search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "price rise"

    • பரமத்தி வேலூர் வார சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நாட்டுக் கோழிகளை விற்க விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
    • வார சந்தையில் கடந்த வாரம் நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூபாய் 400- க்கு விற்றது. நேற்று ஒரு கிலோ 100 ரூபாய் உயர்ந்து ரூ. 500 -க்கு விற்பனையானது.

     பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வார சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளான மோகனூர், திருச்செங்கோடு, ஜேடர்பாளையம், சோழசிராமணி, பரமத்தி, ஜேடர்பாளையம், கபிலர்மலை, பாண்டமங்கலம் ஆகிய பகுதிகளிலிருந்து நாட்டுக் கோழிகளை விற்க விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

    ஒரு கிலோ ரூ.500

    வார சந்தையில் கடந்த வாரம் நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூபாய் 400- க்கு விற்றது. நேற்று ஒரு கிலோ 100 ரூபாய் உயர்ந்து ரூ. 500 -க்கு விற்பனையானது.

    இந்த வாரம் வார சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி வரத்து அதிகரித்து இருந்தது. ஆனால் அசைவ பிரியர்கள் வரும் தீபாவளி அன்று சமைப்பதற்கு முன்கூட்டியே வாங்கிச் சென்றதால் நாட்டுக்கோழி அனைத்தும் விற்பனையானது.

    நாட்டுக்கோழி விலை உயர்வால் நாட்டுக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தொடர்ந்து சின்னவெங்காயத்தின் வரத்து குறைந்து வருகிறது.
    • பெரிய வெங்காயத்தின் விலை இன்று சற்று குறைந்து ரூ.65-க்கு விற்பனை ஆனது.

    போரூர்:

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தொடர்ந்து சின்னவெங்காயத்தின் வரத்து குறைந்து வருகிறது. இதனால் அதன் விலை உச்சம் அடைந்து உள்ளது.

    இன்று மொத்த விற்பனையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-க்கும் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ரூ.130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சில்லரை விற்பனை கடைகளில் கிலோ ரூ.80வரை விற்கப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை இன்று சற்று குறைந்து ரூ.65-க்கு விற்பனை ஆனது.

    • சின்ன வெங்காயத்தை தேடித்தேடி வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பால் சின்ன வெங்காயம் முதல் தரம் விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்கிறது
    • இரு வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் கீரை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது

    திருப்பூர்:

    ஐப்பசி பிறப்பு, அடுத்தடுத்த சுபமுகூர்த்த தினங்கள் வருகையால் உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறி வாங்க கூட்டம் அதிகரித்துள்ளது.சின்ன வெங்காயத்தை தேடித்தேடி வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பால் சின்ன வெங்காயம் முதல் தரம் விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்கிறது. இரண்டாம் தரம் 70 முதல் 80 ரூபாய், பெரிய வெங்காயம் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் மீண்டும் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

    இரு வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் கீரை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 5 முதல் 6 ரூபாய்க்கு விற்கும் கீரை விலை, ஒரு ரூபாய் உயர்ந்து 7 ரூபாயாகியுள்ளது.இதனால் மொத்தமாக வாங்குவோர் குறைந்த அளவே கீரை வாங்கி செல்கின்றனர்.  

    • வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
    • கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங் களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளை யம், சோழசிராமணி, அய்யம் பாளையம், கபிலர் மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

    வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங் களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும் ஏலம் போனது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு தொடர் மழை காரணமாக வெல்லம் உற்பத்தி செய்ய முடியாததால் குறைந்த அளவிலேயே வெல்லம் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 4 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பங்களும், ஆயிரத்து 500 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,300 வரையிலும் ஏலம் போனது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வெல்லம் உற்பத்தி செய்ய முடியாததாலும், வரத்து குறைந்ததாலும் வெல்லம் விலை உயர்வடைந்து உள்ளதாக வெல்ல உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    • நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி விலை படிப்படியாக சரிந்து கடந்த வாரம் 97 ரூபாய்க்கு விற்பனையானது.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்துக்கு உட்பட்ட நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி விலை படிப்படியாக சரிந்து கடந்த வாரம் 97 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் விலை மேலும் சரியும் என அசைவ பிரியர்கள் காத்திருந்தனர். ஆனால் அதற்கு மாறாக கறிக்கோழி விலை உயரத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து நேற்று 106 ரூபாய்க்கு விற்பனையானது.

