search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெல்லம்"

    • நாட்டு சர்க்கரை தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 13 இடங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு லேப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், வேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம், அண்ணா நகர் மற்றும் ஜேடர்பாளையத்தில் வெல்ல தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு சர்க்கரை கலந்து வெல்லம் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

    இதைதொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அருண் தலைமையில் கபிலர்மலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும் அலுவலர்கள் ஜேடர்பாளையம் பகுதியில் செயல்படும் வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 16 ஆலைகள் தணிக்கை செய்யப்பட்டன. வெல்லம் பாகு தயாரிக்கும் இடம், பணியாளர்களின் சுத்தம், சர்க்கரை இருப்பு, வேதிப்பொருட்கள் இருப்பு போன்றவை தணிக்கை செய்யப்பட்டது. ஆய்வின் போது சர்க்கரை மற்றும் வேதிப்பொருட்கள் கொண்டு நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரித்த 13 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    தரம் குறைவாக தயாரிக்கப்பட்ட வெல்லம், நாட்டுசர்க்கரை மற்றும் கலப்படம் செய்ய வைத்திருந்த 12 ஆயிரம் கிலோ சர்க்கரை, வேதிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 13 இடங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு லேப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    இந்த ஆய்வு குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் கூறுகையில், பிளாஸ்டிக் மட்டும் துணிக்கழிவுகள் போன்றவற்றை ஆலைகளில் எரிபொருளாக பயன்படுத்தக் கூடாது. மேலும் வெல்லம் தயாரிக்க சர்க்கரை, வேதிப்பொருட்கள் மற்றும் செயற்கை நிறமிகள் பயன்படுத்தக்கூடாது. கலப்பட பொருட்கள் வைத்திருந்த ஆலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த ஆய்வு வரும் நாட்களில் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.

    • ஏதாவது ஒரு வடிவத்தில் தினமும் உடலில் சர்க்கரை சேருகிறது.
    • நீரிழிவு நோயாளிகளுக்கு வெல்லம் சிறப்பானது.

    டீ, காபி, ஸ்மூத்தி, ஜூஸ் என ஏதாவதொரு பானம் பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். இந்த பானங்களில் ஏதாவதொரு வகையில் சர்க்கரையின் பங்களிப்பு இருக்கிறது. வெள்ளை சர்க்கரை, வெல்லம், தேன், பிரவுன் சுகர் எனப்படும் பழுப்பு நிற சர்க்கரை இவற்றில் ஏதாவது ஒரு வடிவத்தில் தினமும் உடலில் சர்க்கரை சேருகிறது. இதில் எந்த சர்க்கரை நல்லது என்ற குழப்பம் நிறைய பேரிடம் இருக்கிறது. இது தொடர்பான விவாதம் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது.

    வெள்ளை சர்க்கரை, புரவுன் சுகர், வெல்லம் இவை எல்லாமே கரும்பில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. சுத்திகரிப்பு முறைதான் இதன் தன்மையை நிர்ணயிக்கின்றன. வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது பிரவுன் சுகர் அதிகம் சுத்திகரிக்கப்படுவதில்லை. இவை இரண்டுடன் ஒப்பிடும்போது வெல்லம் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படுவதில்லை.

    ஆனால் வெள்ளை சர்க்கரை, பிரவுன் சுகர், வெல்லம் இவற்றில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு எதை எடுத்துக்கொண்டாலும் அனைத்துமே ஒரே விதமான கலோரிகளைத்தான் கொண்டிருக்கின்றன. அதாவது ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் சுமார் 20 கலோரிகள் வரை இருக்கும். ஒரு டீஸ்பூன் தேனிலும் சுமார் 20 கலோரிகள் இருக்கின்றன.

    இருப்பினும் வெள்ளை மற்றும் பழுப்பு நிற சர்க்கரையுடன் ஒப்பிடும்போது வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகுந்திருக்கும். வெல்லத்தின் கிளைசெமிக் குறியீடும் குறைவுதான். அதனால் வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சட்டென்று அதிகரிக்க செய்யாது.

    அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு வெல்லம் சிறப்பானது. வெள்ளை சர்க்கரைக்கு மாற்று தேடுபவர்களுக்கு வெல்லம் சிறந்த தேர்வாக அமையும்.

