search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "price rise"

    • கட்டிட பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான பணிகள் கடும் பாதிக்கப்பட்டது.
    • விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் பல இடங்களில் கட்டப்பட்டு வந்த கட்டிடங்கள் முடிவு பெறாத நிலையில் உள்ளன.

    இந்நிலையில் தற்போது பிளம்பிங் தொழிலுக்கு தேவையான குழாய்கள், பைப்புகள், மின்சாதன பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளன. கடந்த 2 மாதத்தில் 35 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளன. கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பல இடங்களில் வீட்டின் உரிமையாளர்கள் பணிகளை நிறைவு செய்ய முடியாமல் பரிதவிப்பில் உள்ளனர்.

    கடந்த 2 மாதமாக விலையேற்றம் தொடர்ந்து வருவதால் புதிய வீடு கட்ட திட்டமிட்டவர்களும் பணியினை தொடங்குவதற்கு தயங்கி வருகின்றனர். குறிப்பாக மின்சாதன பொருட்களான வயர் காயல், வயரிங் பைப்புகள் விலை அதிகரித்துள்ளது.

    கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பொறியாளர்கள், பிளம்பர்கள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வால் வீடு கட்டுவது பலருக்கு கனவாகவே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமான தொழிலை சார்ந்துள்ள தொழிலாளர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரிஷியன் ஆகியோர் வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர். கட்டிட பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தக்காளி விலை உயர்வு வரும் நாட்களிலும் நீடிக்கும் என்று தெரிகிறது.
    • மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தக்காளி விலை குறைவு தான்.

    போரூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இன்று கிலோ ரூ.120-க்கு தக்காளி விற்கப்பட்டது. தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் தக்காளி விலையால் பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை தக்காளி வரத்து இன்னும் சீராக வில்லை. இதனால் தக்காளி விலை உயர்வு வரும் நாட்களிலும் நீடிக்கும் என்று தெரிகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட் மற்றும் சில்லறை கடைகளில் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளி விலையை தொடர்ந்து தற்போது காய்கறி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது. காய்கறிகள் விலை கிலோ ரூ.50-க்கும் கீழ் இருந்த நிலையில் அனைத்து காய்கறிகளின் விலையும் தற்போது எகிறியுள்ளது.

    கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று 400 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தன. மொத்த மர்க்கெட்டில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ120-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.70-க்கும், ஊட்டி கேரட் ரூ.70-க்கும், சின்ன வெங்காயம் ரூ.120-க்கும் விற்பனை ஆனது.

    பச்சை மிளகாய் ரூ.110-க்கும், உஜாலா கத்தரிக்காய்-ரூ.60-க்கும், முருங்கைக்காய் ரூ.60,வெண்டைக்காய் -ரூ.40, இஞ்சி ஒரு கிலோ ரூ.210-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் காய்கறிகள் விலை தாறுமாறாக அதிகரித்து பீன்ஸ் ஒரு கிலோ ரூ.140வரையிலும், இஞ்சி ஒரு கிலோ ரூ.250-க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.150வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் பெங்களூர் தக்காளி விலையும் உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    தக்காளி விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.7-க்கு விற்கப்பட்டது. ஆனால் அதையும் வாங்கி செல்ல ஆள் இல்லாமல் பல இடங்களில் விவசாயிகள் தக்காளியை குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டது.

    தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் தமிழகத்தில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தியை விவசாயிகள் பலர் நிறுத்தி விட்டனர். ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தற்போது பெய்த மழையால் அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் கடுமையாக சேதமடைந்து வீணாகிவிட்டது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தக்காளி விலை குறைவு தான்.

    இன்று கோயம்பேடு சந்தையில் ஒரு பெட்டி தக்காளி ரூ1200-க்கு விற்கப்படுகிறது. அதே சமயம் தக்காளி உற்பத்தி நடந்து வரும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநி லத்தில் ஒரு பெட்டி தக்காளி (14கிலோ) ரூ1600-க்கு விற்கப்படுகிறது. எனவே இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தக்காளியை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
    • பொது மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட்களில் தக்காளி குறிப்பிடத்தக்கது.

