search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவாதம்"

    • அதிகாரிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு
    • நகராட்சி தலைவர் உஷாவெங்கடேஷ் தலையிட்டு சமரசம்


    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் உஷாவெங்கடேஷ் தலைமை வகித்தார். ஆணையாளர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் காரமடை நகராட்சியில் தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனம் சரியான முறையில் குப்பைகளை அகற்றாததால் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

    விக்னேஷ் (பா.ஜ.க) : காரமடை நகராட்சியில் குப்பை எடுப்பதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. இதற்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் தலைவர் தான் பதில் கூற வேண்டும்.

    வனிதா (அ.தி.மு.க.): தூய்மை பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை எனக்கூறி தற்போது தூய்மை பணிகளை மேற் கொண்டு வரும் ஒப்பந்த தாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பணி புரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் பலருக்கும் சம்பளம் போடவில்லை. பி.எப், இ.எஸ்.ஐ பிடிக்கப்படவில்லை. அவர்களுக்கு இதெல்லாம் கிடைக்குமா. தூய்மை பணிகளை எவ்வாறு மேற்கொள்ளப் போகிறோம்.

    நித்யா (தி.மு.க.): என் வார்டில் எந்த பணிகளும் நடப்பது இல்லை. எனது வார்டில் கோவில் கும்பாபிஷகம் தொடர்பாக புற்கள் வெட்ட ஆட்கள் வேண்டும் என கேட்டேன். ஆணையாளரிடம் தொலை பேசி வாயிலாக பேசும் போது அவர் தரக்குறைவாக பேசினார்.

    கோபமாக போன் இணைப்பை துண்டித்தார். இதுதான் நாகரீகமா? எப்படி பேசணும்னு தெரியாதா உங்களுக்கு. மேலும் என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் மிரட்டுகிறார். நடவடிக்கை எடுங்கள் பார்த்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்து ஆணையாளர் கூறும்போது, நான் அவரிடம் அநாகரிகமாக எதுவும் பேசவில்லை, அவர்தான் நகராட்சி ஊழியரை மிரட்டினார். கவுன்சிலராக இருந்தாலும் கூட நகராட்சி ஊழியரை எப்படி அவர் மிரட்டலாம். அதை தான் கேட்டேன் என்றார்.

    அப்போது கவுன்சிலர் நித்யாவிற்கு ஆதரவாக தி.மு.க., ம.தி.மு.க, சி.பி.எம் கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பெண் கவுன்சிலர் வார்டு தேவைக்காக கேட்கும் போது ஆணையாளர் எப்படி இப்படி பேசலாம் என வாக்குவாதம் முற்றியது.

    இதனால் ஆத்திரமடைந்த ஆணையாளர் மனோகரன் நான் பேசியது தவறு என்று நீங்கள் நினைத்தால் நான் இந்த மன்ற கூட்டத்தை விட்டு வெளியேறுகிறேன் என கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

    அப்போது இவருடன் சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், பொறியாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் வெளிநடப்பு செய்தனர்.

    அதன்பின் நகராட்சி தலைவர் உஷாவெங்கடேஷ் ஆணையாளர் மனோகரன் மற்றும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் மன்ற கூட்டத்திற்கு அழைத்து வந்தார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
    • வேளாங்கண்ணி நகர் பகுதியில் புதிய தார் சாலை அமைத்து முட்புதர்களை அகற்ற வேண்டும்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி மாதாந்திர கூட்டம் நடந்தது.

    நகர மன்ற தலைவர் ஷீலா கேத்ரின் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஏகராஜ், துணைத்தலைவர் வாசிம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 30 வார்டுகளிலும் உள்ள பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் பேசியதாவது:-

    ஜாகீர்(திமுக): மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சி வளர்ச்சி பணிக்காக ஒதுக்கிய நிதி எதுவும் முறையாக செயல்படுத்தவில்லை. இதனால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    ராபர்ட் (திமுக): தற்போது விழாகாலம் துவங்கியுள்ளதால் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட இயலவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும்.

    ராமசாமி(திமுக): மவுண்ட் பிளசன்ட் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

    தற்போது இந்த கட்டிங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கட்டிடங்களை திறக்க அனுமதி கொடுத்தது யார்? இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் கூட எவ்வித பலனும் இல்லை.

