search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின்னவெங்காயம்"

    • சிகைக்காய் உபயோகித்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
    • தலைமுடியில் உள்ள வேர்களில் படுமாறு நன்றாக தேய்க்க வேண்டும்.

    முடி உதிர்வது என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் ஒரு சில சின்ன வெங்காயம் இருந்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கட்டிவிடலாம் என்று கூறப்படுகிறது.

    சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து அதில் தண்ணீர் சேர்க்காமல் பசை போல் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள சாறை பிழிந்து அதனை தலைமுடியில் உள்ள வேர்களில் படுமாறு நன்றாக தேய்க்க வேண்டும்.

    பத்து நிமிடம் மசாஜ் செய்த பின் ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு அதன் பிறகு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். கண் எரிச்சல் சிறிது இருந்தாலும் எந்த விதமான அலர்ஜியும் ஏற்படாது.

    இதனுடன் எலுமிச்சை சாறு அல்லது புதினா சேர்த்தும் தலையில் தடவலாம். தொடர்ந்து ஆறு மாதத்திற்கு இதை பயன்படுத்தி வருபவர்கள் முடி உதிர்வு குறைத்துள்ளதாக பல சமூக வலைதளங்களில் எழுதி பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போதைய நவநாகரிக உலகில் கூந்தலுக்கு ஷாம்புகள் போடுவதால் தான் முடி கொட்டும் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும் சிகைக்காய் உபயோகித்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஷாம்புகள் அனைத்துமே ரசாயன கலப்புகள் இருக்கும் என்பதால் நமது பாரம்பரிய சிகைக்காய் தூளை பயன்படுத்தினால் உச்சந்தலை குளிர வைத்து உடல் சூட்டை குறைப்பது மட்டுமின்றி கூந்தலுக்கும் பளபளப்பை தரும் என்றும் முடி கொட்டும் பிரச்சனை இருக்காது என்றும் கூறப்படுகிறது.

    ஷாம்புகளை பயன்படுத்தினால் பக்க விளைவுகளை ஏற்படும் ஆனால் சிகைக்காய் பயன்படுத்தினால் எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முடிஉதிர்வு பிரச்சினை மன உளைச்சலை ஏற்படுத்திவிடும்.
    • வழுக்கை விழுந்த தலையில் கூட முடிவளரும்.

    பொதுவாக தலைமுடி உதிர்வதை ஒரு வயதிற்கு மேல் நம்மால் நிறுத்தமுடியாது. குழந்தைப்பேறு, வயோதிகம், உடல்நலப்பிரச்சினை, சத்துக்கள் குறைவது போன்ற காரணங்களால் முடி உதிர்வை தடுக்க முடியாது. பலபேருக்கு அதுவே மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். இப்படி முடி அதிகமாக கொட்டுகிறதே என்ன செய்வது என்று புரியாமல் யோசித்துக்கொண்டு இருப்பார்கள்.

    கைமேல் பலன் தரக்கூடிய மிக அருமையான தீர்வை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். வழுக்கை விழுந்த தலையில் கூட முடிவளரும் அளவுக்கு இந்த தீர்வு இருக்கும். நமது வீட்டு அடுப்படியில் இருக்கும் சின்ன வெங்காயம் தான் இந்த தீர்வை தருகிறது. இதில் இருக்கக்கூடிய சல்பர் தான் முடிவளச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

    சல்பர் நம் தலையில் ஏற்படக்கூடிய புண், பொடுகு மற்றும் முடிகொட்டுவதற்கு காரணமான தொற்றுகளை அழிப்பதற்கு இந்த சல்பர் உதவுகிறது. இந்த சின்னவெங்காயத்தை எவ்வாறு பயன்படுத்வேண்டும் என்றால் இதனை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பசைபோல் அரைத்து எடுக்க வேண்டும்.

