search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகை எதிரொலி:  கடலூரில் பூக்களின்  விலை கிடு கிடு உயர்வு-மல்லிகை பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை
    X

     தீபாவளியையொட்டி திருப்பாதிரிபுலியூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் வியாபாரம் மும்முரமாக நடந்தது. 

    தீபாவளி பண்டிகை எதிரொலி: கடலூரில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு-மல்லிகை பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை

    • மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து சென்று கொண்டு இருக்கின்றனர்.
    • கனகாம்பரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் நாளை (24-ந் தேதி) தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முதல் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து சென்று கொண்டு இருக்கின்றனர். தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அமாவாசை, சஷ்டி தொடங்குவதால் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திரண்டு தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி சென்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை மற்றும் விழாக்காலங்கள் தொடர்ந்து இருந்து வருவதால் பூக்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.

    இதில் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரும்பு 800 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ 1,000 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கனகாம்பரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பூக்களை மட்டும் வாங்கி சென்றதையும் காணமுடிந்தது. மேலும் தற்போது மழை காலம் தொடங்கியுள்ள நிலையிலும் விழா காலங்கள் தொடர்ந்து இருப்பதால் பூக்களின் விலை உயர்ந்து உள்ளதாக பூ வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×