செல்லும் சாலையை ரூ.13.5 கோடி மதிப்பில் விரிவுப்படுத்த நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்த சாலை தற்போது 7 மீட்டர் அகலத்தில் உள்ளது. இதனை 14 மீட்டருக்கு அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் வடிகால்வாயும் அமைக்கப்படுகிறது.

    இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ராஜ கீழ்ப்பாக்கம், மாடம் பாக்கம், கிழக்கு தாம்பரம் வழியாக ஜி.எஸ்.டி. ரோடு இணைக்கப்படும். மாடம்பாக்கம் சாலையை அகலப்படுத்தினால் வாகன ஓட்டிகள் ஜி.எஸ்.டி. சாலையை பயன்படுத்தி நெரிசல் இல்லாமல் தென் சென்னை பகுதிகளுக்கு செல்ல முடியும் என்றார்.

    Next Story
    ×