    இதைத் தொடர்ந்து இன்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி, தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் கறிக்கோழி கிலோவுக்கு மேலும் 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாமக்கல் மண்டலத்தில் 106 ரூபாயாக இருந்த கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை மேலும் 2 ரூபாய் அதிகரித்து 108 ரூபாயாக உயர்ந்தது. கறிக்கோழி விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
    • இந்த நிலையில் சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை இன்று உயர்ந்துள்ளது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    சேலம்:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

    இதனை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை இன்று உயர்ந்துள்ளது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.நேற்று 400 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ இன்று 600 ரூபாய்க்கு விற்பனையானது. முல்லைப்பூ நேற்று 300 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று 400 ரூபாயாக உயர்ந்தது.

    ஜாதிமல்லிகை கிலோ-260, கலர் காட்டன்-240, அரளி-50, சம்பங்கி100 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்த பூக்கள் விலை குறித்து வியாபாரிகள் கூறுகையில் இனிவரும் நாட்களில் முகூர்த்த நாட்கள் இருப்பதால் தற்போது விலை உயர்ந்துள்ளதாகவும் இந்த விலை உயர்வு மேலும் சில நாட்கள் இருக்கும் என்று தெரிவித்தனர்.

    • வயல்களில் வரப்பு ஓரங்களிலும், 8,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு நீண்டகால பலன் தரும் தென்னை பயரிடப்பட்டுள்ளது.
    • வாழப்பாடி பகுதியில் தேங்காய் மொத்த உற்பத்தியில், 60 சதவீதத்திற்கு மேல், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேஷம், பீகார், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம், வாழப்பாடி, பெத்த நாயக்கன்பாளையம், பேளூர், ஏத்தாப்பூர், அயோத்தியாப்பட்டணம் பகுதி கிராமங்களில், மரத்தோப்புகள் அமைத்தும், கிணற்று மேடுகளிலும், வயல்களில் வரப்பு ஓரங்களிலும், 8,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு நீண்டகால பலன் தரும் தென்னை பயரிடப்பட்டுள்ளது.

    வாழப்பாடி பகுதியில் தேங்காய் மொத்த உற்பத்தியில், 60 சதவீதத்திற்கு மேல், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேஷம், பீகார், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. எஞ்சிய 40 சதவீதம், உள்ளூர் விற்பனை, கொப்பரைத் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

    வாழப்பாடி பகுதியில் மட்டும் தேங்காய் உற்பத்தி, அறுவடை மற்றும் வர்த்தகத்தில், தென்னை விவசாயிகள், வியாபாரிகள், தரகர்கள், தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், கொப்பரை பதப்படுத்துவோர் உட்பட 50ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாழப்பாடி பகுதியில் இருந்து பிற மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளின் ஆர்டருக்கு ஏற்ப, பருமனுக்கு ஏற்ப ஒரு மூட்டையில் 80 முதல் 120 தேங்காய் கொண்ட 300 மூட்டைகளில் ஏறக்குறைய 30ஆயிரம் தேங்காய் வரை ஒரு லாரியில் ஏற்றி எண்ணிக்கை அடிப்படையில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    தேங்காய் உற்பத்தி தருணத்தில் வாழப்பாடி பகுதியிலுள்ள தனியார் தேங்காய் மண்டிகளில் இருந்து நாளொன்றுக்கு ஏறக்குறைய 30 லாரிகளில் 9 லட்சம் தேங்காய்கள் வரை பிற மாநில வியாபாரிகளுக்கு அனுப்பப்படுகிறது ஒரு லாரி தேங்காய் விற்பனையில், லாரி வாடகை, தொழிலாளர் கூலி, வரி உள்பட ரூ.4 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