    வெள்ளை சர்க்கரை, பிரவுன் சுகரை பொறுத்தவரை சுவையின் தன்மையில் மாற்றத்தை உணரலாம். சர்க்கரையை உருக வைத்து இனிப்பு பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கேரமல் சுவையை விரும்புபவர்களுக்கு பிரவுன் சுகர் சிறந்த தேர்வாக அமையும். வெள்ளை சர்க்கரையை அனைத்து வகையான இனிப்புகளிலும் சேர்த்துக்கொள்ளலாம். எந்த சர்க்கரையாக இருந்தாலும் அதிகமாக உட்கொள்வது நல்லதல்ல.

    • வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
    • கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங் களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளை யம், சோழசிராமணி, அய்யம் பாளையம், கபிலர் மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

    வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங் களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும் ஏலம் போனது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு தொடர் மழை காரணமாக வெல்லம் உற்பத்தி செய்ய முடியாததால் குறைந்த அளவிலேயே வெல்லம் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 4 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பங்களும், ஆயிரத்து 500 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,300 வரையிலும் ஏலம் போனது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வெல்லம் உற்பத்தி செய்ய முடியாததாலும், வரத்து குறைந்ததாலும் வெல்லம் விலை உயர்வடைந்து உள்ளதாக வெல்ல உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    • பரமத்திவேலூர் வட்டத்தில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழ சிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

    வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பம், 1,600 அச்சு வெல்ல சிப்பங்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரத்து 600 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200 வரையிலும் ஏலம் போனது. இதே போல் கடந்த வாரம் கரும்பு டன் ஒன்று ரூ.2,300 வரையிலும் விற்பனையானது. வெல்லம் விலை சரிவடைந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • உற்பத்தி அதிகரிப்பால் அச்சு வெல்லம் விலை வீழ்ச்சி
    • சிப்பம் ஒன்று 1,260 வரையிலும் விற்பனையானது.

      வேலாயுதம்பாளையம், 

    கரூர்மாவட்டம் நொய்யல் ,மரவாபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம் நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நன்செய் புகழூர், தளவாபாளையம், கடம்பன்குறிச்சி ,வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.

    கரும்புகள் விளைந்த உடன் விற்பனைக்காக புகழூரில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்கின்றனர். பதிவு செய்யாத விவசாயிகள் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து கொப்பறையில் ஊற்றி பாகு தயார் செய்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் அருகாமையில் செயல்பட்டு வரும் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    வெல்ல சிப்பங்களை வாங்கிச் செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வெல்ல சிப்பங்களை வாங்கி செல்கின்றனர். வாங்கிய வெல்ல சிப்பங்களை லாரிகளில் ஏற்றி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ,உத்திரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,260- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,370 வரையிலும் விற்பனையானது. நேற்று உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,260 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று 1,260 வரையிலும் விற்பனையானது. உற்பத்தி அதிகரிப்பால் அச்சு வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    • இதன் சுவை வாயில் வைத்ததும் கரைந்துவிடும்.
    • வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே மிகவும் எளியமுறையில் செய்துவிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    பாசிபருப்பு- 200 கிராம்

    ரவை- 100 கிராம்

    வெல்லம்-500 கிராம்

    தேங்காய்-அரை கப்

    ஏலக்காய்தூள்- ஒரு ஸ்பூன்

    நெய்- 100 கிராம்

    முந்திரி- அலங்கரிக்க

    செய்முறை:

    செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே மிகவும் எளியமுறையில் செய்துவிடலாம். இதன் சுவை வாயில் வைத்ததும் கரைந்துவிடும் அளவுக்கு இனிப்பு சுவையுடன் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஅனைவரும் மிகவும் விரும்பி சப்பிடுவர்.

    ஒரு காடாயில் வாணலிவைத்து காய்ந்ததும் 200 கிராம் பாசிபருப்பை சேர்த்து நன்றாக மணம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும் கருகிவிடக்கூடாது. இதனை ஒரு குக்கரில் வைத்து அதற்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு கழுவி அந்த பருப்பை தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். இப்போது வெல்லத்தை கரைத்து எடுத்துக்கொள்ளலாம். இதற்கு ஒரு அடிகனமான பாத்திரத்த்தை அடுப்பில் வைத்து வெல்லம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு காய்ச்சி எடுக்க வேண்டும். ஒரு கப் பாசிபருப்புக்கு 3 கப் வெல்லம் என்ற அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இனிப்பு அதிகம் விரும்புபவர்கள் என்றால் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். பாகு கம்பிபதம் வர வேண்டாம். பாகு கரைந்து வந்தால் போதுமானது. வெல்லம் கரைந்து வந்தவுடன் இதனை ஒரு பாத்திரத்தில் தனியே எடுத்து வைக்க வேண்டும்.

