search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன ஓட்டி"

    • திருக்கழுக்குன்றம்-மாமல்லபுரம் சாலையில் பல இடங்களில் மணல்கள் கொட்டி புழுதி பறக்கிறது.
    • மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற உள்ளது. இதற்காக மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரி, குழிப்பாந்தண்டலம், எச்சூர் பகுதி ஏரிகளில், பொதுப்பணித் துறையினர் சவுடு மண் எடுத்து வருகின்றனர்.

    மணல் ஏற்றிச்செல்லும் லாரிகள் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமலம் பகல் நேரத்தில் மணல் மீது தார்ப்பாய் போடாமல் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் லாரிகள் அதிவேகமாக செல்வதால் அதில் இருந்த மணல் சாலையில் விழுந்து புழுதியாக மாறிவருகிறது.

    இதனால் திருக்கழுக்குன்றம்-மாமல்லபுரம் சாலையில் பல இடங்களில் மணல்கள் கொட்டி புழுதி பறக்கிறது. முக்கியமாக வசந்தபுரி, அம்பாள் நகர் சாலையில் மணல் குவியல் ஏற்பட்டு, தற்போது பெய்த மழையால் சகதியாக மாறி தார்சாலை இல்லாத அளவுக்கு மறைந்துவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    மழை பெய்யும் போது அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த மணல் சாலையில் செல்லும்போது வழுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சாலையானது கடந்த 8 ஆண்டுக்கு முன்பு போடப்பட்டதாக தெரிகிறது.
    • மக்களால் பிராதானமாக பயன்படுத்தும் இந்த சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 55-வது வார்டு, தாம்பரம்-சோமங்கலம் சாலையில் சமத்துவ பெரியார் நகர் உள்ளது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

    இப்பகுதி அடையாறு மற்றும் பாப்பன்கால்வாய் இணையும் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள ராகவேந்திரா பிரதான சாலை சுமார் 740 மீட்டர் தூரத்துக்கு படு மோசமடைந்து மண்பாதையாக காட்சி அளிக்கிறது. தார்சாலை அமைக்கப்பட்ட தற்கான எந்த சுவடுகளும் அங்கு இல்லை. அப்பகுதி மக்களால் பிராதானமாக பயன்படுத்தும் இந்த சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் சாலையே தெரியாத அளவுக்கு சேறும் சகதியுமாக மாறி காட்சி அளிக்கிறது. இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சாலை கடந்த 8 ஆண்டுக்கு முன்பு போடப்பட்டதாக தெரிகிறது. இதன்பின்னர் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    சேதம் அடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வராததால் பொதுமக்களே ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் தற்காலிகமாக கற்களை கொண்டு சமன் செய்து வருகிறார்கள்.

    மேலும்பருவ மழை காலத்தில் தாழ்வான இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்படும். அந்த நேரத்தில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் இந்த பகுதிக்கு வந்து அடையாறு ஆற்றங்கரைமற்றும் பாப்பன்கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்வது வழக்கம். ஆனாலும் இங்கு சாலை அமைக்க இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சமத்துவ பெரியார் நகர் பகுதி மக்கள் கூறியதாவது:-

    இந்த பெரியார் நகர் பகுதி , அரசு பல இடங்களில் நிலம் கையகப்படுத்தும் போது பொது மக்களுக்கு வழங்கப்பட்ட இடமாகும்.. கடந்த 2009-ம் ஆண்டு இந்தசாலை அப்போதைய பெருங்களத்தூர் பேரூராட்சியிடம் ஒப்ப டைக்கப்பட்டது. அப்போது 2015-ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் நிதியில் 740 மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலை அமைத்து கொடுத்தனர். இதன் பின்னர் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைந்தது. எனினும் இதுவரை இந்த சாலை சீரமைக்கப்படாமல் மண்பாதையாக மாறி காட்சி அளிக்கிறது. 8 ஆண்டாக மிகவும் மோசமான நிலையில் காணப்படும் இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி பலமுறை தாம்பரம் மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சமீபத்தில் பெய்த மழை காரணமாக சாலை மேலும் சேதம் அடைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அடையாறு ஆற்றங்கரையில் உள்ள இப்பகுதியை பலமுறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    தற்போது சிறு மழைக்கே சாலை சேறும் சகதியுமாக மாறி பொது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. பருவ மழைக்கு முன்பு சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பனியன் நிறுவனங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதி.
    • நான்கு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    வீரபாண்டி :

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் டி.கே.டி. மில் பஸ் ஸ்டாப்பில் நால்ரோடு சந்திப்பு உள்ளது. பனியன் நிறுவனங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் நால்ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் நிறைந்து எந்நேரமும் பரபரப்பாக காணப்படும்.

    இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:- நால்ரோட்டில் எப்பொழுதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று காலை முதல் மதியம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எரிவாயு குழாய் பதிக்க நால்ரோட்டில் மீண்டும் குழி தோண்டி உள்ளார்கள். இரவில் பணி செய்ய வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்த நிலையில் நேற்று பகலிலே எரிவாயு குழாய் பதிக்க குழி தோண்டியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நான்கு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.மேலும் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கி கொண்டது. எரிவாயு குழாய் பதிக்க பகலிலே தோண்டியதாலும் புதிதாக சிக்னல் அமைக்கப்பட்டு 6மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் செயல்படுவதில்லை.

    ஏற்கனவே நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் இவை மேலும் கூடுதல் நெரிசலை ஏற்படுத்துகிறது. நான்கு பக்கமும் இருந்து வாகனங்கள் தாறுமாறாக வருவதால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து போலீஸ் ஆகவே மாறிவிட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக போக்குவரத்து போலீசாரை நியமிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை இரவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையின் குறுக்கே கழிவு நீர்கால்வாய்க்காக கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்தது.
    • பாலத்தை புதுப்பித்து தருமாறு கோ ரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    உடுமலை :

    உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகே பொள்ளாச்சி - பழனி- உடுமலை- பொள்ளாச்சி நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது.இந்த சாலையின் குறுக்கே கழிவு நீர்கால்வாய்க்காக கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்ததுடன் கழிவுநீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தரைமட்ட பாலத்தை புதுப்பித்து தருமாறு கோ ரிக்கை விடுக்கப்பட்டி ருந்தது. அதன் பேரில் பணி தொடங்க ப்பட்டது. ஆனால் அதன் பின்பு பணி தொ டர்ந்து நடைபெ றவில்லை. இதனால் கால்வாயை இணைக்கும் வகையில் சிலாப்கற்கள் வைத்து தற்காலிக பாதை அமைக்க ப்பட்டு உள்ளது. அதில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்துடன் சென்ற வாகன ஓட்டி ஒருவர் தவறி உள்ளே கால்வாயில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அவரை மீட்டனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-

    நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு செல்வதற்கு இந்த சாலை பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது. இதில் கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்த தையொட்டி புதுப்பிக்கும் பணி கடந்த 8 மாதத்துக்கு முன்பு தொடங்க ப்பட்டது.அதன் பின்பு இன்று வரையிலும் பணிகள் நடைபெறவில்லை.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கால்வாயின் மீது தற்காலிகமாக சிமெண்ட் ஸ்லாப்புகள்மூலம் அமைக்கப்பட்ட பாதை வழியாக சென்று மறுப குதியை அடைந்து வருகி ன்றனர்.இதனால் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வந்தது.அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை கால்வாயை கடக்க முற்பட்ட வாகன ஓட்டி நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் எதிர்பாராத விதமாக கால்வாயில் விழுந்தார்.அவரது அலறல் சத்தம் கேட்டுஅங்கிருந்த பொதுமக்கள் அவரை பத்திரமாக மீட்டனர். பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தரப்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. தக்க தருணத்தில் பாலம் பராமரிப்பு பணி மேற்கொ ள்ளப்பட்டு இருந்தால் இதுபோன்ற சம்பவம் நடைபெற்று இருக்காது. கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதி கரித்து பொதுமக்களுக்கு உடல் நல குறைபாடுகளை ஏற்படுத்தி வருகிறது.எனவே தரைமட்ட பாலம் கட்டுமான பணியை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
    • ஒளிரும் ஒளிபட்டைகளை வைக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் திருப்பூர் மெயின் ரோட்டில் தனியார் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எரிவாயு குழாய் அமைக்கும் பணிகளை ரோட்டின் ஓரத்தில் அமைக்காமல், ரோட்டின் நடுவில் தோண்டி பதிப்பதால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடும் அவதி ஏற்பட்டது. இதற்கிடையே, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் அண்ணாதுரை பல்லடம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதைத்தொடர்ந்து கோட்டப் பொறியாளர் தனலட்சுமி, உதவி பொறியாளர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ரோடு ஓரமாக குழாய் பதிக்க வேண்டும். வாகன ஒட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது.

    எரிவாயு குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளும்போது, இரவில் விபத்துக்கள் நிகழாமல் இருக்க ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் ஒளிரும் ஒளிபட்டைகளை வைக்க வேண்டும். குழாய் பதித்த பின்னர் குழிகளை நன்றாக மண் போட்டு மூட வேண்டும். ரோட்டில் மண் தேங்க கூடாது.இவ்வாறு அவர்கள் அறிவுறுத்தினர்.  

