search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "price rise"

    • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிரஷர், குவாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பிறகு கிரஷர் மற்றும் குவாரிகள் செயல்பட தொடங்கியுள்ளது.

    ஓமலூர்:

    ஓமலூர் வட்டாரத்தில் கல்குவாரிகள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. அதிலும், காடையாம்பட்டி தாலுக்காவில் மிக அதிகமாக கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் சேலம் மாவட்டத்தில் மொத்தமாக 74 கிரஷர்கள், 50 கல்குவாரிகள் உள்ளன.

    போராட்டம்

    இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிரஷர், குவாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பிறகு கிரஷர் மற்றும் குவாரிகள் செயல்பட தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் தற்போது எம்.சாண்ட், ஜல்லி ஆகியவை ஒரு யூனிட் ரூ.200 வீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ.3 ஆயிரத்து 200-ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 500-ஆகவும், பி.சாண்ட் ரூ. 4 ஆயிரத்து 200-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 500-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதே போல் ஒரு யூனிட் 40 எம்.எம், 30 எம்.எம் ஜல்லி கற்கள் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஒரு யூனிட் சிப்ஸ் ஆயிரத்து 800 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தினர். ஆனால், தற்போது ஒரு யுனிட் சிப்ஸ் 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும், 2 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்ற கல் பவுடர், தற்போது 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.இந்த விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

    இது குறித்து சேலம் மாவட்ட கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர் நலச்சங்க செயலாளர் ராஜா கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லி உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்தவில்லை. தற்போது கிரஷர் உதிரிபாகங்கள் விலை, டீசல் விலை, மின் கட்டண உயர்வு ஆகியவை பல மடங்கு உயர்ந்து விட்டது. அதே போல தொழிலாளர்கள் சம்பளமும் அதிகரித்துள்ளது. இதனால், விலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்ட விலையை ஒப்பிட்டால், சேலத்தில் விலை குறைவுதான். அரசு நிர்ணயித்த விலையை விட குறைவாகவே விற்பனை செய்யபடுவதால், மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர்.
    • வாழைத்தார்களை வாங்கி செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வாழைத்தர்களை வாங்கி செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, ஓலப்பாளையம், குச்சிபாளையம், பாலப்பட்டி, மோகனூர், குப்புச்சிபாளையம், பொத்தனூர், பரமத்தி வேலூர், அனிச்சம் பாளையம், நன்செய் இடையாறு, பாண்டமங்கலம் வெங்கரை, பிலிக்கல் பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த மங்கலம், சிறுநல்லிக் கோவில், தி.கவுண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், பச்சநாடன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர்.

    வாழைத்தார்

    வாழைத்தார் விளைந்த வுடன் கூலி ஆட்கள் மூலம் வெட்டி உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலூ ரில் செயல்பட்டு வரும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்க்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தார்களை வாங்கி செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வாழைத்தர்களை வாங்கி செல்கின்றனர்.

    வாங்கிய வாழைத்தார் களை கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப் பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும் ஏலம் போனது.

    வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.700-க்கு விற்பனையானது.

    • தக்காளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
    • பொது மக்கள் மற்றும் இல்லத்தர சிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    கடலூர்:

    இந்தியா முழுவதும் தொடர் கனமழை காரண மாக தக்காளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் பல இடங்களில் நகை பணம் கொள்ளை அடிப்பது போல் தற்போது விலை ஏற்றம் காரணமாக தக்காளியையும் கொள்ளை அடித்து விற்பனை செய்த சம்பவமும், அதன் மூலம் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையும் நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் தக்காளியின் விலை 140 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது.