    இதில் உள்ள சாறினை பிழிந்து எடுத்து அதனை தலையில் உள்ள முடிகள் மற்றும் அதன் வேர்களில் படுமாறு நன்றாக தேய்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் ஒரு 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதன்பிறகு ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். புண். பொடுகுத்தொல்லை இருப்பவர்கள் கொஞ்சம் அரிப்பு காணப்படும். அதை பொறுத்துக்கொண்டு ஒருமணிநேரம் ஊறவைக்க வேண்டும். கண் எரிச்சல் இருக்கும் அதனால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. அதன்பிறகு ஒரு மைல்டான ஷாம்பு போட்டு தலைமுடியை அலச வேண்டும்.

    சிலர் எனக்கு சளித்தொல்லை, சைனஸ் பிரச்சினை இருக்கிறது. நாங்கள் எப்படி ஊறவைத்து குளிப்பது என்று கேட்கலாம். அவர்களை இந்த சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து தடவுவதற்கு பதிலாக அவர்கள் சின்ன வெங்காயத்தை சிறிதளவு ஒன்றிரண்டாக தட்டி அதனை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி அதனை தடவி வரலாம்.

    இதனுடன் சேர்த்து எலுமிச்சை சாறு அல்லது புதினா சாறு ஆகியவற்றையும் தலையில் தடவி வரலாம். இதனை சாறு எடுத்து தடவி வந்தால் மட்டுமே முடியில் எந்த வெங்காய சக்கைகளும் படியாமல் இருக்கும். இதனை தொடர்ந்து ஒரு 6 மாதத்திற்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வது குறைந்து முடிவளர ஆரம்பிக்கும். முடி இல்லாமல் வழுக்கை விழுந்தவர்கள் கூட தொடர்ந்து இந்த மாதிரி பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை பெறலாம்.

    • மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்திருப்பது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சின்ன வெங்காயம் பயிா் செய்து வந்த விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

    திருப்பூர்:

    மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து அச்சங்கத்தின் மாநில நிறுவன தலைவா் வக்கீல் ஈசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்திருப்பது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தை நிலவரத்தை அனுசரித்து ஏற்றுமதிக்காக கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் ஏற்றுமதி செய்ய இயலாமல் மிகக் கடுமையான நஷ்டத்தை வியாபாரிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது.

    பெரிய வெங்காயம் என்பது இந்திய அளவிலான பிரச்னை, உலக அளவிலான சந்தையும் கூட. ஆனால் சின்ன வெங்காயம் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்கக் கூடியது. தமிழா்கள் வாழ்ந்து வரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு பெரிய வெங்காயத்தோடு ஒப்பீடு செய்து சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு தடைகளை விதித்தும், வரிகளை விதிப்பதும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

    ஏற்றுமதி செய்யப்படும்போது கொடுக்கப்படும் எண் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஆகியவற்றிற்கு ஒரே எண்ணாக இருந்து வருகிறது. இதை பிரித்து சின்ன வெங்காயத்திற்கு தனி எண்ணை அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் 40 சதவீத வரி விதிப்பு சின்னவெங்காயம் கிலோவுக்கு 20 ரூபாயை குறைத்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் பயிா் செய்து வந்த விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

    எனவே, மத்திய அரசு 40 சதவீத வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும், பெரிய வெங்காயத்தில் இருந்து சின்ன வெங்காயத்தைப் பிரித்து அதற்கு தனியாக ஏற்றுமதி எண் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் நாளை 26ந் தேதியும், குடிமங்கலத்தில் 28-ந் தேதியும் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும், கா்நாடக மாநிலத்தில் விவசாயிகள் சின்னவெங்காய விதைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
    • தருமபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

    தருமபுரி,

    தமிழ்நாடு முழுவதும் தக்காளி மற்றும் சின்னவெங்காயத்தின் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து அதிகரித்து வந்தது. கா்நாடகத்தில் இருந்து வரத்து குறைந்ததால் சின்னவெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, சில்லறை விற்பனையில் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில், தற்போது தென்மேற்குப் பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளதால் தருமபுரி மாவட்டம் மற்றும் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும், கா்நாடக மாநிலத்தில் விவசாயிகள் சின்னவெங்காய விதைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

    மேலும் மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்த சின்னவெங்காயம் அறுவடை முடிந்து மார்க்கெட்டிற்கு வர தொடங்கியுள்ளதால் மாா்க்கெட்டுகளுக்கு சின்னவெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது.

    கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்னவெங்காயம், தற்போது தருமபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

    • குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்
    • சின்ன வெங்காயம் பயிர் செய்ய உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    குண்டடம்:

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதியாகும். இதனால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்டபகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்

    இது குறித்து மேட்டுக்கடையை சேர்ந்த ஒரு விவசாயி கூறியதாவது;-

    குண்டடம் வறட்சியான பகுதி என்பதால் குறைத்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம். பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம்.

    இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர்செய்தபோது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களைஅதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ஏக்கருக்கு 75 ஆயிரம் வரை செலவாகிறது.

    இந்தநிலையில் சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடையை தீவிரமாக செய்துவருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே அதிக விலைக்கு விற்பனையானதால் இப்பகுதி விவசாயிகள் தொடர்ச்சியாக சின்ன வெங்காயத்தை பயிர் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சின்ன வெங்காயம் அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சின்ன வெங்காயம் பயிர் செய்ய உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர் செய்து ஆட்கள் பற்றாக்குறையை சமாளித்து உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கடந்த சீசனில் பெறும் நஷ்டம் அடைந்தனர்.

    நல்ல விலை கிடைக்கும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடிவதில்லை என்றாலும் குறைந்த அளவு விவசாயிகள் சின்ன வெங்காயத்தை தற்போது அறுவடை செய்து கொண்டனர்.

    அவர்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து இன்று உச்சகட்ட விலையாக தரமான சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனையானது.
    • தக்காளி, வெங்காயத்தைப் போன்றே காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மார்க்கெட்டாகும். இந்த மார்கெட்டிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒட்டன்சத்திரத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் இங்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து கேரளாவின் அனைத்து பகுதிகளுக்கும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் சில்லறை விற்பனைக்காகவும் மொத்த விற்பனைக்காகவும் ஏற்றுமதியாவது வழக்கம்.

    இதனால் தினந்தோறும் இந்த மார்க்கெட்டில் சுமார் ரூ.5 முதல் ரூ.7 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்து போன காரணத்தாலும், அதிகப்படியாக வெயிலின் தாக்கத்தாலும், ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளில் சின்ன வெங்காயம் வரத்து இல்லாமல் போனது.

    இதனால் வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து இன்று உச்சகட்ட விலையாக தரமான சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனையானது. தினந்தோறும் ஒவ்வொரு கடைகளுக்கும் 50 டன் வரக்கூடிய சின்ன வெங்காயம் தற்போது ஒரு டன் அளவு கூட வராமல் குறைந்துள்ளது. இதுவே விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த வெங்காயம் இங்கிருந்து வண்டி வாடகை, ஏற்று கூலி மற்றும் இதர செலவுகள் என சில்லறை விலையில் ரூ.200ஐ தாண்டி விற்பனையாகிறது. இதனால் அன்றாட தேவைக்கு வாங்கி பயன்படுத்தும் பொதுமக்கள் பாதிப்படையக் கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே தக்காளி விலை உயர்வால் அதனை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து அரசு தற்போது ரேஷன் கடைகளில் ரூ.60க்கு விற்பனை செய்து வருகிறது. அதேபோல் சின்ன வெங்காயத்தையும் கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் ஒரு மாத காலத்திற்கு இருக்கும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தக்காளி, வெங்காயத்தைப் போன்றே காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