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
    • ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 5 இடங்களில் நெடுஞ்சாலைரோந்து படை போலீசார் கண்காணிப்பு பணி

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். காலை, மாலை நேரங்களில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டு உள்ளது .

    குட்கா, கஞ்சா விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலை ரோந்து படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 5 இடங்களில் நெடுஞ்சாலைரோந்து படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிமுறைகளை மீறு வோருக்கு அபராதம் விதிக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் வாகன ஓட்டிகளிடம் பணம் பெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து அவரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்கியதாக சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள்,கடைகள் ,குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் அதிகமாக இருக்கின்றன.
    • வீரபாண்டி பிரிவு முதல் டி.கே.டி.மில் வரை அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன.

    வீரபாண்டி :

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள்,கடைகள் ,குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் அதிகமாக இருக்கின்றன. கோவை மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதாலும் சரக்கு போக்குவரத்து பிரதானமாக இருப்பதாலும் இந்த சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி பிரிவு முதல் டி.கே.டி.மில் வரை அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன. மேலும் பல்லடம் சாலை வழியாக தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

    இது குறித்து வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கூறியதாவது :- வீரபாண்டி பிரிவு ,நொச்சிப்பாளையம் பிரிவு,டி.கே.டி.மில் பிரிவு என முக்கிய சாலைகள் செல்லும் சந்திப்புகள் இந்த சாலையில் உள்ளது. மேற்கூறிய இடங்களில் அதிகப்படியான வாகன போக்குவரத்து இருப்பதாலும் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளன.

    குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டுக்கடங்காத வாகன நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன. நொச்சிப்பாளையம் பிரிவு மற்றும் டி.கே.டி.மில் பிரிவு இந்த இரண்டு நால்ரோடுகளிலும் பெரும்பாலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இருப்பதில்லை. இதனால் இந்த இரண்டு பகுதிகளிலும் நான்கு பக்கங்களிலிருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. நெரிசலில் சிக்கிய வாகனங்கள் தினந்தோறும் ஊர்ந்து செல்வதால் கடும் மன உளைச்சல் ஏற்படுகின்றன. மேலும் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தினந்தோறும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவியாய் தவிக்கின்றன. மேற்கூறியுள்ள இரண்டு பகுதிகளிலும் உடனடியாக போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    • திருவிழா சமயங்களில் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது.
    • தானியங்கி சிக்னலை பழுதுநீக்கி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி நகரம் சேலம் கொச்சின் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மெயின்ரோட்டில் வரலாற்று சிறப்புமிக்க அவினாசிலிங்கேசுவரர் கோவில் அதையொட்டி நான்கு ரத வீதிகளில் 10 திருமண மண்டபங்கள், போலீஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் , சார்பதிவாளர் அலுவலகம், தபால் அலுவலகம் ,ஜவுளி, நகை கடைகள், அரசு ஆரம்ப பள்ளி, மேல்நிலைப் பள்ளி, ஓட்டல்கள், பூக்கடைகள், பழக்கடைகள், ஸ்டேசனரி உள்ளிட்ட ஏராளமான வணிக நிறுவனங்கள் அடுத்தடுத்து உள்ளது. அவினாசி நகரில் இருந்து ஈரோடு சேலம், சென்னை, பெங்களூரு, கோவை மேட்டுப்பாளையம், கூடலூர், ஊட்டி,குன்னூர் கோத்தகிரி, சத்தியமங்கலம், புளியம்படி, கோபி, மை சூரு உள்ளிட்ட பல நகரங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் தினசரி டிராவல்ஸ், லாரி,கார், தனியார் மற்றும் அரசு பேருந்து உள்ளிட்ட ஆயிரகணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

    மேலும் அவினாசிக்கு மிக அருகில் பனியன் நகரமான திருப்பூர் மற்றும் நியூ திருப்பூர் உள்ளது. இங்குள்ள பனியன் கம்பெனி மற்றும் பனியன் சார்ந்த தொழில்கூடங்களுக்கு தனியார் கம்பெனி பஸ்கள், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் என அனைத்தும் அவினாசி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நால்ரோடு வழியாகத்தான் கடந்தாகவேண்டும். முகூர்த்த நாட்கள்,திருவிழா சமயங்களில் வழக்கத்தை காட்டிலும் கூடுதல் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதேபோல் ஆட்டையாம்பாளையம் நால்ரோடு சந்திப்பிலும் எப்போதும்போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    கோவை,மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களிலிருந்து அவினாசி நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் அசுரவேகத்தில் வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் , நடந்து செல்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலை உள்ளது. அவினாசி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நால்ரோடு சந்திப்பு, ஆட்டையாம்பாளையம் நால்ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில்தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டு அது செயல்பட்டு வந்தது. ஆனால் அவைகள் இரண்டும் பழுதடைந்து பல வருடங்களாக கவனிப்பாரற்று கிடக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகளும் தாறுமாறாக செல்கின்றனர். இதனால் விபத்துகள் நேரிடுகிறது .எனவே போக்குவரத்தை சீர்படுத்த இரண்டு இடங்களிலும் உள்ள தானியங்கி சிக்னலை பழுதுநீக்கி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று வாகன ஒட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ,