    இந்த நிலையில் தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தமிழக அரசு ரேஷன் கடை யின் மூலமாக 90 ரூபாய்க்கும் , அதன் பிறகு 60 ரூபாய்க்கும் தக்காளியை விற்பனை செய்து வந்தனர். இதற்கிடையில் கடலூர் மாவட்டத்தில் தக்காளியின் விலை 100 ரூபாய்க்கும், இஞ்சியின் விலை 300 ரூபா ய்க்கும், சின்ன வெங்காயம் 160- க்கும் விலை உயர்ந்து விற்பனையாகி வந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு தக்காளியின் விலை ரூ.75 முதல் ரூ.85-க்கும், இஞ்சியின் விலை ரூ.220-க்கும் விலை குறைந்து விற்பனையாகி வந்தன.

    இந்த நிலையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநி லங்களில் தொடர் மழை இருந்து வரும் நிலையில் தமிழகத்திலும் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மீண்டும் தக்கா ளியின் விலை கடலூரில் 95 ரூபாய்க்கும், இஞ்சியின் விலை 235 ரூபாய்க்கும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக கிலோ ஒன்றுக்கு தக்காளியின் விலை 20 ரூபாயும், இஞ்சி யின் விலை 15 ரூபாயும் மீண்டும் விலை உயர்ந்த காரணத்தினால் பொது மக்கள் மற்றும் இல்லத்தர சிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    மேலும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் எவ்வ ளவு உயர்ந்து, எவ்வளவு குறைந்து உள்ளது என்ப தனை கண்காணிக்கும் வகையில் மக்களின் மன நிலை மாறிய நிலையில் தற்போது அத்தி யாவசிய பொருட்களான அன்றாட பயன்படுத்தக் கூடிய தக்காளி, இஞ்சி, சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறி விலை களை பொதுமக்கள் தினந்தோறும் கண்காணித்து அதன் அடிப்படையில் கிலோ கணக்கில் வாங்காமல் தேவைக்கு மிக குறைந்த அளவில் வாங்கி செல்வதை யும் காணமுடிகிறது.

    மேலும் சாதாரண தொழி லாளர்கள் வீடுகளில் இது போன்ற காய்கறிகள் பயன் படுத்தப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுப்பி உள்ளது. இதனை தொடர்ந்து காய்கறி கடை களில் வழக்கமான கூட்டம் இல்லாமல் குறைந்த அளவி லான பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்காமல் எண்ணிக்கை கணக்கில் வாங்குவது காண முடிந்தது. மேலும் தமிழக அரசு இதற்கு தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
    • இப் பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம் பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    மரவள்ளி கிழங்கு

    இப் பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம் பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்பொழுது ரூ.14ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கடந்த வாரம் டன் ஒன்று ரூ.13 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    மரவள்ளி கிழங்கு விலை உயந்துள்ளதால் மரவள்ளிகிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மகிழ்ச்சி

    இது குறித்து மரவள்ளி கிழங்கு வியாபாரி கூறு கையில், கடந்த வருடம் மரவள்ளி கிழங்கு பயிர்கள் நோய் தாக்குதலால் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனால் நடப்பாண்டு குறைந்த அளவே மரவள்ளிக்கிழங்கு பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது விளைச்சலில் உள்ள மரவள்ளிக்கிழங்கு அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. மேலும் ஜவ்வரிசி விலை உயர்ந்து கொண்டே வருவதால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகும் என கூறினார்.

    • மார்க்கெட்டுகளில் விவசாயிகளுக்கு ஏலமுறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
    • தியாகி குமரன் மார்க்கெட்டில் தினந்தோறும் சராசரியாக 110 சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வருவது வழக்கம்.

    கோவை:

    தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் இல்லத்தரசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இன்னொருபுறம் ஓட்டல்களில் தக்காளி சட்னி, வெங்காய பொரியல் ஆகியவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது சாப்பாட்டு பிரியர்களை ஏமாற்றம் அடைய செய்து உள்ளது.

    கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ளூர் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    இதுதவிர வெளி மாவட்டங்களில் இருந்தும் சரக்கு லாரிகள் மூலம் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. கோவை மார்க்கெட்டுகளில் விவசாயிகளுக்கு ஏலமுறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அங்கு விளையும் காய்கறிகளை அறுவடை செய்வதில் விவசாயிகளுக்கு சிரமநிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் மார்க்கெட்டுக்கு விளைபொருட்களை கொண்டு வரவில்லை. இன்னொருபுறம் வெளி மாவடடங்களில் இருந்தும் சரக்கு காய்கறி லாரிகளின் வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

    கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் தினந்தோறும் சராசரியாக 110 சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வருவது வழக்கம். ஆனால் இங்கு தற்போது 40 லாரிகள் மட்டுமே வந்து செல்கின்றன.

    கோவை காய்கறி மார்க்கெட்களில் உள்ளூர் காய்கறி வரத்து குறைவு, வெளியூர் சரக்கு லாரிகளின் வருகை குறைவு ஆகியவை காரணமாக சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கியது.

    கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை தக்காளி விலை கிலோ ரூ. 40 ஆக இருந்தது. ஆனால் தற்போது 120 ரூபாயாக உள்ளது. அதேபோல சின்ன வெங்காயத்தின் விலை முன்பு ரூ.40 என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றைக்கு ரூ.120 ஆக உள்ளது.

    கோவை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழையின் தாக்கம் பெரியஅளவில் இல்லை. எனவே விவசாயிகள் மீண்டும் சாகுபடி பணிகளை தொடங்கி விட்டனர். அதேபோல வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து சரக்கு லாரிகளில் காய்கறி வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    எனவே கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் விலை சிறிதுசிறிதாக குறைய தொடங்கி உள்ளது. தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் நேற்று ஒருகிலோ சின்ன வெங்காயம் ரூ.170 ஆக இருந்தது. அதன் விலையில் தற்போது 50 ரூபாய் குறைந்து, ஒருகிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் தக்காளி விலை மட்டும் குறைாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. காய்கறி மார்க்கெட்டுகளில் நேற்று வரை ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.110, ஆப்பிள் தக்காளி ரூ.140 என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றைக்கு நாட்டு தக்காளியின் விலை ரூ.10 அதிகரித்து தற்போது ரூ.120க்கு விற்கப்பட்டு வருகிறது. ஆப்பிள் தக்காளியின் விலையில் மாற்றம் இல்லை.

    கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயத்தின் விலை ஓரளவு குறைந்தபோதிலும், தக்காளியின் விலை அதிகரிப்பு பொதுமக்களை கவலைப்பட வைத்து உள்ளது.

    • நாமக்கல் சேலம் ஈரோடு திருப்பூர் பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • இந்த கறிக்கோழிகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல் சேலம் ஈரோடு திருப்பூர் பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    இந்த கறிக்கோழிகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்று கறிக்கோழி உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இதில் கறிக்கோழி தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு எட்டு ரூபாய் உயர்ந்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 93 ரூபாய் இருந்த கறிக்கோழி விலை 101 ரூபாயாக உயர்ந்தது.

    இதே போல முட்டை கோழி வளர்ப்போர் ஆலோசனை கூட்டம் நாமக்கலில் நடந்தது முட்டை கோழி விலை கிலோவுக்கு 1 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 78 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 77 ரூபாயாக குறைந்தது.

    • பரமத்தி வேலூர் தாலுகா பல்வேறு பகுதிகளில் சுற்று வட்டார பகுதிகளில் விவசா யிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
    • பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், பெரிய மருதூர், சின்ன மருதூர், செல்லப்பம்பாளையம், சாணார்பாளையம், பிலிக்கல் பாளையம், பாகம் பாளையம், அய்யம்பாளை யம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், தி.கவுண் டம்பாளையம், நல்லிக்கோ வில், ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகாதேவி, சோழ சிராமணி, பெரிய சோளிபா ளையம், சின்ன சோளிபா ளையம், இருக்கூர், கோப் பணம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்று வட்டார பகுதிகளில் விவசா யிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    கரும்பை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பல விவசாயிகள் பதிவு செய் துள்ளனர்.