    வாழப்பாடி பகுதியில் தேங்காய் அறுவடை தொடங்கிய நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவும் நெருங்கியுள்ளதால், தேங்காய் வர்த்தகம் சுறுசுறுப்பு அடைந்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருவதால், விவசாயிகளிடம் தேங்காய்களை கொள்முதல் செய்து, தொழிலாளர்களை கொண்டு மட்டை உரித்து, மூட்டைகளில் தைத்து லாரியில் ஏற்றி அனுப்பும் பணியில் வாழப்பாடி பகுதி தேங்காய் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் ரூ.7,000 வரை விலை போன 1,000 தேங்காய்க்கு தற்போது ரூ. 10,000 வரை விலை கிடைத்து வருவதால், வாழப்பாடி பகுதியில் தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பரமத்திவேலூர் வட்டத்தில் பல பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.

    பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங் களாக (மூட்டைகளாக) கட்டி, பிலக்கல்பாளை யத்தில் உள்ள வெள்ள ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

    வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது.

    நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,500 வரையிலும் ஏலம் போனது. நாட்டுச் சர்க்கரை சிப்பம் ஒன்று கடந்த வாரம் ரூ.1,300-க்கும், நேற்று நடைபெற்ற ஏலத்தில் நாட்டு சர்க்கரை சிப்பம் ஒன்று ரூ.1,350- க்கும் ஏலம் போனது. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை தொடங்க உள்ள நிலையில் வெல்லம் விலை உயர்ந்திரு ப்பதாக வியாபாரி கள் தெரிவித்தனர்.வெல்லம் விலை உயர்ந்திருப்பதால் வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • இந்தியாவிலும் பருவமழை குறைவால் காபி உற்பத்தி சரிந்துள்ளது.
    • தமிழகம், கேரளாவிலும் காபி உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    புனே:

    பலரும் விரும்பி பருகும் பானங்களில் காபி முதன்மையானது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் காபி பயிரிட்டாலும் பிரேசில், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து காபி இறக்குமதியும் செய்யப்படுகிறது. இந்திய காபி வெளிநாடுகளுக்கு செல்கிறது.

    இந்நிலையில் உலக அளவில் பிரேசில், வியட்நாமில் காபி உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியாவிலும் பருவமழை குறைவால் காபி உற்பத்தி சரிந்துள்ளது. இதன்காரணமாக நாடு முழுவதும் காபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    கர்நாடகாவின் சிக்கமளூருவில் உள்ள எஸ்டேட்டுகளில் இருந்து தரமான காபி கொட்டைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் அதன் விலையை கணிசமாக உயர்த்தி உள்ளனர். ரோபஸ்டா மற்றும் பீப்ரி ரக காபி கொட்டைகள் கிலோவுக்கு ரூ.580 ஆக இருந்தது. தற்போது இது ரூ.64 முதல் ரூ.650 வரை விற்கப்படுகிறது.

    ரொபஸ்டா விலை 50 சதவீதமும், அரபிகா ரக விலை 15 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி மாதம் காபி விலை உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தற்போது விலை உயர்த்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் சில சிறிய காபி விற்பனையாளர்கள் கடையை மூடிவிட்டனர்.

    காபி விளையும் சிக்கமகளூரு பகுதிகளில் காலநிலை மாற்றமும் உற்பத்தியை பாதித்துள்ளது. பூக்கும் நாட்களில் பருவமழை பெய்ததால் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் விளைச்சல் குறைந்துள்ளதாக காபி எஸ்டேட் ஊழியர்கள் கூறுகின்றனர்.