    கோவை:

    கோவையில் டி.கே.மார்க்கெட், அண்ணா மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறிசந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகிறது.

    வியாபாரிகள் தினமும் கோவை வந்திருந்து, மேற்கண்ட சந்தைகளில் காய்கறிகளை வாங்கி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோவை டி.கே.மார்க்கெட் மற்றும் அண்ணா மார்க்கெட் ஆகிய பகுதிகளுக்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து மிகவும் குறைவாக உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்த வண்ணம் உள்ளது. கோவையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    பொதுமக்களின் அன்றாட சமையலில் தக்காளி முக்கியத்துவம் வாய்ந்தது. அது இல்லாமல் குழம்பு வைக்க முடியாது. எனவே பொதுமக்கள் சமையலில் தக்காளியை குறைத்து வருகின்றனர். இன்னொருபுறம் கோவையில் உள்ள உணவு வியாபார கடைகளில் தக்காளி சார்ந்த உணவுகள் தடாலடியாக நிறுத்தப்பட்டு உள்ளன.

    கோவை மாவட்டத்தில் 3 ஆயிரம் ஓட்டல்கள் மற்றும் 12 ஆயிரம் தள்ளுவண்டி உணவு கடைகள் உள்ளன. அங்கு வாடிக்கையாளருக்கு தக்காளி சட்னி நிறுத்தப்பட்டுவிட்டது. கோவையில் தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது, பொதுமக்களை கவலை அடைய செய்து உள்ளது.

    இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவுத்துறை ஒருசில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக பெரியநாயக்கன்புதூர், கூட்டுறவு பண்டகசாலை, பெரியநாயக்கன்பாளையம் காய்கறி கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகியவை சார்பில் கோவை பூ மார்க்கெட், ஆவின், தெலுங்குபாளையம், சங்கனூர் கூட்டுறவு பண்டகசாலை, ஒண்டிப்புதூர் நகர கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் சிந்தாமணி, வடகோவை, சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 10 பகுதிகளில் பசுமைப்பண்ணை கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் வெளி மார்க்கெட்டில் தக்காளியை கொள்முதல் விலைக்கு வாங்கி, லாபம் இன்றி விற்பனை செய்து வருகின்றனர்.

    கோவையில் நேற்று மட்டும் 10 கூட்டுறவு சங்க கடைகளில் 2000 கிலோ தக்காளி இறக்குமதி செய்யப்பட்டது. அங்கு இவை கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே பொது மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தக்காளி பழங்களை வாங்கி செல்கின்றனர்.

    இதுகுறித்து கோவை மாவட்ட கூட்டுறவு அதிகாரிகள் கூறுகையில், மாநகரில் மட்டும் 10 பகுதிகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதேநேரத்தில் தக்காளியை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்றனர்.

    இதற்கிடையே கோவை காய்கறி மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் அங்கு தக்காளி விலை தற்போது கிலோ ரூ.75-க்கு விற்கப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனை கடைகளில் ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவை மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால், இன்னும் ஒருசில நாட்களில் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள தோட்டம் மற்றும் விளைநிலங்களில் தக்காளி பயிரிடப்பட்டு, சந்தைகளுக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அங்கு உள்ள விவசாயிகள் கூறுகையில், பொது மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட்களில் தக்காளி குறிப்பிடத்தக்கது. எனவே அவற்றின் விலையை கட்டுக்குள் வைத்து இருப்பது அரசின் முக்கிய பொறுப்பு.

    அரசாங்கமே கூட்டுறவுத்துறை மூலம் தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் வாயிலாக விற்பனை செய்யலாம். தக்காளியை சேமித்து வைத்தால்தான் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

