search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலைப்பணி"

    • வாகன ஓட்டிகள்-பொதுமக்கள் கடும் அவதி
    • நகராட்சி நிர்வாகம் வேண்டுமென்றே இந்த சாலையை கிடப்பில் போட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டில் குழித்துறையில் இருந்து பாலவிளை, ஈத்தவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் அருகில் அரசு மேல்நிலைபள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது.

    பாலவிளை, ஈத்தவிளை பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் இந்த சாலை வழியாக தான் அலுவலகங்களுக்கும் பள்ளிக்கும் செல்வார்கள். இந்த சாலை பல வருடங்களாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகனங்களோ, பொது மக்களோ செல்ல முடியாமல் மிகவும் அவதிபட்டனர்.

    மேலும் இந்த சாலை வழியாக செல்லும் சில வாகனங்கள் விபத்துக்கு ள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து படுகாயம டைந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் பல முறை கோரிக்கை வைத்தும் இந்த சாலை சீரமைக்கபடாமல் கிடந்தது.

    மேலும் சில மாதங்களுக்கு முன் வக்கீல் ஒருவர் இந்த சாலையை சீரமைக்க வேண்டும், இல்லை என்றால் தான் தீக்குளிக்க போவதாக மண்எண்ணை பாட்டிலுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

    இருப்பினும் அந்த சாலை சீரமைக்க படாத நிலையே கிடந்துள்ளது. சாலை சீரமைக்கபடாவிட்டால் போராட்டம் நடத்த போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து குழித்துறை நகராட்சி நிர்வாகம் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சாலை சீரமைக்கும் பணியை தொடங்கியது. அந்த வழியாக வாகனங்களோ பொது மக்களோ செல்ல முடியாதவாறு சாலையின் முன் பகுதியை அடைத்துள்ளனர்.

    மேலும் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ங்களும் பொதுமக்களும் 2 கிலோமீட்டர் சுற்றி மாற்று பாதை வழியாக சென்று வந்தனர். மேலும் குழித்துறை நகராட்சி நிர்வாகமும் அந்த வார்டு கவுன்சிலரும் சேர்ந்து இந்த சாலை பணியில் பல முறைகேடுகள் செய்ததாக ஊர் மக்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த சூழலில் அந்த சாலை பணி கிடப்பில் போடப்பட்டு மெதுவாக செய்யப்பட்டு வருகிறது. பாலவிளை ஈத்தவிளை சாலை ½ கிலோமீட்டர் தான் உள்ளது. இந்த தூரத்தில் உள்ள சாலை பணியை செய்ய 5 நாட்களே போதுமானது. ஆனால் நகராட்சி நிர்வாகம் வேண்டுமென்றே இந்த சாலையை கிடப்பில் போட்டுள்ளனர்.

    மேலம் 2 மாதங்களாக மாற்று பாதை வழியாக செல்வதால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளா கியுள் னர். மேலும் நகராட்சி நிர்வாகம் கடந்த 2 வாரங்களுக்கு முன் பால விளை ஈத்த விளை சாலையில் அலங்கார கற்கள் பதித்தது. அதன்பிறகு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களோ பொதுமக்களோ செல்லாதவாறு சாலையின் முன் பகுதியில் பள்ளம் தோண்டி அப்படியே கிடப்பில் போடப் பட்டுள்ளது. ஆகவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைபணியை தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும் என்று பொது மக்களும் மாணவ மாணவிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்தி ரன் மற்றும் அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் நெடுஞ் சாலைத்துறை யின் மூலம் புதிய சாலைகள் மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    போகலூர் ஊராட்சி ஒன்றியம், எட்டிவயல் முதல் இதம்பாடல் வரை நெடுஞ் சாலைத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் இடை வெளி தடத்திலிருந்து இருவழிச்சாலை அகலப் படுத்தும் பணி நடை பெறுவதை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வை யிட்டார். அப்போது பணிகளை காலதாமதமின்றி முடித்திட அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 2022-23-ம் ஆண்டிற்கு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 28பணிகள் தேர்வு செய்யப்பட்டு 60.300 கிலோ மீட்டர் தூரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இதன் மூலம் இருவழிச் சாலைகளாக அகலப் படுத்தும் பணி மற்றும் புதிய பாலங்கள் அமைக்கும் பணி, விபத்துக்கள் நடை பெறும் பகுதியை கண்ட றிந்து சாலைகளை ேமம்படுத்தும் பணி போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 19 பணிகள் 49.470 கி.மீ. தூரம் சாலைகள் அமைக்கும் பணி முடிக்கப் பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட சாலை பணிகளை சீரமைப்பதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பயனுள்ளதாக இருப்பதுடன் அதிகமாக விபத்துக்கள் நடை பெறக் கூடிய பகுதிகளை கண்ட றிந்து தொழில்நுட்ப முறையுடன் வடிவமைக்கப் பட்டவுடன் விபத்துகள் தவிர்க்கப்படுகிறது. இதுவும் வாகன ஓட்டி களுக்கு பாது காப்பாக இருக்கும்.