    அதன்பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 3 கரண்டி நெய் சேர்க்க வேண்டும். இந்த உக்காரைக்கு சுவை சேர்க்கக்கூடியது இந்த நெய்தான். நெய் காய்ந்ததும் அதில் அரை கப் ரவை சேர்க்க வேண்டும். ரவையை பொன்னிறமாக நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் இதில் துருவி வைத்த தேங்காய் சேர்க்க வேண்டும். இதுவும் நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். நன்றாக வறுத்து எடுத்துக்கொண்டால் கெட்டுப்போகாமல் இருக்கும்.

    இந்த கலவையில் நாம் வேகவைத்துள்ள பாசிப்பருப்பு கலவையை சேர்க்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கலந்துவிடவேண்டும். அப்போது ரவை நன்றாக் வெந்துவரும். அப்போது நாம் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள வெல்லக் கரைசலை வடிகட்டியில் வடித்து சேர்க்க வேண்டும். வெல்லப்பாகு சேர்த்தவுடன் இந்த கலவையை நன்றாக கைவிடாமல் கலந்துகொண்டே வர வேண்டும். இதனுடன் நெய் சேர்க்க வேண்டும். கடைசியில் இதனுடன் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நெய் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும். சுவையான செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை தயார்.

    • இந்த ஹோமத்தில் 108 மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
    • விக்கினங்கள் விலகவும், நன்மைகள் ஓங்கவும் இவை செய்யப்படுகின்றன.

    விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை

    முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான்.

    அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர்.

    எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.

    விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் விநாயகர் பெருமான் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை அழிக்க ஏவினார்.

    அசுரனோ, மூஞ்சுறாய் வந்து எதிர்த்து நின்றான். விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார்.

    பின்னர் அவர் மூஞ்சுறைத் தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன்மூலம் அனைவரும் சுபிட்சம் பெற்றனர்.

    எனவே அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் தீராதவினைகள் தீரும். சகல பபாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்

    விநாயகர் சதுர்த்தி விரதம்

    விநாயகர் சதுர்த்தி விரதம் ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி, புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை மேற்கொள்ளப்படுகிறது. ஆவணி மாதம் அமாவாசைக்கு அடுத்த நான்காவது நாள் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது.

    அன்று விடியற்காலையில் எழுந்து வீட்டை நன்றாக பெருக்கி, மெழுகி சுத்தம் செய்துவிட்டு வீட்டு வாசலில் மாவிலை, தோரணங்களை கட்ட வேண்டும்.

    வீட்டின் வாசலுக்கு இருபுறமும் வாழைமரக் கன்றையும் கட்டி வைக்கலாம்.

    பூசை அறையைக் கழுவி, மொழுகி, கோலம்போட்டு, அதன் மையப்பகுதியில் ஒரு பலகை வைத்து மேலும் ஒரு கோலம் போட்டு தலைவாழை இலை விரித்து பச்சரிசையைப் பரப்பி வைக்க வேண்டும்.

    அதில் வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழி போட்டு "ஓம்" என்று எழுதி மண்பிள்ளையாரை வைக்க வேண்டும்.

    அதற்கு அறுகம்புல், எருக்கம்பூ, விபூதி, சந்தனம் மலர்களால் அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், தேங்காய், வெல்லம் கலந்த மாவு உருண்டை, விளாம்பழம், அப்பம், சுண்டல், அவல், பொரி, கடலை, எள்ளுருண்டை போன்ற நிவேதனப் பொருள்களை வைத்து தூபமிட்டு சாம்பிராணி புகை காட்டி சூடம் ஏற்றி வழிபட வேண்டும்.

    அப்பொழுது விநாயகருக்குரிய அகவல், கவசம், சகஸ்ரநாமம், காரிய சித்திமாலை, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் ஆகியவற்றை பாடுவது நற்பலன்களை தரும்.

    ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எல்லா விநாயகர் கோவிலிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம் நடைபெறும்.

    விக்கினங்கள் விலகவும், நன்மைகள் ஓங்கவும் இவைகள் செய்யப்படுகின்றன. இந்த ஹோமத்தில் 108 மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    கணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு. அவை மோதகம், அவல், நெய், பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத் தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இதை தவிர அறுகம்புல், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம் இவைகளையும் ஹோம நிவேதனமாக செய்ய வேண்டும்.

    முதலில் தைலக்காப்பு, பிறகு மாகாப்பு (அரிசி மாவு) பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், பழ வகைகள், தயிர், கரும்புச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீர் அபிஷேகங்கள் செய்யப்படும். மாலையில் விநாயகருக்கு சந்தனக்காப்பு, விபூதிக்காப்பு, பூவலங்காரம் நடைபெறும். துளசி இலைகள் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பூஜைக்கு உகந்தது.

    • வன்னி இலைக்கு ஸ்ரீசுமிபத்ரம் என்றும் பெபயர்.
    • உறவினர்களுடன் நிவேதனம் செய்த பிரசாதங்களை சாப்பிட வேண்டும்.

    நாமம் சொல்லி வழிபடுங்கள்!

    ஆவணி மாதம் சுக்ல பட்சம் சதுர்த்தி திதி தினமே விநாயக சதுர்த்தி தினமாகும்.

    அன்று உங்கள் வீட்டின் வடக்குப் பகுதியில் ஒரு மண்டபம் செய்து நெல் அல்லது பச்சரிசி பரப்பி அதில் அஷ்ட (எட்டு) தளத்துடன் கூடிய தாமரையை வரைந்து, அதன் மேல் பிள்ளையாரை வைத்து அருகம்புல், சந்தனம் ஆகியவற்றால் பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும்.

    குறிப்பாக இருபத்தோரு அருகம்புல்லை நல்ல வாசனையுள்ள சந்தனத்தில் நனைத்துக் கொண்டு கீழ்க்கண்ட பத்து நாமங்களை சொல்ல வேண்டும்.

    1. கணாதிபாய நம, 2. உமாபுத்ரா நம, 3. அக நாசநாய நம, 4.விநாயகாய நம, 5. ஈசபுத்ராய நம, 6. ஸர்வஸித்திதாய நம, 7. இபவக்த்ராய நம, 8. ஏகதந்தாய நம, 9. மூஷிக வாஹனாய நம, 10. குமார குரவே நம

    என்று பத்து நாமங்கள் சொல்லி இரண்டு அருகம்புல்லாலும் கடைசியில் மேற்கூறிய பத்து நாமங்களையும் ஒரு முறை சொல்லி ஒரு அரும்கம்புல்லாலும் கணபதிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

    தூப தீபம் காண்பித்து நெய்யில் செய்த கொழக்கட்டை (21), மாவுப் பலகாரங்கள், தேங்காய் (21), வாழைப்பழம் (21), நாவல் பழம் (21), விளாம்பழம் (21), கொய்யா பழம் (21), கரும்புத்துண்டு (21), வெள்ளரிக்காய் (21), அப்பம் (21) இட்லி (21) முதலானவற்றை நிவேதனம் செய்தல் வேண்டும்.

    பூஜையை முடித்த பிறகு திருமணம் ஆகாத 21 வயது பையனுக்கு தட்சணையுடன் மோதகம் தந்து பெரியோர்களிடம் ஆசி பெற செய்ய வேண்டும். உறவினர்களுடன் நிவேதனம் செய்த பிரசாதங்களை சாப்பிட வேண்டும்.

    மறுநாள் காலை புனர்பூஜை செய்து விநாயகரை தண்ணீரில் கரைக்க வேண்டும். இவ்வாறு சித்தி விநாயக விரதத்தை செய்பவர்களுக்கு எந்த ஒரு காரியத்திலும் இடையூறு ஏற்படாது.

    வளம் தரும் வன்னி இலை

    வன்னியின் இலையைக் கொண்டு பக்தியுடன் ஈஸ்வரார்ப்பணம் செய்யும்போது எப்படி தீயில் சம்பந்தப்பட்ட பொருள் சுத்தம் அடைகிறதோ, அதுபோல மனிதனும் மனமும் புத்தியும் சுத்தம் அடைந்து தெய்வீக ஞானம் அடைந்தவனாகிறான்.

