search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட்டவிளையில் ரூ.25 லட்சத்தில் சாலை பணி
    X

    மேயர் மகேஷ் சாலை பணியை தொடங்கி வைத்த காட்சி.

    வட்டவிளையில் ரூ.25 லட்சத்தில் சாலை பணி

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • இடலாக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்க தயார் செய்து வைக்கப்பட்டிருந்த காலை உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி 39-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மேயர் மகேஷ் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அந்த பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் கழிவு நீர் ஓடைகளை ஆய்வு செய்த மேயர் மகேஷ் இடலாக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்க தயார் செய்து வைக்கப்பட்டிருந்த காலை உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

    இதைத் தொடர்ந்து 39-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொள்ள சுகாதார பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 41- வது வார்டுக்கு உட்பட்ட வட்டவிளை பகுதியில்ரூ. 25 லட்சம் செலவில் சாலை பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆணையர் ஆனந்த மோகன் என்ஜினியர் பாலசுப்பிரமணியன் மண்டல தலைவர் அகஸ்டி னா கோகிலாவாணி, மாநக ராட்சி கவுன்சிலர் அனிலா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், அதிமுக தொழிற்சங்க செயலாளர் சுகுமாறன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×