    மேலும் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் தனியார் கேபிள் நிறுவன ங்கள் சாலையில் கேபிள் பதித்தும் கம்பங்கள் நட்டும் வருகின்றன. இவர்கள் முறையாக நகராட்சிக்கு கட்டணம் செலுத்தி உள்ளார்களா? என்பதும் தெரியவில்லை.

    சரவணகுமார்(அதிமுக): சுகாதார பிரிவில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ப்படுவது குறித்து தெரிவிக்க வேண்டும். கவுடர் டாக்கீஸ் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் தெருவிளக்கு அமைத்து தர வேண்டும். வேளாங்கண்ணி நகர் பகுதியில் புதிய தார் சாலை அமைத்து முட்புதர்களை அகற்ற வேண்டும்.

    மன்சூர்(திமுக):குன்னூர் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹாய் மாக்ஸ் விளக்கு எரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் அவதியடைந்து வருகிறார்கள்.

    இது மட்டுமல்லாமல் நகர பகுதியில் பல இடங்களில் தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை.

    இதனை ஆய்வு செய்து அதிக வாட்ஸ் உள்ள எல்.இ.டி பல்புகளை பொருத்த வேண்டும். அனைத்து வார்டுகளிலும் அதிக வாட்ஸ் கொண்ட எல்இடி விளக்குகள் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு கவுன்சிலர்கள் விவாதித்தனர்.

    • நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணிகள் 36 மாதங்களை கடந்தும் நடைபெற்று வருகிறது.
    • போதுமான தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் அமைத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் காரசார விவாதங்கள் நடைபெற்றது.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

    நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் இந்த மாதத்தில் முடியும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் இன்னும் நிறைய பணிகள் நிலுவையில் உள்ளது. சாலைப் பணிகளை முடிக்கக்கூடிய இலக்கு தேதி மட்டும் மாறுகிறதே தவிர, பணிகள் முடிந்தபாடில்லை. 18 மாதங்களில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணிகள் 36 மாதங்களை கடந்தும் நடைபெற்று வருகிறது.

    பாவூர்சத்திரம் மற்றும் ராமசந்திரப்பட்டணம் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. விபத்துகளை தடுக்க அதிகாரிகளின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. ஒன் டு ஒன் பஸ்கள் அசுர வேகத்தில் சென்று தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. சாலை பாதுகாப்பில் போதுமான நடவடிக்கைகள் எடுத்து சாலை விபத்துகளை தடுக்காவிட்டால் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்து நீதிமன்றம் வரை சென்று அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முறையிடுவோம். சாலை பாதுகாப்பு குறித்து போதுமான நடவடிக்கைகள் எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    உடனே மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், அங்கு அமர்ந்திருந்த அதிகாரிகளை பார்த்து ஆலங்குளத்தில் இருந்து தென்காசி வரையிலான நான்கு வழிச்சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். போதுமான தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் அமைத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள திறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளில், சாலை பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போதுமான எச்சரிக்கை பலகைகள் மற்றும் தடுப்புகள் அமைத்தல், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என்றார்.

    • ஆணையாளர் மன்ற கூட்டரங்கிற்கு 12 மணிக்கு வந்தது கண்டனத்திற்கு உரியது.
    • கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெய்த மழையால் 800க்கு மேற்பட்ட தெருவிளக்குகள் பழுதாகி போனது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் உஷா வெங்கடேஸ் தலைமை வகித்தார். ஆணையாளர் அமுதா முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

    வனிதா சஞ்ஜீவ்காந்தி (அ.தி.மு.க): கடந்த 6 மாதமாக நகர்மன்ற கூட்ட த்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்பட வில்லை. குறிப்பாக தெருவிளக்கு, பழுதடைந்த சாலைகளை சீரமைக்க தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆணையாளர்: 10 நாட்களுக்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    விக்னேஸ் (பா.ஜக): நகராட்சி கூட்டம் 11 மணிக்கு நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஆணையாளர் மன்ற கூட்டரங்கிற்கு 12 மணிக்கு வந்தது கண்டனத்திற்கு உரியது. கூட்டத்தில் வைக்கப்பட்ட 66 தீர்மானங்கள் நிறைவேற்ற தாமதமாகும். எனவே இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்களின் குறைகளை மட்டுமே கேட்க வேண்டும். தனியாக ஒருநாள் சிறப்பு கூட்டம் நடத்தி தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.

