search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    உருண்டை வெல்லம் தயாரித்து உலர வைத்திருந்த போது எடுத்த படம்.

    வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

    • பரமத்தி வேலூர் தாலுகா பல்வேறு பகுதிகளில் சுற்று வட்டார பகுதிகளில் விவசா யிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
    • பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், பெரிய மருதூர், சின்ன மருதூர், செல்லப்பம்பாளையம், சாணார்பாளையம், பிலிக்கல் பாளையம், பாகம் பாளையம், அய்யம்பாளை யம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், தி.கவுண் டம்பாளையம், நல்லிக்கோ வில், ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகாதேவி, சோழ சிராமணி, பெரிய சோளிபா ளையம், சின்ன சோளிபா ளையம், இருக்கூர், கோப் பணம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்று வட்டார பகுதிகளில் விவசா யிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    கரும்பை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பல விவசாயிகள் பதிவு செய் துள்ளனர்.

    பதிவு செய்யாத விவ சாயிகள் தங்களின் கரும்பு களை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அதை அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சக்கரை தயாரித்து 30 கிலோ சிப்பம் ஆக்குகின்றனர்.

    தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். வெல்லம் சிப்பங்களை வாங்கி தமிழ கத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந் திரா, கேரளா, கர்நா டகா, மகாராஷ்டிரா, உத்த ராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல் லம் ஒரு சிப்பம் ரூ1,180-க் கும், அச்சுவெல்லம் ரூ.1,070-க்கும் விற்பனையா னது. நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,250-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,2 20க்கும் விற்பனையானது.

    கரும்பு ஒரு டன் ரூ.3000 வரை விற்பனையாகிறது. வெல்லம் உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது. இதனால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×