search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு
    X

    உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு

    • வரத்து குறைவால், ஏலம் மார்க்கெட்டில் வெல்லம் விலை உயர்ந்தது
    • வெல்லம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் , மரவாபாளையம், சேமங்கி, குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம் ,நல்லிக்கோயில், கொங்கு நகர், நடையனூர் ,கவுண்டன் புதூர் ,பேச்சிப்பாறை, நன்செய் புகளூர், தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெட்டி செல்வதற்காக புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2700 வரை விற்பனை செய்து வருகின்றனர்.இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லமானது, ஏலம் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. வெல்லம் வாங்கும் வியாபாரிகள், தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ1,250-க்கும், அச்சுவெல்லம் ரூ1210 க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம்ரூ 1,290க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ 1,250க்கும் விற்பனையானது. கரும்பு ஒரு டன் ரூ2700 வரை விற்பனையாகிறது. வெல்லம் உற்பத்தி குறைவால், விலை அதிகரித்துள்ளது . இதனால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×