    பதிவு செய்யாத விவ சாயிகள் தங்களின் கரும்பு களை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அதை அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சக்கரை தயாரித்து 30 கிலோ சிப்பம் ஆக்குகின்றனர்.

    தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். வெல்லம் சிப்பங்களை வாங்கி தமிழ கத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந் திரா, கேரளா, கர்நா டகா, மகாராஷ்டிரா, உத்த ராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல் லம் ஒரு சிப்பம் ரூ1,180-க் கும், அச்சுவெல்லம் ரூ.1,070-க்கும் விற்பனையா னது. நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,250-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,2 20க்கும் விற்பனையானது.

    கரும்பு ஒரு டன் ரூ.3000 வரை விற்பனையாகிறது. வெல்லம் உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது. இதனால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தக்காளி, வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக உள்ளதால் மீண்டும் இவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
    • சமீப காலங்களாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் பகுதியில் தென்னை, வாழை, கரும்பு, நெல், மக்காச்சோளம் மற்றும் காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக தக்காளி, வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தநிலையில், போதிய விலை கிடைக்காததால் சமீப காலங்களாக அவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் குறைந்தது. இந்தநிலையில் தக்காளி, வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக உள்ளதால் மீண்டும் இவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சொட்டுநீர்ப் பாசனத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி என்பது விவசாயிகளின் விருப்பத் தேர்வாக உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சின்ன வெங்காயம் சாகுபடி என்பது அதிக செலவு பிடிக்கும் சாகுபடியாக உள்ளது. சின்ன வெங்காய விதையின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதுதவிர உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட அனைத்துவிதமான இடுபொருட்களும் விலை உயர்ந்துள்ளது.அந்தவகையில் ஒரு ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதற்கு ரூ. 1 லட்சத்துக்கு மேல் செலவு பிடிக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கூலி ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் சொட்டுநீர்ப் பாசனம் மேற்கொண்டுள்ளோம். இதனால் களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன் பாசன நீரின் தேவை குறைகிறது. மேலும் நீரில் கரையும் உரங்களை சொட்டுநீருடன் கலந்து வழங்கும் போது, குறைந்த அளவு பயன்பாட்டில் கூடுதல் மகசூல் பெற முடிகிறது.சமீப காலங்களாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.

    ஆனால் விவசாய விளைபொருட்கள் விலை உயர்வு என்பது மட்டும் மிகப் பெரிய பேசு பொருளாக மாறுவது வேதனை தருகிறது.தக்காளி விலை உயர்ந்ததால் அரசு ரேஷன் கடை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்கிறது.

    அதுபோல தக்காளி, வெங்காயம் போன்ற விளைபொருட்கள் விலை குறையும் போது ஆதார விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.இதன்மூலம் விவசாயத்தை விட்டு பலரும் வெளியேறும் நிலையை மாற்ற உதவும்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், பச்சநாடன், கற்பூர வள்ளி, ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழை களை பயிர் செய்துள்ளனர்.
    • வரத்து குறைவால் வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்ட மங்கலம், வெங்கரை, அண்ணா நகர், பிலிக்கல் பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், பச்சநாடன், கற்பூர வள்ளி, ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழை களை பயிர் செய்துள்ளனர்.

    வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலூர் கரூர் பழைய பை-பாஸ் சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    வாழைத்தார்களை வாங்கிச் செல்வதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியா பாரிகள் வந்திருந்து தங்க ளுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாழைத்தார்களை வாங்கி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.400-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் ரூ.250-க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.500-க்கும் விற்பனையானது.

    நேற்று பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.350-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350-க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.700-க்கும் வாங்கிச் சென்றனர். வரத்து குறைவால் வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

    • கட்டிட பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான பணிகள் கடும் பாதிக்கப்பட்டது.
    • விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் பல இடங்களில் கட்டப்பட்டு வந்த கட்டிடங்கள் முடிவு பெறாத நிலையில் உள்ளன.