    ஆணையாளர்: நேரம் இல்லாத காரணத்தினால் இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்களின் குறைகள் மட்டுமே விவாதிக்கப்படும். தீர்மானங்கள் நிறைவேற்ற சிறப்பு கூட்டம் மற்றொரு நாள் நடத்தப்படும்.

    ராம்குமார் (திமுக): சத்ய சாய் நகரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. ஆனால் அன்று முதல் இப்பகுதியில் உள்ள 18 தெருவிளக்குகளும் எரிவது இல்லை. செல்வபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் கல்வெட்டுகள் இல்லை. இதனால் வாகன ஓட்டுநர்கள் சிரமத்தில் உள்ளனர்.

    குருபிரசாத் (திமுக): தூய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி. இந்த கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    நகராட்சியில் கடந்த மாதங்களில் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் 350க்கு மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதுவரை எந்த வளர்ச்சி பணிகளும் நடக்க வில்லை. நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.2.70 கோடி மதிப்பில் 27 வார்டுகளுக்கும் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக கூறி கழிவுநீர் கால்வாய், தார்சாலை, தெருவிளக்கு, உள்ளிட்டவை செய்து தரக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எந்த பணியும் நடக்கவில்லை.

    கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெய்த மழையால் 800க்கு மேற்பட்ட தெருவிளக்குகள் பழுதாகி போனது. எனவே இதனை சிறப்பு பணி த்திட்டத்தின் கீழ் அடிப்படை தேவைகளை ஆய்வு செய்து உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

    இந்நிலையில் கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்ற நடந்த வாக்கு வாதத்தின் போது 23-வது வார்டு உறுப்பினர் செண்பகம் (திமுக) மற்ற உறுப்பினர்களை பார்த்து அருவருக்கத்தக்க வகையில் பேசினார்.

    இதனால் ஆவேசமடைந்த உறுப்பினர்கள் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மன்ற கூட்ட த்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    • காரை ஓட்டிய அம்ஜத் மிக கடுமையான வார்த்தைகளால் யோகி ஆதித்யநாத்தையும், பிரதமர் மோடியையும் தாக்கியுள்ளார்.
    • தகவல் அறிந்து கொந்தளித்த அப்பகுதி கிராம மக்கள், மிர்சாப்பூர்-பிரயாக்ராஜ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் நகரத்தில், அரசியல் தொடர்பான வாக்குவாதத்தின்போது கார் டிரைவர் ஒருவர், பயணியை கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    வாடகை சொகுசு காரில் பயணித்த ராஜேஷ் துபே (52) எனும் பயணி ஒருவருக்கும், அந்த கார் டிரைவர் அம்ஜத் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து இருவரும் காரசாரமாக பேசி விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அம்ஜத் விமர்சித்துள்ளார். இதற்கு ராஜேஷ் துபே ஆட்சேபம் தெரிவித்ததுடன், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவாக பேசி உள்ளார். வாக்குவாதம் கடுமையானதை தொடர்ந்து, ராஜேஷை அவரது வீட்டின் அருகே இறக்கிவிட்ட ஓட்டுனர் அம்ஜத், திடீரென அவர் மீது காரை ஏற்றினார். இதில் தலை நசுங்கிய ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக மிர்சாபூர் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் மிஷ்ரா தெரிவித்ததாவது:

    ராஜேஷ் துபே, மிர்சாபூரில் நடைபெற்ற தனது சகோதரர் ராகேஷ் துபேயின் மகனின் திருமணத்திற்கு சென்று விட்டு காரில் திரும்பியுள்ளார். இவரோடு உடன் பயணித்த உறவினரின் தகவல்படி, ராஜேஷிற்கும் சக பயணிகளுக்கும் இடையே அரசியல் விவாதம் எழுந்துள்ளது. அப்போது காரை ஓட்டிய அம்ஜத் மிக கடுமையான வார்த்தைகளால் யோகி ஆதித்யநாத்தையும், பிரதமர் மோடியையும் தாக்கி பேசியுள்ளார். மோடியையும், யோகியையும் அவமானப்படுத்தும் விதமாக பேசிய அம்ஜத்திற்கு ராஜேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    காரில் உள்ள மற்ற பயணிகள் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் அவரவர் இடம் வந்ததும் ஒவ்வொருவராக இறங்கியுள்ளனர்.

