search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெங்காய ஏற்றுமதி வரியை ரத்து செய்யக்கோரி பொங்கலூரில் நாளை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    கோப்பு படம்.

    வெங்காய ஏற்றுமதி வரியை ரத்து செய்யக்கோரி பொங்கலூரில் நாளை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    • மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்திருப்பது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சின்ன வெங்காயம் பயிா் செய்து வந்த விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

    திருப்பூர்:

    மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து அச்சங்கத்தின் மாநில நிறுவன தலைவா் வக்கீல் ஈசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்திருப்பது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தை நிலவரத்தை அனுசரித்து ஏற்றுமதிக்காக கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் ஏற்றுமதி செய்ய இயலாமல் மிகக் கடுமையான நஷ்டத்தை வியாபாரிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது.

    பெரிய வெங்காயம் என்பது இந்திய அளவிலான பிரச்னை, உலக அளவிலான சந்தையும் கூட. ஆனால் சின்ன வெங்காயம் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்கக் கூடியது. தமிழா்கள் வாழ்ந்து வரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு பெரிய வெங்காயத்தோடு ஒப்பீடு செய்து சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு தடைகளை விதித்தும், வரிகளை விதிப்பதும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

    ஏற்றுமதி செய்யப்படும்போது கொடுக்கப்படும் எண் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஆகியவற்றிற்கு ஒரே எண்ணாக இருந்து வருகிறது. இதை பிரித்து சின்ன வெங்காயத்திற்கு தனி எண்ணை அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் 40 சதவீத வரி விதிப்பு சின்னவெங்காயம் கிலோவுக்கு 20 ரூபாயை குறைத்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் பயிா் செய்து வந்த விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

    எனவே, மத்திய அரசு 40 சதவீத வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும், பெரிய வெங்காயத்தில் இருந்து சின்ன வெங்காயத்தைப் பிரித்து அதற்கு தனியாக ஏற்றுமதி எண் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் நாளை 26ந் தேதியும், குடிமங்கலத்தில் 28-ந் தேதியும் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×