    இதன் காரணமாகவேதான் வன்னி பத்ரத்தை தனக்கு உகந்த பத்ரமாக வைத்துக் கொண்டு வன்னி மரத்தடியிலும் கணேசர் எழுந்தருள்கிறார்.

    வன்னி இலைக்கு ஸ்ரீசுமிபத்ரம் என்றும் பெபயர். விநாயகர் பூசையில் இருப்தொரு (நாமாவளியால்) அருகம்புல்லால் அர்ச்சிக்கப்படுவதுபோல் இருப்பதொரு பத்ர(இலை)ங்களால் அர்ச்சிக்கப்பட வேண்டும். அதற்கு "ஏக விம்சதி பாத்திர பூசை" என பெயர்.

    அதில் மாசிப்பச்சை, கண்டங்கத்திரி, வில்வதளம், அருகம்புல், ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, அரளி, விஷ்ணு கிராந்தி, நெல்லி, மரிக்கொழுந்து, நொச்சி, ஜாதி எவன்னெருக்கு, கரிசிலாங்கண்ணி, வெண்மருதை, கிளுவை, நாகை என்ற பத்ரங்கள் கூறப்படுகிறது.

    வன்னி இலையைக் கொண்டு வழிபட்டு சாம்பன் என்ற மன்னனும் அவன் மந்திரியும் "பேறு" பெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன.

    நாமும் வன்னி இலைகளால் விநாயகப் பெருமானை பூஜித்து வணங்கி வளம் பெறுவோம்.

    • மாதுளை இலை - நல்ல புகழை அடையலாம்
    • மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளியில் வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.

    கணபதி அர்ச்சனை

    விநாயக புராணத்தில் கணபதிக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள்.

    மருவு இலை- துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்

    எருக்க இலை- குழந்தைப் பேறு

    அரச இலை- எதிரிகள் அழிவார்கள்

    அகத்தி இலை- துயரங்கள் நீங்கும்

    அரளி இலை- அனைவரும் அன்போடு இருப்பார்கள்.

    வில்வ இலை- இன்பங்கள் பெருகும்

    வெள்ளெருக்கு- சகலமும் கிடைக்கும்

    மாதுளை இலை- நல்ல புகழை அடையலாம்

    கண்டங்கத்திரி இலை- லட்சுமி கடாட்சம்

    கொழுக்கட்டை நைவேத்தியம்

    தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப்படும் மோதகம் என்றழைக்கப்படும் கொழுக்கட்டை கணபதிக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியம் ஆகும்.

    கொழுக்கட்டையின் தத்துவம் என்ன வென்று அறிவீர்களா?

    மேலே இருக்கும் மாவுப் பொருள் அண்டம், உள்ளே இருக்கும் பூரணம் பிரம்மம், நமக்குள் இருக்கின்ற நல்ல பண்புகளான பூரணத்தை மாவான மாயை மறைத்துக் கொண்டுள்ளது.

    மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளியில் வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.

    முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டையைப் படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா?

    வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.

    பிள்ளையார் செய்வோம்

    சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.

    விநாயகருக்கு உகந்தவை

    தும்மைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மாவிலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.

    விநாயகரின் அஷ்ட அவதாரங்கள்

    1.வக்ரதுண்டர்

    2. மஹோத்ரதர்

    3. கஜானனர்

    4.லம்போதரர்

    5. விகடர்

    6. விக்னராஜர்

    7. தூம்ரவர்ணர்

    8. சூர்ப்பகர்ணர்

    என்று எட்டு விதமான அவதாரங்களை விநாயகப் பெருமான் எடுத்ததாக விநாயக புராணம் கூறுகின்றது. அவர் எதற்காக எட்டுவிதமான அவதாரங்களை எடுத்தார் என்றால், மனிதர்களிடையே காணப்படும் தீய குணங்கள் எட்டு (காமம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம், மமதை, மோகம், அகந்தை)

    அந்த எட்டு குணங்களையும் நீக்கி நமக்கு ஞானமளிப்பதற்காகவே அவர் எட்டுவிதமான அவதாரங்களை எடுத்தார்.

    அந்த எட்டுவிதமான அவதாரங்களையும் நினைவிற்குக் கொண்டு வந்து வணங்க விநாயக மந்திரம் துணைபுரிகிறது.