    • தக்காளி, வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக உள்ளதால் மீண்டும் இவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
    • சமீப காலங்களாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் பகுதியில் தென்னை, வாழை, கரும்பு, நெல், மக்காச்சோளம் மற்றும் காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக தக்காளி, வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தநிலையில், போதிய விலை கிடைக்காததால் சமீப காலங்களாக அவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் குறைந்தது. இந்தநிலையில் தக்காளி, வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக உள்ளதால் மீண்டும் இவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சொட்டுநீர்ப் பாசனத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி என்பது விவசாயிகளின் விருப்பத் தேர்வாக உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சின்ன வெங்காயம் சாகுபடி என்பது அதிக செலவு பிடிக்கும் சாகுபடியாக உள்ளது. சின்ன வெங்காய விதையின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதுதவிர உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட அனைத்துவிதமான இடுபொருட்களும் விலை உயர்ந்துள்ளது.அந்தவகையில் ஒரு ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதற்கு ரூ. 1 லட்சத்துக்கு மேல் செலவு பிடிக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கூலி ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் சொட்டுநீர்ப் பாசனம் மேற்கொண்டுள்ளோம். இதனால் களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன் பாசன நீரின் தேவை குறைகிறது. மேலும் நீரில் கரையும் உரங்களை சொட்டுநீருடன் கலந்து வழங்கும் போது, குறைந்த அளவு பயன்பாட்டில் கூடுதல் மகசூல் பெற முடிகிறது.சமீப காலங்களாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.

    ஆனால் விவசாய விளைபொருட்கள் விலை உயர்வு என்பது மட்டும் மிகப் பெரிய பேசு பொருளாக மாறுவது வேதனை தருகிறது.தக்காளி விலை உயர்ந்ததால் அரசு ரேஷன் கடை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்கிறது.

    அதுபோல தக்காளி, வெங்காயம் போன்ற விளைபொருட்கள் விலை குறையும் போது ஆதார விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.இதன்மூலம் விவசாயத்தை விட்டு பலரும் வெளியேறும் நிலையை மாற்ற உதவும்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • நிலையான விலை கிடைக்க அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
    • காய்கறி சாகுபடியை விட இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது.

    குடிமங்கலம் :

    உடுமலை பகுதியில் சின்னவெங்காய சாகுபடியில் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நிலையான விலை கிடைக்க அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து ள்ளனர்.

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பா சனத்துக்கு இரு சீசன்களில் சின்னவெங்காயம் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.நாற்று நடவு முறையை பின்பற்றுகின்றனர். பிற காய்கறி சாகுபடியை விட இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது. எனவே அறுவடையின் போது, விலை வீழ்ச்சி ஏற்பட்டால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர்.இந்நிலையில் கடந்த தை பட்டத்திலும், பின்பட்டத்தி லும் நடவு செய்யப்பட்ட சின்னவெ ங்காய சாகுபடியில் அறுவடை பணிகள் துவங்கியுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- சின்னவெங்காய சாகுபடியில் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக இந்தாண்டு அறுவடை செலவும் பல மடங்கு அதிக ரித்து விட்டது.நடப்பு சீசனில் போதிய மழை இல்லாததால் பயிரின் வளர்ச்சி பாதித்தது. தற்போது அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில், கிலோ 20 - 30 ரூபாய்க்கு நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை கட்டுப்படியாகாது.எனவே அறுவடை சீசனில் ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • முளைப்பு திறன் குறைவு மற்றும் பூச்சி தாக்குதல், இயற்கை சீற்றங்கலால் மகசூல் குறைய வாய்ப்பு உள்ளது.
    • நஷ்டத்தை சந்தித்த விவசாயிகளுக்கு தற்போது ஆறுதல் அளிக்கும் வகையில் நல்ல வருமானம் கிடைத்துள்ளது.

     தாராபுரம் :

    திருப்பூா் மாவட்டத்தில் பல்லடம் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், குண்டடம், பொங்கலூா், குடிமங்கலம், மூலனூா், வெள்ளக்கோவில், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.

    இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

    இந்நிலையில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் சின்ன வெங்காயத்தை அறுவடை செய்வதற்கு புதிய தொழில்நுட்ப இயந்திரத்தை அறிமுகம் செய்து அரசு வாடகைக்கு விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

    இது குறித்து சின்னக்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:- 60 நாள் பயிரான சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ஆள்கூலி, மருந்து, உரம், விதை, அறுவை கூலி என மொத்தம் ரூ.80 ஆயிரம் வரை செலவாகும்.