    இந்நிலையில் தற்போது பிளம்பிங் தொழிலுக்கு தேவையான குழாய்கள், பைப்புகள், மின்சாதன பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளன. கடந்த 2 மாதத்தில் 35 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளன. கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பல இடங்களில் வீட்டின் உரிமையாளர்கள் பணிகளை நிறைவு செய்ய முடியாமல் பரிதவிப்பில் உள்ளனர்.

    கடந்த 2 மாதமாக விலையேற்றம் தொடர்ந்து வருவதால் புதிய வீடு கட்ட திட்டமிட்டவர்களும் பணியினை தொடங்குவதற்கு தயங்கி வருகின்றனர். குறிப்பாக மின்சாதன பொருட்களான வயர் காயல், வயரிங் பைப்புகள் விலை அதிகரித்துள்ளது.

    கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பொறியாளர்கள், பிளம்பர்கள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வால் வீடு கட்டுவது பலருக்கு கனவாகவே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமான தொழிலை சார்ந்துள்ள தொழிலாளர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரிஷியன் ஆகியோர் வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர். கட்டிட பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தக்காளி விலை உயர்வு வரும் நாட்களிலும் நீடிக்கும் என்று தெரிகிறது.
    • மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தக்காளி விலை குறைவு தான்.

    போரூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இன்று கிலோ ரூ.120-க்கு தக்காளி விற்கப்பட்டது. தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் தக்காளி விலையால் பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை தக்காளி வரத்து இன்னும் சீராக வில்லை. இதனால் தக்காளி விலை உயர்வு வரும் நாட்களிலும் நீடிக்கும் என்று தெரிகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட் மற்றும் சில்லறை கடைகளில் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளி விலையை தொடர்ந்து தற்போது காய்கறி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது. காய்கறிகள் விலை கிலோ ரூ.50-க்கும் கீழ் இருந்த நிலையில் அனைத்து காய்கறிகளின் விலையும் தற்போது எகிறியுள்ளது.

    கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று 400 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தன. மொத்த மர்க்கெட்டில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ120-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.70-க்கும், ஊட்டி கேரட் ரூ.70-க்கும், சின்ன வெங்காயம் ரூ.120-க்கும் விற்பனை ஆனது.

    பச்சை மிளகாய் ரூ.110-க்கும், உஜாலா கத்தரிக்காய்-ரூ.60-க்கும், முருங்கைக்காய் ரூ.60,வெண்டைக்காய் -ரூ.40, இஞ்சி ஒரு கிலோ ரூ.210-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் காய்கறிகள் விலை தாறுமாறாக அதிகரித்து பீன்ஸ் ஒரு கிலோ ரூ.140வரையிலும், இஞ்சி ஒரு கிலோ ரூ.250-க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.150வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் பெங்களூர் தக்காளி விலையும் உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    தக்காளி விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.7-க்கு விற்கப்பட்டது. ஆனால் அதையும் வாங்கி செல்ல ஆள் இல்லாமல் பல இடங்களில் விவசாயிகள் தக்காளியை குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டது.

    தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் தமிழகத்தில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தியை விவசாயிகள் பலர் நிறுத்தி விட்டனர். ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தற்போது பெய்த மழையால் அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் கடுமையாக சேதமடைந்து வீணாகிவிட்டது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தக்காளி விலை குறைவு தான்.

    இன்று கோயம்பேடு சந்தையில் ஒரு பெட்டி தக்காளி ரூ1200-க்கு விற்கப்படுகிறது. அதே சமயம் தக்காளி உற்பத்தி நடந்து வரும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநி லத்தில் ஒரு பெட்டி தக்காளி (14கிலோ) ரூ1600-க்கு விற்கப்படுகிறது. எனவே இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தக்காளியை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
    • பொது மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட்களில் தக்காளி குறிப்பிடத்தக்கது.

