search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் இன்று விவாதம்
    X

     பாராளுமன்ற மக்களவை (கோப்பு படம்)

    அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் இன்று விவாதம்

    • ஜி.எஸ்.டி., விலை உயர்வு, அக்னிபாத் குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
    • சிவசேனா, காங்கிரஸ் உறுப்பினர்கள் கொடுத்த நோட்டீஸ் அடிப்படையில் விவாதம்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 18ந் தேதி தொடங்கியது. ஜிஎஸ்டி வரி விதிப்பு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வந்தன.

    இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக அவை நடவடிக்கைள் பாதிக்கப்பட்டன. அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி இரு அவைகளையும் சேர்ந்த 27 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் பாராளுமன்ற மக்களவையில் இன்று விலைவாசி உயர்வு தொடர்பாக விதி 193ன் கீழ் விவாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனா எம்.பி. விநாயக் ராவத் மற்றும் காங்கிரஸ் எம்.பி.மணீஷ் திவாரி ஆகியோர் அளித்துள்ள இது தொடர்பான நோட்டீஸ் பெறப்பட்டுள்ளதன் அடிப்படையில் விவாதம் நடைபெறுகிறது.

    இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் உயிரிழந்தது குறித்து மாநிலங்களவை நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்து விவாதிக்க கோரி, காங்கிரஸ் எம்.பி.சக்திசிங் கோகில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

    இதேபோல் மத்திய அமலாக்கத்துறை வழக்கில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்ப அக்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளார்.

    மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகவும், எதிர்க்கட்சி தலைவர்களின் நடவடிக்கைகளை இந்த அமைப்புகள் மூலம் தடுத்து நிறுத்தி வருவதாகவும், குற்றம் சாட்டியுள்ள சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி, இது குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க கோரி நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

    Next Story
    ×