    ஒரு ஏக்கருக்கு 7 டன் முதல் 10 டன் வரை மகசூல் கிடைக்கும். முளைப்பு திறன் குறைவு மற்றும் பூச்சி தாக்குதல், இயற்கை சீற்றங்கலால் மகசூல் குறைய வாய்ப்பு உள்ளது.

    ஒரு கிலோ அசல் விலை ரூ.25 ஆகிறது. விவசாயிகளிடமிருந்து ரூ.45க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தால்தான் விவசாயிகளுக்கு கட்டுபடியாகும். தற்போது சின்ன வெங்காயம் விளைச்சல் இல்லை. மழையால் சின்ன வெங்காய உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. போதிய இருப்பு வெங்காயமும் இல்லை.

    வெளி மாவட்ட, மாநில சின்ன வெங்காயம் வரத்தும் குறைவு. அதே சமயம் தேவை குறையவில்லை. அதனால் தற்போது ரூ.76 முதல் ரூ.80 வரை விலை கொடுத்து விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்கின்றனா். இதனால் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகளுக்கு தற்போது ஆறுதல் அளிக்கும் வகையில் நல்ல வருமானம் கிடைத்துள்ளது.

    விதை சின்ன வெங்காயம் நடவு செய்ய மாா்கழி மாத பட்டம் சிறப்பானது. அதனால் இப்பட்டத்தில் நடவு செய்யவே விவசாயிகள் விரும்புவாா்கள். நடப்பாண்டில் சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை நிலவுகிறது. அதனால் ஏற்றுமதியை எதிா்நோக்கியே அதிக பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.

    பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் தண்ணீா் பிரச்சினை ஏதும் இல்லை. பல்லடம், பொங்கலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போதுதான் சின்ன வெங்காயம் நடவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அறுவடை சீசன் இல்லை.மாா்ச் மாதம் தான் இப்பகுதிகளில் அறுவடை தொடங்கும். தற்சமயம் தா்மபுரி, நாமக்கல், சேலம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்துதான் சின்ன வெங்காயம் கோவை, திருப்பூா் மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    சின்ன வெங்காயம் சாகுபடியை பொறுத்தவரையில் அறுவடையின்போது அதிக ஆள்கள் தேவைப்படுவா். அவா்களுக்கு தினக்கூலி ரூ.600 முதல் ரூ.800 வரை ஆகிறது. மேலும், விவசாய வேலைக்கு ஆள்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது.

    ஐரோப்பா, அமெரிக்கா,ஜொ்மனி போன்ற நாடுகளில் சின்ன வெங்காயம் அறுவடைக்கு நவீன தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஆள்கள் தேவை அதிகம் இருக்காது. இன்றைய நிலையில் ஆள்கள் கூலி மற்றும் ஆள்கள் பற்றாக்குறையால்தான் விவசாயிகள் பலா் வேளாண்மை சாகுபடியில் ஈடுபடுவதில்லை.

    புதிய தொழில்நுட்ப இயந்திரத்தை அரசு அறிமுகம் செய்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிராமப்புற விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு விட்டால் வேளாண்மை சாகுபடி அதிகரிக்கும் என்றாா்.

    • சின்ன வெங்காயம் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
    • காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    காங்கயம்:

    காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரச் சந்தை வளாகம் உள்ளது. வாரம் தோறும் திங்கள்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த வாரம் கூடிய சந்தையில் முதல் தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கும், இரண்டாம் தர சின்ன வெங்காயம் ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.60-க்கும், முதல் தரமான தக்காளி கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது.சின்ன வெங்காயம் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

    • மழை பெய்ததால் கிணறு, போர்வெல்களில் நீர்மட்டம் உயர்ந்தது.
    • வெங்காயத்தின் விலை கடுமையாக சரிவடைந்து கிலோ ரூ.10க்கும் கீழே கொள்முதல் செய்யப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டு தோறும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இங்கு உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயம் உள்ளூர் வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்காக மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோவை, பொள்ளாச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

    மேலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தவிர ஏற்றுமதி தரமுள்ள வெங்காயம் இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்ததால் கிணறு, போர்வெல்களில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் சின்ன வெங்காயத்தின் சாகுபடி பரப்பு பல மடங்கு அதிகரித்தது.

