search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டிட பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான பணிகள்  பாதிப்பு
    X

    கட்டிட பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான பணிகள் பாதிப்பு

    • கட்டிட பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான பணிகள் கடும் பாதிக்கப்பட்டது.
    • விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் பல இடங்களில் கட்டப்பட்டு வந்த கட்டிடங்கள் முடிவு பெறாத நிலையில் உள்ளன.

    இந்நிலையில் தற்போது பிளம்பிங் தொழிலுக்கு தேவையான குழாய்கள், பைப்புகள், மின்சாதன பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளன. கடந்த 2 மாதத்தில் 35 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளன. கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பல இடங்களில் வீட்டின் உரிமையாளர்கள் பணிகளை நிறைவு செய்ய முடியாமல் பரிதவிப்பில் உள்ளனர்.

    கடந்த 2 மாதமாக விலையேற்றம் தொடர்ந்து வருவதால் புதிய வீடு கட்ட திட்டமிட்டவர்களும் பணியினை தொடங்குவதற்கு தயங்கி வருகின்றனர். குறிப்பாக மின்சாதன பொருட்களான வயர் காயல், வயரிங் பைப்புகள் விலை அதிகரித்துள்ளது.

    கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பொறியாளர்கள், பிளம்பர்கள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வால் வீடு கட்டுவது பலருக்கு கனவாகவே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமான தொழிலை சார்ந்துள்ள தொழிலாளர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரிஷியன் ஆகியோர் வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர். கட்டிட பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×