    • சுப முகூர்த்த நாளில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி.
    • தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.

    பல்லடம் :

    பல்லடம், சுப முகூர்த்த நாளில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி. பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி .தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.

    திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இந்த நிலையில் நேற்று சுப முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை,வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது.இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன.போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்லடம் திக்குமுக்காடிப் போனது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது நகரின் போக்குவரத்து நெரிசலை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை ஏற்கனவே திட்டமிடப்பட்ட புறவழிச்சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் உள்ளது போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் ஏற்கனவே திட்டம் தயாரிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ள பல்லடம் நகரின் புறவழிச்சாலை திட்டத்தை தமிழக அரசும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் விரைவாக நடவடிக்கை எடுத்து பல்லடம் நகரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சரக்கு மற்றும் டீசல் வாகனங்கள் தொடர்ந்து அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது.
    • தேதி காலாவதியாகி இருக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூர் :

    நாம் பயன்படுத்தும் சொந்த வாகனம் அல்லது பொதுத்துறை மற்றும் பயணிகள் வாகனம் என்று எதுவாக இருந்தாலும், அந்த வாகனத்துக்குபுகைச்சான்று மற்றும் இன்சூரன்ஸ் வைத்திருப்பது அவசியம்.புதுடெல்லியில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு, ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருகிறது. அதனால் அங்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு புகைச்சான்று அவசியம். புகைச்சான்று இல்லாத வாகனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.

    புகைச்சான்று இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் வழங்கப்படுவதில்லை. சரக்கு மற்றும் டீசல் வாகனங்கள் தொடர்ந்து அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது.பிற மாநிலங்களிலும், இது போன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வாகனத்திலும் புகைச்சான்றும், இன்சூரன்சும் அவசியம் வைத்திருக்க வேண்டும். தேதி காலாவதியாகி இருக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவு, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும், போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    புகைச்சான்றும், இன்சூரன்சும் காலாவதியாகி இருந்து, அப்போது வாகனம் விபத்துக்குள்ளாகி இருந்தால் அந்த வாகனத்தை இயக்கியவர், உடன் பயணித்தவர் ஆகிய இரு தரப்பினருக்கும் இன்சூரன்ஸ் பணப்பலன்கள் போய் சேராது. அதை கேட்டும் பெற முடியாது. அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்கின்றனர் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள்.

    இதுகுறித்து திருப்பூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், இந்திய தரைவழிப்போக்குவரத்து அமைச்சகத்தின், இப்புதிய உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் விபத்து நேரிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித பணப்பலன்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை.இதுதொடர்பான வழக்கையும் தொடர முடியாது. அதனால், வாகன உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் இன்சூரன்ஸ் மற்றும் புகைச்சான்றை சோதித்து பெற்று வைத்திருப்பது அவசியம் என்றனர். இந்த உத்தரவு திருப்பூர் உள்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • பழைய பேருந்து நிலையம், ஊத்துக்குளி செல்வதற்கு இந்த வழியை பயன்படுத்துகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி சாலை ஒற்றக்கண் பாலம் அருகில் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    அதிக அளவிலான இருசக்கர வாகனங்கள் கொங்கு மெயின் ரோட்டில் இருந்து பழைய பேருந்து நிலையம், ஊத்துக்குளி செல்வதற்கு இந்த வழியை பயன்படுத்துகின்றனர். சாக்கடை கழிவு நீர் சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர் . நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடிநீர் குழாய் பதிப்பிற்காக சாலைகள் தோண்டப்பட்டது.
    • வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டது. பல இடங்களில் பணிகள் முடிவடைந்தும் சாலைகள் போடப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் திருப்பூர் தாராபுரம் சாலை புதூர் பிரிவு அருகில் குடிநீர் குழாய் பதிப்பிற்காக சாலைகள் தோண்டப்பட்டது. ஆனால் பல மாதங்களாக சாலை போடப்படாததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது. விரைவில் அந்த பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×