    கோவை:

    கோவையில் டி.கே.மார்க்கெட், அண்ணா மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறிசந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகிறது.

    வியாபாரிகள் தினமும் கோவை வந்திருந்து, மேற்கண்ட சந்தைகளில் காய்கறிகளை வாங்கி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோவை டி.கே.மார்க்கெட் மற்றும் அண்ணா மார்க்கெட் ஆகிய பகுதிகளுக்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து மிகவும் குறைவாக உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்த வண்ணம் உள்ளது. கோவையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    பொதுமக்களின் அன்றாட சமையலில் தக்காளி முக்கியத்துவம் வாய்ந்தது. அது இல்லாமல் குழம்பு வைக்க முடியாது. எனவே பொதுமக்கள் சமையலில் தக்காளியை குறைத்து வருகின்றனர். இன்னொருபுறம் கோவையில் உள்ள உணவு வியாபார கடைகளில் தக்காளி சார்ந்த உணவுகள் தடாலடியாக நிறுத்தப்பட்டு உள்ளன.

    கோவை மாவட்டத்தில் 3 ஆயிரம் ஓட்டல்கள் மற்றும் 12 ஆயிரம் தள்ளுவண்டி உணவு கடைகள் உள்ளன. அங்கு வாடிக்கையாளருக்கு தக்காளி சட்னி நிறுத்தப்பட்டுவிட்டது. கோவையில் தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது, பொதுமக்களை கவலை அடைய செய்து உள்ளது.

    இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவுத்துறை ஒருசில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக பெரியநாயக்கன்புதூர், கூட்டுறவு பண்டகசாலை, பெரியநாயக்கன்பாளையம் காய்கறி கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகியவை சார்பில் கோவை பூ மார்க்கெட், ஆவின், தெலுங்குபாளையம், சங்கனூர் கூட்டுறவு பண்டகசாலை, ஒண்டிப்புதூர் நகர கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் சிந்தாமணி, வடகோவை, சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 10 பகுதிகளில் பசுமைப்பண்ணை கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் வெளி மார்க்கெட்டில் தக்காளியை கொள்முதல் விலைக்கு வாங்கி, லாபம் இன்றி விற்பனை செய்து வருகின்றனர்.

    கோவையில் நேற்று மட்டும் 10 கூட்டுறவு சங்க கடைகளில் 2000 கிலோ தக்காளி இறக்குமதி செய்யப்பட்டது. அங்கு இவை கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே பொது மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தக்காளி பழங்களை வாங்கி செல்கின்றனர்.

    இதுகுறித்து கோவை மாவட்ட கூட்டுறவு அதிகாரிகள் கூறுகையில், மாநகரில் மட்டும் 10 பகுதிகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதேநேரத்தில் தக்காளியை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்றனர்.

    இதற்கிடையே கோவை காய்கறி மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் அங்கு தக்காளி விலை தற்போது கிலோ ரூ.75-க்கு விற்கப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனை கடைகளில் ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவை மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால், இன்னும் ஒருசில நாட்களில் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள தோட்டம் மற்றும் விளைநிலங்களில் தக்காளி பயிரிடப்பட்டு, சந்தைகளுக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அங்கு உள்ள விவசாயிகள் கூறுகையில், பொது மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட்களில் தக்காளி குறிப்பிடத்தக்கது. எனவே அவற்றின் விலையை கட்டுக்குள் வைத்து இருப்பது அரசின் முக்கிய பொறுப்பு.

    அரசாங்கமே கூட்டுறவுத்துறை மூலம் தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் வாயிலாக விற்பனை செய்யலாம். தக்காளியை சேமித்து வைத்தால்தான் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

    இதற்காக அந்தந்த மார்க்கெட்டுகளில் அரசாங்கம் குளிர்பதன கிடங்குகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×