    இந்தியாவில் 70 சதவீத காபி கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது. தமிழகம், கேரளாவிலும் காபி உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    காபி உற்பத்தியாகும் பகுதிகளில் பழங்கள் சரியாக பழுக்காததால் வழக்கமான 2 அறுவடைகளுக்குப் பதிலாக 4 சுற்றுகள் தேர்ந்தெடுத்து அறுவடை செய்துள்ளனர். பிரேசிலின் அராபிகா காபி விலைகள் சர்வதேச சந்தைகளில் குறைய தொடங்கியுள்ளன. இருப்பினும், உள்நாட்டு சந்தையில் விலை சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சில நிறுவனங்கள் கடந்த ஆண்டு 200 கிராம் ஜாடியின் விலை 280 ரூபாயில் இருந்து அதே ஜாடியின் விலையை 360 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அடுத்த காலாண்டில் மேலும் 10 சதவீதம் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அரேபிகாவிற்கும் ரொபஸ்டாவிற்கும் இடையேயான விலை வேறுபாடு குறைந்துள்ளதால், அராபிகா ரக காபியை மக்கள் விரும்புவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    காபி பயிரிடுதற்கு தொழிலாளர் செலவில் இருந்து உரம் மற்றும் பூச்சிக்கொல்லி செலவுகள் வரை அதிகரித்து உள்ளது. ஆனால் அரபிகா காபி விலை கடந்த ஆண்டை விட இப்போது கொஞ்சம் குறைவாக உள்ளது. வணிகர்கள் அதை பொதுவாக மொத்தமாக வாங்குகிறார்கள், எனவே விலை உயரும் சூழல் உள்ளது என்று என்று கர்நாடக காபி தோட்டக்காரர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் போதிய அளவில் இருந்தும் அந்த மாநில அரசு திறந்து விட மறுப்பதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறுவை பயிர்கள் கருகி வருவதால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும். தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்து விட மாவட்டங்களில் (பாதிக்கப்பட்ட பகுதிகளில்) வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
    • மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும். இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீன் வறத்து குறைவாக இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டன. இன்று கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமான பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றதை காண முடிந்தது. இதில் இன்று மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    வழக்கமாக ரூ.1100-க்கு விற்பனையான வஞ்சரம் ரூ.1400-க்கும், ரூ.300-க்கு விற்பனையான பாறை ரூ. 500 -க்கும், ரூ. 250-க்கு விற்பனையான நெத்திலி ரூ. 300 -க்கும், ரூ. 200-க்கு விற்பனையான இறால் ரூ.300 -க்கும் விற்பனையாகி வந்தன.ஏற்கனவே காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மீன்களை குறைந்து அளவில் வாங்கி சென்றனர். இருப்பினும் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை மீன்கள் வாங்கப் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    • மதுரையில் கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வரத்து குறைவதால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.

    மதுரை

    மதுரையில் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. தற்போது கிலோ 150 ரூபாய் வரை விற்கப்ப டுவதால் தக்காளியை வாங்க முடியாமல் பொது மக்கள் கடும் தவிப்பில் உள்ளனர்.

    ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் தக்காளி பயன்படுத்தப்படாத உணவு பதார்த்தங்களே இல்லை என்று சொல்லலாம். பிரியாணி முதல் சட்னி வரை தக்காளியை பயன்படுத்தினால் தான் ருசியாக சாப்பிட முடியும் என்பது தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் முக்கியமானதாகும்.

    அந்த வகையில் தக்காளியின் மகத்துவம் அன்றாட உணவு பண்டங்களில் முழுமையாக தன்னை ஆக்கிரமிப்பதால் தக்காளியின் தேவையும் அதிகமாக உள்ளது. தற்போது மதுரை மார்க்கெட்டுகளுக்கு மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி தக்காளி கொண்டு வரப்படுவது வழக்கம் .