    அம்ஜத் காரை பாதி வழியிலேயே நிறுத்தி ராஜேஷை இறங்கச் சொன்னதாக தெரிகிறது. ராஜேஷ் துபே இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் தனது சொகுசு காரை வேகமாக அவர் மேல் மோதி, நசுக்கி கொன்றதாக தெரிகிறது.

    தகவல் அறிந்து கொந்தளித்த அப்பகுதி கிராம மக்கள், மிர்சாபூர்-பிரயாக்ராஜ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட குற்றவியல் நடுவரும், கண்காணிப்பாளரும் அங்கு வந்து உடனே குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் பல அதிகாரிகள் விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    அரசியல் தொடர்பான விவாதம் கொலையில் முடிந்தது மிர்சாபூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கீழக்கரை நகராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் அந்தக் குழிக்குள் விழுந்து காயமடைந்து வருகிறார்கள்

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற அவசரக் கூட்டம் நடந்தது. தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஹமீது சுல்தான்,ஆணையாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    கவுன்சிலர் சப்ராஸ் நவாஸ், துணைத் தலைவர் ஹமீது சுல்தான்: கடந்த 3 மாதங்களுக்கு முன் பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பெத்ரி தெருவில் பைப்லைன் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டது. ஒப்பந்ததாரர் பழனி அதை எடுத்தார். அந்த இடத்தில் பைப் போடுவதற்கு குழிகள் தோண்டப்பட்டு 3 மாதங்களாக அப்படியே போட்டு வைத்துள்ளார். இதனால் அங்கு நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் அந்தக் குழிக்குள் விழுந்து காயமடைந்து வருகிறார்கள். அது ஏன் அப்படியே போடப்பட்டுள்ளது? ஓவர்சியர்: அந்த ஒப்பந்ததாரரிடம் பலமுறை கூறியும் நாளை பார்க்கிறேன், நாளை பார்க்கிறேன் என்று காலம் தாழ்த்தி வருகிறார்.

    துணைத் தலைவர்: அவ்வாறு பணி செய்ய மறுக்கும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார். கவுன்சிலர்கள் பாதுஷா, காயத்ரி மீரான் அலி, நஸ்ருதீன். முஹம்மது ஹாஜா சுஐபு, சித்திக், சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா, பொறியாளர் அருள், மேற்பார்வையாளர் சாம்பசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காரமடை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.
    • இந்த கூட்டத்தில் 57 தீர்மானங்கள் மன்றத்தின் முன் வைக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் நடந்தது. கமிஷனர் பால்ராஜ், துணைத் தலைவர் மல்லிகா ஜெயப்பிரகாஷ், பொறியாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர்.

    இதனை தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர்.

    1-வது வார்டு பிரியா (கம்யூ): எனது வார்டில் சேரன் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளுக்குள் கழிவு நீர் செல்கிறது. அதற்கு தீர்வுகாண வேண்டும்.

    7-வது வார்டு ரங்கசாமி (தி.மு.க), நேரு நகரில் போர்வெல் பழுதாகி உள்ளது. எனவே புதிய போர்வெல் அமைக்க வேண்டும்.

    5-வது வார்டு ரவிக் குமார்(தி.மு.க), பொன்விழா நகரில் வீட்டுமனைக்கு அனுமதி இல்லாமல் குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும்.

    9-வது வார்டு பிரியா (தி.மு.க), ராயல் கார்டன், முல்லை நகர், காமராஜர் நகர் பகுதியில் குடிநீர் விஸ்தரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    21-வது வார்டு விக்னேஷ், (பாஜக),காரமடை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மின்மயானத்தில் ஆம்புலன்ஸ் இருந்தும் வாடகை வாகனத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

    உடனடியாக இந்த ஆம்புலன்ஸ் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மின்மாயானம் மாலை 7 மணிவரை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    24-வது வார்டு ராமமூர்த்தி (திமுக),பெரியார் நகரில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இவர்கள் பாலம் வசதி இல்லாததால் கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணியும் முறையாக நடக்கவில்லை. தனியார் ஒப்பந்ததாரர் குடியிருப்புவாசிகளிடம் இணைப்பிற்கு ரூ.15 ஆயிரம் வாங்கி உள்ளனர். ஆனால் தண்ணீர் 3 முதல் 4 குடம் மட்டுமே வருகிறது.

    வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடும்போதும் ஒப்பந்த குழுவினருக்கு தெரியாமல் டெண்டர் விட கூடாது என பேசினார்.இதற்கு பதில் அளித்த கமிஷனர் பால்ராஜ், ரூ.25 ஆயிரத்திற்குட்பட்ட பணிகளுக்கு மட்டுமே பணிகளை பிரித்து கொடுப்பதில் முடிவு செய்யும் உரிமை ஒப்பந்த குழுவினருக்கு உண்டு. அதற்கு மேல் மதிப்பில் உள்ள பணிகளுக்கு ஒப்பந்த குழுவுக்கு உரிமை இல்லை என்றார்.

    துணைத்தலைவர் மல்லிகா ஜெயப்பிரகாஸ் (காங்கிரஸ்)- எனது வார்டுக் குட்பட்ட குடிநீருக்கு போர்வெல் அமைக்காததால் வீடுகளில் கருப்பு கொடி கட்டுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும்.இதேபோன்று 13-வது வார்டு கண்ணப்பன் (தி.மு.க), 27-வது வார்டு வனிதாசஞ்ஜீவ்காந்தி (அ.தி.மு.க), 2-வது வார்டு குருபிரசாத், 17-வது வார்டு மலர்கொடி (தி.மு.க), தியாகராஜன்(தி.மு.க.) உள்பட அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் பகுதி குறைகள் குறித்து பேசினர்.

    இந்த கூட்டத்தில் 57 தீர்மானங்கள் மன்றத்தின் முன் வைக்கப்பட்டது. அப்போது அஜந்தாவில் மனை பிரிவுகள் வரையறைக்கு அனுமதி கேட்டு வைக்கப்பட்ட தீர்மானத்தில், எந்த இடம், எந்த வார்டு என குறிப்பிடவில்லை.

    மேலும் அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது. எனவே லே-அவுட்டுகளை கவுன்சிலர்கள் பார்வையிட வேண்டும் என்றும், அதன் பின்பே ஒப்புதல் அளிக்கவும், அதுவரை நிறுத்தி வைக்கவும் வேண்டும் என கவுன்சிலர் தியாகராஜன் தெரிவித்தார். அவரது கருத்துக்கு பெரும்பாலான கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்ததால் அந்த தீர்மானம் உள்பட 6 தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    • மாமன்ற உறுப்பினர் நிதியை உயர்த்தக்கோரி தி.மு.க. கவுன்சிலர்கள், மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பான விவாதம் நடந்தது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் துணைமேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில் தி.மு.க. மாமன்ற குழு தலைவர் ஜெயராமன் பேசும்போது, எங்களுக்கு உரிய இருக்கை வசதி செய்துதர வேண்டும் என்றார்.

    அவரை தொடர்ந்து மாமன்ற குழு துணைத் தலைவர் செந்தாமரை கண்ணன் உள்ளிட்டோர் இருக்கை கேட்டு பிரச்சினை செய்தனர். 92-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் கருப்புசாமி பேசும்போது, இது உள்கட்சி பிரச்சினை. இங்கு மக்கள் பிரச்சினையை மட்டும் தான் பேச வேண்டும் என்றார். இதனால் தி.மு.க. மாவட்ட உறுப்பினர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ஒருவருக்கு ஒருவர் விவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



    மேயருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.

    காங்கிரஸ் உறுப்பினர் கார்த்திகேயன் பேசும்போது, மக்கள் பிரச்சினையை மாமன்ற கூட்டத்தில் பேசுங்கள். வேறு பிரச்சி னையை தனியாக மேயரிடம் சென்று கூறுங்கள் என தெரிவித்தார். உடனே அவரை எதிர்த்து ஒரு தி.மு.க. கவுன்சிலர், "நீங்கள் மட்டும் மாமன்ற கூட்டத்திற்குள் ராகுல்காந்தி படத்தை கொண்டு வந்து பேசியது எந்த வகையில் நியாயம்? என ஒருமையில் பேசியதால் சலசலப்பு அதிகமானது.