    இந்த மந்திரத்தை தினசரி பாராயணம் செய்பவர்கள் அனைத்து விதமான சந்தோஷங்களையும் அடைவார்கள்.

    • கிருத யுகத்தில் சிம்ம வாகனத்தில்தான் பிள்ளையார் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
    • பரப்பிரம்ம சொரூபமாக விளங்குபவர் கணபதி,

    விநாயகரின் வாகனங்கள்

    விநாயகர் மூஷிக வாகனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் அவர் மூஞ்சுறுவைத் தவிர மயில், சிங்கம், ரிஷபம், யானை என்ற வாகனங்களிலும் பவனி வருவார் என்பது அனைவருக்கும் தெரியாத ஒன்றாகும்.

    கிருத யுகத்தில் சிம்ம வாகனத்தில்தான் பிள்ளையார் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இன்றும் ஹேரம்ப கணபதி சிம்ம வாகனத்தில்தான் வீற்றிருப்பார்.

    திரேதா யுகத்தில் முருகனுக்கு உதவுவதற்காக மயில் வாகனத்தில் வந்தார்.

    ஆண் குழந்தை தரும் விநாயகர்

    திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர்.

    அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.

    கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

    கணபதி என்ற சொல்லில் உள்ள "க" என்னும் எழுத்து ஞானத்தையும், "ண" என்னும் எழுத்து ஜீவன்களின் மோட்சத்தையும், "பதி" என்னும் சொல் தலைவன் என்பதையும் குறிக்கிறது.

    பரப்பிரம்ம சொரூபமாக விளங்குபவர் கணபதி, ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் அவரே தலைவன் என்பதால்தான் அவர் கணபதி என்றழைக்கப்படுகிறார்.

    மேலும் கணபதி என்னும் சொல் சிவபெருமானின் கணங்களுக்கு அதிபதி என்பதையும் குறிக்கும்.

    விநாயகரின் அன்பு வேண்டுமா?

    1. விநாயகர் அகவல்

    2. விநாயகர் கவசம்

    3. விநாயகர் சகஸ்ரநாமம்

    4. காரிய சித்தி மாலை

    5. விநாயகர் புராணம்

    ஆகியவற்றை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகனை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும்.

    • வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
    • விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

    பிள்ளையார் உருவ பலன்கள்

    மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட, சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

    மண்ணால் செய்த பிள்ளையாரை வழிபட, நல்ல பதவி, அரசு வேலை கிடைக்கும்.

    குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.

    புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்

    வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்

    உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்.

    வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்.

    விபூதியால் விநாயகர் பிடித்து வழிபட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

    சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

    சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.

    வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

    வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.

    சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

    பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்.

    கல் விநாயகர்- வெற்றி தருவார்.

    யானைத்தலை விளக்கம்

    தலை என்பது உள் அவயங்களான மூளை, கண், காது, வாய், மூக்கு என முக்கியமான உறுப்புகளைத் தன்னுள் கொண்ட ஒரு கூட்டமைப்பு.

    அறிவின் இருப்பிடத்தை விசாலமான நுண்ணறிவை, பேரறிவை, காக்க அமைந்ததே யானைத்தலை.

    யானைத்தலையானின் தலையில் கிரீடம் சூடி அவரை வணங்கும் மக்களுக்கு ராஜபோக வாழ்வுகிட்டும்.

    • பரமத்திவேலூர் வட்டத்தில் பல பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.

    பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங் களாக (மூட்டைகளாக) கட்டி, பிலக்கல்பாளை யத்தில் உள்ள வெள்ள ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

    வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது.

    நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,500 வரையிலும் ஏலம் போனது. நாட்டுச் சர்க்கரை சிப்பம் ஒன்று கடந்த வாரம் ரூ.1,300-க்கும், நேற்று நடைபெற்ற ஏலத்தில் நாட்டு சர்க்கரை சிப்பம் ஒன்று ரூ.1,350- க்கும் ஏலம் போனது. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை தொடங்க உள்ள நிலையில் வெல்லம் விலை உயர்ந்திரு ப்பதாக வியாபாரி கள் தெரிவித்தனர்.வெல்லம் விலை உயர்ந்திருப்பதால் வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×