    இதன் காரணமாக உற்பத்தியும் பலமடங்கு அதிகரித்தது. இதனால் கடந்த சுமார் ஒரு வருட காலமாக சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக சரிவடைந்து கிலோ ரூ.10-க்கும் கீழே கொள்முதல் செய்யப்பட்டது. முதல் தரமான வெங்காயம் கிலோ ரூ.8-க்கும் 2 மற்றும் 3-ம் தர வெங்காயம் கிலோ ரூ.6, ரூ.4 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது.

    இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவு செய்து விளைவித்த வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு கேட்பாறின்றி கிடந்து அழுகிப் போனது. இதனால் பல இடங்களில் அறுவடையே செய்யாமல் காட்டுடன் ஊழுது விட்டனர். எப்போது விலை உயரும் எனத் தெரியாமல் தவித்த விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை சந்தித்தனர். ஏராளமான விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றிய வெங்காயம் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தந்தது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி முதல் தர சின்ன வெங்காயம் ரூ.65 வரையிலும் 2 மற்றும் 3-ம் தர வெங்காயம் முறையே ரூ.40,45-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இதுபற்றி வெங்காய வியாபாரிகள் கூறுகையில்"மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்து வருவதால் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது. அடுத்த சில வாரங்களில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய வகையில் விலையேற்றம் இருக்கும் என்றனர்.  

    • ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் என இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது
    • தொடர் மழை காரணமாக சின்ன வெங்காய உற்பத்தி பாதித்தது.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு ஆண்டுக்கு இரு சீசன்களில், சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் என இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது.கடந்த 2020 மற்றும் கடந்தாண்டு துவக்கத்தில் தொடர் மழை காரணமாக சின்ன வெங்காய உற்பத்தி பாதித்தது.தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாமல் விலை கிலோ 100 ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பாதிப்பை தவிர்க்க தமிழக அரசு சார்பில், சின்னவெங்காயம் சாகுபடிக்கு ஊக்கமளிக்கப்பட்டது.

    இதனால் சாகுபடி பரப்பு அதிகரித்த நிலையில் கடந்த சீசனில் அறுவடையின் போது விலை வீழ்ச்சி ஏற்பட்டு, பல ஆயிரம் டன் சின்னவெங்காயம் விளைநிலங்களில் இருப்பு வைக்கப்பட்டது.பல மாதங்கள் இருப்பு வைத்தும் விலையில் மாற்றம் இல்லாததால் கிடைத்த விலைக்கு விற்பனை செய்து விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.தற்போது உடுமலை பகுதியில் குறைந்த பரப்பளவில், சாகுபடி செய்யப்பட்ட சின்னவெங்காயம் அறுவடை பணி துவங்கியுள்ளது.

    வியாபாரிகள் தரத்தின் அடிப்படையில், விளைநிலங்களில், கிலோவுக்கு 15 முதல் 25 ரூபாய் வரை விலை கொடுத்து கொள்முதல் செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- சின்னவெங்காயம் அறுவடையின் போது, விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. கடந்த சீசனில் இருப்பு வைத்தவர்களும், நிலையான விலை கிடைக்காமல், நஷ்டமடைந்தனர். சாகுபடியை கைவிட்டால், அடுத்த சீசனில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்து, நுகர்வோர் பாதிப்பு உருவாகும். இப்பிரச்சினைக்கு தீர்வாக சின்னவெங்காயத்துக்கு நிலையான விலை கிடைக்க செய்ய வேண்டும்.சாகுபடி பரப்பு, உற்பத்தி அடிப்படையில், அறுவடை சீசனில், சின்னவெங்காயத்துக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.இதனால் நிலையான விலை நிலவரம் நிலவி விவசாயிகள், நுகர்வோர் என இருதரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றனர்.

    ×