search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.3.29 கோடியில் நடக்கும் சாலை பணியை அமைச்சர் ஆய்வு
    X

    திருவெண்காட்டில் சாலை பணியை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.

    ரூ.3.29 கோடியில் நடக்கும் சாலை பணியை அமைச்சர் ஆய்வு

    • தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தோஷ நிவர்த்தி பூஜைக்காக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
    • திருவெண்காடு ஊராட்சியில் தேரோடும் வீதி, மடவிளாக வீதி, உள்ளிட்ட பகுதியில் ரூ.3 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறுவதை, அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற நவக்கிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமான சுவேதாரண்யேஸ்வர ஸ்வாமி கோயில் உள்ளது. இப்பகுதிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தோஷ நிவர்த்தி பூஜைக்காக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி கோயிலில் நான்கு வீதிகளில் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசு தேரோடும் நான்கு வீதிகளில் பேவர் பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் திருவெண்காடு ஊராட்சியில் தேரோடும் வீதி, மடவிளாக வீதி, உள்ளிட்ட பகுதியில் ரூ.3 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறுவதை, அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

    சாலையின் தரத்தினை சோதித்து ஆய்வு செய்தார்.பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரியிடம் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்ஷினி, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, ராமலிங்கம் எம்.பி, எம்.எல்.ஏக்கள் நிவேதா.முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, திருவெண்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், செல்ல சேது ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில், ஒப்பந்ததாரர்கள் பழனி, அகோரம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×