    மேலும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் லாரிகளில் தக்காளி மதுரைக்கு விற்ப னைக்காக எடுத்து வரப்படும். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் மகசூல் குறைவு காரணமாக தக்காளி உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் உள்ளூர் தேவையும் இருப்பதால் மதுரை மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படும் தக்காளியின் அளவும் குறைவாக உள்ளது.

    தேவை அதிகமாக இருப்பதாலும் வரத்து குறைவு காரணமாகவும் கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை ஏற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

    விலை ஏற்றத்தை குறைக்க மதுரை மாவட்டத்தில் உள்ள 23 நியாய விலை கடைகளில் தக்காளியை விற்க கூட்டுறவு துறை நடவடிக்கை மேற் கொண்டது. ஆனாலும் தக்காளியின் விலை ஏற்றத்தை தடுக்க முடிய வில்லை.

    அந்த வகையில் தொடர்ந்து தக்காளி விலை ஏறு முகத்தில் உள்ளது. மதுரையில் உள்ள உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது வெளி மார்கெட்டுகளில் ரூ.140 முதல் 150 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் இந்த விலை ஏற்றம் பொதுமக்களை வெகுவாக பாதித்துள்ளது. எனவே வீடுகள் மற்றும் ஓட்டல்களில் தக்காளியின் பயன்பாடு குறைக்கப் பட்டுள்ளது.

    மேலும் தக்காளியின் வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வியா பாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே தக்காளி பயன் பாட்டை குறைத்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்ற எண்ணத் தில் பொதுமக்களும் தக்காளியை பார்த்துவிட்டு வாங்கும் எண்ணத்தை குறைத்துக் கொள்வதாகவே தெரிவித்துள்ளனர்.

    தக்காளியின் வரத்து மற்றும் விலை ஏற்றத்தை கண்காணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். தக்காளி சேமிப்பு கிடங்குகளில் பதுக்கப்படுவதை தடுத்து நிறுத்தி பொது மக்களுக்கு நியாயமான விலையில் தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் இல்லத்தரசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிரஷர், குவாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பிறகு கிரஷர் மற்றும் குவாரிகள் செயல்பட தொடங்கியுள்ளது.

    ஓமலூர்:

    ஓமலூர் வட்டாரத்தில் கல்குவாரிகள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. அதிலும், காடையாம்பட்டி தாலுக்காவில் மிக அதிகமாக கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் சேலம் மாவட்டத்தில் மொத்தமாக 74 கிரஷர்கள், 50 கல்குவாரிகள் உள்ளன.

    போராட்டம்

    இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிரஷர், குவாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பிறகு கிரஷர் மற்றும் குவாரிகள் செயல்பட தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் தற்போது எம்.சாண்ட், ஜல்லி ஆகியவை ஒரு யூனிட் ரூ.200 வீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ.3 ஆயிரத்து 200-ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 500-ஆகவும், பி.சாண்ட் ரூ. 4 ஆயிரத்து 200-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 500-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதே போல் ஒரு யூனிட் 40 எம்.எம், 30 எம்.எம் ஜல்லி கற்கள் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஒரு யூனிட் சிப்ஸ் ஆயிரத்து 800 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தினர். ஆனால், தற்போது ஒரு யுனிட் சிப்ஸ் 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும், 2 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்ற கல் பவுடர், தற்போது 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.இந்த விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

    இது குறித்து சேலம் மாவட்ட கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர் நலச்சங்க செயலாளர் ராஜா கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லி உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்தவில்லை. தற்போது கிரஷர் உதிரிபாகங்கள் விலை, டீசல் விலை, மின் கட்டண உயர்வு ஆகியவை பல மடங்கு உயர்ந்து விட்டது. அதே போல தொழிலாளர்கள் சம்பளமும் அதிகரித்துள்ளது. இதனால், விலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்ட விலையை ஒப்பிட்டால், சேலத்தில் விலை குறைவுதான். அரசு நிர்ணயித்த விலையை விட குறைவாகவே விற்பனை செய்யபடுவதால், மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×