    இதற்காக அந்தந்த மார்க்கெட்டுகளில் அரசாங்கம் குளிர்பதன கிடங்குகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோ ளத்தை கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிரா கவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர்.
    • மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் சோளக் கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிப்பாளை யம், சோளசிராமணி, குரும்பலமகாதேவி, கொத்த மங்கலம், சிறுநல்லிக்காவில், தி.கவுண்டம்பாளையம், கபிலக்குறிச்சி, வடகரை யாத்தூர், பெரிய சோளி பாளையம், இருக்கூர், ஆனங்கூர், அய்யம்பாளை யம், பிலிக்கல்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் தங்க ளது நிலத்தில் மக்காச்சோ ளத்தை கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிரா கவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் சோளக் கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு மக்காச்சோளத்தை விற்பனை செய்து வருகின்ற னர். சில வியாபாரிகள் மக்காச் சோளக் கதிரை வாங்கி உள்ளூர் பகுதிக ளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    அதை வாங்கிய பொது மக்கள் சோளக்கதிரை உப்பு போட்டு வெகவைத்து சாப்பிடுகின்றனர். பல இடங்களில் மக்காச்சோ ளத்தை வாங்கி பாப்கான் தயாரித்து பாக்கெட்டுகளில் விற்பனை செய்து வருகின்ற னர். மக்காச் சோளத்தை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியா பாரிகள் வந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கி தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டுவரும் மக்காச்சோள மாவு தயாரிக்கும் அலைகளுக்கும், மாடு, கோழி தீவனம் தயாரிக்கும் மில்களுக்கும், அதேபோல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலை யில் கடந்த வாரங்களில் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறை வால் ஒரு கிலோ மக்காச்சோ ளம் ரூ.23 வரை விற்பனை யானது. மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளதால் மக்காச்சோளம் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.
    • இந்த நிலையில், கடந்த வாரத்தைவிட இந்த வாரம், வரத்து குறைந்ததால் நாட்டுக்கோழி விலை உயர்ந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.

    இங்கு, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்ட மங்கலம், பொத்தனூர் மற்றும் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த விவசாயி கள், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்ப னைக்காக கொண்டு வருவர். அவ்வாறு கொண்டு வரப்படும், நாட்டுக்கோழி களை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டி வாங்கிச் செல்வர்.

    இந்த நிலையில், கடந்த வாரத்தைவிட இந்த வாரம், வரத்து குறைந்ததால் நாட்டுக்கோழி விலை உயர்ந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக் கோழி, 350 ரூபாய்க்கு விற்பனை யானது. ஆனால், நேற்று ஒரு கிலோ நாட்டுக்கோழி 400 ரூபாய்க்கு விற்பனை யானது. விலை உயர்ந்ததால், நாட்டுக்கோழிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்த பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
    • விவசாயிகள் தங்களின் கரும்புகளை விற்றுச் செல்வதற்காக மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், சாணார்பாளையம், சேளூர், பிலிக்கல் பாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர், செல்லப்பம்பாளையம், கபிலர் மலை, கபிலக்குறிச்சி, பாகம் பாளையம், ஆனங்கூர், கண்டிபாளையம், ஜேடர்பாளையம், சிறு நல்லிகோவில், கொத்தமங்கலம், குரும்பலம் மகாதேவி, ஜமீன் இளம்பள்ளி, சோழசிராமணி மாரப்பம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். விவசாயிகள் தங்களின் கரும்புகளை விற்றுச் செல்வதற்காக மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சக்கரை தயாரித்து 30 கிலோ சிப்பம் ஆக்குகின்றனர். தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    வெல்லம் சிப்பங்களை வாங்கி தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,250-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,320 க்கும் விற்பனையானது.

    நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,285-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,370-க்கும் விற்பனையானது. கரும்பு ஒரு டன் ரூ.3000 வரை விற்பனையாகிறது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு அடைந்துள்ளது. இதனால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கோடை காலத்தை முன்னிட்டு எலுமிச்சம் பழம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனையானது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. எனவே பொதுமக்கள் குளிர்பானங்களை விரும்பி அருந்தி வருகின்றனர். எலுமிச்சை சாறு செறிந்த குளிர்ந்த நீர் அருந்தினால், உடல் வெப்பம் தணிவது மட்டுமின்றி, வயிற்றுப் பிரச்சினைகளும் சரியாகும்.

    மதுரை மாவட்டத்தில் தற்போது எலுமிச்சம்பழத்துக்கு மவுசு அதிகரித்து வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி மற்றும் பரவை காய்கறி மற்றும் பழச்சந்தைகளில் ஒரு கிலோ எலுமிச்சம் பழம் ரூ.200-க்கு விற்கப்படுகிறது.