    இரு தரப்பையும் சமாதானம் செய்ய மேயர் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. சுமார் 1 மணி நேரம் மேயருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் அருகில் வந்து வாக்குவாதம் செய்தனர்.

    முடிவில் மேயர் பேசும்போது, உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இருக்கைக்கு செல்ல வேண்டும். இல்லை என்றால் காவலர்களை வைத்து வெளியேற்ற செய்ய வேண்டியது இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்னர் அனைவரும் அவரவர் இருக்கைக்கு சென்று அமர்ந்தனர்.

    பின்னர் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடந்தது.

    67-வது வார்டு உறுப்பினர் நாகநாதன் பேசும்போது, விராட்டிபத்து பகுதியில் சாலை வசதி சரியில்லை. அந்த பகுதியில் பாலம் கட்டும் பணியை செய்த தனியார் நிறுவனம் சாலைகளை சேதப்படுத்தி விட்டது. மேலும் எச்.எம்.எஸ்.காலனி பகுதியில் பாதாள சக்கரை வசதி போன்றவை செய்து தர வேண்டும்.

    அவரை தொடர்ந்து பேசிய 64-வது வார்டு உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான சோலை ராஜா பேசும்போது, மதுைரயைவிட குறைந்த வருவாய் ஈட்டக்கூடிய கோயம்புத்தூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு மேம்பாட்டு நிதியாக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகை குறைவாக உள்ளதால் அதனை தலா ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றார். 

    • பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
    • பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா வடக்குமாங்குடி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா பேசியதாவது:-

    கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது .

    அந்த வகையில் வடக்குமாங்குடி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், நடை பெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம் மற்றும் முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    மேலும் பொதுமக்களுடைய பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசின் நலத்திட்டங்கள் நாட்டுப்புற கலைஞர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும்.
    • ஓய்வூதியம் முறையாக பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி விவாதம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தமிழக நாட்டுப்புற இசைக்கலைப் பெருமன்ற நிர்வாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் அண்மையில் மறைந்த நாட்டுப்புற கலைஞர்கள் கலைப்புலி கோவிந்தராஜ், ஹேமலதா குமார், நெல்லை கணேசமூர்த்தி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மேலும், அரசு நலத்திட்டங்களை நாட்டுப்புற கலைஞர்களுக்கு பெற்றுத் தருவது பற்றியும் ஓய்வூதியம் போன்றவற்றை முறையாகப் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில், சங்கத்தின் நிறுவனர் வளப்பக்குடி வீர.சங்கர் மாநிலத் தலைவராகவும் இந்து சமய அறநிலையத் துறை ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி கோவிந்தராஜூ கௌரவத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    கருங்குயில் கணேஷ் மாநில பொதுச் செயலாளராகவும் திருப்பத்தூரான் சேவியர் மற்றும் ஜெயக்குமார் துணைப் பொதுச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

    பொருளாளராக ஆலம்பாடி பாஸ்கரும், துணைத் தலைவராக திருக்காட்டுப்பள்ளி சுப்பிரமணியம் தேர்வு செய்யப்பட்டனர்.

    மகளிரணி பொறுப்பாளர்களாக செம்மொழி மற்றும் வல்லம் செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பழமார்நேரி கலையரசன் மாநில ஊடகத்துறை செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    தமிழக நாட்டுப் புற கலைஞர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக வரும் டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் சங்கத்தின் மாநில மாநாட்டை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    முடிவில் ஆரூர் அம்பிகா நன்றி கூறினார்.

    • மானிய விலையில் விதை நெல், மண் பரிசோதனை போன்றவைகள் பற்றி விவசாயிகளுடன் விவாதிக்கப்பட்டது.
    • இயற்கை முறையில் உர உற்பத்தி மற்றும் உழவர் நலன் தொடர்புடைய 13 துறைகளின் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

    திருதுறைபூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் முதல் அமைச்சரின் ஆணைப்படி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையிலும், துணை வேளாண்மை அலுவலர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் முகம்மது யூசுப், உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வேளா ண்மை வளர்ச்சித்திட்டப்ப ணிகள், மானிய விலையில் விதை நெல், விவசாய எந்திரங்கள், மண் பரிசோ தனை, நுண்ணூட்ட உரங்கள் போன்றவைகள் பற்றி விவசாயிகளுடன் விவாதிக்கப்பட்டது, மேலும் இத்திட்டத்தின் மூலம் இவ் ஊராட்சியில் உழவர் நலத்துறை, தோட்டக்க லைத்துறை, வருவாய் பேரிடர், வேளாண்மை பொறியியல் துறை, இயற்கை முறையில் உர உற்பத்தி, மற்றும் உழவர் நலன் தொடர்புடைய 13 துறைகளின் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

    கூட்டத்தில் கால்நடை உதவி மருத்துவர் வித்யேந்தர், உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ், ஊராட்சி துணைத்தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன், சமூக ஆர்வலர் மற்றும் கல்விப் புரவலர் ரவிச்சந்திரன், சிறுகுறு விவசாயிகள் சங்கத் தலைவர், செயலர் மற்றும் பொறுப்பாளர்கள் அலீம், பஹ்ருதீன், தண்டபானி, , மற்றும் விவசாயிகள், வேளாண்மைத் துறை அலுவ லாகள், உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியயாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி.
    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதிக நிதி ஒதுக்கியதே அதற்கு காரணம் என்றார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் ஆணயைாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார. கூட்டத்தில் துணை மேயர் சாரதா தேவி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அப்போது மேயர் ராமச்சந்திரன் பேசியதாவது-

    சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு வி ருது வழங்க காரணமாக இருந்த அனைத்து மாநகராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

    அ.தி.மு.க. எதிர்கட்சி தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில், சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியயாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி , கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதிக நிதி ஒதுக்கியதே அதற்கு காரணம் என்றார். அதனால் அ.தி.மு.க.வுக்கும் பங்களிப்பு உள்ளது, மேலும் அனைத்து வார்டுகளையும் சமமாக பார்க்க வேண்டும், 'என்றார்.

    அப்போது குறுக்கிட்ட மேயர் அனைத்து வார்டுகளையும் சமமாகவே கருதுகிறோம் என்றார்.

    கவுன்சிலர் கே.சி. செல்வராஜ் பேசுகையில், பனமரத்துப்பட்டி ஏரி டென்டர் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்ய எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்றார்.

    வாக்கு வாதம்

    அதற்கு பதில் அளித்து பேசிய சாந்த மூர்த்தி, பாதாள சாக்கடை திட்டம் உள்பட பல்வேறு பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் முடங்கி கிடந்தன. கடந்த 5 மாதத்தில் நடந்த பணிகளால் தான் சிறந்த மாநகராட்சி விருது கிடைத்தது என்றார். இதனால் தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கார சார மோதல் உருவானது. அதனால் மாநகராட்சி கூட்டத்தில் அமளி ஏற்பட்டது .

    இதற்கிடையே அங்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சி கவுன்சிலர் இமயவர்மன் மேயர் முன்பு தரையில் அமர்ந்த தர்ணாவில் ஈடுபட்டார். அவரை தி.மு.க. கவுன்சிலர்கள் சமரசம் செய்து இருக்கைக்கு அனுப்பி வைத்தனர்.

    தி.மு.க. மாநகராட்சி ஆளும்கட்சி தலைவர் ஜெயக்குமார் பேசியதாவது-

    திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்தது தான் இந்த விருது, அதனை திசை திருப்பி கொச்சை படுத்த முடிவு செய்துள்ளனர். இது தவறான செயல், இதற்கெல்லாம் தி.மு.க. அஞ்சாது, மாநகராட்சியில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும், தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு சாதனைக்கு கிடைத்த விருது என்றார்.

    கவுன்சிலர் ஈசன் இளஙகோ பேசுகையில், 5 மாத கவுன்சிலர்களின் செயல்பாட்டிற்கு கிடைத்த விருது தான் இது என்றார். அப்போது அ.தி.மு.க. மற்றும் தி.முக. கவுன்சிலர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    கவுன்சிலர் இமயவரம்பன் பேசுகையில், தனது வார்டில் மின் மயானம் அமைப்பதாக கூறி 6 ஆண்டு ஆகியும் நிறைவேற்றாமல் உள்ளது. மேலும் தாதாகப்பட்டி பகுதியில் மூடப்பட்ட மானா சில்லி கடையை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் ராமச்சந்திரன் உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    ×