    இதே போல் நடப்பாண்டிற்கு பொது மக்களின் தேவையை அறிந்து கூடுதலாக சாலை அமைத்தல், சாலைகளை விரிவுபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்தி ரன் மற்றும் அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.

    • புதுராம கிருஷ்ணாபுரத்தில் சாலை அமைப்பதற்காக கடந்த மாதம் பணிகள் தொடங்கப்பட்டது
    • கடந்த 2 வாரத்திற்கு மேலாக ஜல்லிகற்கள் மட்டும் போடப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட புதுராம கிருஷ்ணாபுரத்தில் சாலை அமைப்பதற்காக கடந்த மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த 2 வாரத்திற்கு மேலாக ஜல்லிகற்கள் மட்டும் போடப்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. மேலும் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் நேரத்தில் மிகுந்த அவதிக்கு உள்ளாவதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். எனவே விரைவில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் காங்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
    • 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை பணி முழுமையாக முடியாமல் பாதியிலேயே பணிகள் நிற்கின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையம் ,பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காங்கிரீட் சாலை போடப்பட்டு உள்ளது.

    ஆனால் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை பணி முழுமையாக முடியாமல் பாதியிலேயே பணிகள் நிற்கின்றன. எப்போதும் போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில் சாலை பணி முழுமையாக முடியாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

    அதேபோல் இந்த சாலையில் தனியார் பள்ளிகள் ,பல்வேறு பனியன் நிறுவனங்களும் உள்ளதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.காங்கிரீட் சாலையின் இரு புறங்களிலும் குழிகள் மூடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கி வருகின்றனர். அதேபோல் கான்கிரீட் போட்ட ஒரு சில இடங்களில் ரோடுகள் பெயர்ந்து பல்லாங்குழியாக கிடப்பதால் தரமற்ற முறையில் ரோடு போடப்பட்டுள்ளதா? என சந்தேகமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

    தெருக்களில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் முறையாக பாதாள சாக்கடைக்கு சென்று சேரும் வகையில் வழிகள் இல்லாமல் அவசர கதியில் ஏனோ தானோ என்று ரோடு போடப்பட்டுள்ளதால் சாக்கடை நீர் சரிவர செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. எனவே மாநகராட்சி மேயர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இந்த சாலையை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து ரோடு பணியை முழுமையாக முடித்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • சுப்பையார் குளத்தை தூர் வாரி, அழகுபடுத்தும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1 கோடி செலவில் கிருஷ்ணன்கோவிலில் இருந்து செல்லும் சி.பி.எச். குறுக்கு சாலை, சிவன்கோவில் தெரு உள்ளிட்ட சாலைகள் சீரமைத்தல் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இந்தப் பணியை மாநகராட்சி மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்ரமணியன் மண்டல தலைவர்கள் ஜவஹர்,அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர்கள் வளர்மதி, கலாராணி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    மேலும் நாகர்கோவில் மாநகராட்சியில் தமிழ்நாடு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 47 லட்சம் செலவில் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள சுப்பையார் குளத்தை தூர் வாரி, அழகுபடுத்தும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    • போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • அனுப்பா்பாளையம் முதல் சோளிபாளையம் வரையிலான சாலையைசீரமைக்க வலியுறுத்தி ஜூலை 20ந் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    அனுப்பா்பாளையம் - சோளிபாளையம் சாலைப் பணி தொடங்கப்படவுள்ளதால் நாளை நடைபெறுவதாக இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