    மதுரையில் பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சம்பழம் அதிகமாக விளைகிறது. எனவே வியாபாரிகள் அந்த பகுதிகளுக்கு சென்று போட்டி போட்டுக்கொண்டு எலுமிச்சம் பழங்களை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்து மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:-

    பேரையூர் தாலுகாவில் தும்மநாயக்கன்பட்டி, கீழப்பட்டி சந்தையூர், சாப்டூர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் எலுமிச்சை பழம் சாகுபடி ஆகி வருகிறது. இங்கு விளையும் எலுமிச்சை, மதுரை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    பேரையூரில் நடப்பாண்டு எலுமிச்சை விளைச்சல் நன்றாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.30-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்றைக்கு ரூ.120-க்கு கொள்முதல் ஆகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்தாண்டு நல்ல மழை பெய்தது. இதனால் கண்மாய், கிணறுகளில் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் உள்ளது.

    எனவே நாங்கள் எதிர்பார்த்ததை போல, எலுமிச்சம்பழ விளைச்சல் நன்றாக அமைந்து உள்ளது. எங்களிடம் வியாபாரிகள் தற்போது ரூ.100 முதல் ரூ.120 வரை கொள்முதல் செய்கின்றனர். மாட்டுத்தாவணி பரவை உள்ளிட்ட காய்கறி சந்தைகளில் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    எலுமிச்சம்பழ விளைச்சலும், விலையும் அமோகமாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு வெயில் உக்கிரமாக இருப்பதால் தேவையும் சற்று அதிகமாக இருக்கும். எனவே எலுமிச்சை பழத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தி.மு.க. அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம் தலைமை தாங்கினார்.

    தஞ்சாவூர்:

    சொத்து வரி, மின் கட்டணம், பால் ஆகியவற்றின் விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம் தலைமை தாங்கினார்.

    அம்மா பேரவை இணை செயலாளர் ஆர்.காந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை களை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட எம்.ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், முன்னாள் மேயர் சாவித்ரி கோபால், முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர் பூபதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற ரத்தினசோமசுந்தரம், மாணவரணி முருகேசன், அம்மா பேரவை துணைச் செயலாளர் பாலை ரவி , எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய பொருளாளர் தம்பிதுரை, கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகத்தி கலியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, அண்ணா தொழிற்சங்க அரசு போக்குவரத்து கழக பொதுச் செயலாளர் திருநீலகண்டன், 51-வது வட்ட செயலாளர் மனோகரன், கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, காந்திமதி, நீலகிரி ஊராட்சி மாவட்ட பிரதிநிதி சண்முகசுந்தரம், நிர்வாகிகள் தங்க கண்ணன், ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து சென்று கொண்டு இருக்கின்றனர்.
    • கனகாம்பரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் நாளை (24-ந் தேதி) தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முதல் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து சென்று கொண்டு இருக்கின்றனர். தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அமாவாசை, சஷ்டி தொடங்குவதால் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திரண்டு தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி சென்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை மற்றும் விழாக்காலங்கள் தொடர்ந்து இருந்து வருவதால் பூக்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.

    இதில் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரும்பு 800 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ 1,000 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கனகாம்பரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பூக்களை மட்டும் வாங்கி சென்றதையும் காணமுடிந்தது. மேலும் தற்போது மழை காலம் தொடங்கியுள்ள நிலையிலும் விழா காலங்கள் தொடர்ந்து இருப்பதால் பூக்களின் விலை உயர்ந்து உள்ளதாக பூ வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    • வரத்தை பொறுத்து வெங்காய விலை அவ்வப்போது ஏறி இறங்கி வருகிறது.
    • பெரிய வெங்காயம் 5 கிலோ ரூ. 100 என்ற அளவுக்கு விலை குறைந்திருந்தது.

    நெல்லை:

    சாம்பாரில் தொடங்கி பொரியல், அவியல், ஆம்லெட், பிரியாணி என சமையலில் வெங்காயம் தவிர்க்க முடியாத உணவு பொருளாக இருந்து வருகிறது.

    வெங்காயம்

    அதேசமயம் வெங்காயம் உற்பத்தி என்பது குறைந்து வருகிறது. எனவே வரத்தை பொறுத்து வெங்காய விலை அவ்வப்போது ஏறி இறங்கி வருகிறது.

    நெல்லை மார்க்கெட்டுகளுக்கு வழக்கமாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பெரிய வெங்காயம், சாம்பார் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    ஆனால் கடந்த சில நாட்களாக வரத்து இல்லாததால் மிகக் குறைந்த அளவே வருகிறது. இதனால் திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் அதிகளவு உற்பத்தியானதால் விலை குறைந்து காணப்பட்டது.

    குறிப்பாக பெரிய வெங்காயம் 5 கிலோ ரூ. 100 என வியாபாரிகள் கூவி கூவி விற்கும் அளவுக்கு விலை குறைந்திருந்தது. அதேபோல் சின்ன வெங்காயமும் ரூ. 30 முதல் ரூ. 40 ஆக இருந்து வந்தது.

    விலை உயர்வு

    இந்நிலையில் நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட்டில் சின்ன வெங்காய விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வந்தது. 2 நாட்களுக்கு முன்பு ரூ. 40-க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ரூ. 67-க்கும், நேற்று ரூ. 75-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று ஒரு கிலோ ரூ. 100 வரை விற்கப்படுகிறது. இதேபோல் டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட நெல்லை மாநகர மற்றும் மாவட்ட பகுதியில் வெங்காயத்தின் விலை ரூ. 100- ஐ தொட்டு உள்ளது.

    இந்த விலை உயர்வை கேட்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து பாளை மார்க்கெட் வியாபாரி செய்யது அலி கூறும்போது,

    பருவமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இதனால் தாராபுரம், துறையூர் பகுதிகளில் இருந்து வாங்கி வருகிறோம். அதன்படி பாளை மார்க்கெட்டிற்கு நாள்தோறும் சுமார் 100 மூட்டைகளில் சின்ன வெங்காயம் வரும்.

    ஆனால் இன்று 20 மூட்டை தான் வந்துள்ளது. எனவே வரத்து குறைவால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்றார்.

    அதேசமயம் பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 15 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • ஜி.எஸ்.டி., விலை உயர்வு, அக்னிபாத் குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
    • சிவசேனா, காங்கிரஸ் உறுப்பினர்கள் கொடுத்த நோட்டீஸ் அடிப்படையில் விவாதம்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 18ந் தேதி தொடங்கியது. ஜிஎஸ்டி வரி விதிப்பு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வந்தன.

    இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக அவை நடவடிக்கைள் பாதிக்கப்பட்டன. அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி இரு அவைகளையும் சேர்ந்த 27 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் பாராளுமன்ற மக்களவையில் இன்று விலைவாசி உயர்வு தொடர்பாக விதி 193ன் கீழ் விவாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனா எம்.பி. விநாயக் ராவத் மற்றும் காங்கிரஸ் எம்.பி.மணீஷ் திவாரி ஆகியோர் அளித்துள்ள இது தொடர்பான நோட்டீஸ் பெறப்பட்டுள்ளதன் அடிப்படையில் விவாதம் நடைபெறுகிறது.

    இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் உயிரிழந்தது குறித்து மாநிலங்களவை நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்து விவாதிக்க கோரி, காங்கிரஸ் எம்.பி.சக்திசிங் கோகில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

    இதேபோல் மத்திய அமலாக்கத்துறை வழக்கில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்ப அக்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளார்.

    மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகவும், எதிர்க்கட்சி தலைவர்களின் நடவடிக்கைகளை இந்த அமைப்புகள் மூலம் தடுத்து நிறுத்தி வருவதாகவும், குற்றம் சாட்டியுள்ள சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி, இது குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க கோரி நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

    • விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்துகிறது.
    • ஆகஸ்டு 5-ம் தேதி நாடு முழுவதும் இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து, அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இதுவரை 25-க்கு மேற்பட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் ஆகியவற்றைக் கண்டித்து ஆகஸ்டு 5-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    மேலும், பிரதமர் இல்லத்தை முற்றுகையிடவும் முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

    ×