    இது குறித்து 15.வேலம்பாளையம் நகரச்செயலாளா் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலம்பாளையம் நகரப்பகுதியில் அனுப்பா்பாளையம் முதல் சோளிபாளையம் வரையிலும், வேலம்பாளையம் முதல் தண்ணீா்ப்பந்தல் வரையிலும் இதர வாா்டுகளில்உள்ள பல சாலைகள் முழுவதும் தோண்டப்பட்டு, பல மாதங்களாக குண்டும்குழியுமாகக் கிடக்கின்றன.இதனால், அப்பகுதியில் தொடா்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும், அனுப்பா்பாளையம் முதல் சோளிபாளையம் வரையிலான சாலையைசீரமைக்க வலியுறுத்தி ஜூலை 20ந் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் ரூ.87 லட்சத்தில் பணிகள் தொடங்கப்படவுள்ளது என்று மேயா் தினேஷ்குமாா் உறுதியளித்துள்ளாா்.இதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாலை அகலப்படுத்தும் பணிக்காக சாலையின் இருபுறமும் குழி தோண்டி 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.
    • பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.

    வீரபாண்டி :

    திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இதில் வித்தியாலையம் பேருந்து நிறுத்தத்தின் இருபுறத்திலிருந்து சாலை அகலப்படுத்தும் பணிக்காக சாலையின் இருபுறமும் குழி தோண்டி 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. தோண்டிய பின்பு எந்த பணியும் நடைபெறவில்லை. சாலையின் இருபுறமும் குடிநீர் குழாயும் கேபிள் வயர்களும் செல்லுகின்றன.

    சாலையை அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ளும் முன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் குடிநீர் வாரிய அதிகாரிகளிடமும் . மாநகராட்சி அதிகாரிகளிடமும் எந்த தகவலும் தெரிவிக்காமல் விரிவாக்கம் பணிக்காக குழி தோண்டிவிடுகிறார்கள். இதனால் குடிநீர் குழாய் உடைந்துவிடுகிறது. கேபிள் வயர்களும் துண்டிக்கப்படுகின்றன. பொதுமக்கள் புகார் செய்த பின்பு வரும் அதிகாரிகள் குடிநீர் குழாயை சரிசெய்ய ஒரு குறிப்பிட்ட நாட்களும் ,அதன் பின்பு கேபிள் வயர்களை சரிசெய்ய ஒரு குறிப்பிட்ட நாட்களும் எடுத்துக்கொள்கின்றார்கள். இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். மேலும் இருபுறமும் பள்ளி கூடம் இருக்கிறது. பேருந்துக்கு செல்லும் குழந்தைகள் குழியில் விழுந்து விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.

    மேலும் இரவு நேரத்தில் வாகன ஒட்டிகளும் இந்த குழியில் விழுந்து விபத்து ஏற்படுகின்றன. . இது போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது அது சம்பந்தமான துறை அதிகாரிகளிடம் தெரிவித்து பணியை தொடங்க செய்யவேண்டும்.ஆனால் நெடுஞ்சாலை துறை அப்படி செய்வதில்லை. மேலும் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் பணிகளை மேற்கொள்ளும் போது விரைந்து முடிக்க வேண்டும்.இதனை வலியுறுத்தி வித்தியாலையம் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முடிவு செய்துள்ளார்கள். எனவே மாவட்ட கலெக்டர் இதில் உடனடியாக தலையீட்டு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் வியாபாரிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×